admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 314

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 314

    03.07.2020— வெள்ளி

     

    “ஒழுக்கம் என்பது ஒருவனுடைய நெடுநாளைய பழக்கமாகும்”


    – அறிஞர் ஜான் கிட்ஸ்

    பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் அறிஞர் ஜான் கிட்ஸ் ?
    2. ஒழுக்கத்திற்கும் பழக்கத்திற்கும் என்ன உறவு?
    3. ஒழுக்கத்திற்கும் பழக்கத்திற்கும் உள்ள உறவு ஏன் நெடுநாளையது என்கிறார்?
    4. “இளமையில் கல்” என்கிறார் அவ்வைத்தாய் என்பதற்கும் கவிஞர் ஜான் கிட்ஸ் கூறுவதற்கும் பொருளில் இணக்கம் உள்ளதல்லவா? உள்ளது எனில் எவ்வாறு உள்ளது?
    5. ‘ஒழுக்கவாழ்விற்குபோராடவேண்டும்’ என்று அறிஞர் ரூஸோ கூறியதற்கும் அறிஞர் கிட்ஸ் கூறுவதற்கும் என்ன தொடர்பு?
    6. இரண்டொழுக்கப்பண்பாட்டினை வகுத்துக் கொடுத்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் பழக்கம் பற்றியும், விளக்கம் பற்றியும் கூறுவது என்ன?
    7. வேதாத்திரிய கல்வியின் நான்கு அம்சங்களில் ஒன்று ஒழுக்கப் பழக்க அறிவு என்பது சரிதானே?!  மனிதன் கல்வி கற்கும் பருவ ஆரம்பத்திலேயே கல்வியில் ஒழுக்கம் கற்றுக் கொடுக்கப்பட்டு  அது பழக்கப்பட வேண்டும் என்றல்லவா கூறுகின்றார்!
    8. “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்கின்ற ஆன்றோர் மொழி சரிதானே!
    9. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பது நினைவு கொள்ளத் தக்கது தானே?
    10. இருப்பினும் பல்லாயிரம் பிறவிகளில் செய்துள்ள பழிச் செயல் பதிவுகளை (தீயொழுக்கப் பதிவுகளை) ஒரு பிறவியிலேயே மாற்றி அமைக்கலாம் எனக் கூறும் பாடலை நினைவு கூறுவோம் இப்போது.

    வாழ்க திருவேதாத்திரியம்!    வளர்க திருவேதாத்திரியம்!!

     

    குறிப்பு: 

         அன்பர்களே வாழ்க வளமுடன்! 

    இந்தப் பயிற்சியில் இதுவரை 10 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.  இவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்குள் எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழவும். சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும் நொடி தோறும் வளர்த்துக் கொள்ள அன்பு வேண்டுகோள்.  வாழ்க வளமுடன்!

    வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-310

    வாழ்க மனித அறிவு!                                                                   வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்-310

                                            

    02-07-2020 – வியாழன்

    பயிற்சி:

    1. ஆறறிவு உடைய மனிதனை மனிதன் என்ற உருவினிலே மாக்கள் உண்டு மக்கள் உண்டு* என்பதனை  எதன் அடிப்படையில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கண்டுபிடித்துள்ளார்?
    2. விலங்குகளிலிருந்து மனிதன் வந்துள்ளதால் அவனிடம்  விலங்குகளுக்கே உரிய பிறர் வளம் பரித்தல் குணம் தொடர்வதால்  மனிதர்களை இரண்டாகப் பிரித்து அவ்வாறு கூறுகின்றாரா?
    3. இந்தக் காரணமட்டுமன்றி  வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா?
    4. அப்படி உண்டென்றால் அவை என்னென்ன?
    5. அல்லது ஆன்மாவின் ஐந்து கோசங்களை வைத்து அவ்வாறு கூறுகின்றாரா?
    6. அப்படி கூறுகின்றார் என்றால் ஐந்தறிவு சீவன்கள் எந்தெந்த கோசங்களில் மட்டும் இயங்குகின்றன? ஆறாம்  அறிவு எந்தெந்த கோசங்களில் இயங்க வேண்டும்? பெரும்பாலும் மனித அறிவு எந்த கோசத்தில் இயங்குகின்றது?
    7. கோசங்களில் கடைசி கோசம் என்ன?  அந்த கோசத்தில்  எந்த ஆன்மாவின்  அறிவு இயங்குகின்றது?
    8. ஏன் இந்த கோணத்தில் சிந்திக்க வேண்டும்?  இவ்வாறு சிந்தித்தலின் பயன் என்ன? 
    9. திருவேதாத்திரியத்தினை ஆழமாகவும், தெளிவாகவும் புரிந்துகொண்டு                   

                9.1. பேரின்பம் அனுபவிக்கவும் ,

                9.2. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கின்ற  மனிதனின்  இயல்பான எண்ணம் நன்றியுணர்வின்பொருட்டு  எழுவதனை செயலாக்கவும்,

                9.3  தான் புரிந்துகொள்ளும் அதே வேளையில்  சமுதாயத்திற்கு   எடுத்துரைத்து புரியவைத்து அதிலும் கூடுதலாக பேரின்பம் அனுபவிப்பதற்காவும்,   

                9.4. ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் இடையில் வேறு ஏதேனும் துணைப்பிரிவை ஏற்படுத்திக்கொண்டு சிந்திக்க  அவசியம் உள்ளதா?

        10.    அவசியமிருப்பின்  அது என்ன பிரிவு ?  சிந்தித்து  பேரின்பம் அனுபவிக்கலாமே!   

          வாழ்க திருவேதாத்திரியம்!!   வளர்க வளர்கவே திருவேதாத்திரியம்!!

     

     

    *  ஞானக் களஞ்சியம் – கவி எண். 297  –  முழுமனிதன்  –  03-01-1959 


     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

          வாழ்க அறிவுச் செல்வம்!              வளர்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க கவிகள்-11

       வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க கவிகள்11

    01-07-2020புதன்

    பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் உலக நல தொண்டரான நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
    2. வாழ்வு என்பது என்ன?
    3. வாழ்வில் வளம் என்பது என்ன?
    4. வினை, உயிர், மெய், அறிவதால் வளம் கிடைக்கின்றதா? இவற்றை அறிவதால் எவ்வாறு வளம் கிடைக்கும்?
    5. பஞ்சதன்மாற்றங்களின் வகை தெரிவான் கட்டே உலகு என்று 20 நூற்றாண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் உரைத்தது போல அவரது 20 ஆம் நூற்றாண்டின் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் வினை, உயிர், மெய் ஆகியவற்றின் வகை அறிய என்ன செய்தார்?
    6. பகலிரவாய் எண்ணி எண்ணி என்றால் என்ன?

    7. ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்தேன் என்பதற்கு என்ன பொருள்? உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது என்கின்ற உறுதியை நினைவில் கொண்டு  மற்ற பணிகளுக்கும்-கடமைகளுக்கும் குந்தகம் ஏற்படாமல்  சிந்தித்து ஆன்மபலன் பெறலாமே?

    8. விடாமல் தொடர்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்ததால் அவர் அடைந்த பலன்கள் என்ன? நாமும் அவ்வாறே பலன்களை அடையலாமே!
    9. வினாக்கள் எல்லாம் விடையாயிற்று என்றால் என்ன பொருள்?
    10. ஊழ் உணர்ந்தேன் என்றால் என்ன பொருள்?
    11. ஊழ், உயிர், வினை உணர்ந்தால்  வாழ்வில் வளம் பெருகும் என்கிறாரே! இது எளிமையாக உள்ளது அல்லவா?
    12. உயர் தொண்டு என்றால் என்ன? என்ன வகையான தொண்டு மகரிஷி அவர்களுடையது?
    13. தொண்டால் எப்படி மனநிறைவு உண்டாகும்? அந்த மனநிறைவை வரையறுக்க முடியுமா?

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


     

    Loading