June 2024

Monthly Archives

  • சிந்திக்க கவிகள் – 15

    வாழ்க திருவேதாத்திரியம் !             வளர்க திருவேதாத்திரியம்!!

    சிந்திக்க கவிகள் – 15

    (இணையதளத்தில் 1008  வது பதிவு)

                                                                                                                            நாள்– 23-06-2024

                                                                                                                                   ...-23-06-39

    துறவு

                                யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

                                  அதனின் அதனின் இலன்.                      . . . குறள் எண் 341

     பொருள்: யாவரும் அறிந்ததே. எனினும் குறளின்  பொருளை நினைவு படுத்திக் கொள்வோம். எந்தப் பொருள்களிலிருந்து பற்று இல்லையோ அந்தப்பொருளினால் துன்பம் அவனுக்கு இல்லை.

    பயிற்சி:-

    1. என்ன உரைக்கிறார் பொய்யா மொழிப்புலவர் திருவள்ளுவர் அவர்கள்?
    2. வாழ்விற்கு பொருள்கள் அவசியமாயிற்றே! ’பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை’ என்கின்ற திருவள்ளுவரா பொருள்களிலிருந்து விலகி இருந்தால் அந்தப்பொருளிலிருந்து துன்பம் இல்லை என்பார்!
    3.  ஒவ்வொரு பொருளிலிருந்தா ஒவ்வொரு தனித்தனி துன்பம் முளைக்கும்? இதில் உள்ள சூட்சுமம் என்ன?
    4. துறவு என்ற அதிகாரத்தில் முதல் குறளாக வைத்துள்ளதை கருத்தில் கொள்ள  வேண்டியதல்லவா?
    5. மனவளக்கலை பாகம் -1 என்கின்ற நூலில் கவலை ஒழித்தல் பாடத்தை இக்குறளுடன் ஆரம்பிப்பதிலிருந்து என்ன அறிய வேண்டியுள்ளது?  
    6. மனவளக்கலை பாகம் -1 ல் கவலை ஒழித்தல் பாடத்தின் ஆரம்பத்தில் உள்ள இக்குறளின் முழுமையான பொருளை ஏற்கனவே  அறிந்துகொண்டிருந்தால்   அப்பாடத்தில் வருகின்ற  27 பக்கங்களில் கூறப்பட்டுள்ள கவலை ஒழிக்கும் யுக்திகள் படிப்பதற்கு முன்னரே  அறிவிற்கு வெளிச்சமாகிவிடுமன்றோ? 
    7. வாழ்வை  இருவகை வாழ்வாக மாற்றிக்கொண்டு (உலகியல் வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை) சமுதாயத்தில் மானுடம் அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப/சௌகரியத்திற்கேற்ப தேர்ந்தெடுத்து வாழ்கின்ற எந்த பிரிவினருக்கு திருவள்ளுவரின் இந்த அறிவுரை?
    8. துறவு என்பதன் சரியான பொருள் என்ன? பற்றற்ற உறவு என்கின்றாரே (detached attachment ) மகரிஷி அவர்கள். அதுவா திருவள்ளுவர் கூறும் இந்த துறவு?
    9. துறவு பற்றி திருவள்ளுவரின் இரண்டாம் நூற்றாண்டின் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறுகிறார்?(ஞானக்களஞ்சியம் கவி எண் – 1849)
    10. பொருளைத் துய்க்கும்போதோ அல்லது பொருள் மீது பற்றுகொண்டிருக்கும்போதோ ஏன் துன்பம் வருகின்றது
    11. புலன்கள் வழி்யாக இன்பம் துய்க்கும் போது கவனிக்க வேண்டிய சாம்யம் ஏதேனும் உள்ளதா? என்ன  மகரிஷி அவர்கள் கூறுகிறார்? 
    12.  மகரிஷி அவாகள் கூறும் இன்ப-துன்ப சாம்யத்திற்கும் திருவள்ளுவர் கூறுகின்ற இக்குறளின் பொருளுக்கும் தொடர்புள்ளதா?
    13. ஞானியின் அடையாளத்திற்கும் இன்ப-துன்ப சாம்யத்திற்கும் தொடர்பு உள்ளதா? சிந்திப்போம் அன்பர்களே!. 
    14. “LESS LUGGAGE – MORE COMFORT” என்கின்ற ரயில்வே துறையின் ஸ்லோகம் நினைவிற்கு வருகின்றதா?
    15.  வேதாத்திரிய ஆன்மீகத்திற்கு அச்சப்படத் தேவையில்லை அன்பர்களே! வாழ்க வளமுடன்! எல்லோருமே விரும்பும் உலகியல் மற்றும் மெய்ஞ்ஞானிகள் மட்டுமே விரும்புகின்ற, வாழ்கின்ற ஆன்மீக வாழ்வும் இணைந்த, மனிதன் மனிதனாக, மாமனிதனாக  வாழும்  வாழ்க்கை வாழ்வோம் அன்பர்களே! கிடைத்தற்கரிய குருவான வேதாத்திரி மகரிஷி அவர்களை பின்பற்றி வாழ்வோம். வாழ்க வளமுடன்! 

    வாழ்க வையகம்!                                வாழ்க வளமுடன்!!

     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 337

    வாழ்க திருவேதாத்திரியம் !             வளர்க திருவேதாத்திரியம்!!

    சிந்திக்க வினாக்கள்337

    (1007 வது பதிவு)

                                                                                                                         நாள்– 21-06-2024

                                                                                                                         ...-21-06-39

     பிரதான வினா(Main Question)

     இயற்கையின் நிகழ்வை ‘பரிணாமம்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுவதை பின்னாளில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஏன் ‘தன்மாற்றம்’ என அழைக்கலானார்?

     துணை வினாக்கள் (Sub questions):

     1. பரிணாமம், தன்மாற்றம் வெவ்வேறு பொருளைக் குறிக்கின்றதா?  அல்லது ஒரே பொருளைக் குறிக்கின்றதா?

          2. பரிணாமம் என்பது என்ன?

          3.தன்மாற்றம் என்பது என்ன?

         4.‘தன்மாற்றம்’  எனும்போது ‘ஒன்றே பலவாகியது’ எனும் அத்வைத தத்துவத்தை நேரிடையாகப் பிரதிபலிப்பதாக உள்ளது காரணமா? 

        5.‘ஒன்றே பலவாகியது’ என்கின்ற பொருளுக்கு தன்மாற்றம் என்பது பொருத்தமாக உள்ளதா?

        6.‘ஒன்றே பலவாகியது’ என்ற பொருளுக்கு  பரிணாமம் என்ற  சொல்லிற்கான(ஒன்றிலிருந்து மற்றொன்று உருவாகுதல்) பொருள் விலகியுள்ளதா/பொருத்தமில்லையா?

      7. பிரதான வினாவிலிருந்து அறியப்படவேண்டியது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                      வளர்க அறிவுச் செல்வம்!!

    வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!


     

     

     

     

  • உங்கள் கருத்துக்கள்

    வி.பெ.இராஜமோகன்

    23 Apr, 2020 at 11:49 am

    ஆசையின்மையே பேரானந்தம் என நிசர்கதத்தா மகாராஜ் கூறுவது சரியே. துறவு என மகரிசி கூறுவதும் சரியே. ஆசைகளையெல்லாம் கடந்து எளிய வாழ்க்கையில் மனம் திளைக்கும்போது பரவசநிலை உண்டாகும். பேரின்பம் கிட்டும். வாழ்க வளமுடன்.  

    Feed back to the category:

    “Desirelessness is the Highest Bliss”

    … நிகர்கதத்தா மகராஜ்சிந்திக்க அமுத மொழிகள்- C-286


    Other comments will appear shortly please


     

    Loading