இன்றைய விருந்து

  • வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும் — 4/5

    FFC —  100

    அ.வி .—100

    அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியின் 100 வது நிகழ்வு

          *அறிவுப்பசிக்கு விருந்து(சென்ற விருந்தின் தொடர்ச்சி)

                                                     15-07-2015—புதன்

    Bhagavan_Vethathiri_Maharishi_with_Disciples_Rishikesh_1990

     1990 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ரிஷிகேசத்தில் நடந்த அறிவுப்பசிக்கு அருள் விருந்தளித்த ஐந்து நாள் சிறப்பு நிகழ்ச்சியின் முடிவு நாளன்று கங்கை நதிக்கரையோரத்தில் சீடர்களுடன் மகரிஷி அவர்கள் அமர்ந்திருக்கும் காட்சி.

    வாழ்க வளமுடன்.  இன்று நம் ‘ஆன்ம செழிப்புறு இணையதள சத்சங்கத்தின்’ நிகழ்வுகளில் ஒன்றான ‘இன்றைய விருந்து’ பகுதியின் 100 வது (FFC—100—அ.வி 100) நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது.  இப்போது நாம் சிந்தித்து வரும் வயிற்றுப்பசியும் அறிவுப்பசியும் –4/5 என்கின்ற தலைப்பின் துணைத்தலைப்பு ‘*அறிவுப்பசிக்கு விருந்து’. 100 வது நிகழ்ச்சியாகின்றது.

      எனவே அறிவிற்கு விருந்துப்பகுதி 100 வது நிகழ்ச்சியை எட்டியதைக்  கருத்தில் கொண்டு இன்றைய துணைத் தலைப்பான *அறிவுப்பசிக்கு விருந்து அமையட்டும் என இறையருளையும், மகரிஷி அவர்கள் உள்பட எல்லா மகான்களின் அருளையும் வேண்டி இன்றைய சிந்தனையைத் தொடங்குகிறோம். அறிவிற்கு விருந்து என்கின்ற பகுதியின்   நூறாவது நிகழ்ச்சியில், ஏன் சிந்திக்க வேண்டும், அறிவுப்பசி ஏன் அவசியம், அறிவிற்கு ஏன் விருந்து  வேண்டும் என மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய தருணத்தில் இன்றையத் துணைதலைப்பு ‘*அறிவுப்பசிக்கு விருந்து’ என்று அமைந்தது மிகவும் பொருத்தமாக உள்ளது,

    சென்ற விருந்தில் அறிவுப்பசியின்மைக்கு அருமருந்து மனவளக்கலை என்று அறிந்து கொண்டோம்.  மந்தமாக இருந்த அறிவின் பசியினைத் தூண்டிய பிறகு அதற்கு யார் உணவளிப்பது?  இந்த பொறுப்பு யாருடையது?  யார் அல்லது எது அறிவுப்பசியைத் தூண்டுவதற்குக் காரணமாக இருக்கின்றதோ அவரோ அல்லது அதுதான் அறிவுப்பசிக்கு உணவை அளிக்க வேண்டும். ஆகவே மந்தமாக இருந்த அறிவின் பசியினைத் தூண்டிய மனவளக்கலைதான் தூண்டப்பட்ட அறிவிற்கு உணவை அளிக்க வேண்டும். ஆனால் மனவளக்கலை வடிவமைத்துக் கொடுத்தது யார்? மகரிஷி அவர்களின் அறிவாற்றல்.

    எனவே மந்தமாக இருந்த ஆனால் இப்போது தூண்டப்பட்டுள்ள அறிவிற்கு உணவினை அளிப்பது மகரிஷி அவர்களுடைய அறிவாற்றலின்  கடமையாகும். அவா் பூதஉடல் இப்போது இல்லையாயினும் அவரது அறிவாற்றல் என்றென்றும் ஒளிவிளக்காக அறிவொளி வீசிக்கொண்டிருக்கின்றதே!!! மந்தமாக இருந்த அறிவின் பசியைத்தூண்டியதோடு மட்டுமல்லாமல், பசிக்கு உணவு அளித்தாலே போதும் என்றாலும், தன் கடமையில், அன்புடனும், கருணையோடும். சாதாரண உணவிற்குப்பதிலாக நல்ல, மிகச்சத்துள்ள, ஆரோக்கியமான, சலிப்பில்லாமல், மேலும் மேலும் பசியைத்தூண்டும்  விருந்தையே அளிக்கின்றது மனவளக்கலையின் வாயிலாக மகரிஷி அவர்களின் அறிவாற்றல்.  மகரிஷி அவர்களின் அறிவாற்றல் அட்சயம் பாத்திரம்போல் அறிவிற்கு அளிக்கும் விருந்து பற்றி அறியவே இன்றைய சிந்தனை.

    ஆன்மீகத்தில் சிகரத்தை எட்டுவதற்கு திருவேதாத்திரியம் ஆன்மீக ஏணியாக அமைந்துள்ளது. சுத்த அத்வைதத்தின் படி இறையே எல்லாமாகவும் உள்ளதால்,  இறையேதான்  இரையாகவும் உள்ளது.  வயிற்றுப்பசிக்கு இறையே தான் உணவுவடிவில் இரையாக உள்ளது.  அறிவுப்பசிக்கு இறையே இரையாக உள்ளது எனலாம்.  அதாவது ஆறாம் அறிவு இறை உணர்வு பெறுவதற்காக வந்துள்ளது.  ஆகவே அறிவு இறைஉணர்வு பெறவேண்டுமெனில் முதலில் அதற்கு அறிவுப்பசி இருக்க வேண்டும். அறிவுப்பசிதான், தேடுதல், இறைவேட்கை என்றும் கூறப்படுகின்றது.

    ஆகவே வயிற்றுப்பசியைப் போக்கும் அன்னமயகோசத்திலேயேயும், அதனை ஒட்டிய மனோமய கோசத்திலேயும் நின்றுவிடாமல், பிராணமய கோசத்திற்கும், விஞ்ஞானமயகோசத்திற்கும்,  ஆனந்தமயகோசத்திற்கும் படிப்படியாக உயர்ந்து வரவேண்டும். வயிற்றுப்பசி அதிகமாக இருந்தாலும் அதுவும் கோளாறுதான்.  அதிக உணவு தீங்கை விளைவிக்கும். ஐம்புலன்களில் வெற்றி பெறுவதற்கு(அளவும், முறையும்)  சுவையை அறியும் நாவை  முதலில் வெற்றி கொள்ள வேண்டும் என்பார் மகாத்மா காந்தி அவர்கள்

    ஆகவே அதிகவயிற்றுப்பசியாகிய கோளாறுதான் அன்னமயகோசத்திலும். மனோமய கோசத்திலும் மட்டுமே இயங்கச்செய்து ஆன்மீக ஏணியில் ஏறி ஆன்மீகத்தின் வெற்றிக்கனியைப் பறிப்பதை தடை செய்கின்றது. அறிவுப்பசிதான் பிராணமய கோசத்திற்கும், விஞ்ஞானமய கோசத்திற்கும், ஆனந்தமய கோசத்திற்கும் படிப்படியாகக் ஏற்றிச்  சென்று ஆன்மீகத்தின் சிகரத்தை  அடையச் செய்யும். எதற்காக ஆன்மீகத்தின் சிகரத்தை அடைய வேண்டும்? ஆன்மீகத்தின் சிகரத்தை அடைந்தால்தான் வாழ்வின் வெற்றிக்கனியைப் பறிக்க முடியும். அதுதானே பிறவியின் நோக்கம்!!  அறிவுப்பசியை ஆன்மதாகம் என்றும் சொல்லலாம்.

     

    5_Gosam_spiritual_ladder

     அறிவுப்பசியை தீர்த்துக்கொள்வதற்குத்தான் அருட்தந்தை அவர்கள் அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுறுவதற்கு அழைக்கிறார்.  அழைப்பதோடு இல்லாமல்  வாழ்வின் நோக்கம் என்ன என்றும், தான் அதனை எவ்வாறு படிப்படியாக அடைந்தார் என்றும் திருவேதாத்திரியத்தின் 1849 மந்திரத்தில் விவரிக்கிறார்.

      Perinbappadigal_Spiritual_ladder_reduced size

     இப்பாடலில் உள்ள மகரிஷி அவர்கள் படிப்படியாக உயர்ந்த  பேரின்பப்படிகளே அறிவுப்பசியைத் தூண்டும் மருந்தாகும்.  இறை உணா் ஆன்மீகத்தில் இப்பிறவியிலேயே வெற்றி பெறுவதற்கு முதலில் வாழ்வின் நோக்கம் அவரவர்களே கண்டுபிடிக்க வேண்டும்.  ‘பிறவியின் நோக்கம் இறையுணர்வு பெறுதலே’ என்று நாவால் மட்டும் சொல்லிக் கொண்டிருத்தல் போதாது.  அது வெறும் ஒப்புவித்தலாகும்ஒப்புவித்தல் எவ்வாறு ஆழ் மனதிற்கு மகிழ்ச்சியைத் தர இயலும்?

    வெல்லத்தை சுவைத்திராமலே வெல்லம் இனிக்கும்’ என்று கூறுவது எப்படி இருக்குமோ, அதுபோல் வெறும் ஒப்புவித்தல் இருக்கும். ‘வெறும் ஒப்புவித்தல்’ ‘பிறவிப்பயன் இறை உணர்வு பெறுவது’ என்கின்ற அந்த உண்மை நிஜமாவதற்கு இந்தப் பிறவி ஒன்றே  போதாமல் போய்விடும்.

    பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், பஞ்சாங்கத்தில் இன்று மழை பெய்யும் என இருந்தால், அந்தப் பஞ்சாங்கத்தை பிழிந்தால் நீர் வருமா?” என அன்புடனும், ஆதங்கத்துடனும்  கேட்பதனை நினைவு கூர்வது நலம் பயக்கும்.

    வாழ்வின் நோக்கம் உறுதிபடுத்துவதில் வெற்றி பெற்றுவிட்டால், பிறகு நம்முள்ளே இருக்கும் இறைக்கும் நமக்கும் இணக்கம் ஏற்படும். அங்கே துவைதம் இருக்காது. மாறாக அத்வைதம் மலர ஆரம்பித்துவிடும். அதாவது  பரிபக்குவம் அடைந்துவிட்டால், இறையே நம் விருப்பத்தை அறிந்து, குருவாக இருந்து அவ்வப்போது நமக்குத் தேவையான வழிகாட்டுதல்களையும், சூழ்நிலைகளையும், தெளிவு பெறுவதற்கு மேலும் மேலும் விளக்கங்களை அளித்து வரும்.  அவ்விளக்கங்களே அறிவிற்கு விருந்தாக அமைந்து முடிவில் தெய்வீகப் போதையில் கொண்டு சேர்க்கும் இறை. அடுத்த விருந்தில் (19-07-2015 ஞாயிறு) மனவளக்கலை எவ்வாறெல்லாம் அறிவுப்பசிக்கு விருந்தாக அமைந்துள்ளது என அறிவோம்.

    Loading

  • வயிற்றுப்பசியும்அறிவுப்பசியும் — 3/5

    FFC–99

    அறிவுப்பசிஏற்படமருந்து (சென்றவிருந்தின்தொடர்ச்சி)

    12-07-2015—ஞாயிறு

    arumarundhu-virundhu

         சென்ற விருந்தில் அறிவு மந்தமாக உள்ளதால் அறிவிற்கு அறிவுப்பசி ஏற்படவில்லை என்று அறிந்து கொண்டோம். இன்றைய விருந்தில் அறிவிற்கு பசி இல்லையென்றால் பசியை உண்டாக்குவதற்கு மருந்து எது என்று அறிய இருக்கிறோம்.

    அறிவு தனது பூர்வீகத்தை அறிய வேண்டும். இது வரை அறிவைப்பற்றிய விஞ்ஞான பூர்வமான தகவல் ஏதும் இல்லாதபோது அறிவைப்பற்றிய(Consciousness) தகவல்களை எங்கிருந்து அறிவது என்கின்ற ஐயம் எழலாம். அறிவுப்பசியைப் போக்கிட இயற்கை தயாரித்துள்ள மருந்தும், விருந்தும் தான் திருவேதாத்திரியம். தனக்கு எது பிரியமோ அதனை அறிவு அறிய வேண்டும். அப்போதுதான் அதற்கு இன்பம். இந்த இன்பநிலை அறிவிற்கு இல்லாததைத்தான் அறிவிற்கு அறிவுப்பசி இல்லை என்கிறோம். அறிவிற்கு அறிவுப்பசி இல்லாமைக்குக் காரணம் அறிவு அன்னமய கோசத்திலும், அதனை ஒட்டிய மனோமயகோசத்திலும் எண்ணமிட்டுக் கொண்டிருத்தலேயாகும்.

    அறிவுப்பசிக்கு தேவையான இரை இறையேயாகும். பொதுவாக பசியைத் தீர்த்துக் கொள்வதற்கு உணவு தேவை. உணவைத்தான் மற்றொரு சொல்லால் ‘இரை’ என்கிறோம். இறையே எல்லாமாக இருப்பதால், எல்லாவற்றிலும் ஒன்றாகிய இரையும் இறையே. எல்லாமாகியுள்ள இறை, எல்லா உயிரினங்களாகவும் ஆகிய பிறகு, உயிரினங்களுக்குத் தேவையான உணவாகவும் அதுவாகத்தானே ஆகமுடியும்.

    எப்படி சிலந்தி தன் எச்சிலைக் கொண்டே வலை பின்னிக் கொண்டு அதில் வசிக்கின்றதோ, அதேபோல் இறைவனும் தானே பஞ்சபூதங்களாகி, பஞ்சபூதங்கள் உடலாகி பிறகு உடலிலே இறையே உயிராகி, வசிக்கின்றான் அதனால்தான் இறைவன் உடலுக்குள்ளே வசிப்பதால், ஆங்கிலத்தில் ‘Indweller’ என்கின்ற பெயரும் உண்டு. இறை தன்னையே உயிரினங்களாக்கிக்கொண்டது. பிறகு அவற்றிற்கான உணவை வேறு எங்கிருந்து ஏற்பாடு செய்யும்? ‘ஒன்றே பலவாகிய’ அரும்பெருமையைக் கொண்டதாலும், ‘எல்லாமே ஒன்றே’ என்கின்ற தொகுத்தறியப்படும் பொருளானதால், இறையே இரையாகவும் உள்ளது. அத்வைத விஞ்ஞானத்தை ரசித்து மகிழவே இந்த விளக்கம்.

    ஆகவே அறிவுப்பசிக்கு இரை இறையே. இறைப்பசி இருப்பதற்கான அடையாளம் ‘நான் யார்?’ என்கின்ற வினா அறிவிற்கு எழுதலாகும்.

    அவ்வினாவிற்கான விடை அறிவிற்கு தெளிவாகி வரும்போது வாழ்வின் நோக்கம் அறிவிற்கே புரிந்து வருதலாகும். பிறகு ஏற்கனவே அறிவு மேற்கொண்டு வரும் ‘இறையைத் தேடும் பயிற்சியில்’ (இறை வேட்பு) முன்பு இருந்ததைவிட ஈடுபாட்டினை அதிகமாக்கிடல் வேண்டும்.

    தனக்குப் பிரியமானதை அறியாமல், அதற்கு வழியும் தெரியாமல், பிரியமில்லாததை அறிவதிலேயே காலம் கடத்துவது அறிவிற்குத் துன்பம்தான். எந்த நோக்கத்திற்காக அறிவு மனித உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி. அறிவிற்கு தன்னை அறிவதில் ஆசை வந்துவிட்டால் தன்னை முழுமையாக அறிகின்ற வரை அதற்கு ஓய்வு என்பதே இல்லை. “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?” என பாரதியார் கூறியதுபோல் அறிவு புலன்களுக்கு அடிமையாகியுள்ளதை அறிந்து அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சுதந்திரம்/விடுதலை(Liberation) பெறவேண்டும் என்கின்ற ஏக்கம் மனித அறிவிற்கு ஏற்பட வேண்டும். அறிவு, என்று தன்னை உணா்கின்றதோ, அன்றுதான் அறிவின் பசி முழுவதுமாகத் தீரும். அன்றுதான் அறிவிற்கு முழுவிருந்து. வயிற்றுப் பசியினைத் தீர்க்கும் உணவு, ஒரு நாள், நிச்சயமாக அழியக்கூடிய உடல், வளர்வதற்கும், உடலைப் பராமரிப்பதற்கும், உடலை இயக்குவதற்கும் உதவுகின்றது, வயிற்றுப் பசிக்கான உணவு அதிகமானால் அஜீரணமும், சலிப்பும் உண்டாகும். ஆனால் அறிவுப்பசியைத் தீர்க்கும் சிந்தனை–உணவு அறிவை வளர்ப்பதற்கும், அறிவு மேம்பட்டு முழுமை அடைவதற்கும் உதவியாக உள்ளது. அறிவுப்பசிக்கு உட்கொள்வதில் சலிப்பும், அஜீரணமும் ஏற்படுவதில்லை. மாறாக அறிவுப்பசிக்காக உட்கொள்ளும் விருந்து தன் வம்சாவளிக்குப் போய்ச் சோ்கின்றது.

    எப்படியெனில் அறிவுப்பசிக்காக உட்கொண்ட சிந்தனை–உணவு,
    வயிற்றுப்பசிக்காக உட்கொண்ட உணவில் ஒருபகுதி அழிகின்ற உடல் தேவைக்குப் போக, மீதமுள்ளது சக்கையாகி மலமாவதுபோல் அல்லாமல்,
    அழியாத ஆன்மாவில் பதிந்து, தரமேன்மைக்கு உதவுவதால், ஆன்மா அந்தப்பிறவியிலேயே தரமேன்மையின் பலனை அடைவதற்கும்,
    அவ்வாறு ஒருவேளை அடையமுடியாமல் போய்விட்டாலும், அந்த பலனை அடைவதற்கு, மற்றொரு பிறவி தேவைப்படுகின்றது என்றால் தனக்குப்பிறகு வரும் தன் வம்சாவளிக்கு, கருமையப்பதிவுகளாகச் செல்கின்றது.

    வயிற்றுப்பசி உணர்வு ஏற்படவில்லை என்றால் என்ன அர்த்தம்? வயிறு தன் இயல்பு நிலையை இழந்து விட்டது என்று பொருள். அதனை நோய் என்றும் கோளாறு என்றும் அழைக்கிறோம். இயல்பு நிலையை இழந்துவிட்டக் கோளாறினை சரி செய்ய மருத்துவரிடம் சென்று முறையான மருத்துவம் செய்துகொண்டு வயிற்றை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து குணமடைகின்றோம்.

    • அது போல் அறிவுப்பசியே இல்லை என்றால் என்ன பொருள்?
    • அறிவு தன் இயல்பு நிலையில் இல்லை என்று பொருள்.
    • அறிவு தன் இயல்பு நிலையி்ல் இல்லை என்றால் அதற்கு என்ன பொருள்?
    • ‘எது எதுவாக இருந்தாலும் அது அதுவாக இல்லையோ அதுதான் மனம்’ என்கின்ற ஆதங்க புதிராக உள்ளது மனம். அதாவது தெய்வமே மனமாக இருந்தும் மனம் தெய்வமாக செயல்படவில்லை என்பதுதான் அந்த ஆதங்கப் புதிருக்கான விடை. மனதின் அந்நிலையை மாற்றி தன் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு அறிவிற்குப்பசி அவசியம்

    இயல்பு நிலை என்றால் அறிய வேண்டியதை அறிந்து கொள்ள வேண்டும். எந்த ஒன்றும் தன் இயல்பு நிலையில் இல்லை என்றால் என்ன பொருள்? அந்த ஒன்று தன் சரியான பணியால், தன் இயக்கத்தை சரியாக செய்யவில்லை என்பதாகும். எனவே அறிவிற்குப் பசி இல்லையெனில் அறிவு தன் இயல்பு நிலையில் இல்லை என்பதாகின்றது. அறிவின் இயல்பு நிலை என்பது என்ன என்கின்ற வினா எழுகின்றது. அறிவு எதற்காக உயிரிடம் உள்ளது? உயிர்கள் உணர்வதற்கு அறிவு இருக்கின்றது. புலன்கள் மூலமாக அறிவு, பிரபஞ்ச நிகழ்ச்சிகளான அழுத்தம், சுவை, ஒலி, ஒளி, மணம் ஆகிய ஐந்தையும் உணர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த ஐந்து உணர்வுகளைப் பெறுவதற்காக பேரறிவு, ஓரறிவிலிருந்து தொடங்கி ஐந்தறிவு விலங்கினம் வரை தன்மாற்றம் அடைந்து வந்துள்ளது. அதற்கு மேலும் பேரறிவு ஏன் மனிதனாக தன்மாற்றம் அடைந்தது? இந்த வினா தான் ஒவ்வொரு மனிதனிடம் தானாகவே எழ வேண்டிய வினாவாகும். இந்த வினா எழுவதைத்தான் அறிவுப்பசி என்கிறோம். இந்த அறிவுப்பசி வினா தானாகவும் எழலாம். அவ்வாறு அறிவுப்பசி எழுந்தால் அறிவு இயல்பு நிலையில் உள்ளது என்று பொருள். அதாவது அறிவு அறியவேண்டியதை அறியத் தயாராகிவிட்டது என்று பொருள்.

    இந்த வினாவாகிய அறிவுப்பசி ஏற்படவில்லை என்றால் அறிவு மந்தமாக உள்ளது என்று பொருள். அறிவுக்கூர்மையாக இல்லை என்று பொருள். அந்த அறிவின் மந்த நோயைப் போக்க என்ன செய்வது? இயற்கை அளித்துள்ள திருவேதாத்திரியம் என்னும் அருமருந்தை உட்கொள்ள வேண்டும். திருவேதாத்திரியம் எனும் அருமருந்து. அறிய வேண்டியதை அறியாது மந்த நிலையில் இருக்கும் அறிவிற்கு பசியையும் ஏற்படுத்தி, இயற்கை மருத்துவத்தில் ‘உணவே மருந்து’ என்பதுபோல், திருவேதாத்திரியம் அருமருந்தாகவும் செயல்பட்டு, அதுவே விருந்தாகவும் அமைகின்றது. முதலில் அறிவுப்பசியை ஏற்படுத்தும் மருந்தாகவும், பிறகு விருந்தாகவும் அமைந்துள்ளது இயற்கை அளித்துள்ள மனவளக்கலை யோகா.

    Unave_Marundhu

    மருந்து என்பது மருவி+உந்து= மருந்து என்றாகியுள்ளது. ‘மருவி’ என்றால் மாற்றமடைதல் என்று பொருள். ‘உந்து’ என்றால் தூண்டுதல் என்று பொருள். பொதுவாக இயற்கையில் தானே நோயை சீர்படுத்திக் கொள்ளும் திறமை உள்ளது. சில நேரங்களில் அது இயலாதபோது நோயைக் குணப்படுத்துவதற்கு வெளியிலிருந்து மருந்து என்கின்ற பொருள் தேவைப்படுகின்றது. மருந்து என்கின்ற பொருள், இயல்பாக உள்ள நிலை சீர்கெட்டு இருப்பதனை, மாற்றி, மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு தூண்டுதலாக இருப்பது.

    மருத்துவ இயலில், வயிற்றுப்பசியின்மையை நோய் எனக்கருதப்படுகின்றதோ அதுபோல் அறிவின்-அறிவியலில் அறிவுப்பசியின்மை நோயாகக் கருதப்படுகின்றது. அது பிறவிப்பிணி என்றும் சொல்லப்படுகின்றது. ஆன்மா பேரான்மாவுடன் முன்பிறவியிலேயே இணைய வேண்டியது முன்வினையின் மிச்சத்தினால் இப்பிறவி எடுத்துள்ளதை ஆன்மாவிற்குப் பிணி என்றே கொள்ளப்படுகின்றது ஆன்மீக—அறிவியலில். ஆகவே அறிவுப்பசியின்மையாகிய நோயைக்குணப்படுத்த, அதாவது வெளியிலிருந்து மருந்து கொடுக்கபட வேண்டியுள்ளது. அது பசியை ஏற்படுத்தும் நல்ல நிவாரணியாக Good appetiser ஆக இருக்க வேண்டும். அத்தகைய அறிவிற்கு பசியை ஏற்படுத்தும் நல்ல நிவாரணி–Good appetiser மனவளக்கலையாகும்.

    பருப்பொருளான உடல் உறுப்புகளில் உள்ள நோயைக் குணப்படுத்த வெளியிலிருந்து கொடுக்கப்படும் மருந்தும் பருப்பொருளாகவே இருக்கும். ஆனால் அரூபமான அறிவிற்கு கொடுக்க வேண்டிய புறமருந்து பருப்பொருளாக இருக்காது. மனவளக்கலை அறிவுப்பசிக்கு அருமருந்து என்கின்றபோதே அது பருப்பொருள் வகை மருந்தைச் சார்ந்ததல்ல எனத் தெரிகின்றது.

    அரூபமான அறிவிற்குப் பசி ஏற்படின், அதற்கான இரை இறையே என்பதிலிருந்து, அறிவுப்பசிக்கான விருந்து அறிவின் தர மேன்மையை வளா்த்து, உயர்த்தி அறிவு ஆட்சி செய்யும் அறிவாட்சித்தரத்தின் உச்சத்திற்கே அழைத்துச்செல்லும் என்பதாகின்றது. ஆகவே மனவளக்கலை, மந்தமாக இருக்கின்ற அறிவை, அதாவது அன்னமயகோசம், மனோமயகோசம் ஆகிய இரு கோசங்களிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்து வயிற்றுப்பசியினை மட்டுமே தீர்த்துக் கொண்டிருந்த அறிவை முதலில் பிராணமய கோசத்திற்கு அழைத்துச் செல்லும். இதனால் அறிவிற்கு அறிவுப்பசி இல்லாமல் இருந்த நோயிலிருந்து உந்தித்தள்ளி, விடுவித்து, அறிவிற்கு அறிவுப்பசியினை ஏற்படுத்தும். எனவேதான் மனவளக்கலை அறிவுப்பசியினை ஏற்படுத்தும் மருந்தாக செயல்படுகின்றது என்கிறோம். மனவளக்கலை, அறிவிற்கு ஆரோக்கியமான, நல்ல, சத்சங்கத்தை ஏற்படுத்தித் தருகின்றது. நற்சிந்தனையை வளர்க்கின்றது. அவ்வையார் கூறும் இனிதிலும் இனிதான நல்லோர் இணக்கத்தைத் தருகின்றது. நல்லோர் இணக்கத்தால், நல்ல பல அறிவுரைகள், ஆலோசனைகள் கிடைக்கின்றன. அவை,

    • அறிவை, இதுவரை காற்றடிக்கும் திசையில் செல்லும் பாய்மரக்கப்பல் போன்று
    • மனம் போன போக்கில் புலன் வாழ்க்கையே பிரதானமாக எண்ணி வாழ்ந்து கொண்டிருந்த பாமரத்தனத்திலிருந்து விடுவித்து,

    அறிவு ஆட்சி செய்யும் அறிவாட்சித்தரத்தின் உச்சத்தை அடைந்து மனித மாண்பினை வெளிப்படுத்துகின்றது. புலன் வழி வாழ்கின்ற பாமரனை மனித மாண்பினை அளிக்கக் கூடிய அறிவாட்சித்தரத்திற்கு உயர்த்துவதால், மனவளக்கலை அருளிய, முதன் அறிவின் அறிவியலாளரான பகவான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பாமர மனிதனின் தத்துவ ஞானி– Common man Philosopher என்று அன்புடனும், பிரியமுடனும், பயனாளிகளான அவருடைய மாணவர்களால் மகிழ்ச்சி பொங்க அழைக்கப்படுகின்றார். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம். வாழ்க மனவளக்கலை. வளர்க மனவளக்கலை.

    ஒரு நாட்டின் பிரதம மந்திரி யார் என்று கேட்டால், அந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அறிவர். அந்த நாட்டு மக்கள் அறிந்திருப்பதோடு அல்லாமல், வேறுநாட்டுமக்களும் பொது அறிவாக அறிந்திருப்பா் ஆனால் கடவுள் என்பவர் யார் எனக் கேட்டால் பெரும்பாலோருக்குத் தெரியாது. இதுபோன்ற வினாவினை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த நிலையில், இறைவன் என்பவர் யார், இறைவழிபாடு என்றால் எப்படி இருக்க வேண்டும், ஆன்மீகம் என்றால் என்ன என்றும், ‘நான் யார்?’ என்கின்ற ஆன்மீகத்தின் மிகச் சிறந்த வினாவிற்கான விடையை கருத்தியலாகவும், அதனை அனுபவபூர்வமாக அறிய செய்முறை பயிற்சிகளையும் அளிக்கின்றது மனவளக்கலை.

       இறைஉணர் ஆன்மீகத்தில் மிகச்சிறந்த வினாவான ‘நான் யார்?’ என்பதற்கு அனுபவபூர்வமாக விடைகிடைத்தலே ஆன்மீகத்தின் இறுதி வெற்றி. இந்த வெற்றிக்கு ஆறாம் அறிவு அறிய வேண்டியவைகளை அறியாமல் இருக்கின்றது.

     நான் யார், நான் எங்கிருந்து வந்தேன், எங்கு செல்லப்போகிறேன். ஏன் துன்பம் வருகின்றது. இந்த பிரபஞ்சத்தை யார் படைத்தது, இந்த பிரபஞ்சத்திற்கு மூலம் எது என்கின்ற அறிவுப்பூர்வமான வினாக்கள் எழாமைதான் அறிவுப்பசியின்மையாகக் கருதப்படுகின்றது அறிவின்-அறிவியலில். இவ்வாறு சிந்திக்காமல், அறிவுப்பசியில்லாமல் இருக்கும் அறிவிற்குள்ள மந்த-நோயினைத் தீர்ப்பதற்கான ஏற்ற மருந்து மனவளக்கலை. ஏனெனில் மனவளக்கலை அறிவின் மந்த நிலையைத் தூண்டி விடுவதற்கு அதனைச் சிந்திக்க வைக்கின்றது.

    அதனால்தான் மகரிஷி அவர்கள் ‘Information, Confirmation, Transformation என்கின்ற மந்திரத்தைச் சொல்லி, அவர் சொல்வதனை அவ்வாறே ஏற்றுக்கொள்ளாமல், சிந்தித்து உறுதி படுத்திக் கொண்டு, அதுபோல் மாற்றம் பெறுங்கள் என்கிறார். ஆகவே இவ்வுலக மக்களின் அறிவுப்பசியினைத்தூண்டக்கூடிய அருமருந்து மனவளக்கலை. அடுத்த விருந்தில் தூண்டப்பட்ட அறிவுப்பசிக்கான விருந்து மனவளக்கலை என்பதனை சிந்திக்க இருக்கிறோம். அடுத்த விருந்தில் 15-07-2015 புதனன்று சத்சங்கத்தில் கூடுவோம்.

    Loading

  • வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும் — 2/5

    FFC–98

    அறிவுப் பசி

    Scientist of Consciousness

    08-07-2015—புதன்.

    சென்ற விருந்தில் எல்லோருக்கும் தெரிந்த வயிற்றுப்பசி பற்றி அறிந்துகொண்டோம். இன்றைய விருந்தில் அறிவுப்பசி பற்றி அறிந்து கொள்ள இருக்கிறோம்.

    அறிவுப்பசியைத் தூண்டும் மருந்தாக, அறிவின்–-அறிவியலாகிய (Science of Consciousness) மனவளக்கலை செயல்படுவது பற்றியும்,

    பிறகு மனவளக்கலையே (அறிவின் அறிவியல்) அறிவிற்கு விருந்தாக அமைகின்றதையும் அறிய இருக்கிறோம். மனவளக்கலை அறிவின்—அறிவியலாக உள்ளதால் அறிவிற்கு, எடுக்க எடுக்க குறையாத அட்சயபாத்திரம் தருவது போன்று,
    ஆழ்ந்து செல்லச் செல்ல,
    குறையாத,
    சலிப்பில்லாத,
    புதிய புதிய விருந்தினைத் தந்துகொண்டுதானே இருக்க முடியும்?!

    விருந்துகள் யாவும் ‘Infinite’ பற்றி அறிந்து கொள்வது என்பதால், அறிய அறிய குறையாததாகவும் இருப்பதில் ஆச்சரியம் இல்லையே. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்வதில் எவ்வாறு மனம் ஆர்வம் கொள்கின்றதோ. அதனைவிட infinite times ஆர்வம் கொண்டு, சலிக்காமல் அறிவுப்பசியைப் அறிவு பூர்த்தி செய்துகொள்ள, மனம்போன போக்கெல்லாம் போகாமல், மனம்தான் ஒத்துழைக்க வேண்டும் அறிவிற்கு.

    இறைஉணர் ஆன்மீகப் பயிற்சியில் சாதகர்கள் இறைஉணர்வு பெறுவதற்கு அறிவுப்பசி இருந்தே ஆக வேண்டும்.  இறைஉணர் ஆன்மீக பயிற்சியில் பெரும்பாலோர் இறுதி வரை பயிற்சியில் சாதனையைத் தொடர முடிவதில்லை.  அதற்கு அறிவுப்பசி இல்லாமையே காரணம்.   அறிவுப்பசி உண்டாக, தூண்டப்பட ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் 9 வது ஸ்லோகத்தில் வலியுறுத்தப்படுகின்ற சத்சங்கம் மிக மிக அவசியம்.  அவ்வையார் கூறும் நல்லோர் இணக்கமும், அதில் இனிமையையும் காணவேண்டும்.

    இப்போது அறிவுப் பசியைப்பற்றிச் சிந்திப்போம். வயிற்றுப் பசி என்பது சரி. அறிவுப் பசி என்பது வார்த்தை ஜாலமா? உண்மையில் அறிவிற்குக்குகூடப் பசி ஏற்படுமா என ஐயம் எழலாம். ஏனெனில் அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது, உருவமில்லாத ஒன்றிற்குப் (அறிவிற்கு) பசி எவ்வாறு ஏற்பட முடியும் என நினைக்கத் தோன்றலாம்.

    வயிற்றுப் பசியின் போது வயிற்றில் ஏற்படும் பசி என்கின்ற துன்பத்தை உணர்வது அறிவுதானே! அதுபோல் உடல் உறுப்புகளில் ஏற்படும் இன்பதுன்ப உணர்வுகளையும் அறிந்து கொள்கின்றது அறிவு. ஆனால் தனக்கே ஏற்படும் பசி என்கின்ற துன்ப உணர்வினை அறிவு அறிந்து கொள்ள முடியவில்லை. காரணம் என்ன?
    பொதுவாக பசி எடுக்கவில்லை என்றால் ஏதோ கோளாறு இருக்கின்றது என்று அர்த்தம். அதற்கான காரணமாக ‘வயிறு மந்தப்பட்டிருக்கின்றது’ என்பார்கள் வீட்டிலுள்ள பாட்டிமார்கள். மந்தம் என்றால் என்ன? மந்தம் என்றால்

    1) இயக்கக் குறைவு

    2) வேகமின்மை

    3) சுறுசுறுப்பு இல்லாத தன்மை

    4) திறன்குறைவு

    என்று பொருட்கள். வயிற்றில் பசி இல்லையென்றால், வயிறு மந்தப்பட்டிருக்கின்றது என்கிறோம். பசி அதிகம் இருந்தாலும் அதுவும் கோளாறுதான், ‘மந்தம்’ என்கின்ற சொல்லின் பொருட்களைக் கொண்டு ‘வயிறு மந்தப்பட்டிருக்கின்றது’ என்றால் வயிற்றின் இயக்கம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். வயிற்றின் திறன் குறைந்திருக்கின்றது என்று பொருள். வயிற்றில் சென்ற உணவு சீரணிக்கப்பட்டு உரிய நேரத்தில் உணவிலுள்ள சத்துப்பொருட்கள் உரிய நேரத்தில் சேர்வதற்கு வேகமில்லாமல், சுறுசுறுப்பு இல்லாமல், இருக்கின்றது என்று பொருள். அதாவது வயிற்றின் சீரணிக்கும் திறன் குறைந்துள்ளது என்று பொருள்.

    வயிற்றுப்பசி எடுப்பதில்லை என்பதனை அறிவு அறிந்து கொண்டு, உடனே அதற்கான மருத்துவம் செய்து வயிற்றிலுள்ள கோளாறை சரி செய்து கொள்கின்றது அறிவு. வயிற்றுப் பசி இல்லை எனில் உணவு ஏற்றுக் கொள்ளமுடியாமல் உடல் பலவீனப்பட்டுவிடும். ஆகவே அறிவே  அதனை  உணர்ந்து கொள்கின்றது. பசி என்பது துன்பஉணர்வாக இருப்பதால் அறிவு உணர்ந்து கொள்கின்றது. அப்படி இல்லை எனில் வீட்டில் தாயோ அல்லது மனைவியோ கண்டுபிடித்து அவர்களே மருத்துவம் செய்வார்கள் அல்லது மருத்துவம் பார்க்கச் சொல்லி எச்சரிப்பார்கள்.

    ஆனால் அறிவிற்கு பசி இல்லை என்பது அறிவிற்கே தெரியாமல் இருக்கின்றது என்பது மனிதகுல பரிதாபநிலையைத்தான் காட்டுகின்றது. இயற்கையிலே அறிவிற்குப்பசி உள்ளது. அதனை அறிவு அறியாமல் இருப்பதற்கானக் காரணம் அறிவு மந்தமாக உள்ளது என்று பொருள். அதாவது பிறவிப்பிணியே. என்றும் கொள்ளலாம்.

        ‘அறிவு மந்தமாக உள்ளது’ என்பது

    அறிவின் இயக்கம் குறைவாக உள்ளதை.

    வேகமில்லாமல்(not agile) இருத்தலை,

    சுறுசுறுப்பு இல்லாதிருத்தலை(sluggish),

    அறிவதில்  ஆர்வமின்மையை,

    சிந்திக்கும் திறன் இல்லாது/குறைந்து இருத்தலை குறிப்பதாகும்,.

    வயிற்றுப்பசி இல்லை, வயிறு மந்தப்பட்டிருக்கின்றது என்பதனை அறிவு, தானே உணராத போது மற்றவர்கள் வயிற்றுப்பசியைக் கண்டுபிடித்து விடுவதுபோல் அறிவுப்பசியின்மையை பிறர் கண்டுபிடிப்பது என்பது இயலாது. மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அறிவுப்பசியின்மை இருக்கின்றது என்பதனை குடும்பத்தில் உள்ள மற்றவர் கண்டுபிடிக்க வேண்டுமெனில் அந்த மற்றவர் அறிவுப்பசியினை உணர்ந்திருக்க வேண்டும். அதற்கான மருத்துவம் செய்து கொண்ட அனுபவம் இருந்திருக்க வேண்டும். அறிவுப்பசியைப் போக்கிக் கொள்வதில் அதிக ஆர்வமும், அக்கறையும் உள்ளவராக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் அந்த மற்றவர் இந்த ஒருவரின் அறிவுப்பசியின்மையை அறிந்து கொண்டு அறிவுரைகள் சொல்வதன் வழியாகவும் வழிகாட்டுவதன் மூலமும் சரி செய்யலாம்.

    இல்லை என்றால் குடும்பமே அறிவுப்பசியை உணராமல், வாழ்நாள் முழுவதும் தங்கள் அறிவை பலவீனத்தில் ஆழ்த்துவதோடு மட்டுமல்லாது, பின் வரும் சந்ததிகளையும் அறிவுப்பசி இல்லாத, இளைத்த அறிவோடு பிறக்கச் செய்யும். உடலை இயக்கும் ஆற்றல் உயிராக இருந்தாலும், அந்த உயிராற்றல் சரியாக உடலை இயக்குவது என்பது, அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகிய குறைகளையுடைய இளைத்த, மெலிந்த, வலிமை குன்றிய அறிவால் சாத்தியமில்லை.  

    அதாவது அறிவாற்றல் ஓங்கி இருத்தல் என்பது,  மனிதன் பெற்றுள்ள செல்வங்களுள் முதன்மையானது. எனவே வாழ்க அறிவுச்செல்வம்.  வளர்க அறிவுச்செல்வம்.

    மற்ற உறுப்புகளில் ஏற்படும் பசி உள்பட மற்ற துன்பங்களை அறிந்து கொள்ள திறமையுள்ள அறிவு தனக்கே பசியாகிய துன்பம் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் வயிற்றுக்காக மட்டுமே உண்டு திரிந்து உறங்கிக் கொண்டிருக்கின்றது அறிவு. பசி என்பது துன்ப உணர்வு என்பதால் அறிவுப்பசி என்பது அறிவிற்கும் ஏற்படுகின்ற துன்பம் என்றுதானே பொருள்?

    அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். வயிற்றுப் பசியில் பசி என்கின்ற துன்ப உணர்வை, உணவை உட்கொண்டு சரி செய்து கொள்கிறோம். வயிறு ஓர் உறுப்பு. எனவே உருவமுள்ளது. வயிற்றில் இரைப்பை உள்ளது. நாம் அருந்தும் உணவு இரைப்பையில் நிறைகின்றது. வயிறும் பருப்பொருள். உணவும் பருப்பொருள்(கெட்டிப் பொருளாகவோ அல்லது நீர்ப்பொருளாகவோ இருக்கும்) வகையைச் சார்ந்தது. ஆனால் அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது. அப்படி இருக்கும்போது உருவமில்லா அறிவிற்கு ஏற்படும் பசியை எவ்வகையான உணவுப் பொருளைக் கொண்டு அறிவு தனது பசியைப் போக்கிக் கொள்ள முடியும்?

    உருவத்தைக் கொண்ட வயிறு பருப்பொருளாக உள்ள(உருவமுள்ள) உணவைக் உட்கொண்டு பசியைப் போக்கிக் கொள்வதுபோல் அறிவு தன் பசியை போக்கிக் கொள்வதற்கு பருப்பொருள் உணவு ஏதும் கிடையாது. அறிவுப்பசி என்பதனை ‘உணவு உண்ணத்தூண்டும் உணர்வு (hunger). என்கின்ற’ பொருளிலே மட்டும் ‘அறிவுப்பசி’யைப் புரிந்து கொள்ளக்கூடாது.

    பசி என்கின்ற சொல்லின் சொல்லின் இரண்டாவது பொருளிலும் புரிந்து கொள்ள வேண்டும்.
    அதாவது, ‘ஒன்றின் மீது விருப்பம், ஆர்வம், ஆசை அதிகமாக இருப்பதனை தெரிவிப்பதும்’
    ‘பசி’ என்கின்ற சொல்லின் இரண்டாவது பொருளாகும்.
    பசிக்கான இரண்டாவது பொருளிலும் ‘அறிவுப்பசி’ என்றால் என்ன என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
    அதாவது அறிவுப்பசி என்றால் அறிவிற்கு ஒன்றின் மீது ஏற்படும் அளவு கடந்த நாட்டமும், அதனை அடைவதற்கு ஏற்படவேண்டிய மிகுந்த விருப்பமுமாகும்.
    அறிவிற்கு ஒன்றின் மீது அளவுகடந்த நாட்டமும், அதனை அடைவதற்கு மிகுந்த விருப்பமுள்ள பொருள் எது?
    அறிவு என்பது காரணப்பெயரால் அழைக்கப்படுகின்றது. ‘அறிவது எதுவோ அதுவே அறிவு’
    ஆகவே அறிவதற்கு காரணமாக இருக்கும் ஒன்றைக் காரணப்பெயர் கொண்டு பெயர்ச்சொல்லாக (noun)  ‘அறிவு’ என்று அழைக்கப்படுகின்றது. அறிவு புலன்கள் வழியாக உடலுக்கு வெளியே நடக்கும் புறச்செயல்களை உணர்கின்றது/அறிகின்றது. இத்துடன் அறிவின் பணி முடிந்து விடுகின்றதா?

    ஐந்தறிவு விலங்கினங்களின் அறிவு கூட இதனைத்தான் செய்கின்றது.

    பேரறிவின் தன்மாற்றம் ஐயறிவோடு நின்று விடாமல் ஆறாம் அறிவாக ஏன் தன்மாற்றம் அடைந்துள்ளது?
    ஐயறிவிற்கும் ஆறாம் அறிவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஐயறிவுடையது விலங்கினம், ஆறறிவுடையது மனிதஇனம். இவ்வாறு பிரித்து சொல்வதும் மனித இனம்தான். உருவத்தில் மட்டும் தானா வித்தியாசம்?
    ஆறாம் அறிவின் சிறப்பில், பயன்பாட்டில் வித்தியாசங்கள் ஏதும் இல்லையா? அவற்றை வெளிப்படுத்த வேண்டாமா ஆறாம் அறிவு? வெளிப்படுத்துகின்றதா ஆறாம் அறிவு? இதற்கான பதில் அன்பா்களிடம் விடப்படுகின்றது.

    ஐந்தறிவைவிட ஆறாம் அறிவின் சிறப்பிலும், பயன்பாட்டிலும் உள்ள வித்தியாசத்தை அறியாததால்தான்
    “மனிதனென்ற உருவினிலே மக்களுண்டு, மாக்களுண்டு” என்கின்ற கவி மலர்ந்துள்ளது.
    “தின்றுத் திரிந்து உறங்கவா பிறந்தோம்?” என்கின்ற ஆன்மீக விழிப்புணர்வு வினா கி.பி.1911 க்குப் பிறகு எழுந்துள்ளது. மேலும் மகானாக்கும் நான்கு மகோன்னத வினாக்கள் எழுந்து, வேதாத்திரி மகரிஷி அவர்களை கருவியாகக் கொண்டு, ஆன்மீக ஏணியில் ஏறி ஆன்மிகத்தின் சிகரத்தைப் பிடிக்க முடிந்தது ஆன்மீக அறிவியலால்(Spiritual Science).

    அதன் விளைவாகத்தான், இயற்கை/இறை/அருட்பேராற்றல்/தெய்வம்/கடவுள்/God/Almighty/Truth/Existence, முதல் அறிவின் அறிவியாலாளரான வேதாத்திரி மகரிஷி அவர்களின் ‘அழைப்புக்கவி’ யின் வாயிலாக   மனிதகுலத்திற்கு அழைப்பினை  விடுத்துள்ளது. ஆனால் அது தமிழில் உள்ளது. உலகப் பொதுமறை நூல் எனப்படும் திருக்குறள் எவ்வாறு பல அன்னிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோ, அதேபோன்றே  இரண்டவாது உலகப் பொதுமறையான திருவேதாத்திரியமும்  பல அன்னிய மொழிகளில் விளக்க உரையுடன் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.  அன்னிய மொழிகளில் முதலில் ஆங்கிலத்தில் திருவேதாத்திரிய 1854 மந்திரங்களும் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.

    “அன்பர்களே வாரீர்” என்கின்ற அழைப்பு வினாவாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், தின்று திரிந்து உறங்குவதனை மாற்றி சரி செய்து, சாதாரண மனிதனை முழுமனிதனாக, மாமனிதனாக்கக்கூடிய மருந்தும், விருந்தும் அறிவின் இருப்பிடம் அறிதலே என்று கூறியும், அதனை அறிந்து அன்றாட வாழ்வை அறிந்து அனுபவிக்க ‘இன்றாவது விரைந்து வாரீர் என அழைக்கின்றான் இறைவன்(இயற்கை/இறை/அருட்பேராற்றல்). வாழ்க்கையை அறிந்து அனுபவிக்க வேண்டும் என்கின்றான் இறைவன்(இயற்கை/இறை/அருட்பேராற்றல்). ருசி தெரியாமல் சாப்பிடமுடியுமா? சாப்பிடுவது என்ன என்று தெரிந்து உண்ணுவதுபோல், ஏதோ வாழ்க்கையை அனுபவித்ததாக இருக்காமல், அறிந்து அனுபவிக்க வேண்டும். அதனால்தான் ‘அன்றாட வாழ்க்கையை அறிந்தனுபவிக்க’ என்கின்ற வைரவரிகள் வந்து உதிர்ந்துள்ளன அம்மந்திரத்தில்.

    அறிதல் (அறிகின்ற) ஆற்றலைக் கொண்ட அறிவிற்கு, ‘அறிதலிலே சிகரமான பொருள்’ மீது நாட்டமும், அதனை அடைவதற்கு ஏற்படவேண்டிய மிகுந்த விருப்பமுமாகிய அறிவுப்பசி இல்லை. அதற்கேற்ற வசதிகளும் வாய்ப்பும் கி.பி. 1911 வரை சமுதாயத்தில் இல்லாமல் இருந்தது. ‘அறிவுப்பசி’ என்கின்ற உணர்வு தெரியாமல் இருப்பதனால்தான் மனிதகுலம் அறிவுப்பசி என்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

    பசிஉணர்வு தேவையை அறிவிற்கு உணர்த்த வேண்டியிருப்பதால்,  பசி முதலில்  துன்ப உணர்வாக எழுகின்றது.  பிறகு அறிவு முயற்சி செய்து, அதனை இன்ப உணர்வாக மாற்றுகின்றது.   எவ்வாறு? உணவு (food) என்கின்றத் தேவையை அளவோடும், முறையோடும் பூர்த்தி செய்து கொள்ளும்போது முதலில் எழுந்த பசியாகிய துன்ப உணர்வு சமன்படுத்தப்படுவதால் இன்ப உணர்வாகின்றது. இது வயிற்றுப்பசியைப் பொருத்த மட்டிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

    இயற்கையில் ஆறாம் அறிவிற்கு பசி உள்ளது. ஆனால் அறிவுப்பசியினை உணராதபோது அந்த தேவையினைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணமே எழுவதில்லை. தேவையைப்பூர்த்தி செய்யாதபோது துன்பம்தானே மிகும். இவ்வாறு பிறவிதோறும் மிகுந்து, மிகுந்து வரும் துன்பங்களினால் அறிவு எவ்வாறு தன்பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்க முடியும்? இதுதான் இன்றைய மனிதகுலத்தின் நிலை.

    ஆகவே உருவமில்லா உணவைக் கொண்டுதான் அறிவு தன் அறிவுப்பசியினைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் சிந்தனை. அதனால்தான் ‘சிந்தனை’, சிந்தனை விருந்து எனப்படுகின்றது. அறிவு ஐம்புலன்கள் வாயிலாகப் புற நிகழ்ச்சிகளை உணர்கின்றது. உடலில் ஏற்படும் இன்பதுன்பங்களை உணர்கின்றது. இதுமட்டுமேவா அறிவின் வேலை? இது மட்டுமே அறிவிற்கு இன்பம் தரமுடியுமா?

     அறிவது எதுவோ அது அறிவு. உடலுக்கு ஏற்படுகின்ற இன்பதுன்ப உணர்வுகளை அறிந்து கொள்வது எதுவோ அது அறிவு. புறத்தே நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம் அறிகின்றது. இவற்றை எல்லாம் அறிந்து கொண்டு, இவற்றிற்கெல்லாம் மேலாக, அறிய வேண்டியதை அறியக் கூடிய திறன் உடையது அறிவு. அப்படியானால் அறிவு அறிய வேண்டியது எது? அறிவு தான் யார் என்றும், தன் இருப்பிடம் எது என்றும் அறிய வேண்டும். அப்போதுதான் அறிவு முழுமை அடைய முடியும்.   இன்னும் அறிவுப்பசி பற்றிய அரிய சிந்தனைகள் அடுத்த விருந்தில் தொடரும். அதில் அறிவுப்பசிக்கு இரை எது என்றும், “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?” என பாரதியார் கூறியதுபோல் என்று தணியும் பேரறிவின் தாகம் என்பது பற்றியும் அறிய இருக்கிறோம். அடுத்த விருந்திற்காக 12-07-2015 ஞாயிறன்று சத்சங்கத்தில் கூடுவோம்.

    வாழ்க அறிவுச்செல்வம்.  வளர்க அறிவுச்செல்வம்.

    Loading

  • வயிற்றுப்பசியும் அறிவுப்பசியும் – 1/5

    FFC–97

    வயிற்றுப்பசி

                                                                                     

     05-07-2015–ஞாயிறு

    hunger and thirst for knowledge

     

     இந்த தலைப்பில் ஏற்கனவே சிந்தித்து இருந்தாலும், இன்னும் ஆழ்ந்து சிந்திக்கவே மீண்டும் இத்தலைப்பைஎடுத்துக் கொண்டுள்ளோம். ‘வயிற்றுப்பசியும்அறிவுப்பசியும்’ என்கின்ற தலைப்பில் சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்பதனை முதலில் அறிந்து கொண்டு பிறகு சிந்தனைக்குள் செல்வோம். அனைவரும் அறிந்த துன்பஉணர்வான வயிற்றுப்பசியுடன், அறிவுப்பசி என்கின்ற துன்ப உணா்வினை (ஆன்மதாகம்) புதிதாகக் கண்டுபிடித்து ஏன்ஒப்பிடுகிறோம்? காரணம், தெரியாத ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள, தெரிந்த ஒன்றுடன்தான் இணைத்து ஆறாம்அறிவு புரிந்து கொள்ள முயற்சி செய்யும்.   அறிவுப்பசி என்கின்ற வார்த்தை  புதிதல்ல. அருட்பிராகச வள்ளலார் அவர்கள் கூறும்  “பசித்திரு, தனித்திரு, விழித்திரு” என்கின்ற  மந்திரத்தில் உள்ள ‘பசித்திரு’ என்பதுதான் நாம் கூறும் அறிவுப்பசியாகும்.

    சிந்தனைமலர்கள், சிந்தனைவிருந்து என்று பொதுவாக சொல்லப்படுகின்றது. ஆனால், நாம் இதனை அறிவிற்கு விருந்து என்றுதான் மொழிகிறோம்.  அப்படியானால் அறிவிற்கும் பசிஉண்டு, அதனைத் தீர்ப்பதற்கு  விருந்து  படைக்க விரும்புகிறோம் என்றாகிறது.

    காலங்காலமாக பிறவிகள் தோறும் சேர்ந்து அதிகமாகி உள்ள அந்தக் கொள்ளைப் பசியினை அறிந்து, அதனை விரைவில் போக்க சாதாரண உணவுமட்டும் போதாது என்றுகருதி  அறிவிற்கு விருந்தாக அளிக்கவிரும்பி, ‘அறிவிற்குவிருந்து’ என்று மொழிகிறோம்.

    எனவேதான் முதல் அறிவின் அறிவியலாளரான நமதுதந்தைக்கும் மேலான அருட்தந்தை அவர்கள் இந்த உலக சமுதாயத்திற்கு அறிவின் இருப்பிடம் அறிந்து இன்புறுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார், இந்த அழைப்பினை  எந்த நாள் விடுத்தார் எனத் தெரியவில்லை.  ஏனெனில் சிலகவிகளில் கவியின் தலைப்பிலேயே  நாள் குறிப்பிட்டிருக்கும்.   இந்தக்கவியில் நாள் ஏதும் குறிப்பிடவில்லை.

    அழைப்பை எவ்வாறு விடுத்திருக்கிறார் என்று அறிந்து கொள்வோம்.  பசிதெரியாமல் உறங்கிக்கொண்டிருக்கும் அறிவைத்தட்டி எழுப்பி, இந்த மனிதகுலம் உய்ய வேண்டுமே என்று எண்ணி, “தின்று திரிந்து உறங்கவா பிறந்தோம்” என்று அன்புடனும், உரிமையுடனும், அக்கறையுடனும் வினவுகிறார்.

    anbargale vaareer-THAI

     பல்லாயிரம் பிறவிகளாக அறிவுப்பசியில்லாமல் அறிவு மந்தமாக இருந்து வருவதால் தின்றுதிரிந்துஉறங்கவாபிறந்தோம்?” என்று அன்புடன் அழைக்கிறார்.    விலங்குகள் உயிர்வாழ்வதற்கு உண்பது, உணவுதேடுவதற்காகத் திரிவது, இரவு வந்தவுடன் உறங்குவது ஆகியவைகளை மட்டுமே தான் அன்றாடம் செய்து வருகின்றன. ‘திரிவது’ என்றால் நோக்கம் ஏதுமில்லாது அலைவதாகும்.  விலங்குகள் எதற்காக திரிகின்றன? அவற்றிற்கு  நோக்கம் ஏதும் கிடையாது?  உணவு ஒன்றிற்காக மட்டுமே அலையும்.

    அதே வார்த்தையான ‘திரிதல்’  என்பதனை பயன்படுத்தி மனிதனின் அறிவுநிலையதனை சுட்டிக்காட்டி, அறிவின் மந்த நிலையிலிருந்து விழித்தெழுவதற்கு “தின்றுதிரிந்துஉறங்கவாபிறந்தோம்?” எனவினவுகிறார். அவ்வாறு வினவுவதோடு இல்லாமல் தின்று “திரிந்து உறங்கவா பிறந்தோம் என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்” என்கிறார்.  ‘ஏன்?’ எனக் கேள்வி எழுப்பியதால் ‘நாம் யார்?’ என உணர்ந்து கொண்டோம் என்று, நாம் அந்த நிலை எய்துவதற்கு முன்னரே நேர்மறை எண்ணத்துடன், நம்மையும் அவருடன் சேர்த்துக் கொண்டு ‘நாம் யார் என அறிந்து கொண்டோம்’ என்று பன்மையில் கூறுகிறார். எனவே அவரது விருப்பப்படி மனவளக்கலைஞர்கள் அனைவரும் தான் யார் என அறிந்தவர்கள்/அறியப்போகிறவர்களாகின்றனர்.

     வயிற்றுப்பசியாகிய துன்பத்தை போக்கி, இன்பத்தைஅனுபவிப்பதுபோல், அறிவுப்பசியினைப் போக்கிக் கொண்டால் இன்பநிலைக்கு மேலான பேரின்பத்தை அனுபவிக்கலாம் என்கிறார் அறிவின் அறிவியலைத்தந்துள்ள முதலாம் அறிவின் அறிவியலாளரும் உலகமக்களுக்கெல்லாம் திருவருள் பெற  அருளைத் தருகின்ற அருட்தந்தை அவர்கள்.

    இதுவரை அறிவிற்கு பசி இருப்பது அறிவிற்கே தெரியவில்லை. அது எப்படியிருக்கும் என்பது தெரியாததால் தெரிந்த வயிற்றுப்பசியுடன் ஒப்பிட்டுப் பார்த்து தெரியாத அறிவுப்பசியை தெளிவாக விளங்கிக் கொள்ளவே இந்த தலைப்பை இன்றைய அறிவிற்கு விருந்தாக எடுத்துக் கொண்டுள்ளோம். வாழ்கவளமுடன்.  இப்போது தலைப்பிற்குள் செல்வோம்.

    ‘பசி’ என்பதனை எல்லோரும் அறிவர்.  வினைச் சொல்லாக, பசி(hungry) என்பது உணவு உண்ண வேண்டும் என்கின்ற உணர்வு ஏற்படுதலாகும். பெயர்ச்சொல்லாக உணவு உண்ணத்தூண்டும் உணர்வு (hunger). என்பதாகும்.  பசி என்பது அறிவிற்கு உடலளவில் ஏற்படும் ஒரு துன்பஉணர்வு. அது தோன்றுமிடம் வயிறு. எனக்கு பசியாக உள்ளது(I am hungry) என்போம்.  அல்லது வயிறு பசிக்கின்றது என்போம்.  உடல் இயக்கத்திற்கு சக்தி தீர்ந்ததும், சக்தி தேவை என்கின்ற நிலையை அறிவிப்பது பசி என்கின்ற துன்பஉணர்வு.  அந்தப்பசிக்கு “வயிற்றுப்பசி” எனப் பெயர் வைத்துள்ளோம்.

    பசி என்கின்ற துன்ப உணர்வு ஏற்படும்போது, அதனைப்போக்கிக் கொள்ள உணவின் மீது நாட்டம் எழுகின்றது.  தேவையை பூா்த்தி செய்து கொள்ள உணவின் மீது ஆர்வம் எழுகின்றது.  ஒன்றின் மீது விருப்பமும், ஆசையும் அதிகமாக இருக்கும் போது, அதனைத் தெரிவிக்கும்போது ‘பசி’ என்கின்ற சொல் ‘அதிக நாட்டம்’, ‘மிகுந்த விருப்பம்’ என்கின்ற பொருளில் பயன்படுத்தப்படுகின்றது,

    வயிற்றுப்பசியைப் போக்க உணவு உட்கொள்வோம். அந்த உணவு வயிற்றுக்குள் சென்று ஜீரணிக்கப்பட்டு சக்கையை பிரித்து எடுத்து, உடலுக்கு வேண்டிய ரசம், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என்ற ஏழுவித தாதுக்களாகி, பிறகு எந்தெந்த உடல்உறுப்புகளுக்குப் போய்ச் சேரவேண்டுமோ அங்குபோய்ச் சேரும்.   சக்கை மலமாக வெளியேறும்.   உணவு உட்கொள்வதில், அளவு(Limit) மீறி அதிகமாகிவிட்டாலோ, முறை(Method) மாற்றப்பட்டாலோ அஜீரணம் ஏற்படும்.

    ஞானத்திற்குரிய இலட்சணங்களில் முதன்மையானதான “இன்பம் துய்த்தலில் அளவும், முறையும் காக்கப்பட வேண்டும்” என்பதனை சின்ன வயதுக்குழந்தைகளுக்குக்கூட அறிவுறுத்துவதற்காக ‘பாடுபாப்பா’ என்கின்ற தலைப்பில் மகரிஷி அவர்கள்  உணவு உண்பதில் அளவு வேண்டும் என எச்சரிக்கும்  பாட்டினை நினைவு கூர்வோம்.  ஏனெனில் “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதாலும், ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்கின்ற எதார்த்தத்தைக் கூறும் பழமொழி அறிவுறுத்துவதாலும் சின்ன வயதுக்குழந்தைகளுக்குக் கூட அளவைக் குறிப்பிடுகிறார்.  தேவையில்லாமல் அதிகம் சாப்பிட்டால் சுகத்தைக் கெடுப்பதை அறிந்திடுவோம்  என்றும் கூறுகிறார்.

    paadu paappa  மேலும் வயிற்றுப்பசிக்கு அளவு மீறிய  உணவும், முறைமாறிய உணவும் அறிவுப்பசிக்கு தடையாக இருக்கும் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும் சின்ன வயதுக்குழந்தை வயதை கடந்த இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள்.  உணவே உடலாகவும், எண்ணமாகவும் மாறுவதால் சாத்வீக உணவு உட்கொள்வது யோகிகளுக்கு அவசியம். உணவைப் பற்றி யோகிகளுக்கு மகரிஷி அவர்கள் கூறுவது பற்றி அவரது கவியின் வழியாகவே அறிந்து இன்புறுவோம்.

     UNNum UNavu

     hunger

    மேலும் உண்ட உணவு ஏழுவித தாதுக்களாகி உடலாய் மாறும் விந்தையை செய்வது தெய்வம் என்பதனையும் சின்ன வயதுக் குழந்தைகளுக்கு எடுத்துரைக்கிறார் அதே பாடலில்.  பாடல் பின்வருமாறு:

    paadu paappa_vunavai

    உணவில் சாதாரண உணவும் உண்டு.  விருந்தும் உண்டு.  சாதாரண உணவும் பசியினைப்போக்கும்.  விருந்தும் பசியினைப் போக்கும். விருந்தில் பலவகையான உணவுகள் பரிமாறப்படும். விருந்தில் உணவு செயற்கையாக ருசியைக் கூட்டி தயாரிக்கப்படும். சாதாரண உணவுதான் பெரும்பாலோருக்கு கிடைக்கின்றது.  அதுவும்கிடைக்காமல்,   மனித சமுதாயத்தின் ஒருபகுதியினர் செயற்கையாக்கப்பட்ட வறுமையில் வாடுகின்றனர் என்பது நாகரீகம் வளர்ந்துள்ள சமுதாயத்தில்  பெறும் கவலைக்குரியதாக உள்ளது.

    விருந்து ஒருசிலருக்குத் தான் எப்போதாவது கிடைக்கின்றது.  சாதாரண உணவே போதுமானது. ருசி இருந்தால்தான் நாக்கு, உணவுக்குழாய்க்குள் உணவைத்தள்ளும் என்பது உண்மைதான்.  இருந்தாலும் பசிக்காகத்தான் உணவு.  ருசிக்காக உணவுஇல்லை என்பதனையும் மறந்து விடக்கூடாது. ருசியைச் செயற்கையாக அதிமாக்கினால் சில நேரங்களில் தீமையையும் விளைவிக்கும்.

    எனவே வயிற்றுப்பசிக்கு சாதாரண உணவே போதுமானது. ஆனால் அது சத்துள்ள உணவாக இருக்க வேண்டும். விருந்து கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும் தினந்தோறும் விருந்து உண்ண முடியாது.  சலிப்பு ஏற்படும்.  விருந்து என்பது தேவைக்கு அதிகமான உணவு தானே?  தினந்தோறும் விருந்து உண்பது வயிற்றுக்குத் தீங்கையும் விளைவிக்கும்.  உணவு உண்பதில் “அளவும்”(limit)“முறையும்”(limit) அவசியம்.

    இன்பம் துய்த்தலில் அளவும் மீறி, முறையும் மாறினால் இன்பமே துன்பமாக மாறும் என்கின்ற இயற்கை நியதியைக் கவனிக்க வேண்டும்.  இது வரை இத்தலைப்பு தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் அறிந்தோம்.  பசி என்பது என்ன என்றும் அறிந்து கொண்டோம். அடுத்த விருந்தில் இச் சிந்தனையின் முக்கியப் பகுதியான அறிவுப்பசி பற்றியும் மனவளக்கலை அறிவுப்பசியைத் தூண்டி அதுவே விருந்தாகவும் இருப்பது பற்றி அறிந்து கொள்வோம்.  வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு. தொடரும் 08-07-2015.

     

    Loading

  • மனிதத் தேர்வு – PERSONALITY TEST

    FFC – 96

                                                          01-07-2015–வியாழன்

     Personality_test-Q

        ‘மனிதத் தேர்வு’ என்கின்ற தலைப்பில் ஏற்கனவே நம் சத்சங்கத்தில் 30-10-2014 அன்று சிந்தித்து இருக்கிறோம்.  இருப்பினும் மீண்டும் அதே தலைப்பை எடுத்துக் கொண்டு ஆழ்ந்து/விரிவாக இன்று சிந்திக்க இருக்கிறோம்.  எட்டு மாதங்களுக்கு முன்னர், அதாவது இந்த இணைய தள www.prosperspiritually.com சத்சங்க ஆரம்பித்த இரண்டாம் நாள் இந்த தலைப்பில் சிந்தித்து இருக்கிறோம். அப்போது இணையதளம் ஆரம்பித்து ஒரிரு நாட்களே ஆனதால்  இணையதள சத்சங்கத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் மிகமிகக் குறைவு.  மீண்டும் அதே தலைப்பில் இன்று சிந்திக்க இருக்கிறோம்.  இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனிக்கவும்.

       முன்பு சிந்தித்ததைவிட இப்போது ஆழ்ந்து கூடுதலாக சிந்திக்க இருக்கிறோம்.   இது எதனால் சாத்தியமாகியது? இணையதள சத்சங்க அன்பர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், அவர்களின் எண்ணஅழுத்தத்தாலும், இன்னும் என்ன தெரிந்து கொள்ளப் போகிறோம் என்கின்ற அவர்களின் ஆர்வமிகு எதிர்ப்பார்ப்பாகிய அறிவுப்பசியைத் தீர்த்துவைக்கும் முகத்தான் இயற்கை/இறை  நடத்தி வைக்கும் நிகழ்வுதான் இந்த தலைப்பை மீண்டும் விரிவாக சிந்திக்க எடுத்துக் கொண்டது,  இதனை மேலும் உறுதிபடுத்துகின்ற நிகழ்வை இச்சிந்தனையின் இறுதியில் அறிவோம்.

        தலைப்பு  ‘மனிதத் தேர்வு’ என இருக்கின்றது.  தேர்வு என்றால் என்ன  என்பது யாவருக்கும் தெரியும்.    தேர்வு என்றால் கல்வி நிறுவனங்களில் அல்லது அலுவலகங்களில் ஒருவருடைய  படிப்பு, திறமை முதலியவற்றை சோதித்துப்பார்த்து  மதிப்பெண்கள் வழங்கப்படும். உதாரணத்திற்கு கணிதத் தேர்வை எடுத்துக் கொள்வோம். தேர்வு என்பது, குறிப்பிட்ட பாடதிட்டத்திற்குள் (syllabus) மாணவனிடம் வினாக்கள் கேட்டு, மாணவன் விடைகள் அளித்து, அது சரிபார்க்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.  மதிப்பெண்களைப் பொருத்து மாணவன் தேர்வில் தேர்ச்சி பெற்றாரா, இல்லையா என்று அறிவிக்கப்படும்.

    ஆனால் மனிதத் தோ்வு என்றால் என்ன?  யார், யாரை, எதில் தோ்வு செய்வது?  இது ஒரு புதுமாதிரியானத் தேர்வாக உள்ளதே!   மனிதத் தேர்வு என்பது மனிதத்தை தேர்வு செய்வது. மனிதத் தேர்வில், ‘எதில்’ என்பதற்கு விடைகிடைத்துவிட்டது, மனிதத்தை யார் தேர்வு செய்வது? தங்களுடைய மனிதத்தை தாங்களேதான் தேர்வு செய்து கொள்வது மனிதத் தேர்வு.  ஏன் மனிதத் தேர்வு என்கின்ற தலைப்பில் சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன?

       உயிரினப்பரிணாமத்தில் விலங்கினமாக வந்தஉயிர்தான், பின்னர், சடுதி மாற்றத்தால் (mutation)  மனித உயிராக வந்துள்ளது. ஆகவே விலங்கினத்தின்  பண்பாகிய பிறர்வளம் பறித்தல் என்கின்ற குணமும் மனித உயிரில் சேர்ந்து வந்துவிட்டது. மனிதன் என்றால் அவனிடம் அன்பும் கருணையும் இருக்க வேண்டும்.  இதுதான் மனிதம் எனப்படுகின்றது.  மனிதம் இருந்தால் தான்  அவன் மனிதன்.   மனம்+இதம்=மனிதன்.  இதம் என்றால் அன்பும் கருணையுமாக ஒத்தும் உதவியும் இருப்பது என்று பொருள் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    ஆகவே ஆன்மா தன்பரிணாமச்  சுழற்சியை முடித்துக்கொள்ள, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு பேரான்மாவாகிய இறைநிலையுடன் இணைந்து விடவேண்டும்.  இதற்காகவேதான் மனிதப்பிறவி.   ஆன்மா,  பிறவிஎடுத்தபிறகு,  மனிதனின் வாழ்க்கை தொடங்க ஆரம்பிக்கின்றது.   மனித வாழ்க்கை என்பது இயற்கை மனிதனைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி எனக்கொள்ளலாம்.

    கல்வித்தேர்வில் மாணவர்கள் விடை அளித்ததன்    அடிப்படையில் பூச்சியத்திலிருந்து நூறு மதிப்பெண்கள்வரை வழங்கப்படுகின்றன. எல்லோராலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்கமுடிவதில்லை. ஒரு சிலரால் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க முடிகின்றது, ஆகவே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தது நாற்பது மதிப்பெண்களாவது  எடுக்கவேண்டும்  என்கின்றகட்டாயம்உள்ளது.

    தேர்வில் தேர்ச்சி பெறாதவர் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.  அந்தத் தேர்விலும் தேர்ச்சி பெறாதவர் மீண்டும் மறுமுறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.  இதனையாவரும் அறிவர்.  தேர்ச்சி பெற்றால்தான் அந்தகல்வித்தகுதியை வைத்து வேலை கிடைத்து, வாழ்க்கைக்கு வேண்டிய பொருளை  ஈட்டி நிறைவாக  வாழ முடியும்.

            அதே போன்று தான் இயற்கை நடத்துகின்ற வாழ்க்கை என்கின்ற மனிதத்தேர்வில், அதாவது மனிதம் வெளிப்படுவத்துவதில்,  தேர்ச்சிபெறவேண்டும்.  மனிதம் வெளிப்படாததன் காரணமாக, ஏற்பட்டுள்ள வினையின் பயனை அனுபவிக்கத்தான் ஆன்மா மீண்டும் பிறவி எடுத்துள்ளது.   மனிதம் வெளிப்படுத்துவதில் நூறு மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெறுவது விரும்பத்தக்கதுதான் (Desirable).  நடைமுறையில் அப்படி இல்லை.  ஒரு கோடியில் ஒருவர்தான் நூறு மதிப்பெண்கள் எடுத்து மனிதத்தேர்வில் தேர்ச்சி பெற முடிகின்றது. பெரும்பாலோர் குறைந்தது நாற்பது மதிப்பெண்கள் கூட எடுத்து தேர்ச்சி பெறுவதில்லை. தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களான நாற்பது விழுக்காட்டிற்கும்  கீழ்,  பூஜ்ஜியத்திலிருந்து முப்பத்தொன்பது வரை எடுக்கும் நிலைதான் உள்ளது.

            இந்த மனிதத் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்தவர்கள்தான் அறிவின் முழுமை அடைந்த அறிஞர் அல்லது ஞானி எனக் கருதப்படுகிறார்கள்.  எப்படி கல்வித் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்தவருக்கு, அவருக்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களை விட நல்ல வேலை கிடைத்து, பொருளை செழிப்பாக ஈட்டி வாழ முடிகின்றதோ, அதுபோல் வாழ்க்கையில் நூறு மதிப்பெண்கள் எடுத்து, முதன்மையான ஞானி, இன்பத்திற்கெல்லாம் பெரிதான பேரின்ப வாழ்வு  வாழமுடிகின்றது.

            மனிதத் தேர்வில் தேர்ச்சி பெற்றமற்றவர்கள் அவரவர் மதிப்பெண்களுக்குத் தக்கவாறு இன்பத்தையும் துன்பத்தையும் கலந்துதான் நுகரலாம்.  நூறு மதிப்பெண்கள் எடுத்தவரைப் போன்று சலிப்பில்லா,  துன்பமில்லாப்  பேரின்ப வாழ்வு வாழ முடியாது.

            மனிதத் தேர்வில் தேர்ச்சியே பெறாதவர்கள் இன்னும் மனித உடலில் விலங்கினமாகவே வாழ்பவர்கள் ஆவர்.  இங்கே மகரிஷி அவர்கள் மனிதனைப்பற்றி கூறும் கவியினைக் கவனி்ப்போம்

    perfect_man

       மனிதன் என்கின்ற உருவினிலே மாக்களும், மக்களும் இருக்கிறார்கள் என்கின்றார்.  விலங்கினப் பண்பை போக்கிக்கொள்ளாத, பிறர்வளம் பறிக்கின்றவர்களை மாக்கள் என்கிறார். விலங்கினப்பண்பை போக்கிக் கொண்டு வாழ்பவர்களை மனிதா்கள் என்கிறார்.  அதிலும் மனதை அறிந்து மனதை இதமாக வைத்துக் கொண்டு மற்ற உயிரினங்களுக்கும், மக்களுக்கும்  மனமுவந்து தொண்டாற்றுபவர்களை முழுமனிதன் என்கிறார்.

        மனிதத் தோ்வில் தேர்ச்சி பெறாதவர்கள்  துன்பத்தையே அனுபவிக்க வேண்டியிருக்கும்.  கல்வித்  தேர்விலாவது மீண்டும் ஒருமுறையோ அல்லது  இரண்டு அல்லது மூன்றாவது முறையோ தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது சாத்தியமாகின்றது.  ஆனால் மனிதத் தேர்வில் மட்டும் மீண்டும் மீண்டும் பல்லாயிரம் முறை  பிறவிகள் எடுத்தாலும் தேர்ச்சி பெற முடிவதில்லை.  இந்த அவல நிலைதான் இன்று மனிகுலத்தின் அமைதியின்மைக்குக் காரணம்.

             இந்த நிலையை மாற்றியமைக்க, மனிதன் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் தேவையாக இருந்தது இயற்கைக்கு.

    இச்சூழ்நிலையில்,

    1)  மனிதத் தேர்வில் முதலில் மனிதனை மனிதனாக்கி,  அதாவது மனிதத்தேர்வில்  40-99 மதிப்பெண்கள் எடுக்கவைப்பது.

    2)   பிறகு improvement exam எழுதி அதிக மதிப்பெண்கள் எடுப்பது போல் அந்த மனிதனை இந்தப் பிறவியிலேயே நூறு மதிப்பெண்கள் எடுக்கச் செய்து அறிவை அறிந்த அறிஞராக்குவது; அறிவியலாளராக்குவது.

        ஆகிய இரண்டு பணிகளைச் செய்து மனித சமுதாய வாழ்க்கையில் புரையோடிக் கிடக்கின்ற மூடப்பழக்கங்களையும்,   தேவையற்றவைகளையும் அடியோடு நீக்கி, புதிதாக நலம் தரும் அறிவுப் பூர்வமான பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி எந்நிலையிலும் ஒழுக்கவாழ்வு மலர்வதற்கு(revamp) இயற்கை கொண்டு வந்த திட்டம் தான் திருவேதாத்திரியம் என்கின்ற பெயரால் சமுதாயத்திற்குக் கிடைத்துள்ளது.  திருவேதாத்திரியம் கூறும் மந்திரத்தை நினைவில் கொள்வோம்.  திருவேதாத்திரியம்,

           “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என்கின்றது.

        மேலும் பல்லாயிரம் பிறவிகளாக ஆன்மா சோ்த்து வந்த பழிச்செயல் பதிவுகளை ஒரு பிறவியிலே நீக்கிக் கொண்டு தூய்மை அடையலாம் என்கின்றார் மகரிஷி அவர்கள்.

    this_birth_is_enough_for_liberation

    பழிச் சுமைப்பதிவுகளை தூய்மை செய்வதால், மீண்டும் அந்தப்பதிவின் விளைவுகளாக துன்பம் வராமல் இருக்குமாதலால்.  நன்மை கிடைக்கின்றது என்கிறார்.

       விலங்கினப் பதிவுகளால்தான் பழிச்செயல்கள் வந்து சேர்ந்துள்ளன ஆன்மாவிற்கு.  ஆகவே விலங்கினப்பதிவுகள் நீங்கினால்தான்  பழிச்சுமைப்பதிவுகள் நீங்கும்.  விலங்கினப்பண்புகள் நீங்கிய ஆன்மா  மனிதனாகலாம் என்கிறார்.

       அதற்கு மேலும் திருவள்ளுவர் கூறுவது போல் ஐயப்படாது அகத்தை உணர்ந்தவர் தெய்வமாகலாம் என்றும் மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்.

      இதுதான் இயற்கை மனிதனுக்கு வைத்துள்ள தேர்வு எனக்கொள்கிறோம்.  யாரும் விரும்பிப் பிறப்பதில்லை.  வினைப்பயனை அனுபவிக்கவே மனிதன் பிறக்கிறான். வினைப்பயனை தீர்த்துக் கொண்டு பிறவிக் கடலை நீந்தி மீண்டும் பிறவாது இருக்க வேண்டும் என்பதனை இயற்கை மனிதப்பிறவிக்கு வைத்துள்ள நோக்கம் அல்லது தோ்வாகும்.

      எனவே தான் சங்கல்பத்தில் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம் என்கின்ற உலகியல்  வாழ்க்கைக்கு வேண்டியத் தேவைகளை மட்டும் வைக்காமல்,  சாதாரண மனிதன் உலகியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டே மாண்புடையவனாக, மற்ற  சங்கல்பங்களாகிய, ‘சிவம் அறியப்படுவதால் மலர்கின்ற அன்பால்’ செய்கின்ற தன்னலமற்றத் தொண்டால் வரும் உயர்புகழ் மற்றும் மெய்ஞ்ஞானம் ஆகிய இரண்டையும் இணைத்துள்ளார்.  மகரிஷி அவர்கள்.  மனவளக்கலைஞர்களை இறைத்தூதுவர்கள் என்று கூறி, அருளை நிதியாகக் கொண்டவர்களாக்கி அருள்நிதி என்கின்ற பட்டத்தையும் சூட்டுகிறார் மகரிஷி அவர்கள்.

       மேலும் “யோகமும் மனித மாண்பும் -– Yoga for Human Excellence” என்கின்ற படிப்பை பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது இயற்கை/இறை. ஆகவே ஒவ்வொருவரும் மனித மாண்புத்தேர்வில் EXCELLENT GRADE ஐ பெறுகிறோம் என உறுதி கொள்வோம்.

    Personality_test-Answer

    எனவே இப்போதைய காலத்தின் கட்டாயத்தால்,இயற்கைகருணையோடுஅளித்துள்ள இந்த திருவேதாத்திரியத்தை  வாழ்த்துவோம். வணங்குவோம்.

                       வாழ்க திருவேதாத்திரியம்.  வளர்க திருவேதாத்திரியம்.

                                     வாழ்கவையகம்.வாழ்கவளமுடன்.

        ‘மனிதத் தேர்வு’ என்கின்ற இச்சிந்தனையை பதிவேற்றத்திற்கு (upload) தயார் செய்து  வைத்திருந்த வேளையில், நேற்றைய(30-06-2015—செவ்வாய்) ‘The Hindu’ ஆங்கில நாளிதழில் வந்துள்ள A personality test on Gita values’ என்கின்ற தலைப்பின் கீழ் வந்துள்ள செய்தியினை  நம் சிந்தனையுடன் இணைத்துக் கொள்வோம். அதனுடன் நகலைக் கீழே காண்கிறீர்கள்.  இந்து நாளிதழுக்கு நன்றி.   நாம் எடுத்துக் கொண்டுள்ள ‘மனிதத் தேர்வு’ என்கின்ற தலைப்பிற்கும், A personality test’ என்கின்ற இந்து நாளிதழில் வந்துள்ள தலைப்பிற்கும் உள்ள பொருத்தத்தைக் காணுங்கள்.  மனிதனுடைய personality ஐ, பகவத்கீதை போதிக்கின்ற விழுமியங்கள் அடிப்படையில் அளவிடுவதற்கு ஒரு இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என செய்தியிலிருந்து தெரிய வருகின்றது.

     Personality_Test_The_ Hindu_30th_Jun_2015

    முக்குணங்களால் மனித  உண்மை நிலையை புரிந்து கொள்ள முடிகின்றது எனப்படுகின்றது. இதுவரை அந்த இணையதளத்தின் வழியாக மாணவர்கள் உள்பட 10000 க்கும் மேல் தங்களை சோதித்துக் கொண்டதாக செய்தி கூறுகின்றது.  சத்வ, ரஜ, தமோ ஆகிய மூன்றையும், சோதிக்கின்றது என்கிறார் இணையதளத்தை உருவாக்கிய அன்பர், திரு. சதீஷ் மோத் அவர்கள்.  அவர் ஒரு பகவத்கீதை ஆராய்ச்சியாளர். அந்த இணையதளம் டாக்டர். மோத் அவா்களின் 20 வருட ஆராய்ச்சியினைக் கொண்டது என்கிறது செய்தி.  மீண்டும்The Hindu’ நாளிதழுக்கு நன்றியினை இணையதள சத்சங்க அன்பர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.

        இந்த நிகழ்வு தற்செயலானதா அல்லது திட்டமிட்ட தெய்வீக நிகழ்ச்சியா (divine coincidence)? நாம் இந்த தலைப்பின் கீழ்  ஏற்கனவே சிந்தித்திருக்கிறோம்.  மீண்டும் இச்சிந்தனையை  ஆழ்ந்து சென்று கருத்துக்களை இன்று பதிவேற்றம் செய்ய விருந்தோம்.    இதனை, ‘The Hindu’ நாளிதழோ, திரு. சதீஷ் மோத் அவர்களோ அறிய வாய்ப்பில்லை. அதுபோல் நேற்று, ‘தி இந்து’ நாளிதழில் ‘A personality test on Gita values’ என்கின்ற செய்தி வரப்போகின்றது என்று நமக்கும் தெரியாது. இந்நிலையில் நேற்று அந்த நாளிதழில் வந்துள்ள  செய்தியும் நாம் எடுத்துக் கொண்ட தலைப்பும் ஒன்றாக இருக்கின்றது.  இந்த இருநிகழ்வையும் இணைத்து வைத்தது இயற்கை/இறை/அருட்பேராற்றலேதான்.  ஆகவே இயற்கைக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  இயற்கை நமக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கவும் வேண்டுகிறோம்.

         ஆகவே  அவரவர்களே தன்னை அறிவாட்சித்தரத்தில் சோதித்து பார்க்க வேண்டிய அவசியத்தை இயற்கை  அறிவுறுத்துகின்றது.  நாம் எடுத்துக் கொண்ட தலைப்பையும் ஆமோதிக்கின்றது. ஒருவருடைய குணத்தை சோதித்துப்பார்த்துக் கொள்ள ஒரு இணையதளமே உருவாக்கிக் கொடுத்துள்ளது இயற்கை.   ஆகவே ஒவ்வொருவரும் தன்னைத் திருத்திக் கொள்வதில் ஆர்வம் கொண்டு முயற்சி செய்து மனித மாண்பினை உயர்த்திக் கொள்ள வேண்டும். மனிதத் தேர்வில் மதிப்பெண்கள் அளிப்பது  என்பது இயலாது.  ஏனெனில் இது குணம் சார்ந்தது. மற்ற சோதனைகள் போன்று, எடைஅளவு, உயரம், மார்புச்சுற்றளவு,  ஆகியவைகளை எடுத்துக் கூறுவதற்கு அளவு கோல்கள் உள்ளது போல் மனிதத் தேர்வில் மனிதத்தை எடுத்துச் சொல்வதற்கு அளவுகோல்கள் இல்லை. என்றாலும் தனது இயல்பை அடிக்கடி அடிக்கடி சோதித்துக் கொள்ள வேண்டும் என்பதனை எடுத்துச் சொல்வதற்காகவே மனிதத் தேர்வு என்கின்ற தலைப்பு  சிந்தனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

        வேதாத்திரியம் அன்பும் கருணையும் மனிதனிடம் இயல்பாக மலர்வதற்கு இரண்டொழுக்க பண்பாட்டினை தவத்தின் முடிவில் ஓதச் சொல்கிறது.  இதனுடைய அடுத்த விரிவாக்கம், மனிதன் அன்றாடவாழ்வில் எந்தப்பணியைச் செய்து கொண்டிருந்தாலும் இடையிடையே இதனை ஓதி நினைவில் கொண்டிருக்க வேண்டும்.  அதாவது ஒருமணிநேரத்திற்கு ஒரு முறை 30 வினாடி நேரம் தேவையிருக்கும் இரண்டொழுக்கப் பண்பாட்டின் விரிவாக்கத்தைச் செயல்படுத்துவதற்கு.   அதாவது ஒரு மணிநேரத்தில் 30 வினாடி நேரம் செலவு செய்து ‘நான் இந்த ஒரு மணிநேரத்தில் இறையருளுக்கு பாத்திரமாக இருந்துள்ளேனா?’ என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். இது போன்ற பழக்கம் வந்துவிட்டால் நாளடைவில் ஒழுக்கத்தில் அயரா விழிப்புணர்வு நிலை வந்துவிடும்.  மனிதத் தோ்வில் மதிப்பெண்கள் கூடிக்கொண்டே வரும்நம்முடைய மனசாட்சிதான் நமக்கு மதி்ப்பெண்கள் அளிக்க வேண்டும்.  அதாவது நான் திருந்திக் கொண்டு வருகிறேன். விளக்க வழி வாழ்வதில் நாள்தோறும் முன்னேறி வருகிறேன் என்பதனை உறுதி செய்ய வேண்டும்.

    மகரிஷி அவர்கள் கூறுவதுபோல், மனதை அறிந்து,  மனதை இதமாக வைத்துக் கொண்டு, எந்த உயிர்களுக்கும் துன்பம் அளிக்காமல், மக்களுக்கு மனம் உவந்து தொண்டாற்றி மாமனிதாகி முழுமனிதனாவோம்.

    “குருவருள் இன்றேல் திருவருள் இல்லை”  என்கின்ற நிதர்சனத்தை மனதில் கொண்டு முதன் அறிவின் அறிவியலாளரும் நமது அருட்தந்தையுமான வேதாத்திரி மகரிஷி அவர்களின் பொற்பாதங்களை மானசீகமாக வணங்கி ஆசி பெற்று இன்புறுவோம்.  வாழ்க திரு வேதாத்திரியம்.  வளர்க திருவேதாத்திரியம்.

    மீண்டும் புதியதொரு சிந்தனையுடன் 05.07.2015 அன்று சந்திப்போம்.

    வாழ்கவளமுடன்.

    Loading