இன்றைய விருந்து

  • இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 3/?

    இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 3/?

    FFC – 71

    05-04-2015—ஞாயிறு

    ‘இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நினைவிலும் காண்பதுதானே’ என்பது எவ்வாறு நடைபெறுகின்றது என ஆராய்ந்து வருகிறோம். இந்த தலைப்பைக் கொடுத்தது அவ்வையாரே என்பதால் அவர் அருளிய பாடல்கள் வழியாகவே ஆராய்ந்தோம். இருப்பினும், அறிவை அறிந்த அறிவினர், வேறு யாராவது இது பற்றிக் கூறியிருக்கின்றார்களா என்று ஆராய்ந்ததில் நம்மிடையே எழுந்தருளுபவர் அறிஞர் திருமூலர். எனவே, இப்போது அறிஞர் திருமூலர் கூறுவதையும் நினைவு கூர்வோம். அறிஞர் திருமூலர் அறிவினரைச் சேர்ந்து எவ்வகையிலெல்லாம் இனிதை அனுபவிக்க முடியும் என்று கூறுவதைக் காண்போம்.

    FFC-71-தெளிவு குருவின்- to post on 4-4-15

    இக்கவியில் திருமூலர் குருவைச் சேர்தல் தெளிவு என்கிறாரே! ஆனால் அவ்வையார் அறிவினரைச் சேர்தல் இனிதிலும் இனிது என்கின்றாரே என ஐயம் எழலாம். இந்த இரண்டு மகான்களின் கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய கடமை நமக்குள்ளது. அவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கும்போது. இரண்டு ஐயங்கள் எழலாம்.

    1) அறிவினரும் குருவும் ஒரே தன்மையானவரா? அதாவது ஒரே ஆளுமையுடையவரா?

    2) தெளிவும், இனிதினும் இனிதும் ஒன்றா?

    அறிவுடையோர், குரு ஆகிய இருவரும் ஒரே இனத்தவரா, அதாவது ஒரே தன்மையானவரா என சற்று விரிவாகப் பார்ப்போம்.

    அவ்வையார் மூன்றாவது இனிதாக அறிவினரைச் சேர்தல் என்கிறார். நான்காவது இனிதாக அறிவுடையோரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே என்று ஆச்சரியத்துடன் நம்மிடமே வினவுகிறார். நாம்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். நாம் சொல்லாமல் வேறு யார் பதில் சொல்ல முடியும்? பயனாளியைத் தவிர வேறு யார் உண்மையைச் சொல்ல முடியும்?

    அறிவினர் என்பவர் யார்? அறிவுடையவரா? மனிதன் என்றாலே எல்லோரிடமேதான் அறிவு உள்ளது. அப்படியானால் எல்லோருமே அறிவினரா? இருக்க முடியாது. அறிவை அறிந்தவர், அறிவினர். ‘அறிவு’ மற்றும் ‘இனம்’ என்கின்ற இரு சொற்களும் சேர்ந்து வந்ததுதான் அறிவினர் என்கின்ற சொல். இனம் என்றால் பல வகைகளை உள்ளடக்கியப் பெரும் பிரிவு என்று பொருள். அறிவு இனர் என்றால் அறிவின் இருப்பிடம், இயக்கம், பூரணம், சிறப்பு, முழுமை ஆகியவைகளை அறிந்தவர் அறிவினர் ஆவார். அறிவை விட பெரும் பிரிவு வேறு ஏது? எனவே இனம் என்கின்ற சொல்லின் பொருளான ‘பல வகைகளை உள்ளடக்கியப் பெரும் பிரிவாகிய’ அறிவை அறிந்தவர் அறிவினர். அந்த அறிவினரைச் சோ்தல் மூன்றாவது இனிதாகக் கூறுகிறார்.

    நான்காவது இனிதைக் கூறும்போது, ‘அறிவுடையோரைக் கனவிலும் நனைவிலும் காண்பது தானே’ என்கிறார். அங்கே அறிவினர் என்கிறார். இங்கே அறிவுடையோர் என்கிறார். இவர் வேறா? அறிவினர்தான் அறிவுடையோர். எல்லோருக்கும் ஆறாம் அறிவிருந்தும், அது புலனளவிலே மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மாறாக புலன்களைக் கடந்து, அறிவு நிலையிலே அறிவை செயல்பட வைத்துக் கொண்டிருப்பவர்களே அறிவுடையராவார். புலன்களுக்கும் அப்பாலும் அறிவை செயல்படுத்துபவர்களே அறிவை உடையவர்களாகக் கருத முடியும் என்பதால் அறிவுடையோர் என்கிறார், அறிவினர் மற்றும் அறிவுடையோர் ஆகிய இருவருமே ஒருவா்தான்.

    திருமூலர் கூறுகின்ற குரு என்பவர் யார்? குரு என்கின்ற சொல்லுக்கு ஆசிரியர், ஆசான், முன்னுதாரணமாக இருப்பவர் என்று பெயர். ஆசிரியர் என்பவர் எதற்காகத் தேவைப்படுகிறார்? அறிந்து கொள்ள வேண்டியதை அறியாமல், அறியாமையில் இருக்கும் போது தேவைப்படுகிறார். எனவே குரு என்பவர் அறியாமையைப் போக்குபவர். மேலும் பண்டைய ஆன்மீக நூல்கள் குருவைப்பற்றிக் கூறுவதனைக் கவனத்தில் கொள்வோம். ‘குரு’ என்கின்ற சொல்லில் கு – ரு என்கின்ற இரண்டு எழுத்துக்கள் உள்ளன. ‘கு’ என்கின்ற சொல் அறியாமை அல்லது ஞானமடையாத அஞ்ஞான நிலையைக் குறிக்கின்றது. ‘ரு’ என்கின்ற எழுத்து, அருள் அல்லது கருணை என்கின்ற சொல்லில் வரும் இரண்டாவது எழுத்து, ஆகவே ஒருவரின் அறியாமையை எவர் ஒருவர் தனது அருளால் போக்குகின்றாரோ அவரே குரு எனப் போற்றப்படுவர்.

    மனிதனின் அடிப்படைத்தன்மையை, அதாவது சுயத்தை தெரிந்து கொள்ளாது இருக்கும் நிலையை நீக்கி, அருள்பவா் ஆன்மீகக் குருவாவார். அதாவது அறிவுநிலையில் குன்றியவரை, தனது அருளால் அறிவுநிலையில் உயர்த்துபவரை, ‘குன்றியதிலிருந்து’ என்கின்ற சொல்லிருந்து முதல் எழுத்தாகிய ‘கு’ வை எடுத்துக் கொண்டும், அருள் என்கின்ற சொல்லில் உள்ள ‘ரு’ என்கின்ற இரண்டாவது எழுத்தையும் எடுத்துக்கொண்டு ஒரே சொல்லாக்கியது தான் ‘குரு’ என்கின்ற காரணப் பெயர். குரு என்பவருக்கு விளக்கம் பார்த்தோம். குருவும் அவ்வையார் கூறும் அறிவினா்/அறிவுடையோரும் ஒருவரா என அறிய வேண்டும். குரு என்பவர் அறியாமையை நீக்குகிறார். அறிவினரோடு சோ்வதாலும் அறியாமை நீங்குகின்றது. எனவே திருமூலர் கூறும் குருவும் அவ்வையார் கூறும் அறிவினா்/அறிவுடையோரும் ஒரே தன்மையைக் கொண்டவரே (same personlity). ஆகவே முதல் ஐயத்திற்கு விளக்கம் கண்டாகிவிட்டது. இரண்டாவது ஐயமான ‘இனிதினும் இனிதும்’, ‘தெளிவும்’ ஒன்றா என்கின்ற ஐயத்தைப் போக்கிக் கொண்டால் திருமூலர் கூறும் நான்கு வழிகளில் எவ்வாறு தெளிவு கிடைக்கின்றது என அறிவோம்.
    தெளிவு என்பது அறிவு மேம்பட உதவும். அறிவை விசாலமடையச் செய்யும். அறிவுக்கு விளக்கம் கிடைக்கும். தெளிவு என்பது அறிதல், விளக்கமுறல். அறிவு தெளிந்தால்தான் நல்லறிவாக இருக்கும். தெளிந்த அறிவு பாவங்களைச் (தீயவைகளைச்) செய்யாது. எனவே சமுதாயத்தை, ‘தெளிந்த நல்லறிவு வேண்டும்’, என இறைவனை வேண்டச் சொல்கிறார் மகாகவி பாரதியார் ஒரு பாடலில்.

    தெளிவில்லாமல், பல பிறவிகளாக இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவிற்கு ஒளி கிடைத்து அது அறிவொளியாகிவிட்டால், அது அவ்வையார் கூறும் இனிதினும் இனிதாகத்தானே இருக்க வேண்டும். திருமூலர் கூறும் முதல் வழி என்ன?

    1) தெளிவு குருவின் திருமேனி காண்டல்:
    இந்த வரி கூறுவதென்ன? குருவினுடைய திருமேனியைக் காண்பது தெளிவைக் கொடுக்கும் என்கிறார் அறிஞர் திருமூலர். இது எப்படி சாத்தியமாகின்றது? தெளிவு அறிவிற்குரியது. அப்படியிருக்கும்போது, அறிவிற்குரியது எப்படி திருமேனியைக் கண்டால் ஏற்படுகின்றது? அது அவருடைய அனுபவமோ?! அது அவருடைய அனுபவமாக இருந்தாலும், அது எல்லோருக்கும் பொதுவானது என்பதால்தான் அதனை பாடல் வாயிலாக சமுதாயம் பயன்பெறுவதற்காகக் கூறியுள்ளார். திருமூலர் வாழ்ந்தது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், அன்று சொன்னதை இன்று, அதனைப் பயன் பெறும் வகையில் நாம் சிந்திக்கவில்லையா? பண்டைக் காலத்தில் குருகுலக் கல்வி முறையிலே, குருவின் நடை, உடை, பாவனையிலிருந்தும் கல்வியைக் கற்றுக் கொண்டனர்.

    குரு என்பவர் அகம் தூய்மையானவர். அகத்தினை உணர்ந்தவர். எனவே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதால், குருவினது பார்வை என்பது அருள் பார்வை. அகத்தில் உள்ளதைத்தான் முகமும், உடலும் எடுத்துக் காட்டும். மேலும் உடலுக்குள்ளே இருக்கும் தூய்மையான அகம், முகம், உடல் மூலம் பிரதிபலிக்கும். நாம் பார்ப்பது அவரது உடலை என்றாலும் அவர்கண்களும் எண்ணமும் நம்மீது அருளைப் பாய்ச்சுமல்லவா? அந்த புனித நிகழ்வால் சீடனின் தெளிவில்லாத அறிவு தெளிவு பெருகின்றது. எனவே குருவின் திருமேனி காண்டல் தெளிவைத் தரும் என்கிறார் திருமூலர்.

    2) தெளிவு குருவின் திருநாமம் செப்பல்:

    இது எவ்வாறு சாத்தியமாகின்றது. திரு நாமம் என்பது குருவினுடைய பெயர். குருவின் பெயர் அவரது உடலைக் குறிக்கின்றதா? அல்லது அவரது அறிவைக் குறிக்கின்றதா? குருவின் பெயர் அவரது அறிவாற்றலைக் குறிக்கின்றது. அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டுகின்றவர் குருவாக உள்ளதால் அவரது அறிவாற்றல் முழுமை அடைந்துவிடுகின்றது. அவரது அறிவின் முழுமையைச் சொல்வதென்றால் அது ஒன்றா, இரண்டா? ஆனால் அவ்வளவையும் ஒரு சொல்லால் சொல்வது எளிது. எனவே குருவின் பெயர் என்பது அவரது அறிவின் முழுமையெல்லாம் ஒன்றடக்கிய சுருக்கிய புனிதச் சொல்(abbreviated divine word). மேலும் குருவின் பெயர் மந்திரம் போன்றது. குருவின் பெயர்கள் நாமவளி போன்றது.

    நாமவளி என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் பெயர் வரிசையாகும்(string of names of a deity for chanting). அதுபோல் குருவினுடைய பூரணத்துவத்தை அறிந்து பயனடையும் சீடன், அவரை வெவ்வேறு பெயா்களால் அழைத்து இன்பம் காண்பான். இது குருவிற்காக செய்யப்படுவதில்லை இது, சீடன் பயன்பெற வேண்டி இயற்கையில் அமைந்துள்ள யுக்தி என்றே சொல்லலாம். ஆகவே குருவின் பெயரைச் சொல்லும் போது அவருடைய அறிவின் முழுமை அவன் மனக் கண்முன்னே வந்து நிற்கும். அந்நிலை உருவானால் மெல்ல, மெல்ல சீடனின் அறிவினில் ஞானத் தெளிவு ஏற்படத்தானே செய்யும். இதனைத்தான் திருமூலர் “தெளிவு குருவின் திருநாமம் செப்பல்” என்கிறார்.
    அடுத்ததாக திருமூலர் கூறும் மூன்றாவது வழிக்குள் செல்வோம்.

    அடுத்த விருந்தில் (08.04.2015) தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல், தெளிவு குருஉரு சிந்தித்தல் ஆகிய இரண்டைப்பற்றியும் அறிவோம். தொடரும்.

    Loading

  • இனிதினும்  இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 2/?

     

    FFC – 70

                            01-04-2015—புதன்

     

    சென்ற சனிக்கிழமையன்று ஏகாந்தம் இனிது, அதனினும் இனிது ஆதியைத் தொழுதல், மற்றும் அதனினும் இனிது அறிவினரைச் சேர்தல் பற்றியும் ஆராய்ந்தோம். இன்று அறிவுள்ளோரைக் கனவிலும், நனவிலும் காண்பது எல்லாவற்றையும் விட எவ்வாறு இனிதாக இருக்கின்றது என ஆராய இருக்கின்றோம்.

     4)  அறிவுள்ளோரைக்கனவிலும்நனவிலும்காண்பதுஅதனினும்இனிது:

         இனியவைகளில், அளவில்அதிகமானதும், நான்காவதுமானஇனிது என்பது,அறிவுள்ளோரைக் கனவிலும், நனவிலும் காண்பது என்கிறார் அவ்வையார்.இனிதினும் இனிது வரிசையில் அறிவுள்ளோரைக் காண்பதைக் கடைசியாகக் கூறுகிறார் அவ்வையார்.  இனியது எது என முருகன் அவ்வையாரிடம் கேட்டதற்கு நான்கோடு நிறுத்திவிட்டார் அவ்வையார்.  அப்படியானால் இதற்கும் மேலும் இம்மண்ணுலக வாழ்க்கையில் வேறு ஏதும் இனிதினும் இனிது இல்லை என்பதுதான்.  இனியது எது என்கின்ற கேள்விக்கு நான்கோடு பதில் நின்று விட்டது.  வேறு ஏதும் இனிதினும் இனிது இல்லாததால் இயற்கை/இறை நான்கோடு பதிலை நிறுத்தி விட்டது.

         அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பதே  இனிதினும் இனிதாகிவிடுமா? எவ்வாறு அது இனிதினும் இனிதாகின்றது? வாழ்நாள் முழுவதும், அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் கண்டு இனிதினும் இனிதை அனுபவிப்பதோடு முடிந்துவிடுவதுதானா வாழ்க்கை?  அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது என்பது மனிதனின் செயல்.  இயற்கையின் நீதியின்படி மனிதனுடைய செயலுக்கு அவனுடைய நோக்கம், திறமை, தொடர்பு கொள்ளும் பொருள், காலம், இடம்  ஆகிய ஐந்து காரணிகளைக் கொண்டு, உரிய விளைவு, உரிய நேரத்தில் வரும் என்பதால் இனிதினும் இனிது என்கின்ற விளைவோடு நின்று விடுகிறதா?   செயலுக்கு விளைவு உண்டு என்பது உண்மைதான் என்றாலும் ஒரு செயலுக்கு ஒரு விளைவு தான் என்று இயற்கை நீதி சொல்லவில்லையே.  ஒரு செயலுக்குத் தொடர் விளைவு இருக்கலாமன்றோ. ஒரு சில செயலுக்கு முதலில் ஒரு விளைவும், அத்துடன்அது முடிந்திடாமல், தொடா்ந்து வாழ்நாள் முழுவதும்கூட விளைவுகள் வரலாம்.

        இனிதினும் இனிதிற்கானத் தொடர் விளைவு என்னவாக இருக்கும்?

    பிறவிப்பயனை அடைவதே.  பிறவிப்பயன் என்பது என்ன?  மனிதனாகப் பிறந்தவன், ஆறாம் அறிவுடையவனாக இருப்பதால் ஞானம் பெற வேண்டும்.  ஞானம் என்பது என்ன?  ஆறாம் அறிவின் தெளிவினிலும் தெளிந்த நிலை.  இதுதான் மனிதன் பிறவி எடுத்ததற்கான உச்ச கட்டப் பயன்.  யாரும் விரும்பிப் பிறப்பதில்லை.  வினைப்பயனை அனுபவிப்பதற்காக  பிறவி தோன்றிவிட்டது ஆன்மாவிற்கு. ஆகவே எவ்வாறு வாழ வேண்டுமோ அவ்வாறு வாழ்ந்து, மீண்டும் பிறவாதிருத்தலாகும்.  இதனை, அவ்வையார் கூறும் மற்றொரு கவி உறுதி செய்கிறது.

        “அரியது எது” எனக் கேட்ட முருகனுக்கு, அவ்வையார் கூறும் பதிலைப் பாருங்கள் !

    அரியது எது?

    அரியது கேட்கின் வரிவடி வேலோய் !

    அரிதரிது! மானிடர் ஆதல் அரிது!

    மானிட ராயினும் கூன், குருடு, செவிடு,

    பேடு நீங்கிப் பிறத்தல் அரிது !

    பேடு நீங்கிப் பிறந்த காலையும்,

    ஞானமும், கல்வியும் நயத்தல் அரிது !

    ஞானமும், கல்வியும் நயத்த காலையும்,

    தானமும், தவமும், தான்செய்தல் அரிது !

    தானமும், தவமும் தான்செய்பவர் ஆயின்

    வானவர் நாடு வழிதிறந் திடுமே !

                                                           …. அவ்வையார்.

    இப்பாடலின் விளக்கம், தானாகவே விளங்குவதாக உள்ளது.

    1)   உயிருக்கு மனிதப் பிறவி கிடைப்பது அரிது தானே!  உயிர், ஓரறிவிலிருந்து ஐந்தறிவு வரை பல பிறவிகள் எடுத்த பிறகுதான் மனிதப் பிறவி கிடைத்துள்ளதால், மானிடராய்ப் பிறத்தல் அரிது என்கிறார் அவ்வையார்.

    2)   அப்படியே மானுடப் பிறவி கிடைத்தாலும் உடலளவிலும், மனஅளவிலும் குறைபாடுகள் இல்லாமல் பிறப்பது அரிது என்கிறார்.

    3)   அப்படியே குறைகள் நீங்கிப் பிறந்தாலும், ஞானத்தையும், கல்வியையும் விரும்புதல் அரிது.

    4)   அப்படியே ஞானத்தையும், கல்வியையும் சிறப்பாக அடைந்தாலும், தானமும் தவமும் செய்வது அரிது.

    5)    இப்படியாக எல்லா அரிதினையும் கடந்து வந்து, தானத்தையும் தவத்தையும் ஒருமனதாகச் செய்து வருவார்களானால், வானவர் நாடு வழியைத் திறக்கும்.  அதாவது வீடுபேறு கிட்டும் என்கிறார்.

    அதாவது பிறவிப்பயன் கிட்டும். பிறவிப் பயன் என்பது இன்பத்திற்கெல்லாம் பெரிதானது. ஆகவே அறிவினரைச் சேர்தலும், அவரைக் கனவிலும் நினைவிலும் காண்பதும், வீடுபேறு கிட்டக்கூடிய பயனைத் தரும். வீடுபேறு, இறுதியான  (ultimate) இன்பத்தினைத் தருவதால் அது பேரின்பமாக கொள்ளப்படுகின்றது.  வீடுபேற்றைப் பெறுவதற்காக, அறிவை அறிந்த அறிவினத்தாரை சேர்தலும், அவரைக் கனவிலும் நினைவிலும் காண்பது, ஆரம்ப நிலையிலேயே  இனிதினும்    இனிதாகத்தானே

    இருக்கும்.  இனிதினும் இனிதாக இருந்தால்தானே கடைசிவரை ஆன்மீகச் சாதகன் தொடா்ந்து பயிற்சியில் நீடித்துப் பயனைப் பெறமுடியும்.

        இப்போது, கனவிலும், நினைவிலும் என்பதற்கு வருவோம். அதாவது தூங்காமல்விழித்துக்கொண்டிருக்கும்போதும் (நினைவிலும்), தூங்கும்போதும்(கனவிலும்)  காண்பதுஇனிதுஎன்கிறார்அவ்வையார்.  இன்னும் நேரிடையாகச் சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் அறிவினருடன் சேர்தல்  என்பது சம்பிரதாயமாக இருக்கக்கூடாது என்கிறார்.  அறிவினருடன் சோ்ந்தமையின் அளவைக் கூறுகிறார்.  அறிவினருடன் சோ்ந்ததில் என்ன அளவு உள்ளது என ஐயம் எழலாம்.   அறிவினருடன் சேர்ந்தமையால் ஏற்படுகின்ற பிணைப்பில் ஏற்படும் ஆர்வமிகும் ஆர்வத்தைக் கூறுகிறார். அந்த ஆர்வமிகும் ஆர்வம் (intense desire) இல்லாவிடில் கனவிலும் நனவிலும் காண்பது என்பது  எவ்வாறுசாத்தியமாகும்?

         விழித்துக்கொண்டிருக்கும்போதுஅறிவுள்ளோரைகாண்பதுசாத்தியம்.  அறிவினர்களைநேரில்சந்திப்பதால்அவர்களைக்காண்பதுசாத்தியமாகின்றது.  அறிவினர்களைச்சந்திக்காதபோதும்  அவர்களைநினைவில்கொண்டுவந்துபார்க்கலாம். இதுசாத்தியமென்றாலும்,பெரும்பாலோருக்கு சாத்தியமாவதில்லை.  பெரும்பாலோருக்கு சாத்தியமாகி இருந்திருந்தால் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கீழ்கண்ட கவியினை எழுத வேண்டிய அவசியமே இருந்திராது.

    FFC-70- image-சாதனையே அறநெறி

     

     

    அதற்குக் காரணம், அவா்களின்கருமையத்திற்கும்அறிவினரின்கருமையத்திற்கும்ஈர்ப்புஇல்லாததேயாகும். அதாவது அறிவினர் கூறும் அறிவுரைகளுக்கும் பெரும்பாலோர்  பழகிய பழக்கத்திற்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருத்தலே காரணம். உதாரணத்திற்கு, காதலர்கள்காதலிக்கும்காலத்தில்நேரில்சந்திக்காவிட்டாலும்ஒருவரையொருவர்எப்போதும்நினைந்து

    கொள்வதுசாத்தியமாகவில்லையா?  ஏனெனில்இருவரும்ஒருவரைஒருவா்காதலிக்கின்றனர்.  அதுபோல்அறிவினரைக்காதலிக்கவேண்டும்.  அந்தக் காதலில் சிலர்  உடலளவில்காதலிப்பதுபோன்றுஅன்றுகுரு-சீடர்காதல்.  குருவிற்குக்கீழ்படிதலும்,அவரின்போதனைகளைவிரும்புவதாகவும்இருக்கவேண்டும்குரு-சீடர்காதல்.  குருவின் அரிய பெருமைகளைப் போற்றி மகிழ வேண்டும்.  அறிவினர் பூதவுடலில் இருந்தால் அவரை அடிக்கடி நேரில் சந்திக்க விரும்ப வேண்டும்.  அறிவினர் பூதஉடல் இல்லை என்றால் அவரது வாழ்க்கைச் சரித்திரத்தை, அவர் எழுதிய நூல்களை ஆர்வத்துடன் வாசிக்க வேண்டும்.  சத்சங்கத்தில் மனமுவந்து கலந்து கொண்டு நல்லவைகளை ஆராய வேண்டும்.

    சீடனுக்கும் அறிவினரான குருவிற்கும் இடையில் கருமைய ஈர்ப்பு காதல் இருந்தால் இது சாத்தியமாகும்.

    எவ்வாறுகாதலர்கள்காதலிக்கும்காலத்தில்இரவிலும்,தூக்கத்திலும்நினைந்துகொள்வதும், கனவிலும்ஒருவரைஒருவா்காண்பதுசாத்தியமாகின்றதோ,அதுபோல்குரு-சீடர்பிணைப்பு  மலர்ந்துவிட்டால்கனவிலும்குருவைக்காண்பதுசாத்தியமாகி பிறவிப்பயனை அடைவது சாத்தியமாகும்.

    இதுவரைஅவ்வையார் கூறிய நான்காவது இனிதாகிய அறிவினைரைக் கனவிலும் நினைவிலும் காண்பது எவ்வாறு சாத்தியம் என்றும் இனிதினும் இனிதாக இருக்கும் என ஆராய்ந்தோம். அடுத்த அறிவிற்கு விருந்தில் அறிஞர் திருமூலர், அறிவினரைச்சேர்தல் எந்தெந்த வகையில் இனிதாக இருக்கும் என்று கூறுவதனை அறிய இருக்கிறோம்.  ….தொடரும்(05-04-2015)

    Loading

  • இனிதினும்  இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 1/?

     

    Announcement_28-03-2015_Vethathiri_Maharishi

    FFC – 69

     இனிதினும்  இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 1/?

     

                              28-03-2015

        ன்று 28-03-2015 வேதாத்திரி மகரிஷி அவர்கள் மகாசமாதி அடைந்த நாள் – (9 வது ஆண்டு நினைவு நாள்).  மகரிஷி அவர்கள் 1911 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 14 ம் நாள் சென்னைக்கு அடுத்த,  கூடுவாஞ்சேரி கிராமத்தில், சின்னம்மாள் மற்றும் வரதப்பன் என்கின்ற தம்பதியருக்கு எட்டாவது குழந்தையாக அவதரித்தார்.   அவருடைய பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்புடன் முடிந்துவிட்டது. பிறகு இரவுப்பள்ளியில் சேர்ந்து ஆங்கிலம், தமிழ், கணக்கு ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.  இரவுப்பள்ளியில் படித்தது நான்காவது பாரத்திற்குச் (IV Form) சமம் என்று அவரது ஆசிரியா்கள் கூறியதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

        ஆனால் அவர் கண்டுபிடித்த இயற்கையியல்/இறையியல் மற்றும் வாழ்வியல் உண்மைகள்/கண்டுபிடிப்புகள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடங்களாக போதிக்கப்படுகின்றன.  அவர் எந்த பல்கலைக்கழங்களிலும் படித்துப் பட்டம் பெறாதவர்.  ஒரு முறை அமெரிக்காவில் அருளுரை ஆற்றிய பிறகு கேட்கப்பட்ட வினாக்களுக்கெல்லாம் தயக்கமின்றி விடை அளித்ததை வியந்து ஒருவர், மகரிஷியை ‘எந்த  University ல் படித்தீர்கள்’  என்று கேட்டதற்கு மகரிஷி அவர்கள் கூறிய பதில் –  “I studied in the city of Universe”. உண்மைதானே.  அவர் படித்ததெல்லாம் பிரபஞ்சம் எனும் பல்கலைகழகத்தில் தானே! பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து நிற்கும் பேறு கிடைத்ததால் அங்கிருந்து அனைத்தையும் அறிந்து கொண்டார் மகரிஷி அவர்கள்.  மகரிஷி அவர்கள் தன்னிலை உணர்ந்தவர்.  அவருள் மகானாக்கும் நான்கு உன்னத கேள்விகள் எழுந்தன?

        அவையாவன:

    1)   கடவுள் என்பவர் யார்?  அவர் இந்த உலகைப் படைத்தார்?

    2)   உயிர் என்பது என்ன?

    3)   இன்பம் துன்பம் என்பது என்ன?

    4)   வறுமை ஏன் வருகின்றது?

        இந்த நான்கு கேள்விகளுக்கும் விடைகள் கண்டுபிடித்து, அவற்றை சரிபார்த்து சமுதாயத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதுதான் வேதாத்திரியம்.  உலக சமுதாயம் இன்றுள்ள நிலையிலிருந்து உய்ய வேண்டுமென்றால் வேதாத்திரியத்தைத் தவிர வேறு நிவாரணம் ஏதும் இல்லை என்றே தான் சொல்ல வேண்டும்.   வேதாத்திரியம் உலகிலிலுள்ள எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வுகளைக் கூறுகின்றது.  உலக ஒற்றுமையை, உலக சகோதரத்துவத்தையும், ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கின்ற உண்மையையும் எடுத்துக் கூறுகின்றது வேதாத்திரியம்.

         இவ்வளவு சிறப்பு வாய்ந்த குழந்தை வேதாத்திரியை இதுவரை இயற்கை அன்னை பெறவில்லை எனக் கூறும் அளவிற்கு மகரிஷி அவர்கள், தம்முடைய மாணவர்களுக்குத்   தெளிவை ஏற்படுத்தி, சிந்திக்கத் தூண்டி,  இருளில்  இருந்த  மனதை அறிவொளியைக் கொண்டு பிரகாசிக்கச் செய்துள்ளார்.  மொத்தத்தில் மனிதன், பண்பில் ஏற்றம் பெற பண்பேற்றக் கல்வியினை அளித்துள்ளார்.  மாற்றிச்சொல்ல வேண்டுமென்றால், மனிதகுலத்தை, நலமுடன், அமைதியாக வாழவைக்க வேண்டிய பொறுப்புடைய இறை/இயற்கை, இதுவரை அவ்வப்போது மனிதத் தெய்வங்கள் வழியாகச் சொல்லி வந்ததனைத்தையும் தொகுத்து, காலத்திற்கேற்ப, வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழியாக ஒட்டுமொத்தமாகச் சொல்லி விட்டது என்பதுதான் சரியாக இருக்கும்.  அதாவது அப்பட்டமாக இறை, வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழியாக வெளிப்பட்டுவிட்டது எனலாம்.  அறிவாகிய இறையே  மாந்தருள்ளும் அறிவாக இருப்பதால் சமுதாயம் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் செய்து கொண்டிருக்கின்றது.  யாராக இருந்தாலும் இயற்கை நியதி எல்லோருக்கும் ஒன்றே என்பதால், தோன்றியவர்  மறைவதும் இயற்கை என்பதால், மனிதகுலத்தின் அறிவுக்கண்களை எல்லாம் திறந்து வைத்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் 2006 ம் ஆண்டு, 28 நாள் தன் பூதவுடலை நீத்தார்.

         அவரது  பூத உடல்  நம்மிடையே இல்லையே தவிர அவா் நம்முடன் வாழ்ந்து கொண்டு, பேசிக் கொண்டு, அறிவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார்.  ஏனெனில் ஆன்மா அழியாததன்றோ! அவர் அருளியுள்ள 1854 பாடல்கள் வழியாகவும், எழுதியுள்ள நூல்களின் வாயிலாகவும், குறிப்பாக, அவா் எழுதிய ‘எனது வாழ்க்கை விளக்கம்’ எனும் நூல் வழியாகவும் நம்முடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.  அவர் மறைந்த இந்த நாளில் நாமெல்லாரும் ஒன்று கூடியிருக்கிறோம்.   எதற்காக?  அவ்வையார் கூறும் வகையில் இனிதினும் இனிதை அனுபவிக்க, அறிவினரை, அவரை, கனவிலும், நினைவிலும் கண்டுகளித்துக் கொண்டிருந்தாலும், இதுவரை மகரிஷி அவர்களைப் பற்றி அறியாதவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக கூடியிருக்கிறோம்.

        ஒருவர்   மறைந்த தினத்தை வருடந்தோறும், நினைவு தினமாக கொண்டாடும் வழக்கம் சமுதாயத்திலும், குடும்பங்களிலும்  உள்ளது.  தலைவர்கள், சான்றோர்கள் மறைந்த தினத்தை சமுதாயமே கொண்டாடும்.

        தலைவர்களை, சான்றோர்களை நினைவிற் கொள்ளுதல் என்றால் என்ன?  அவர்கள் கூறிய அறிவுரைகளை, ஆராய்ந்து, உறுதிபடுத்திக் கொண்டு, அவர்கள் கூறியுள்ளதுபோல், நம்முடைய குணநலன்களை உயா்த்திக் கொண்டு பண்பேற்றம் பெறுவதே, அவர்களை நினைவிற் கொள்ளுதலின் நோக்கமாகும்.  சான்றோரைப் பின்பற்றி வாழ்பவர்கள், எப்போதும், தினந்தோறும் அவர்களை நினைவிற்கொண்டிருந்தாலும், சான்றோர் மறைந்த தினத்தன்று, அவரைப் பின்பற்றி வாழ்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி சான்றோருக்கு மரியாதையும், நன்றியும் தெரிவித்துக் கொள்ளும் வகையில் நினைவு தினமாக கொண்டாடுகின்றனர். மேலும், அச்சான்றோரை அறியாதவர்கள், மற்றும்  வருங்கால சமுதாயத்தினருக்கும் அச்சான்றோரைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர்களையும் அச்சான்றோர் கூறிய அறவழியில் வாழ்வதற்கு  அழைப்பு விடுவது நினைவு தினத்தில் வழக்கம்.

        இந்த அறிவிற்கு விருந்தில்,  நம் குருபிரானை எவ்வாறு, எப்போதும் நினைவில் கொள்வது பற்றி மகரிஷி அவர்களே கூறுகின்ற வழியில் ஆராய இருக்கிறோம்.  அதற்கு முன்னர் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்துகாட்டிய பேரறிவின் அம்சங்களான மனிதத்தெய்வங்கள் அனைவரின் அறிவாற்றலும் துணை நிற்க வேண்டுவோம்.

             குரு வணக்கம்    (11-08-1981)

    “அறிவேதான் தெய்வம் என்றார் தாயுமானார்;

    அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி,

    அறிவதனை அறிவித்தார் திரு வள்ளுவர்;

    அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்,      

    அறிஞா் திருமூலர்;  அவ்வறிவில் ஆழ்ந்து,

    ஆனந்தக் கவியாத்தார் இராம லிங்கர்,

    அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,

    அதை வாழ்ந்துகாட்டினோர், நினைவு கூர்வாம்”

    ….வேதாத்திரி மகரிஷி அவர்கள். 

     

        அவ்வையார் கூறும் இனிதினும் இனிதை அனுபவிக்க, அவரை அவரது பாடலின் வழியாக நினைவு கூர்ந்து, வணங்கி, அவரை நம் சத்சங்கத்தில் சூக்குமமாக எழுந்தருளச் செய்வோம்.

    FFC-70-இனிது இனிது அவ்வையார் பாடல்

    பொருள்:முருகன் கேட்ட‘இனியதுஎது?’ என்கின்ற ஒரு கேள்விக்கு விடையாக நான்கு இனியவைகளைக்  கூறுகிறார் அவ்வையார்.  அவ்வையார், தான் கூறும் இனியவைகளை அதன் அளவிற்கேற்றவாறு வரிசைப்படுத்திக்கூறுகிறார்.

    1)   ஏகாந்தம்இனிது.

    2)   அதனினும்இனிதுஆதியைத்தொழுவது.

    3)   அதனினும்இனிதுஅறிவினரைச்சோ்ந்திருத்தல்.

    4)   அதனினும்இனிதுஅந்தஅறிவுள்ளோரைக்கனவிலும், நினைவிலும்காண்பதுதான்.

    இந்தநான்குஇனியவைகளையும்வரிசையாகஒவ்வொன்றாகச்சிந்திப்போம்.

    1)   ஏகாந்தம்இனிது?

    இனிது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இனிது என்றால் மனதுக்கு நிறைவு அல்லது மகிழ்ச்சியைத் தருவது என்று பொருள். துன்பமும் சலிப்பும் இல்லாதநிலை.  எல்லோரும் விரும்புவது இன்பம்.  ஆனால் வாழ்க்கையில் துன்பமும் வந்து விடுகின்றது. சலிப்பும் வருகின்றது.  சலிப்பு என்பதுஎன்ன? சலிப்பு என்பது ஒன்றையே மீண்டும் மீண்டும் செய்வது ஆகியவற்றால் அல்லது துன்பம் மிகுதியால் வரும் சோர்வு அல்லது வெறுப்பு ஆகும்.

    இன்பமே அனுபவிக்க விரும்பும் மனிதனுக்குத் துன்பம் வருகின்றது என்றால் எப்படி இருக்கும் அவனது மனம்? துன்பம் மிகமிக சலிப்பும், வாழ்க்கையின் மீது வெறுப்பும் உண்டாகும். தான் விரும்புகின்ற இன்பத்தைப் புலன்களின் வழியாக மட்டுமேதான் அடைவதற்குத் தெரிந்து வைத்திருக்கிறான் மனிதன். புலன்வழி இன்பம் ஒருஅளவிற்கு மேல் சென்றால் அதுவே துன்பமாக மாறிவிடும்.

    இதுவரை விஞ்ஞானம்கூட எடுத்துரைக்காத இன்பதுன்ப விஞ்ஞானத்தை (Science of Enjoyment)மகரிஷி அவர்கள் காந்தத்தத்துவம் (Philosophy of Magnetism) வழியாக அழகாக எளிமையாக எடுத்து இயம்புகிறார்.  “இன்பம் புறப்பொருளில் இல்லை” என்று கூறப்படுகின்ற ஆன்மீகத் தத்துவத்தை மகரிஷி அவர்கள் விஞ்ஞானமாக்கியுள்ளார்.

    அவ்வையாரின் கூற்றிற்குச் செல்வோம்.  அவர் கூறும் ஏகாந்தம் (solitude)என்பதுதனிமையும், அமைதியும்நிறைந்தது.  தனிமையும் அமைதியும் புலன்கள் இயங்காத நிலையாகும்.  அதாவது புலன்களைத் தேவைக்கு மீறி அதிகமாகப் பயன்படுத்தினால் துன்பமும் சலிப்பும் வரும். தேவைக்கு  மீறிய முறையை மாற்றி, தனிமையையும் நாடினால் இன்பம் இருக்கும் என்கிறார் அவ்வையார்.

    2)   அதனினும்இனிதுஆதியைத்தொழுதல்:

           ஏகாந்தத்தை விட இனியது ஆதியைத் தொழுதல் என்கிறார்.  தொழுதல் என்ன என்பது யாவரும் அறிந்ததே.  தொழுதல் என்றால் வணங்குதல், வழிபடுதல் என்று பொருள்.   பொதுவாக  வழிபடுதல் என்றால் கடவுளை வழிபடுவதாகும்.  எனவே அவ்வையார் ஆதியைத் தொழுதல் என்கிறார் என்றால், ஆதி, கடவுளாகின்றது.

         யார்இந்தஆதி?  அவ்வையார்கூறும்  ஆதி யார்?  எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டுள்ளது போல், உலகம் ஆதிபகவனை முதலாகக் கொண்டுள்ளது என்கிறார் திருவள்ளுவர். அந்த ஆதிபகவன்தான் (ஆதியாகியபகவன்) அவ்வையார்கூறும்ஆதி.   ஆதிஎனும்இறைவன்உருவக்கடவுள்இல்லை. அப்படியானால் அவ்வையார் குறிப்பிடும் இந்தக் கடவுள் எப்படி ஆதிஎனும் பெயர்பெற்றார்?  ஆதி என்கின்ற சொல்லின் பொருளைக் கொண்டே ஆதி என அழைக்கப்படுகின்றார் கடவுள்.

          ஆதிஎன்கின்றசொல்லிற்கானப்பொருட்கள்:

    1)   முதல்

    2)   தொடக்ககாலம்

    3)   தொடக்கம்அறியப்படமுடியாதபழமை

    4)   அடிப்படை

         ஏதோ ஒன்று தான், துகள்கள் (particle  in  science)முதல், அதனைத் தொடர்ந்து பஞ்சபூதங்கள், அதனைத் தொடர்ந்து இந்தப் பிரபஞ்சம்,  அதனைத் தொடர்ந்து ஓரறிவுமுதல் ஆறறிவு வரையிலான மனித இனமாக தன்மாற்றம்(self transformation)அடைந்துள்ளது.  அந்தப்பொருள் தான்

    • காணுகின்றபிரபஞ்சம்முதல்உயிர்கள்வரைஎல்லாத்தோற்றங்களுக்கும்முதலாகி  தன்மாற்றம்அடைந்துள்ளதாலும்,
    • முதல்துகள்உருவாகியகாலத்திலிருந்தும்அதாவது, தொடக்ககாலத்திலிருந்தும்,
    • அதனுடையதொடக்கம்அறியமுடியாதபழமையானதாகவும்,
    • எல்வாவற்றிற்கும்அடிப்படையானதாகவும்இருந்தது.

    எனவே, அந்தஒன்று  “ஆதி” என்கின்ற சொல்லிற்கான பொருள் அனைத்தையும் கொண்டிருந்ததால்  அவ்வையார் அதனை “ஆதி”என்று அழைக்கிறார்.  கடவுளுக்கு ஆதிமூலம் என்கின்ற பெயரும்உண்டு.  அதாவது பிரபஞ்சத்திற்கு மூலமான துகள்களுக்கு ஆரம்பமாகவும், ஆதியாகவும் உள்ளதால் அது ஆதிமூலம் என்று அழைக்கப்படுகின்றது.  விஞ்ஞானத்தின்படி இப்பிரபஞ்சத்திற்கு மூலம் துகள்கள்.  அந்த மூலமான துகள்களுக்கு ஆரம்பமாக இருந்தது என்பதால் மூலத்திற்கு ஆதிநிலை(primordial state)என்பதால் அது ஆதிமூலம் என அழைக்கப்படுகின்றது.

     ஆதி என்று மட்டும்  சொல்லவில்லை, அதனையே இறைவன் என்கிறார்.  எது இறைவனாக இருக்கமுடியும்?  இறைவனுக்கு இலக்கணம் வகுத்துக்கொண்டு, ஆறாம்அறிவு, இறைவனைத் தேடினால், இந்த ஒன்றினைத் தானே இறைவன் என ஏற்றுக்கொள்ளும்.  எது அல்லது யார் அந்த ஆதி?  தன்னிலுள்ள ஆற்றலை இப்பிரபஞ்சமாகவும், உயிரினங்களாகவும் வெளிப்படுத்திய ஒன்றுதான் அந்த ஆதி.   அதுதன்னை, வெளிப்படுத்தியதால்,  ‘ வெளி ’ (Eternal Space) என்கின்றக் காரணப்பெயரை பெறுகின்றது.

    இப்பிரபஞ்சத்தின் ஆதிநிலைதான் இறைவன் என்பதால், அந்த ஆதியைத் தொழுதல் இனிது என்கிறார் அவ்வையார்.  தொழுதல் இனிதுஎன்றுகூறுவதையும்கவனிக்கவேண்டும். உருவமிலா இறையை எவ்வாறு தொழுவது?  அருவமான இறைதான் (பரமாத்மா) அறிவாகவும் (ஜீவாத்மா), மனமாகவும்  வந்துள்ளது.  எனவே மீண்டும் பரமாத்மாவுடன் ஜீவாத்மாவை இணைப்பதுதான் இறைக்கு இணக்கமான இறைவணக்கமாக இருக்க முடியும். அப்படியானால்  அதனை எவ்வாறுதொழுவது எனில்,  அருவ வழிபாட்டின் மூலமாகத்தான் தொழமுடியும்.  அதுதான் விஞ்ஞான காலத்திற்கேற்ற அகவழிபாடாகும்.  மனவளக்கலை யோகாவில் அதுதான் துரியாதீத தவமாகும்.  ஆகவே துரியாதீத தவத்தை இயற்றுவது இரண்டாவது இனிதாக அவ்வையார் கூறுகிறார்.  அடுத்ததாக மூன்றாவது இனிதிற்குச்செல்வோம்.

    3)  அதனினும்இனிதுஅறிவினரைச்சேர்தல்:

    ஆதியைத் தொழுவது என்பது ஒரு குருவின் வழியாகத்தான் சாத்தியமாகும். உதாரணத்திற்கு  மனவளக்கலையோகிகள் துரியாதீததவத்தை இயற்றுவதே வேதாத்திரிமகரிஷி அவா்களை குருவாக ஏற்றுக்கொண்டததால் தானே சாத்தியமாயிற்று.  “குரு இல்லாத வித்தை பாழ்” மற்றும்“குருவருள் இன்றேல் திருவருள் இல்லை” என்பதால், அகத்தவம் இயற்றுவதற்கு அறிவினர்ச் சேர்க்கை, வழிகாட்டியாக இருக்கும். அறிவை அறிந்த அறிஞராகிய ஒருவரைத்தான் அவ்வையார் அறிவினர் என்கிறார். அவரைச் சேர்ந்திருத்தல்  அதனினும் இனிது என்று இனியவையின் அதிகப்படி வரிசையில் (increasing order of ecstasy)மூன்றாவதாகக் கூறுகிறார்.

         அறிவினரைச்சோ்தல் என்பதற்கு இலக்கணம் வைத்துள்ளார் அவ்வையார்.  அறிவினரைச் சோ்தல் என்பது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.  ஆனால் அறிவினரைப் பார்த்தோம், சேர்ந்தோம் என்றிருப்பது மட்டும் அவ்வையார் கூறும் அறிவினரைச் சோ்தல் அல்ல. பின்னா் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை நான்காவது இனியதாகக் கூறுகிறார் அவ்வையார். அடுத்த அறிவிற்கு விருந்தில் ‘அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது அதனினும் இனிது  என்பது எவ்வாறு?’ என்பதனை அடுத்த அறிவிற்கு விருந்தில் (01.04.2015) அறிவோம். .. .தொடரும்.

      

    Loading

  • 68-இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

     

    இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

    FFC- 68 (7/7)

    25-03-2015 – புதன்

         கடந்த அறிவிற்கு விருந்துகளில் அருளாளா்கள் எவ்வாறு மகரிஷி அவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர் என்று பார்த்து வந்தோம். இன்றைய விருந்தில் நாமும் அது போன்று அருளாளர்களிடம் எவ்வாறு ஆசி பெறுவது என்று பார்க்கலாம்.

    மகரிஷி அவர்கள் அருளியுள்ள குருவணக்கப்பாடலில் கூறியவைகள் சம்பிரதாயத்திற்கான வார்த்தைகள் அல்ல. சடங்கிற்காகவும் எழுதியதல்ல அந்த குருவணக்கப்பாடல். சம்பிரதாயமாக இருக்குமானால், மகரிஷி அவர்கள் அருளாளர்களை நினைவு கூறுவதற்காக அப்படியொரு குருவணக்கப் பாடலை இயற்றி இருக்கமாட்டார். அருளாளர்களை நினைவுகூர்ந்து எழுந்தருளிச் செய்து பயன் பெறுவதன்பது இயற்கையின் இயல்பூக்க நியதிப்படி நடப்பதால் தான், அருளாளர்களை நம்முடன் எழுந்தருளி இருக்கச் செய்யும் யுக்தியினைக் கவியின் மூலம் தெரிவிக்கிறார்.
    மேலும் பூதஉடலை உதிர்த்த மகான்கள் அனைவருமே சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்கள். இவ்வுலகம் உய்ய வேண்டும் என்ற ஆதங்கம் கொண்டவர்கள். இந்த எண்ணங்களெல்லாம் அவர்களது ஆன்மாவில் பதிந்துள்ளதால், ஆன்மா அழியாததாக உள்ளதால், ஆன்மாவில் பதிந்துள்ள அச்சமுதாயநல எண்ணங்கள், செயலாவதற்கு வேட்கையுடன் வான்காந்த களத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் (as Akashik Records)இருக்கும். அவ்வெண்ணங்கள், செயலாக்கிக் கொள்வதற்கு வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒத்த எண்ணங்கள் உள்ள ஆன்மாவைத் தேடிக் கண்டுபிடித்து, அச்சமுதாயநல எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள ஆயத்தமாக இருக்கின்றன.
    “அறிவில் அறிவாய் நிலைத்து, அறம் வகுத்து வாழ்ந்து காட்டிய” அருளாளா்களை நினைவு கூர்ந்து,
    அவர்களையெல்லாம், நம்முடைய இணைய தள சத்சங்கத்தில் எழுந்தருளிச் செய்து,
    நம்முடனே இருந்து கொண்டு நம்முடைய இணைய தள சத்சங்கத்தை நடத்திக் கொடுக்க வேண்டும் என்று கருதி,
    வேதங்களில் ஏற்கனவே ‘ஒன்றே பலவாகியது’ என்பது சொல்லப்பட்டு இருந்தாலும், அதற்கு பாஷ்யம்(விளக்கவுரை) அருளிய ‘ஆதிசங்கரர் சத்சங்கம் நடத்துகின்ற அருட்காட்சி’ இந்த இணையதள வாயிலில்(Home page) அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது, மானசீகமாக ஆதிசங்கரர் அவர்கள் எழுந்தருளியுள்ளார்கள்.
    மேலும் திருவள்ளுவர், அவ்வையார், இராமலிங்கர், இராமகிருஷ்ணர், விவோகனந்தர், பாரதியார், உலகப்புகழ் விஞ்ஞனானி ஐன்ஸ்டின், நம் குருதேவர் ஆகியவர்கள் எழுந்தருள வேண்டும் என்பதற்காக அவர்களும் இணையதள வாயிலில் பிரசன்னமாகி உள்ளனர்.
    மேலும் உலகப் புகழ் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்களை அழைத்ததற்குக் காரணம் இருக்கின்றது. அவர் விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைய வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டவர். அதனால் தான் “Science without Religion is lame and Religion without Science is blind” என்று கூறியுள்ளார். இந்த இணைய தள சத்சங்கத்தில் இனி வரும் காலங்களில் விஞ்ஞானமும் மெய்ஞானமும் பற்றி சிந்திக்கப்பட இருப்பதால் அருளாளர்களைப் போன்றே, அதே பேரறிவின் அம்சமான அறிஞர் ஐன்ஸ்டீன் அவர்களையும் துணைக்கு அழைத்திருக்கிறோம். விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் வேறு வேறன்று. ஒரு நாணயத்தின் இருபக்கங்களே. நாணயத்தின் (currency/coin) ஒரு பக்கம் அச்சிடப்படாமல் இருந்தால் அந்த நாணயம் செல்லாது. அதுபோல் இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக்கும் விஞ்ஞானமும், இயற்கையின் வளமான பூர்வீகச் சொத்தான அமைதியை வாழ்வின் வளமாக்கும் மெய்ஞ்ஞானமும் இணைந்தே கைகோர்த்துச் செல்ல வேண்டும். இரண்டின் வளர்ச்சியும் ஒன்றுக் கொன்று உதவியாக இருக்க வேண்டும். .

    தன்மாற்ற சரித்திரத்தில் பேரறிவு ஐன்ஸ்டீனின் அறிவாக அவதரித்தப் பிறகு(1879-1955), வேதாத்திரி மகரிஷி அவர்களின் (1911-2006) அறிவாக அவதரித்தது தெரிய வருகின்றது. ஐன்ஸ்டடீன் அவர்களின் தோற்றத்திற்கு பின்னர் 32 ஆண்டுகள் கழித்து வேதாத்திரி மகரிஷி அவர்களின் தோற்றம் நடந்தேறியுள்ளது. இருவருமே சம காலத்தில் 44 ஆண்டுகள் வெவ்வேறு இடங்களில், இப்புவி வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இந்த 44 ஆண்டுகளில் இருவர் வழியாக பேரறிவு வெவ்வேறு கோணத்தில் சிந்தித்திருந்தாலும், சிந்தித்தப் பொருள் ஒன்றுதான். அது மெய்ப்பொருள் – தன்னைப்பற்றியது. முதலாமவர் வழியாக விஞ்ஞான ரீதியாகத் தன்னை வெளிப்படுத்த முயன்றுள்ளது. அடுத்தவர் வழியாக ஆன்மீகரீதியாக முயன்றுள்ளது பேரறிவு.
    ஆன்மீகத்தை விஞ்ஞானரீதியாகவும், ஆன்மரீதியாகவும் எளிமையாக்கி விளக்கப்பட வேண்டியுள்ளதால்,
    இரு ஆன்மாக்களின் பூவுலக வாழ்க்கை நிகழ்வுகளும் சம காலத்தில்,  44 ஆண்டு காலம் நடந்துள்ளதால் வேதாத்திரி மகரிஷியின் மெய்ஞான விஞ்ஞான இணைப்பை மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது இயற்கை.
    ஆகவே நம்முடைய இனி வரவிருக்கின்ற சத்சங்கத்தில் விஞ்ஞான மெய்ஞான இணைப்பு பற்றிய சிந்தனைக்கு உறுதுணையாக இருக்க விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அழைத்துள்ளோம்.

    மகரிஷி அவர்கள் விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம்பற்றி 15 கவிகள் அருளியுள்ளதில் ஒரு சிலவற்றை இப்போது அறிவது பொருத்தமாக இருக்கும்.
    FFC-68- IMAGE- விஞ்ஞானமும் மெய்ஞானம்மகரிஷிக்கு மூத்தவா்களான உலகப்புகழ் சுவாமி விவேகானந்தர், மற்றும் உலகப்புகழ் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்கள் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைய வேண்டும் என எண்ணியதை அவா்களுக்கு பின்னர் அவதரித்த மகரிஷி அவர்கள் வழியாக இயற்கை நிறைவேற்றியுள்ளது. இதுதான் Fraction demands Totality supplies” என்பதாகும். விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணையும் போதுதான் உண்மையில்லாத மூடப்பழக்கங்கள் மறையும். செயல்களுக்கு காரணம் அறிந்து செயல்கள் ஆற்றப்படும். விஞ்ஞானம் நேர்வழியில் (constructive ways) பயன்படுத்தப்படும். விஞ்ஞானத்தை நேர் வழியில் பயனாய்க் கொள்வதை நெறிமுறைகள் என்று கூறி, அதனை சங்கல்பமாக்கி, பின்னர், போரில்லா நல்லுலகம் வேண்டும் என்கின்ற எண்ணத்தை விதைத்த ஆன்மாவிற்கு, விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் ஏன் இணைய வேண்டும் என்கின்ற அவசியத்தை சொல்வதில் என்ன சிரமம் இருக்க முடியும்? ஆகவே தான் 15 கவிகள் இயற்றியுள்ளது வேதாத்திரிய ஆன்மா.

    மேலும் ‘அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து, அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை மகான்களின் ஆன்ம ஆற்றலும், அறிவாற்றலும், நாம் பதமடைந்து இறையுடன் ஒன்றாவதற்கு துணை நிற்கட்டும்’ என்கின்ற சங்கல்பத்துடன் இந்த இணைய தள சத்சங்கத்தில் கலந்து கொள்கிறோம் என்கின்ற நினைவிற்காக, இந்த சங்கல்பமும் எழுத்து வடிவில் இந்த இணையதள வாயிலில் இடம் பெற்றுள்ளது. இது வரை குருவணக்கப்பாடலில் இறுதி வரிகளிலுள்ள அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டினோரை நினைவுகூரும் யுக்தி எவ்வாறு செயலாகின்றது என்பதனை அறிந்தோம். தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்க சுவாமிகள் ஆகிய அருளாளர்கள் மகரிஷி அவர்களுக்கு அருட்துணையாக இருந்துள்ளனர். பெயர் சொல்லி அழைக்கப்படாத அருளாளர்களையும் அழைக்கும் யுக்தியினையும் பார்த்தோம். மகரிஷியின் அருட்கூட்ட மரபினில் வந்துள்ள நாம் இனிமேல் குருவணக்கப் பாடலின் யுக்தியை கடைபிடிக்க வேண்டும்.
    சிறுவர் முதல் எல்லோருக்கும் தெரிந்த மற்றொரு அருளாளர் அவ்வையார் அவர்கள், ஆத்தி சூடி மற்றும் கொன்றை வேந்தனில் மொழிந்துள்ள சிலவற்றை நினைவு கூர்வோம்.

    ஆத்தி சூடி
    1) இயல்பு அலாதன செய்யேல் — நல்லொழுக்கத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்யாதே.
    2) குணமது கைவிடேல் – நல்ல குணங்களை கைவிடாதே.
    3) உத்தமனாய் இரு – நல்ல குணங்களைக் கொண்டவனாக இரு.
    4) நூல் பல் கல் — பல நூல்களையும் கற்றுக் கொள்.
    கொன்றை வேந்தன்
    5) மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்
    6) வீடு பெற நில் — முக்தியை பெற நில்.
    ஆத்தி சூடி
    7) சான்றோர் இனத்து இரு –சான்றோர்களிடம் சேர்ந்து இரு.
    8) சேரிடம் அறிந்து சேர்— நீ சேரக்கூடிய நல்ல இடத்தை ஆராய்ந்து சேர்.
    9) பெரியாரைத் துணைக் கொள் — அறிவில் சிறந்த பெரியவர்களை உனக்குத் துணை வைத்துக்கொள்.
    10) மேன்மக்கள் சொல் கேள் – உயர்ந்தவர்களுடைய சொல்லைக் கேட்டு நட.

    மேலே உள்ள அவ்வையார் பொன்மொழிகளில் ஒன்றுமுதல் ஆறுவரை அறிவுரைகள் உள்ளன. ஏழிலிருந்து பத்து வரை அறிவுரையில் சொல்லப்பட்டதைச் செய்ய வேண்டியவைகள் உள்ளன. எந்த வயதிலிருந்து மனிதன் இதனை செய்ய வேண்டும்? இந்தப்பாடல் ஒன்றாம் வகுப்பில் பாடமாக வைக்கப் பட்டுள்ளதால் ஐந்து வயதிலிருந்து இதனை அறிந்து அதன்படி அவன் நடக்க சூழல்களை சமுதாயம் அமைத்துக் கொடுக்கவேண்டும். ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்பதுபோல் தந்தை தன் மகனிற்கு குருவைக் காண்பிக்கும் நிகழ்வே நடப்பதில்லை. பண்டைக் காலத்தில் குருகுலக் கல்வி முறையில் குருவிடம் சென்று மாணவன் கல்வியைக் கற்றான். அங்கே அரசனின் மகனும், ஆண்டியின் மகனும் ஒன்றாகவே கல்வி கற்க வருவார்கள். அந்த முறை இப்போது இல்லை. அப்போது மக்கள் தொகை குறைவு. விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட நிலையில், பரபரப்பான உலகத்தில், மக்கள் தொகை பெருகிவிட்ட நிலையில் குருகுலக் கல்வி என்பது சாத்தியமில்லை. ஆகவே எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்க அறிவு, இயற்கைத் தத்துவ அறிவு ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டதாக கல்வி இருக்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் மகரிஷி அவர்கள் “அறநெறியைப் போதிக்க புதிய நூல்களே அவசியமே இல்லை” என்று கூறும் கவியினை நினைவு கூர்வோம்..

    FFC-68- image-சாதனையே அறநெறிஏற்கனவே, அறிஞர்கள் பலா், அறநூல்கள் பல அளித்துள்ளதால், இனி அறநெறியைப் போதிக்கப் புதிய நூல்கள் அவசியமில்லை என்கிறார் மகரிஷி அவர்கள். வேண்டியதெல்லாம் அவைகளை பயிற்சி செய்து சாதனைக்குக் கொண்டு வருவதுதான் அறநெறி என்கிறார்.

    வேதாத்திரியம் சாதனை மார்க்கமான மனவளக்கலையைத் தந்துள்ளது. மேலும் கல்வி என்பது எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்க அறிவு, இயற்கைத் தத்துவ அறிவு ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்கின்றது வேதாத்திரியம். கல்வி எந்த வயதில் ஆரம்பிக்கின்றது? ஐந்து வயதில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்கின்றது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ மற்றும் ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ என்கின்ற பழமொழியைக் கவனத்தில் கொண்டும், கல்வி ஆரம்பிப்பது ஐந்து வயதில் என்பதால், ஒழுக்கபழக்க அறிவை வளர்க்கக் கூடிய கல்வியை ஒன்றாம் வகுப்பிலிருந்து 12 வகுப்பு வரை கட்டாயப் பாடமாக்கவேண்டும் என்பதே சரியாகவும், அவசியமாகவும் இருக்கும்.

    இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்கின்ற வினாவிற்கான பதில்:
    1) அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்,

    அவர்கள் எண்ணிய எண்ணங்கள் வாயிலாக,
    அவர்கள் அருளியுள்ள அறநூல்களின் வாயிலாக,

    2) அவர்கள் நம்முடன் பேசிக் கொண்டிருக்கின்றனா்,

    அவர்கள் எண்ணிய எண்ணங்கள் வாயிலாக
    அவர்கள் அருளியுள்ள அறநூல்களின் வாயிலாக,

    3) மகரிஷி அவர்களைப் போன்று, அவ்வப்போது அவதரிக்கும் அருளாளா்களின் வழியாக இந்த சமுதாயத்திற்கு அருட் தொண்டு ஆற்றி கொண்டிருக்கின்றனா் பூதஉடலை உதிர்த்த மகான்கள்.

    இது போன்றே மகரிஷி அவர்களின் அறிவாற்றலும் இந்த சமுதாயத்தில் விழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. எந்த தொலைக் காட்சி நிலைய நிகழ்ச்சிகளைக் காண விரும்பி தொலைக்காட்சிப் பெட்டியை tune செய்யப்படுகின்றதோ, அதுபோல் அருளாளா்களின் அலைக்கு (wave) நம் மனஅலையை இணைக்க வேண்டும். (one must tune to the frequency of enlightened soul and reap the benefits)
    What is that tuning? அருளாளர்களுடன் இணக்கம் பெறவேண்டும்.
    இணக்கம் பெற வேண்டும் என்றால்,
    1) மனத்தூய்மை வேண்டும். அல்லது
    2) மனத்தூய்மையில் ஆர்வமும் அக்கறையும் வேண்டும். அல்லது
    3) இறையை செய்முறைப் பயிற்சியில் உணரவேண்டும் என்கின்ற தீராத தாகம் வேண்டும்.
    4) அருளாளர்களின் வாழ்க்கை சரித்திரங்களைக் கேட்க வேண்டும், அல்லது நூல்கள் வாயிலாக அறிய வேண்டும். பொருத்தமான உதாரணம், நம்முடைய குருபிரான் அவர்களே எழுதியுள்ள எனது வாழ்க்கை விளக்கம் என்கின்ற நூலையும் மற்றும் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி – இந்த நூற்றாண்டு தந்த மகான் என்கின்ற நூலையும் கட்டாயம் பல முறை படிக்க வேண்டும். ஆன்ம வெற்றி என்பது மனிதன் பண்பேற்றம் பெறுவதே என்பதால், தரமாற்றப் பயிற்சியில்(மனவளக்கலை) இயல்பூக்க நியதிப்படி இது ஒரு யுக்தியாகும்.

    ‘இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன?, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?’ என்கின்ற இரு வினாக்களுக்கு சுருக்கமான விடை, ‘உடலுக்குத்தான் மரணம், ஆன்மா அழிவதில்லை, எனவே அவர்களின் ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கின்றது’ என்கின்ற விடை எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த விடையையே பதிலாகக் கூறியிருக்கலாம். இரண்டாவது வினாவிற்கு விடையாக ‘அருளாளர்களின் ஆன்மா, ஆன்மீக பயிற்சியில் பரிபக்குவ நிலையில் உள்ளவா்களுக்கு உறுதுணையாக இருக்கின்றன’ என்று மட்டும் கூறியிருக்கலாம். ஆனால் இவ்விரண்டு வினாக்களுக்கான விடையை, மூன்று வாரங்களாக, ஏழு வகுப்புகளில் சிந்தித்திருக்கிறோம். சுருக்கமான பதிலுக்கும் விரிவான பதிலுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்திருப்பீர்கள். இக்கேள்விகளுக்கான விடைக்குச் சான்றாக நம்முடைய குருபிரான் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்கள் இருப்பதால் அதனை எடுத்துக் கொண்டு விரிவாக சிந்தித்தோம்.
    குறிப்பாக இந்த சிந்தனை விருந்து (FFC- 62 லிருந்து 68 வரை) பற்றி உங்கள் கருத்துக்களை இணையதள சத்சங்கம் அறிய விரும்புகின்றது. சத்சங்க உறுப்பினர்கள் இடையே கருத்து பரிமாற்றங்களில் நல்ல புரிந்துணர்தல் நிலவட்டும். Let there be good rapport between us. எனவே உங்களது கருத்தை எளிதாக தெரிவிக்கும் வகையில் ஓட்டு அளிக்கும் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    FFC 62 லிருந்து 68முடிய

    1 சுருக்கமாகவே முடித்திருக்கலாம்.
    2 விரிவாக சொன்னது நன்றாக உள்ளது.
    3 விரிவாக சொன்னது மிகவும் நன்றாக உள்ளது.
    4 நன்றாக உள்ளது. விரிவாக சொன்னதால் ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெற பயனுள்ளதாக இருக்கின்றது.

    மேலே நான்கு options களில் கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த நான்கில் எது உங்களுக்கு பிடித்திருக்கின்றதோ, அக்கருத்தால் நீங்கள் பயனடைந்தீர்களோ (like) அக்கருத்தின் வரிசை எண்ணை கருத்துரைக்கும் பகுதிக்குச் சென்று எண்ணை மட்டும் தட்டச்சு செய்து அனுப்பி வைக்கவும். செய்வீர்களா அன்பர்களே! வாழ்க வளமுடன்.

    வாழ்க வையகம். வாழ்க வளமுடன்
    வாழ்க வேதாத்திரியம் வளர்க வேதாத்திரியம்
    வாழ்க உலக அமைதி. வருக விரைவில் உலக அமைதி!
    வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு
    வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • 67-இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

    இதுவரை,  பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

    FFC- 67 (6/?)

    22-03-2015 – ஞாயிறு

    6. வேறு எந்த அருளாளர்களாவது மகரிஷிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்களா?

    கடந்த ஞாயிறு, புதன் கிழமைகளில், அறிவிற்கு விருந்தில், தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், அருட்பிரகாச வள்ளலார் ஆகிய நான்கு அருளாளர்கள் மகரிஷி அவர்களுக்கு எவ்வாறு உறுதுணையாக இருந்துள்ளனர் என்று பார்த்து வந்தோம். அந்த நான்கு அருளாளர்களைத் தவிர, வேறு எந்த அருளாளர்களாவது மகரிஷி அவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்களா என்பதனை இந்த அறிவிற்கு விருந்தில் அறிய இருக்கிறோம்.

    நான்கு அருளாளர்களை வணங்குவதோடு மட்டுமல்லாது, அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டினோர் அனைவரையும் நினைவு கூர்கிறார் மகரிஷி அவர்கள். இதற்கு என்ன பொருள்? திருக்கூட்ட மரபினில், இதுவரை அவதரித்துள்ள எண்ணிலடங்கா அருளாளா்களின் பெயர்கள் நினைவு கூறுவது இயலுமா? இயலாது என்பதால் இயலாது என்பதால், ஒட்டுமொத்த அருளாளர்களின் அறிவாற்றலையும், (அதாவது இறையின்) ஒட்டுமொத்த அருளையும் சாதுரியமாக வேண்டி, அவர்களை சூக்குமாக எழுந்தருளச் செய்கிறார் மகரிஷி அவர்கள்.

    தாயுமான சுவாமிகள், திருவள்ளுவர், அறிஞர் திருமூலர், இராமலிங்க சுவாமிகள், அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அருளாளர்கள் அனைவரும் யார்? யார் அவர்கள்! மக்கள் அனைவருமே தெய்வத்தின் அம்சங்களாக இருந்தாலும், அருளாளர்கள் அனைவருமே, இறை அருளை முழுமையாகப் பெற்ற மனிதவடிவத் தெய்வங்கள். அரூபமாகிய தெய்வமே, தன்னை, அருளாளர்களின் வடிவில் உலக மக்களுக்கு, வெளிப்படுத்திக் கொள்கின்றது. இந்த ஆராய்ச்சியில் நமக்கு மற்றுமொரு செய்தி கிடைக்கின்றது. மகரிஷி அவர்களின் வாழ்வில் நடந்துள்ள மற்றொரு சம்பவத்தை நினைவு கூர்வோம்.

    மகரிஷி அவர்கள் இறையிடம் 14-11-1985 அன்று வைத்த வேண்டுகோளை கவனிப்போம்.

    Ffc-67-Image- வேண்டுகோள்-22-3-15

    இக்கவியிலுள்ள ஒவ்வொரு வைரவரிகளுமே, ஏன் ஒவ்வொரு வைர சொற்களுமே, பேரின்பத்தில் மூழ்கச் செய்கின்றன. இப்பாடலில் நற்கர்ம யோகம், உலகசமயம் ஆகிய எண்ணங்களை ‘மண்ணுலகில் மக்களிடம் பரவவிடல் வேண்டும்’ என்கின்ற வேண்டுதலை இறையிடம் வைக்கிறார். தனக்கு வேண்டியவைகளைப் பெறுவதற்கு சங்கல்பம் செய்யச் சொல்கிறார். உதாரணத்திற்கு அருட்காப்பு, மற்றும் வாழ்க்கை நலச் சங்கல்பங்கள், உலகநல வாழ்த்து ஆகியன. ஆனால் இங்கே கூறப்படும் வேண்டுகோளோ, உலக நலத்தைக் கருதி, உலக மக்கள் சார்பாக வைக்கப்படும் வேண்டுகோளாகும். எனவே இறையிடமே நேரிடையாக வேண்டுகோளை வைக்கிறார்.

    தலைவர்கள், அறிஞர்கள் இணைந்து,
    மனிதகுலம் முழுமையாக உணர்ந்து,
    கர்மயோகம், உலகசமயம் ஆகிய இரண்டையும் ஏற்றுக் கொண்டு,
    நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால்,
    ‘வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என்கின்ற உலக நலச் சங்கல்பம் இயற்றிக் கொண்டிருந்தாலும்,

    இறையிடமே நேரிடையாக வேண்டுகோளை வைக்கிறார்.

    ஏனெனில் தலைவர்கள், அறிஞர்கள் உள்பட எல்லோரிடமும் பேரறிவே, அறிவாக இருப்பதால் பேரறிவிடம் வேண்டுகோள் (fraction demands) வைத்தால், பேரறிவு,

    மகரிஷி அவர்களின் மனதில், கர்மயோகம், உலக சமயம் ஆகியவை எழுப்பியது போல் அவர்கள் மனதிலும் எழுப்பி, அறிவுறுத்தி,
    அவர்கள் அனைவரையும் இசையச் செய்து, திரட்டி, ஒன்று கூட்டி,
    மனிதகுலம் உய்வதற்கு, சமுதாயத்தில் நன்மாற்றங்களைக் கொண்டு வருவது இறைக்கு எளிதாகிவிடும்
    என்கின்ற நோக்கத்தில், வேதாத்திரி மகரிஷி அவர்கள் இறையிடம் அந்த வேண்டுகோளை வைக்கிறார்.

    அவ்வாறு பேசியதை/பேசுவதை சக மக்களும் அறிந்து, அந்த பேரின்ப யுக்தியை அவர்களும் பயன்படுத்திக் கொள்வதற்காக எழுதுவதுதான் அருட்கவிகள். இதுவரை இறையிடம் வைத்த ‘வேண்டுகோள்’ கவியைப் பற்றி சிந்தித்தோம். அடுத்ததாக இறையிடம் வைத்த வேண்டுகோள் நிகழ்விற்குப் பிறகு நடந்ததென்ன என்பதனை இப்போது அறிவோம்.

    இறையிடம் வேண்டுகோள் வைத்தது 14-11-1985 அன்று. ஒரு மண்டலத்திற்குள், ஐந்து வாரங்களில், 35 (17+18=35)வது நாள் நடந்த இறையின் திருவிளையாடலின் வாயிலாக மகரிஷி அவர்கள் பெற்ற பயனை அறிந்து கொள்வோம். வேண்டுகோள் 35 நாளில் பலித்தது என்றால், அந்த வேண்டுகோள் விடுத்தவர் அத்தகையவர். இறைவனாகி பாடுபவா். அவர் விடுத்த வேண்டுகோளின் தன்மையும் அத்தகையது. (Hence his request was conceded immediately) அந்த திருவிளையாடல் நிகழ்ச்சியினை நாமும், பின்வரும் சமுதாயமும் பயன் பெறுவதற்காக கவியின் வழியாக தெரியப்படுத்திய மகரிஷி அவர்களின் கருணை உள்ளத்தை நினைந்து பூரிப்படைவோம்.

    FFC-65- கனவில் ஒரு சித்தர்

    ஒருநாள் இரவில் நடந்துள்ளது இச்சம்பவம். தூங்கவுமில்லை. விழித்துக் கொண்டிருக்கவும் இல்லை. ஆனால் துரியதவத்தில் ஆழ்ந்திருக்கிறார் மகரிஷி அவர்கள். அப்போது ஒரு சித்தர் தோன்றி நான்கு பணிகளுக்கு உதவுவதாகக் கீழ் வரும் நான்கு உறுதிகளை அளித்துள்ளார். மகரிஷி அவர்களுடைய உடல் நலத்திற்கும், அவர் செய்து வரும் அருட் தொண்டிற்கும் உதவியாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

    1) ‘கா்மயோகம் பரவிடல் வேண்டும்’ என்று மகரிஷி அவர்கள் ஏற்கனவே 35 நாட்களுக்கு முன்னா், இறையிடம் வைத்த வேண்டுகோள்கள் நிறைவேறுவதற்கு உதவுதல்,
    2) அடுத்ததாக அப்போது கட்டி முடிக்காது இருந்த அறிவுத்திருக்கோயிலை கட்டி முடிப்பதற்கு உதவுதல்,
    3) மகரிஷி அவர்களின் வயிற்றுப் புண்ணை ஆற்றுவதில் உதவி புரிதல்,
    4) ஊக்கமுடன் தொண்டாற்றும் மகரிஷி அவர்களுக்கு உலகப் பரிசு வர உதவுதல்.

    ஒரு மண்டலத்திற்குள், அதாவது 35 நாளில் மகரிஷி அவர்களின் கனவில் சித்தர் வந்து, நான்கு உறுதி மொழிகளை அளித்ததோடு – அவர் இறையிடம் விடுத்த வேண்டுகோளின் பலன் அத்துடன் முடிந்து விடவில்லை. ஒரு மண்டலம் முடிந்ததும் 01-01-1986 அன்று உலக சமய ஆண்டு பிறந்தது.

    இந்த நிகழ்வுகளெல்லாம் தற்செயலானதன்று. இயற்கையில் எதுவுமே தற்செயலாக நடப்பதில்லை. ஏனெனில் இயற்கை ஒழுங்காற்றலாகிய பேரறிவாக இருப்பதினால் இயற்கையில் நடப்பனவெல்லாம் காரணமில்லாமல், முன்பின் யோசனை (நுண்மாண் நுழைபுலன்) இல்லாமல் மனிதர்கள் செய்வது போன்று நடக்காது.

    ‘When fraction demands Totality supplies’ என்கின்ற கண்டுபிடிப்பிற்கு இந்த நிகழ்வு ஒரு நிரூபணமாகின்றது. இந்த கண்டுபிடிப்பை உயிரின பரிணாமத்தில் ஒன்றிலிருந்து ஆறாம் அறிவு வரை காணமுடிகின்றது. இதே போன்று மகரிஷி அவர்களின் கண்டுபிடிப்புகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், நிரூபணங்களோடு ஏற்றுக் கொள்வோம். நிரூபித்து ஏற்றுக் கொள்ளும் பழக்கம் வந்து விட்டால் சிந்திக்கிறோம் என்று பொருள். ஒரு சிந்தனையை நிரூபிக்கச் சிந்திக்கும்போது வேறு பல உண்மைகளும் வெளிப்படலாம். இவ்வாறு இயற்கையை, எந்த அளவிற்கு மனிதன் ஆழ்ந்து சென்று விளங்கிக் கொள்கின்றானோ, அந்த அளவிற்கு இயற்கையை/இறையை விட்டு விலகி இருக்கச் செய்துள்ள மனோபாவமாகிய தன்முனைப்பு நசிந்து கொண்டே வரும். முடிவில் தன்முனைப்பு முழுவதும் கரைந்து போய் இறையை முழுமையாக உணர முடியும். இயற்கையை ஆராய்வது 1911 பிறகு எளிதாகிவிட்டது. எந்த கோணத்தில் இயற்கையை வாழ்வியலுக்கு உதவும்படி ஆராய வேண்டுமோ அதனை தெரிவித்து விட்டார் மகரிஷி அவர்கள். இயற்கையின் ஆரம்பம், இயற்கையின் இயக்க நிலை, இயக்க நிலையில் உயிரினங்கள் தோன்றியவிதம், மீண்டும் ஆறாம் அறிவு இவற்றையெல்லாம் அறிந்து முழுமை பெறுவது வரை வேதாத்திரியம் கூறுவதால் சாதாரண மனிதன் கூட தன்னளவில் வாழ்க்கை விஞ்ஞானி ஆகிவிடலாம்.

    இந்த கனவில் ஒரு சித்தர் வந்த நிகழ்வின் மூலம்,

    “அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்,
    அதை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.”

    என்கின்ற தான் இயற்றிய வரிகளுக்கான பலனை மகரிஷி அவர்களே பெற்றதை அறியும்போது நாமும் அவ்வாறே பயன் பெறலாம் என்கின்ற உந்துதல் ஏற்படுகின்றதல்லவா? அதற்காகத்தானே அருளாளர்கள் கவிகள் எழுதுகிறார்கள். அதற்காகத்தானே மகரிஷி அவா்கள் கடைசி இரண்டு வரிகளில் இந்த யுக்தியைக் கொடுத்துள்ளார்கள். இதுவரை தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்கர் மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்து காட்டிய மற்ற அருளாளர்கள் எவ்வாறெல்லாம் மகரிஷி அவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர் என்று பார்த்தோம். அடுத்த விருந்தில் நம் குருபிரான் அருளாளர்களிடம் பெற்ற அருளாசிகள், போன்று நாமும் எவ்வாறு மகரிஷி அவர்கள் உள்பட அனைத்து அருளாளர்களிடமும் அருளாசிகள் பெறுவது பற்றிச் சிந்திப்போம். வாழ்க வளமுடன்.     … தொடரும் (25-03-2015)

    Loading