சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 303

    வாழ்க மனித அறிவு!      வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்- 303

    02-06-2020—செவ்வாய்

     

    நம்மை நாமே சீர்திருத்தம் செய்துகொண்டால் சமுதாயத்தில் சீர்திருத்தம் தானே வரும்”   

    . . . ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி அவர்கள்

              பயிற்சி:

    1. என்ன கூறுகின்றார் ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி அவர்கள்?
    2. சீர்திருத்தம் என்றால் என்ன?
    3. சீர்திருத்தம் மனிதவாழ்விற்கும், சமுதாயத்திற்கும் அவசியமா?
    4. ஏன் அவசியம்?
    5. தற்போது மனிதசமுதாயம் வாழ்கின்ற சூழலில் எவை எவையெற்றில் சீர்திருத்தம் அவசியம்? அதனை முன்னுரிமை அடிப்படையில்(on priority basis) பட்டியலிடமுடியுமா?
    6. சுயதிருத்தம்/சுயசீர்திருத்தம் போதுமானதாகாதா? சமுதாயத்திலிலும் சீர்திருத்தம் அவசியம்தானா?
    7. சீர்திருத்தம் சமுதாயத்தில் தானாகவே ஏற்படமுடியுமா? அல்லது ஏற்படுத்த முடியுமா?
    8. சுயதிருத்தம்/சுயசீர்திருத்தம் எப்படி சமுதாய சீர்திருத்தத்திற்கு வழிகோலும்?
    9. இருபதாம் நூற்றாண்டின் சீர்திருத்தச் செம்மலான வேதாத்திரி மகரிஷி அவர்கள் சீர்திருத்தம் பற்றி பாடல்கள் வாயிலாகவும் உரைநடை வாயிலாகவும் என்ன கூறியிருக்கிறார்? வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்

    வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 302(51)

    வாழ்க மனித அறிவு      வளர்க மனித அறிவு

    31-05-2020—ஞாயிறு

     

    • ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லாது, அந்தப் பதார்த்தத்தின் ருசி தெரியாது.
    • ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் ஆசை ஏற்படாது.
    • அதுபோல் தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தால் அல்லாது அதன் மேல் பிரியம் வராது.
    • ஆதலால் தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லட்சியத்தைக் கொண்டிருங்கள்”.

    …அருட்பிரகாச வள்ளலார்.

    பயிற்சி—

    1) வள்ளலார் கூறும் அருட்செய்தி என்ன?
    2) “தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தல்” என்றால் என்ன?
    3) தெய்வத்தை உணரும் பயிற்சிகளை மட்டுமே செய்து வந்தால் போதாதா?
    4) தெய்வத்தின் மேல் பிரியம் வர என்ன செய்ய வேண்டும்?
    5) தெய்வத்தை உள்ளபடி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது?
    6) வள்ளலார் கூறும் இந்த அறிவுரையைச் செயல்படுத்த வேதாத்திரியம் எவ்வாறு பேருதவியாக இருக்கும்?  வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்     வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுதமொழிகள்-301(274)

    வாழ்க மனித அறிவு!                வளர்க மனித அறிவு!!


    சிந்திக்க அமுத மொழிகள்-301(274)

                                                                                                                                                               30-05-2020-சனி

    அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.”

    . . . புத்தர்.

    பயிற்சி:

    1) அறியாமை என்று எதனைக் கூறுகின்றார் புத்தர்?

     2) ‘அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது’ என்கிறாரே புத்தர்! 

    3) அறியாமை ஆயுள் முழுவதும் அப்படியே இருந்துவிட்டு போகலாமா?

    4) அறியாமை நீங்கினால் அதன் விளைவு, திருவள்ளுவர் கூறுவது போன்று அறிவு அறிவுடைமை ஆகுமா?

    5) அறியாமை பற்றி வேதாத்திரிய அறிவியல்(அறிவு+இயல்) அகராதி (Vethathrian Dictionary of Science of Consciousness) என்ன கூறுகின்றது?

    6) என்றோ (சுமார் இருபத்தாறு நூற்றாண்டுகளுக்கு முன்னர்) வாழ்ந்தார் புத்தர். ஆனால் இன்று நாம் அறியாமை பற்றி புத்தர் எண்ணிய எண்ணங்களை அறிந்து கொண்டு, வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘அறியாமை’ பற்றி எண்ணிய எண்ணங்களோடு ஒப்பீடு செய்து, அறிவின் அறிவியல் உருவானது பற்றி நினைந்து மகிழ்ச்சி அடையலாமே!  இவ்வாறு எல்லாம் இயல்பூக்க நியதியினை பயன்படுத்தி பண்பேற்றத்தில் ஏற்றம் பெறலாமே!

    7) அன்பர்களே புத்தரின் இந்த அமுதமொழியைத் தூண்டுகோலாகக் கொண்டு ஒரு சிறு கட்டுரை எழுதிப்பார்க்கலாமே! எழுதும்போது புத்தர் என்னென்ன எண்ணி, இந்த அமுதமொழியினை அருளினாரோ அவையெல்லாம் நமக்கு தெரிய வருமே! புத்தரைப்போன்றே சிந்தனையாளர்களாகலாமே! வேதாத்திரிய அகராதி அதற்கு நமக்குத் துணை செய்யக் காத்திருக்கின்றதே!

    8) ஆழ்ந்த சிந்தனையில், உள்ளே இருக்கும் உத்தமனுடன் ஒருவேளை பேசுகின்ற  ஆனந்த அனுபவ வாய்ப்பைப் பெறலாமே!  சுயசிந்தனையே இறையுடன் பேசுவதுதானே! வாதி பிரதிவாதியாக இருந்து சிந்திக்கலாமே!  வாழ்க வளமுடன்!

    9) இன்னும் ஏதேனும் வினாக்கள் உங்களுக்குள் இருந்தால் அவ்வினாக்களை எழுப்பி விடை காணலாமே!

     வாழ்க வளமுடன். வாழ்க திருவேதாத்திரியம்!

    வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்

    வளர்க அறிவுச் செல்வம்.


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 300(261)

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    lotus

    [rev_slider home-slider-1]

    சிந்திக்க அமுத மொழிகள்- 300(261)

    29-05-2020 — வெள்ளி

    கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது. தன்னம்பிக்கையின் வலிமையால் உள்ளிருந்து ஆன்மா   விழித்தெழுகின்றது.”

                                                                                                                  . . . சுவாமி விவேகானந்தர்

    பயிற்சி—

    1) தன்னம்பிக்கை என்பது என்ன?
    2) எத்தகைய கல்வியால் தன்னம்பிக்கை வளரும்?
    3) தன்னம்பிக்கையால் ஆன்மா விழித்தெழச்செய்வது என்றால் என்ன?
    4) ஆன்மா விழித்தெழுந்தால் என்ன பயன்?
    5) சுவாமி விவேகானந்தர் கல்வி பற்றி கூறியுள்ளதை இந்த பொன் மொழியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாமே!

     

    வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 299(244)


    சிந்திக்க அமுத மொழிகள்- 299(244)

    27-05-2020  — புதன்

    இறைவனை நேசித்தால் விவேகமும், வைராக்கியமும் தானாக வரும்”.  

                                                               . . .  பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

     பயிற்சி—

    1. நேசிப்பது என்பது என்ன?
    2. இறைவனை நேசிப்பது என்பது என்ன?
    3. இறைவனை எவ்வாறு நேசிப்பது?
    4. விவேகம் என்பது என்ன?  அதன் அவசியம் என்ன?
    5. வைராக்கியம் என்பது என்ன? எதற்கு வைராக்கியம் அவசியமாகின்றது?
    6. இறைவன் உருவமாக இருந்தால்தான் நேசிக்கவும், ரசிக்கவும் முடியுமா?
    7. இறைவன் அரூபி எனத்தெரிந்து விட்டதால் அவனை நேசிக்க முடியாதா?  ரசிக்க முடியாதா?
    8. இறைவனை நேசித்தலுக்கும், விவேகம் மற்றும் வைராக்கியம் இரண்டிற்கும் உள்ள தொடர்பு என்ன?
    9. மேற்கொண்டு சிந்திக்கவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 298(241)

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 298(241)

     

    24-05-2020 — ஞாயிறு

    தோணியில் ஏறிக்கொள்; வாழ்வாகிய கடல் ஆழமானது; கடக்கக் கஷ்டமானது; சான்றோருடன்  உறைவதே அதனின்று கரையேற்றும் தோணியாகும்.”

    . . . குருநானக்

    பயிற்சி—
    1) அவ்வையார் இதேபோன்று கூறும் வரிகள் என்ன?
    2) திருவள்ளுவர் எந்தக் குறளில் இதுபோன்று கூறுகிறார்?
    3) இதனை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?
    4) இதுபோன்று அறவோர்களின் அறிவுரை இருந்தும் அதனை அலட்சியம் செய்த சமுதாயத்திற்கு இருபதாம் நூற்றாண்டிற்கு பிறகாவது செயல்படுத்தக் கூடிய அறிவுரைகள் கிடைத்துள்ளது அல்லவா? மகரிஷி அவர்களின் அறிவுநிலைக்கு உயர்ந்து நெஞ்சார வேதாத்திரியத்தைப் போற்றி வாழ்த்துவோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 297(221)

    வாழ்க மனித அறிவு!                      வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள் – 297(221)

    23-05-2020 — சனி

    நல்ல ஆலோசனைகளை விரும்பிக்கேட்டால் திறமைகள் அதிகரிக்கும்.”

    . . . கபீர்.

    பயிற்சி—
    1) நல்ல ஆலோசனைகளை விரும்பிக் கேட்டால் திறமைகள் எவ்வாறு அதிகமாகின்றது?

    2) விரும்பிக் கேட்டால்தான் திறமைகள் அதிகமாகுமா?

    3) திறமைகள் என்றால் என்ன?  என்னென்ன திறமைகள் அதிகமாகும்?

    4) எந்த நியதியின் கீழ் இது நடைபெறுகின்றது?

    5) அவ்வைத்தாய் அருளியுள்ள ‘அறம் செய விரும்பு’ , ‘சான்றோர் இனத்திரு’, ‘ பெரியாரைத் துணைகொள்’ மற்றும் ‘மேன்மக்கள் சொல்கேள்’ என்கின்ற அமுத மொழிகளை இதனுடன் தொடர்பு படுத்தி சிந்திக்கலாமன்றோ!

    6) பொய்யாமொழிப் புலவர்   ‘பொியாரைத் துணைக்கோடல்’  பற்றி பத்து கோணங்களில் இயற்றியுள்ள பத்து குறட்பாக்களையும் இன்றைய சிந்திக்க அமுதமொழியுடன் தொடர்பு படுத்தியும் விரிவாக சிந்திக்கலாம்.

    7) நம் குருநாதர் குருவணக்கம் பாடல்கள்  வரிசையில் ‘குருவின் சேர்க்கையில்’என்கின்ற தலைப்பில் “எப்பொருளை எச்செயலை” என ஆரம்பி்க்கும் பாடலில் அருளியுள்ள வேதவாக்கினை   இன்றைய அமுதமொழியுடன் தொடர்பு படுத்தி மேலும் விரிவாக சிந்தித்து, சிந்திக்கும் ஆற்றலை மேலும், மேலும் வளர்த்துக்கொண்டு  பயன்பெறலாம்.   

    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 296(230)

    வாழ்க மனித அறிவு!                வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 296(230)

    22-05-2020 — வெள்ளி

    நிலையாமையைப் பற்றிச் சிந்தித்தால் தற்பெருமை அழிந்துவிடும்”

    . . . புத்தர்

    பயிற்சி:
    1) இக்கூற்றிலிருந்து முதலில் அறிய வேண்டியது தற்பெருமை கொள்ளக் கூடாது என்பது. ஏன் தற்பெருமை கொள்ளக் கூடாது?
    2) தற்பெருமை கொள்வது பழக்கமாகிவிட்டதால் என்ன செய்வது?
    3) தற்பெருமை கொள்வதால் என்ன தீமைகள் வரும்?
    4) தற்பெருமைக்கும் நிலையாமையை அறிவதற்கும் உள்ள தொடர்பு அறிவியல் ரீதியானதா?
    5) நிலையாமையை அறிவதால் தற்பெருமை எவ்வாறு நீங்கும்? அதிலுள்ள அறிவியல் என்ன?
    6) இவ்வுண்மையைப்பற்றி மகரிஷி அவர்கள் கூறியுள்ளது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்!                   வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 295(194)

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 295(194)

    17-05-2020 — சனி

    முயற்சி வெறும் உந்து சக்தி மட்டுமல்ல. ஆற்றலை வெளிக்கொணரும் கருவி”.

    ….. இரவீந்திரநாத் தாகூர்.

    பயிற்சி:

    1) என்ன கூறுகிறார் அறிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள்?

    2) முயற்சி என்பது தெய்வீகப்பண்பு என்று சொல்லமா? சரியா? சரியானால் எவ்வாறு?

    3) முயற்சி பற்றி திருவள்ளுவர் எந்த அதிகாரத்தில் விளக்கியுள்ளார்?

    4) முயற்சி பற்றி கூறும் அதிகாரத்திற்கு ஏன் அவ்வாறு பெயர் வைத்துள்ளார்?

    5) அந்த அதிகாரம் எந்த அதிகாரத்திற்கு அடுத்ததாக வைக்கப்பட்டுள்ளது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 294(191)

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 294(191)

    16-05-2020—சனி

     

    எந்த உயிரிடத்திலும் பேதமின்றி தம் உயிர் போன்று காண்பவன் உள்ளத்தில் இறைவனும் நடனமாடுகிறார்.”

    . . . இராமலிங்க அடிகள்.

    பயிற்சி:

    1) மற்றவர்கள் உள்ளத்தில் …. ?

    2) இந்த அருள் மொழியை மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?

    3) இறைவன் நடனமாடுகிறார் என்பது அவரது பேரின்ப அனுபவம்! இது எல்லோருக்கும் உரியதுதானே?

    4) இந்த உண்மையினை மகான் மகாகவி பாரதியார் எவ்வாறு கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்


     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 293(187)

    வாழ்க மனித அறிவு!               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்- 293(187)

    15-05-2020 — வெள்ளி

    நம்மிடம் அறிவு இருக்கிறது. ஆனால் உழைக்கும் திறன் இல்லை. வேதாந்தக் கோட்பாடு உள்ளது.   ஆனால் நடைமுறைப்படுத்தும் ஆற்றல் இல்லை”

     
    . . . சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி:

    1) என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?

    2) எதனை வலியுறுத்த அறிவையும் உழைக்காத  திறனையும் இணைத்து ஆதங்கப்படுகிறார்?

    3) அதேபோல் எதனை வலியுறுத்த வேதாந்த கோட்பாட்டையும் அதனை நடைமுறைபடுத்தும் ஆற்றல் இன்மையையும்   இணைத்து ஆதங்கப்படுகிறார்?

    4) இக்கூற்று ஆன்ம சாதகர்களுக்கு அறிவுறுத்துவது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 292(183)

    வாழ்க மனித அறிவு!              வளர்க மனித அறிவு!!

    09-05-2020 — சனி

    சிந்திக்க அமுத மொழிகள்- 292(183)

    நான் யார்? என்ற கேள்வியைக் கேளுங்கள். பதிலை உங்களுக்குள்ளே தேடுங்கள். பிறவியைத் தவிர்க்கும் உபாயம் இதுவே”.

     …. ஸ்ரீ ரமணர்

    பயிற்சி:
    1) பிறவியைத் தவிர்ப்பது என்றால் என்ன? பிறவியை ஏன் தவிர்க்க வேண்டும்?

    2) ‘நான் யார்?’ என்பதற்கான விடை எவ்வாறு பிறவியைத் தவிர்க்கச் செய்யும்?

    3) இதில் உள்ள விஞ்ஞானம் என்ன?

    4)  ஸ்ரீ இரமண பகவானைத் தரிசிக்க வரும் பக்தர்கள், தங்களின்  துன்பங்கள் நீங்க ஆசி வழங்குமாறு வேண்டி நிற்கும்போது,  “நீ யார் என உணர்ந்துகொள் — Find out who you are.” என்பதே அவரது ஆசிர்வாதம்.  எனவே இதிலிருந்து நான் யார் என அறிந்துகொள்வதால் லாபமும்(பயன்) நான் யார் என அறிந்து கொள்ளாமையால் விளையும் நஷ்டமும்(துன்பமும்) என்ன என்று ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாத மூன்றாவது தேவைக்கு அடுத்த நான்காவது தேவையாக  உள்ளதல்லவா?! 

         அதற்கு கட்டாய ஒழுக்கவியல்கல்வி பள்ளியிலும், மாண்பியல் கல்வி கல்லூரியிலும் உருவாக வேண்டாமா அன்பர்களே?! வாழ்த்துவோம்.  கட்டாய  ஒழுக்கவியல் பாடம் பள்ளிகளில் ஏற்படவேண்டும்.

    கட்டாய  ஒழுக்கவியல் பாடம்(கல்வி) வாழ்க வளமுடன்! 

    வளர்க கட்டாய ஒழுக்கவியல் பாடம்(கல்வி)

    வாழ்க அறிவுச் செல்வம்!                        வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading