வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
எண்ணம்
சிந்திக்க வினாக்கள்-325
21-03-2022-திங்கள்
உ.ச.ஆ.21-03-2037
வாழ்க வளமுடன்!
பிரதான வினா(Main Question): 325
எண்ணமே இயற்கையின் சிகரம், இயற்கையின் உச்சமே எண்ணம் என்று எப்படிக் கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
துணை வினாக்கள் (Sub questions):
1) எண்ணம் என்பது என்ன?
2) எண்ணத்திற்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு என்ன?
3) எண்ணம் எவ்வாறு தோன்றுகின்றது?
4) எண்ணத்தைப் பற்றி மனிதகுலம் ஏன், என்ன அறிந்துகொள்ள வேண்டும் என நினைத்து 28 கவிகளை(ஞா.க. 6.23. 1525—1552) வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ளார்? நேரம் ஒதுக்கி, நேரம் கிடைக்கும்போது, அனைத்து கவிகளையும் வாசித்து பயனடையலாமே!
5) இன்று மனிதகுலம் வாழ்ந்துகொண்டிருக்கின்ற சூழலில் எண்ணத்தைப் பற்றி மனிதன் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகின்றதா? எப்படி?
6) மனவளக்கலையில் தற்சோதனைப் பயிற்சியில் எண்ணம் ஆராய்தல் பயிற்சியினை ஏன் முதலாவதாக வைத்துள்ளார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
7) வேறு ஏதேனும் வினாக்கள் உங்களுள் எழுந்தால் அதனையும் எழுப்பி ஆராய்ந்து விடை காணவும்.
வாழ்க வளமுடன்!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!