சிந்திக்க அமுத மொழிகள்- 327

வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

சிந்திக்க அமுத மொழிகள்- 327

14-08-2020— வெள்ளி

 

 

“பிறவிப்பயனை எய்துவதற்கும், ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றிலிருந்து விடுபடுவதற்கும் உரிய செயல் எதுவோ அதுவே புண்ணியம்”

வேதாத்திரி மகரிஷி அவர்கள்

பயிற்சி:

  1. என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
  2. (i) பிறவிப்பயன்என்பதுஎன்ன?                                                                                      ii) மனிதகுலம் முழுவதும் இதனைஅறிந்துள்ளதா? அல்லது அறியவில்லையா?   என்ன காரணம்?                                                                          (iii) பயனைக் கருதும் இயல்புடையது மனிதமனம். மனிதப்பிறவியின் பயனை அறியவில்லையோ மனிதகுலம்?ஆகவேதான் பிறவிப்பயனை அடைவதற்கான பிரயத்தனம் செய்யாமல் உள்ளனவோ மனிதமனங்கள்?
  3. i) பிறவிப்பயனை அடைவதற்கும் மும்மலங்களுக்கும் என்ன தொடர்பு? ii) பிறவிப்பயனை அடைவதற்கு எவ்வாறு ஆணவம், கன்மம், மாயை ஆகியன எதிராக உள்ளன?
  4. (i) இந்த மூன்றிலிருந்து விடுபட மனிதனுக்குத் தயக்கம் ஏன்?                     (ii) அல்லது முயற்சியிலும் பயிற்சியிலும்  தடங்கல்கள் ஏன் வருகின்றன?
  5. பிறவிப்பயனை அடைவது, ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றிலிருந்து விடுபடுவது என்பது ஆன்மசாதகர்களுக்கு மட்டுமே பொருந்துவதா?  அல்லது இரு தரப்பினருக்குமே உலகியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும் பொருந்தக்கூடியதா?
  6. i) மாயை என்பது என்ன?                                                                                                                 ii) மாயை மெய்ப்பொருளை எவ்வாறு திரைபோன்று மறைத்துவிடுகின்றது  என்கின்றனர் ஆன்மீகத்தில் வெற்றி பெற்ற அருளாளர்கள்?                                      iii) மாயையால் மனிதகுலத்தின்  இரு தரப்பினருக்கும் (ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் அல்லது ஆன்மீக  வாழ்க்கையைத் தவிர்த்து உலகியல் வாழ்க்கை மட்டுமே வாழ்பவர்கள்) வரும் விளைவுகள் என்ன?
  7. இறைநம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் புண்ணியத்தில் நம்பிக்கையுள்ளவர்களே. அப்படியிருக்கும்போது புண்ணியம் தேட என்னென்ன செய்ய வேண்டும்?
  8. புண்ணியத்திற்கு அறிவியல் அடிப்படையில் என்ன பொருள்?
  9. இரண்டொழுக்கப் பண்பாடும் புண்ணியத்தைச் சேர்ந்ததுதானே?
  10. இரண்டொழுக்கப் பண்பாட்டால் ஆணவம் கன்மம் மாயை விலகிவிடுமா? இதில் உள்ள அறிவியல் என்ன?
  11. ஆனந்தமய கோசத்திற்கும் பிறவிப்பயனை எய்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?

வாழ்க வளமுடன்!

வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

Loading