admin

Author Archives

  • ‘வள்ளலார் கடைவிரித்தது விரித்ததுதான்’ FFC—293(157)

    வாழ்க மனித அறிவு                                    வளர்க மனித அறிவு

    வள்ளலார் கடைவிரித்தது விரித்ததுதான்”

    … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     மீள்பதிவு FFC—293(157)

    24-06-2020—புதன்

    24-01-2016—ஞாயிறு

    vallalar_thirukkappu-PNG_Thai

     

    வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட நாள் 1874 ஆண்டு-தைப்பூசத் திருநாள். திருக்காப்பிட்டுக் கொண்டு 146 ஆண்டுகள் ஆகின்றன. சிரம் தாழ்த்தி உடலாலும், உள்ளத்தாலும் ஆர்வத்தோடும் அருட்பிரகாச வள்ளலாரை வணங்குவோம். ‘அகவினத்தார்க்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும்’ வழங்கிக் கொண்டிருக்கின்ற அருட்பிராகாச வள்ளலாரின் அருளால் சாகா வரம் பெறுவோம்.  வள்ளலார் அவர்கள் சத்ய வாக்கு கொடுத்துள்ளதால், இந்நன்னாளில் அருட்பிரகாச வள்ளாரிடம் இறைமையை/அருளை இறைஞ்சி வேண்டி நிற்போம்.

    வள்ளலாரின் திரு எய்திய ஆன்மா, சுமார் எண்பது ஆண்டுகள் சென்ற பிறகு நம்முடைய நேரிடை குருவான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு சுமார் நாற்பத்திரண்டு வயது இருக்கும்போது, அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதனை அறிய முடிகின்றது. வேதாத்திரி மகரிஷியின் உடலில் பத்து வருடங்கள் இருந்து கொண்டு, வள்ளலாரின் ஆன்மா மகரிஷி அவா்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. இதனை வேதாத்திரி மகரிஷி அவர்களே தனது வாழ்க்கை விளக்கம் என்கின்ற நூலில் கூறியுள்ளார்கள்.

    மகரிஷி அவர்களுக்குள் இருந்து கொண்டு வள்ளலார் அவர்கள் வழிகாட்டியாக இருந்து அருள் புரிந்த புனித நிகழ்வால், வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக்கொண்ட அன்று தமது திருவாயால் மலர்ந்தருளிய சத்திய வாக்கு ஒருவரிடம்(மகரிஷியிடம்) நிறைவேறியதை நாம் அறிய முடிகின்றது. இன்னும் எத்தனை அருள்துறை அன்பர்களுக்கு இது போன்று அருள் பாலித்தார் என்பது தெரியவில்லை.

    வேறு எந்த அருளாளரின் பூதஉடலுக்குள் இருந்து கொண்டு செயல்பட்டாரோ அல்லது இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றாரோ என்பது தெரியாது. எனினும் இன்று நாம் வள்ளலார் அவர்களிடமிருந்து அருள் பெற தயாராக உள்ளோம்.

    அருட் பிரகாச வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொள்ளும்போது திருவாய் மலர்ந்தருளியது என்ன என்பதனை நினைவு கூர்வோம்.

    30-01-1874 ம் ஆண்டு ஸ்ரீமுக வருடம், தை மாதம் 19 ம் நாள் வெள்ளிக் கிழமை இரவு 12 மணிக்கு திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்டார். அப்போது அவர் அளித்த அருட்செய்தியினை கூர்ந்து கவனிப்போம். (வடலூர் சித்தி வளாகத்தில் இன்றும் அந்த அருட்செய்தியினைக் காணலாம்) அந்த அருட்செய்தி கூறுவது என்ன?

    இது வரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தோம்? கேட்டு, திருந்தி எழுச்சி பெற்று, திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்.
    • இப்போது இந்தவுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லாவுடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்பொம், திருத்திவிடுவோம். அஞ்சவேண்டா.
    • சுத்தப்பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம். அகவினத்தார்க்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும் அளிப்போம்.”
                                                                                            –வள்ளலார் அவர்கள்.

    வள்ளலார் அவர்களின் மற்றொரு ஆதங்கம் என்ன?

    “கடைவிரித்தேன்; கொள்வாரில்லை”

    அவர் பூதவுடலில் இருந்து கொண்டு நேரிடையாகவே அருட்செய்திகளையெல்லாம் சொல்லியும், அதனைக் கேட்டு, எழுச்சி பெற்று, திருந்தி பிறவிப்பயனை அடைகின்ற திறமையில் ஒருவா்கூடத் திகழவில்லை என்கிறார்.
    எனவே அவர் பூதவுடலை விட்டுப் பிரிந்தாலும், அவரது சூக்கும உடல் எல்லோரிடமும் புகுந்து கொண்டு திருத்திவிடும்” என்கிறார். அகவினத்தார்க்கு சாகா வரமும், ஏனையோர்க்கு பரிபக்குவ நிலையையும் அளிப்பதாக வாக்களித்துள்ளார். இது ‘உடலே நான்’ என பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல், வள்ளலார் என்கின்ற பூதவுடல் சொன்னதா? இல்லை!

    “ஊனுடம்பு ஆலயம்” என்கின்ற திருமூலர் வாக்கிற்கிணங்க,
    வள்ளலாரின் பூதஉடலில் பேரறிவாகிய இறையே, ஆலயம் கொண்டு,
    ‘வேதங்கள் இறைவனால் சொல்லப்பட்டன’ என்று சொல்லப்படுவதுபோல், சாட்சாத் இறைவனே வள்ளலாரின் திருவாய் வழியாக அருளிய திருவார்த்தைகளாகும்.

    பின்னர் வேறு எந்த வழியில் அரூபமான இறையால் மனித சமுதாயத்திற்கு சொல்ல முடியும்? இறை அரூபமாக உள்ளது என்று விளங்கிய பிறகு, ஐயப்படாது அகத்தை உணா்ந்தவர் வழியாக இறை சொல்கின்றது என்பதில் எந்தவித ஐயப்பாடும் இருக்காது. அதனால்தான் மூத்தோர் வார்த்தை அமிர்தம் என்கிறார் அவ்வையார். மூத்தோர் என்பது அறிவை அறிந்த பெரியவர்கள் என்று கொள்ளலாம். வயதில் மூத்தவர்கள் அனுபவத்தால் சொல்வதனையும் கேட்க வேண்டும். அறிவை அறிந்த பெரியோர்கள் வழியாக சொல்வது இறையே என்பதால் அது அமிர்தமாகத்தானே இருக்கும். இயற்கை–இறை/இறைவன் ஆனந்தமயமானது/ஆனந்தமயமானவன் என்பதால் இயற்கையால்–இறையால்/இறைவனால் சொல்வது ஆனந்தமாகத்தானே இருக்கும்!

    வள்ளலார் திருவாக்களித்தபடி, ஓயாமல் அவரது திரு எய்திய ஆன்மாவே (இறைவனே), ஆன்மீகத் துறையில் பயிற்சி செய்யும் சாதகர்களுடனே இருந்து கொண்டு உறுதுணையாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை. ஆன்மீக சாதகர்களுக்கு இரண்டு வழிகளில் துணைபுரிவேன் என்று உறுதியாகக் கூறுகிறார் வள்ளலார் அவர்கள். முதல்தர சாதகர்களுக்கு ‘சாகா வரமே தருவேன்’ என்கிறார். மற்றவா்களுக்கு ’பரிபக்குவ நிலையைத் தருவேன்’ என்கிறார்.

    ஆன்மீகத்தில்  ‘பரிபக்குவ நிலை’ என்பது மிக மிக முக்கியமானது. பரிபக்குவ நிலையில் பிறவி எடுத்தவர்களே, கருவில் திருவுடையவர்களாவார்கள். பகவத் கீதையில் கண்ணபரமாத்மா கூறியவாறு கோடியில் ஒருவரே கருவில் திருவுடையவா்களாக இருப்பர். அவர்களே தன்னை வந்து அடைவதாக கூறுகிறார் கண்ணபரமாத்மா. மற்றவர்கள் வழுக்கி விழுந்து, விழுந்து, முயற்சி மேல் முயற்சி செய்து, ஆன்மீக இலக்கை அடைய வேண்டும். எனவே ‘சாகா வரம்’ வாங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு பரிபக்குவ நிலையைத் தருவதாகக் கூறுகிறார் வள்ளலார் அவர்கள். பரிபக்குவ நிலை வந்த பிறகுதான் குரு-சீடர் உறவில் அலை இயக்க ஐந்து பண்புகளும் முழுவதுமாக வேலை செய்து, குறிப்பாக அலை இயக்கப்பண்பில் கடைசியும், அதிமுக்கியதுமானதுமான ‘ஒன்றோடு ஒன்று கூடி ஒன்று பட்டு இயங்குதல்–inter-action’ என்பது குரு-சீடா் உறவின் முழுப்பயனையும் தரும்.

    இயற்கையின்/இறையின் மனிதர்களாகிய—தன்மாற்ற(self–transformation into human beings) சரித்திரத்தில் மனிதர்களை திருத்தும் படலம் நடந்து கொண்டிருக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது அருட்பிரகாச வள்ளலாரின் கடைசி திருவாய் மொழியிலிருந்து.

    வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொள்ளும்போது அறிவித்த அருட்செய்தியின்படி, நமக்குத் தெரிந்த வரை, வள்ளலாரின் திரு எய்திய ஆன்மா, சுமார் எண்பது (1911-1874) + 42 = 37+42= 79 or 80) ஆண்டுகள் சென்ற பிறகு நம்முடைய நேரிடை குருவான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு சுமார் நாற்பத்திரண்டு வயது இருக்கும்போது, அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதனை அறிய முடிகின்றது. வள்ளலார் அருட்பாலித்ததிலிருந்து பத்து ஆண்டு காலத்துக்குள் மகரிஷி அவர்கள் தான் எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவமயம் என்கிறார். மேலும், இராமலிங்க வள்ளலார் அவர்கள் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவைத்த செயல்களையெல்லாம் தன் வழியாக முடித்தார் என எண்ணுவதாகவும் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

    வள்ளலாரின் அருள் தனக்கு கிடைத்த பாக்கியத்தை, நம்குருதேவர், பேரருளாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பயன்படுத்திக் கொண்டதை, அவரே கூறுவதை அறிந்து மகிழ்வோம். ஏனெனில் நம் தாய், தந்தையர் செய்த புண்ணியத்தால் நமக்கு குருவாக குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களை இயற்கை/இறை அருளியுள்ளது. மகரிஷி அவர்களின் பூதஉடலில் வள்ளலார் அவர்கள் பத்துவருடங்கள் தங்கியிருந்து அருள்பாலித்திலிருக்கிறார். அது நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியதுதாக உள்ளது என்கிறோம். காரணம், வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு தெரிவித்த உண்மைகளுக்கு பலமும், தெளிவும், எளிமையும் கிடைத்திருக்கிறது அல்லவா? மகிழ்ச்சி மட்டுமல்ல, அது நமக்கு கூடுதல் பயன்தானே(additional benefit) உண்மையைப்பற்றி அறிந்து கொள்வதில். வள்ளலார் அவர்கள், பல சந்தா்ப்பங்களில் தன்னோடு இருந்து வழிகாட்டி செயலாற்றுவதை அனுபவமாகக் கண்டதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.


    மகரிஷி அல்லாது இன்னும் எத்தனை அருளாளர்களுக்கு வள்ளலார் அவர்கள் சாகா வரம் தந்துள்ளார் என்பது தெரியாது. வெளியே தெரியவில்லை. ஆனால் பரிபக்குவ நிலையைத் தந்து கொண்டிருக்கும் பணியினைச் செய்து கொண்டிருக்கிறார் என்பதனை மட்டும் அறிய முடிகின்றது. ‘வேதாத்திரியம்’ கல்வி நிலையங்களுக்குச் சென்று மாணவர்களை ஒழுக்கத்திற்கு திருத்தி ஒழுங்கு படுத்தும் சீரிய பணியைத் துவங்கி விட்டதே இதற்குச் சான்றாகக் கொள்ள முடிகின்றது. பேரறிவின் தன்மாற்றத்தில் அவ்வப்போது மகான்கள் தோன்றுவதென்பது முடிவில்லா ஆன்மீகத் தொடா் ஓட்டம் (Never ending–Continuous Divine Relay Race).

    அதனால்தான் மகரிஷி அவர்கள் “அறிவேதான் தெய்வம் என்றார் தாயுமானார்” எனத் துவங்கும் குருவணக்கப் பாடலில், தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்கர் என பெயரிட்டு நான்கு அருளாளர்களை நினைவு கூர்வதோடுமட்டுமல்லாமல், இது வரை இறைவெளியின் தன்மாற்றத்தில், ஆன்மீக வரலாற்றில் தொடராக வந்துள்ள அனைத்து அருளாளர்களையும் நினைவு கூர்கிறார் மகரிஷி அவர்கள். அப்படியானால் மகான்கள் தோன்றுவதென்பது முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஓட்டம் தானே!

    வள்ளலார் “திருத்திடுவோம்” என்று கூறியது இப்போது வேதாத்திரியத்தின் வாயிலாக நடைபெறவில்லையா? மனவளக்கலை ஒரு சாதனை மார்க்கம் என்பதே, திருந்துவதைத்தானே குறிக்கின்றது. சாதனை என்பது என்ன? பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் மனிதன் பழைய தீய பழக்கங்களுக்கும் இப்போது கிடைக்கும் நல்விளக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் வெற்றி பெறுவதுதான் சாதனை என்பது. எனவே தான் தற்சோதனைப் பயிற்சியை தெய்வீகப் பயிற்சி என்கிறார் மகரிஷி அவர்கள்.

    மேலும் மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம். தன் பிணக்குகளை முறையாகக் களைவதும் ஒரு போராட்டம்தான் என்கிறார். எனவே தன் பிணக்குகளை முறையாகக் களைவதற்கு மகரிஷி அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், உயர்வையும் கவனிக்க வேண்டும். தன் பிணக்குகளை முறையாகக் களைவதை, உயிரைத் தூய்மையாக்கவல்ல  ‘அறிவுப்போர்’ என்கிறார். ஆகவே வாழ்வில், மகிழ்ச்சியும், நிறைவும். அமைதியும் அளிக்கும் அந்த அறிவுப்போர் ஒரு தெய்வீகப் போர் என்கிறார்.

    “கடைவிரித்தேன். கொள்வாரில்லை” என்றார் வள்ளலார் அவர்கள். ஆனால் மகரிஷி அவர்களோ, வடலூர் மேட்டுக் குப்பத்தில் ஓங்கார மண்டப திறப்பு விழாவில்(05-02-1985) ஆற்றிய உரையின் முடிவில் கூறியது அன்பொளி ஜுலை 1985 இல் ‘வள்ளலார் விரித்த கடை’ என்கின்ற தலைப்பில் வெளிவந்தது. கட்டுரையின் முடிவுப்பகுதியில் மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்:

    “எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாக உள்ள, சேர வேண்டிய இடமாக, கடைத்தேற வேண்டும் என்ற எண்ணத்தோடு கடைவிரித்தேன்” என்று சொன்னார் வள்ளலார் அவர்கள். ஆனால் கடையை மூடிவிட்டாரா? இல்லை. திறந்தே வைத்தார். இன்றும் அது திறந்தே உள்ளது.” என்றார். அதற்கு சாட்சியாகக் அவ்விழாவில் குழுமியிருந்த அன்பர்களே எனக் கருதி,  “அப்படி இல்லையானால் இவ்வளவு பேர் கூடி அனுபவிக்க முடியாது”. என்று அன்று குழுமியிருந்த அன்பர்களிடமே கூறினார் மகரிஷி அவர்கள்.

    மேலும் மகரிஷி அவர்கள் அன்று கூறியதாவது:– 

    விரித்தது, விரித்ததுதான்.  அவரவர்கள் வேண்டும் அளவுக்கு அள்ளிக் கொண்டு போகலாம். விரித்தது அத்தனையும்* செய்யுட்களாக வந்துவிட்டன. ஒவ்வொரு செய்யுளிலும் வரக்கூடிய ஒரு உண்மைப் பொருள், இறைவனே நேரடியாக எடுத்துக் காட்டியதை, உணர்ந்தது உணர்ந்தவாறு கூறுகின்றார் வள்ளலார்.இதைச் சாதாரண வார்த்தைகளில் கூறும்போது அது விளங்காது. ஆனால் அது அனுபவத்திலே அனுபவித்தவர்கள் கூறும்போது அந்த ஒளிக்கே ஓரு ஆற்றல் உண்டு”

    *திருஅருட்பா

    ஆகவே தெய்வீகப்போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், நாம் அருட்பிரகாச வள்ளலாராகிய அருட்தாத்தாவை அருளை வேண்டி வணங்கி நிற்போம்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில் (28-06-2020—ஞாயிறு) அருட்பிரகாசவள்ளலார் அவர்களிடம் இறைமையை வேண்டி இறைஞ்சுகின்ற மடலை வரைவோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்.


    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 307

    வாழ்க மனித அறிவு!                                                               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள் – 307

                                                                                                                                                                         

                                                22-06-2020 – திங்கள்

     

    அயராவிழிப்புணர்வு

     பயிற்சி:

    1. விழிப்பு’ என்றால் என்ன?
    2.  ‘உணர்வு’ என்றால் என்ன?
    3.  ‘விழிப்பு’ ’உணர்வு’ என்கின்ற இரு சொற்களையும் சேர்த்து ‘விழிப்புணர்வு’ என்று கூறுவதன் பொருள் என்ன?
    4.  விழிப்புணர்வை வகைப் படுத்த முடியுமா? முடியும் என்றால் எத்தனையாக வகைபடுத்தலாம்?
    5. அலட்சியம், உணர்ச்சிவயம் எவ்வகை விழிப்புணர்வைச் சேர்ந்தவை எனலாம்?
    6. அயர்’ என்கின்ற சொல்லின்  பொருள் என்ன?  ‘விழிப்புணர்வு’, ‘அயரா’ என்கின்ற இரு சொற்களைச் சேர்த்து அயரா ‘விழிப்புணர்வு’  என்கின்றபோது அதன் பொருள் என்ன?
    7.  விழிப்புணர்வு மனிதனுக்கு அவசியமா? எந்தவகை விழிப்புணர்வு அவசியம்? ஏன் அவசியம்?
    8.  பேராசை, சினம், கவலை எந்தவகை விழிப்புணர்வைச் சேர்ந்தவை?
    9. AWARENESS is GOD’ என்கின்றன சில ஆங்கில ஆன்மீக நூல்கள். இதற்கு நீங்கள் உடன்படுகீறீர்களா?  ஆம் என்றால் எப்படி?
    10.  விழிப்புணர்வு அயர்ந்துவிட்டால் ஏற்படுவது நன்மையாக இருக்குமா?
    11.  செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற பிரதான உண்மையில் ‘விளைவறிந்த விழிப்பு நிலை’ எனப்படுவது அயரா விழிப்புணர்வாகுமா?
    12.  ஞானமும் அயராவிழிப்புணர்வும் இரண்டும் ஒன்றா? அல்லது வெவ்வேறா? ஒன்று எனில் எப்படி ஒன்றாகும்?
    13.  அயரா விழிப்புணர்விற்கு அடிப்படையான, அவசியமான மனிதத்தன்மைகள்/குணங்கள் என்னென்ன? அவற்றில் முதன்மை வகிப்பதை சொல்ல முடியுமா?
    14.  நுண்மாண் நுழைபுலனிற்கு அயரா விழிப்புணர்விற்கும் தொடர்பு உண்டா? உண்டு எனில் என்ன தொடர்பு அது?
    15.  அயராவிழிப்புணர்வு யாருக்கு/எதற்கு இருக்க வேண்டும்?
    16.  இப்பிரபஞ்சத்தில் எது அயரா விழிப்புணர்வோடு இருக்கின்றது? இருக்க முடியும்? மனிதனில் எது அயரா விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்? ஏன்?
    17.  எந்த நிலை அயரா விழிப்பு நிலை?
    18. எந்த ஒன்று மனிதனில் அயராவிழிப்புணர்வோடு இருந்தால் அவர் பிரம்மஞானியாவார்?

       

         குறிப்பு:

        அன்புடையீர்!

                                   வாழ்க வளமுடன்! 

    • அயரா விழிப்புணர்வு பொருள் பற்றி சிந்திப்பதற்கு 18 வினாக்கள் மட்டுமில்லை, இதற்கு மேலும் இருக்கின்றன. 
    • ஒவ்வொரு வினாக்களிலும் துணை வினாக்கள் மறைந்து இருக்கலாம்/இருக்கின்றன.  (இப்பயிற்சி வினாக்களில்  மட்டுமில்லை.  ஞானிகளின் அருளுரைகளிலும், அருள் உரைநடைகளிலும், கவிகளிலும்     வரிகளுக்கு இடையே வரிகள் (hidden lines in between lines) மறைந்திருக்கலாம்;  இருக்கும். எனவே வரிகளுக்கு இடையேயும் வாசிக்க வேண்டும்(We must read in between lines)  வாசிக்கும்போதே அவற்றையும் சேர்த்துப் படித்து பொருள் தெரிந்துகொண்டு  மகிழவேண்டும். மகிழ்வது மட்டுமல்ல தெளிவிலும் தெளிவு பெறவேண்டும்.    We must be agile in understanding the theory of Gnanis’ (particularly Sri Vethathri Maharishi)  writings/findings. Please remember  the agility you have in solving the simultaneous equation in Maths in Schools and derivations. The agility may be again used here also.
    •  பயிற்சியின்போது அந்த துணை வினாக்கள் உங்கட்குள் உதிக்குமானால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழலாம்.
    • பிறர்க்கு எடுத்தும் கூறலாம். அதுவே அறிவுத் தொண்டாகும். வினைகள் தீர்வதற்குள்ள பல வழிகளில்/பயிற்சிகளில் ஒன்று நம் குருநாதர் போன்று தொண்டுகளில் அவசியமான, சிறப்பானதான தன்முனைப்பில்லா அறிவுத்தொண்டு செய்து உலகநலத்தொண்டராக  திகழ்வதாகும்.
    • திருவேதாத்திரியம் செழிப்புடன் வளர்வதற்கு ஒவ்வொரு பயிற்சியாளரின் சிந்தனைச்செல்வமும் வளரவேண்டும்; சொல்லொனா அளவிற்கு வளர்ச்சி அடைய வேண்டும்.

           வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

              

        அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

           வாழ்க அறிவுச் செல்வம்!   வளர்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 306

    வாழ்க மனித அறிவு!                                                               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள் – 306

                                                                                                                                                                            21.06.2020 –  ஞாயிறு.

    6 ஆவது சர்வதேச யோகா தினம்:  21.06.2020.

     

    வாழ்க சர்வதேச யோகா தினம்!    வளர்க சர்வதேச யோகா தினம்!
    வாழ்க சர்வதேச யோகா தினம்!     வளர்க சர்வதேச யோகா தினம்!
    வாழ்க சர்வதேச யோகா தினம்!     வளர்க சர்வதேச யோகா தினம்!

     

    வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!

     

    வினா: திருவேதாத்திரியம் உலக மக்களுக்கு என்னென்ன அளித்துக்கொண்டிருக்கிறது? 

    விடை:

    1)    உடல் நலத்திற்கு,  மனவளத்திற்கு,  மனிதனுக்கும் இறைக்கும் புனித இணைப்பினை(Yoga is bridging Jeevathma and Paramathma) ஏற்படுத்துவதற்கு மனவளக்கலை யோகாவை அளிக்கின்றது. 

    2)    உடல் நலத்திற்கு எளியமுறை உடற்பயிற்சி அளிக்கின்றது.

    3)    முதுமையைத் தள்ளிப்போடுவதற்கு காயகல்ப பயிற்சியிளை அளிக்கி்ன்றது.

    4)    மனவளத்திற்கு தவப்பயிற்சியினை அளிக்கி்ன்றது.

    5)    மனிதனின் தரத்தை உயர்த்தும் தெய்வீகப் பயிற்சியான தற்சோதனை அளிக்கின்றது.

    6)   அறிவின் இருப்பிடத்தை தெரிவிக்கின்றது.

    7)   அறிவின் பயணத்தை, தன்மாற்றத்தைத் தெரிவிக்கின்றது.

    8)   அறிவின் இயக்கத்தைத் தெரிவிக்கின்றது.

    9)    துணிந்து தெய்வம் அரூபமான வெட்டவெளி என்கின்றது.

    10)   வெட்டவெளி சக்தியில்லையானால் வேறு எந்தப்பொருள் வலிது என வினா எழுப்பியுள்ளது.

    11)   வெட்ட வெளி ஒன்றுமில்லாதது என நினைக்கப்படும் நிலையில் வெட்டவெளிக்கு தரங்களையும், திறன்களையும் கூறுகின்றது.

    12)   ‘துணிந்துரைப்போம் அறிவே தெய்வம்’ என்கின்றது.

    13)   ஆன்மீகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் இணைத்துள்ளது.

    14)   வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றது.

    15)  ஒழுக்கம் உயிரைவிட மேலானது என்பதனை வலியுறுத்தி செயல்படுத்துவதற்கு இரண்டொழுக்கப் பண்பாட்டினைத் தந்துள்ளது.

    16)  ஒழுக்கம் பழக்கமாகிட, கல்வியில் ஒரு அங்கமாக ஒழுக்கப்பழக்கறிவை சேர்த்துள்ளது.

    17)  உயர் புகழ் அளிக்கக் கூடிய தொண்டிற்கு நல்வாய்ப்பினை அளித்துள்ளது.

    18)  அறிவு தனது பூர்வீகச் சொத்தான அமைதியினை அனுபவிக்க மனவளக்கலைலைய வடிவமைத்துள்ளது.

    19)  உலக சமாதானத்திட்டங்களை அளித்துள்ளது.

    20)  சமுதாயச் சிக்கல்களை எடுத்துரைத்து, அதற்கான தீர்வுகளைக் கூறுகின்றது.

    21)  தனிமனிதன், சமுதாயம், இயற்கை ஆகிய மூன்றிணைப்பைக் கருத்தில் கொண்டு ஆலோசனைகளைக் கூறுகின்றது.

    22)  போரில்லா நல்லுலகத்திற்கு வழிகாட்டுகின்றது.

    23)  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கின்ற உண்மையை எடுத்துரைக்கின்றது.

    24)  ஒன்றே பலவாகியது என்கின்ற ஒருமை இயலைத் தந்துள்ளது.

    25)  தனிமனிதனையும் உலகையும் உய்வித்து வாழவைக்கும் ‘வாழ்க வையகம். வாழ்க வளமுடன்’ என்கின்ற தாரக மந்திரத்தை அருளியுள்ளது.

    26)  மனிதன் சிந்தனையை வளர்த்துக் கொண்டிருக்கின்றது

    27)  மனிதனின் அறிவாட்சித்தரத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றது.

       இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். திருவேதாத்திரியம், Infiniteஎல்லையற்றதைப் பற்றிய விஞ்ஞானத்தைத் தருவதால்,      திருவேதாத்திரியத்தில் என்னென்ன கூறப்பட்டிருக்கின்றன எனக் கேட்டால் பட்டியல் எல்லையற்று நீண்டு கொண்டே போகும் என்பதால்,    அதற்கு பதிலாக, ஒன்றைக் குறிப்பிட்டு ‘இது பற்றி ஏதாவது கூறப்பட்டிருக்கின்றதா’ எனக் கேட்டால்,    ‘இருக்கின்றது’ என்கின்ற பதிலைத்தரும் எடுக்க, எடுக்க, அள்ள, அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக திகழ்கின்றது திருவேதாத்திரியம். ஏனெனில் பிரபஞ்ச களத்தில் பிறந்தது திருவேதாத்திரியம். தாய்த்திரு நாட்டின் புகழைக்கூறும் ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்’ என்கின்ற திரைப்பாடல் வரியைப் போன்று என்ன வளம் இல்லை, இந்த மனவளத்தைப் பெருக்கும் மனவளக்கலை அருளியுள்ள இந்த திருவேதாத்திரியத்தில்’ என மகிழ்ச்சி பொங்கவே கூறுவர், ஐயமின்றி, இறையும்-மனமும் ஒன்றுபட்ட லட்சோப லட்ச பயனாளிகளான மனவளக்கலைஞர்கள்.

     வாழ்க திருவேதாத்திரியம்!   வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க வையகம்!              வாழ்க வளமுடன்!!


    Loading