admin

Author Archives

  • வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும்

    31-10-2014

    எண்: அ.வி.கா. 001-2-5

    ’பசி’ என்பதனை எல்லோரும் அறிவர். பசி என்பது அறிவிற்கு ஏற்படும் ஒரு துன்ப உணர்வு. அது தோன்றுமிடம் வயிறு. நான் பசியாக இருக்கிறேன்.( I am hungry) என்போம். அல்லது வயிறு பசிக்கின்றது என்போம். உடல் இயக்கத்திற்கு சக்தி தீர்ந்ததும், சக்தி தேவை என்கின்ற நிலையை அறிவிப்பது பசி என்கின்ற துன்ப உணர்வு. அந்தப் பசிக்கு ”வயிற்றுப் பசி” எனப் பெயர் வைத்துள்ளோம்.

    வயிற்றுப் பசியைப் போக்க உணவு உட்கொள்வோம். அந்த உணவு வயிற்றுக்குள் சென்று சீரணிக்கப்பட்டு உடலுக்கு வேண்டிய ரசம், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என்ற ஏழு வித தாதுக்களாகி பிறகு எந்தெந்த உடல் உறுப்புகளுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அங்கு போய்ச் சேரும். இதனை செய்வது யார்? நாமா?
    வாயிலிருக்கும் உணவை நாக்கால் உணவுக் குழாய்க்குள் தள்ளும் வரை நமது வேலை. பிறகு உணவு கூழாகி, ரசமாகி, ஏழுவித தாதுக்களாகி, பிறகு எந்தெந்த உடல் உறுப்புகளுக்கு எது எது போய்ச் சேர வேண்டுமோ அதனைச் செய்வது யார்? நாமா? இல்லையே! இது இயற்கையாக நடக்கின்றது என்போம். ஆனால் இயற்கை செய்கின்றது எனச் சொல்ல மாட்டோம். ஆனால் இதனைச் செய்வது இயற்கை. இதில் யாருக்கும் கருத்து வித்தியாசம் இருக்க முடியாது, இது கருத்து என்றும் சொல்ல முடியாது. இது உண்மைச் சம்பவம். எனவே உண்மையை ஏற்றுக் கொள்வதில் கருத்து வித்தியாசத்திற்கே இடமில்லை. இந்த விந்தையை நினைத்து மகிழலாமன்றோ!

    திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் ஐயப்படாது அகத்தினை உணர்ந்தவர்கள் இந்த இயற்கையை இறை என்றனர். இயற்கைகையை இயற்கை என்று சொல்லாமல் ஏன் இறை என்கின்றனர்? காரணப் பெயராக இறை என்கின்றனர். இயற்கை எனும் பேராற்றல் எங்கும் இருப்பதால், அதாவது இறைந்து கிடப்பதால் அதனை இறை என்று கூறுகின்றனர்.
    மீண்டும் வயிற்றுப் பசிக்கு வருவோம். உணவில் சாதாரண உணவும் உண்டு. விருந்தும் உண்டு. சாதாரண உணவும் பசியினைப் போக்கும். விருந்தும் பசியினைப் போக்கும். விருந்தில் பல வகையான உணவுகள் பரிமாறப்படும். விருந்தில் உணவு செயற்கையாக ருசியைக்கூட்டித் தயாரிக்கப்பபடும். உணவு கிடைக்கின்ற பெரும்பாலோருக்கு சாதாரண உணவுதான் கிடைக்கின்றது. இந்த சாதாரண உணவு கூடக் கிடைக்காத வறுமை நிலையும் உள்ளது இந்த சமுதாயத்தில் என்பது மிக மிக வருத்தத்திற்குரியது.

    விருந்து ஒரு சிலருக்குத்தான் எப்போதாவது கிடைக்கின்றது. சாதாரண உணவே போதுமானது. ருசி இருந்தால் தான் நாக்கு, உணவுக்குழாய்க்குள் உணவைத் தள்ளும் என்பது உண்மைதான். இருந்தாலும் பசிக்காகத்தான் உணவு. ருசிக்காக உணவு இல்லை என்பதனையும் மறந்து விடக்கூடாது, ருசியைச் செயற்கையாக அதிகமாக்கினால் சில நேரங்களில் தீமையையும் விளைவிக்கும்.

    எனவே வயிற்றுப் பசிக்கு சாதாரண உணவே போதுமானது. விருந்து சிடைப்பதாக வைத்துக்கொண்டாலும் தினந்தோறும் விருந்து உண்ண முடியாது. சலிப்பு ஏற்படும். விருந்து என்பது தேவைக்கு அதிகமான உணவுதானே? தினந்தோறும் விருந்து உண்பது வயிற்றுக்குத் தீங்கையும் விளைவிக்கும். உணவு உண்பதில் ”அளவும்” (limit) முறையும் (method) அவசியம். இன்பம் துய்த்தலில் அளவும் மீறி, முறையும் மாறினால் இன்பமே துன்பமாக மாறும் என்கின்ற இயற்கை நியதியைக் கவனிக்க வேண்டும்.
    இன்று காலை விருந்தில் வயிற்றுப் பசியைப் பற்றி அறிந்து கொண்டோம். தலைப்பு வயிற்றுப் பசி என இருந்தாலும், மூன்று முக்கியமான உண்மைகளைத் தெரிந்து கொண்டோம்.

    1. உணவு சீரணமாகி உடலுக்கு வேண்டிய சக்தியாக மாற்றுவது இயற்கை அல்லது மறுபெயரைக்கொண்ட இறை என்றும்,
    2. உணவு உட்கொள்வதில் அளவும் முறையும் கடைபிடிக்க வேண்டும் என்றும்,
    3. இல்லையெனில் இயற்கையின் நீதி மீறப்பட்டு இன்பமே துன்பமாக மாறிவிடும் என்பதனை அறிந்து கொண்டோம்.

    நானை விருந்திற்குக் கூடுவோம். அப்போது அறிவுப்பசியைப் பற்றிச் சிந்திப்போம்.. வாழ்க வளமுடன்.

    ………………… தொடரும் நாளை

    Loading

  • மனிதத் தேர்வு

    30-10-2014

    உயிரினப் பரிணாமத்தில் விலங்கினமாக வந்த உயிர்தான் பின்னர் சடுதி மாற்றத்தால் மனித உயிராக வந்துள்ளது. ஆகவே விலங்கினத்தின் பண்பாகிய பிறர் வளம் பறித்தல் என்கின்ற குணமும் மனித உயிரில் சேர்ந்து வந்துவிட்டது. மனிதன் என்றால் அவனிடம் அன்பும் கருணையும் இருக்க வேண்டும். இதுதான் மனிதம் எனப்படுகின்றது. மனிதம் இருந்தால்தான் அவன் மனிதன்.
    ஆகவே ஆன்மா தன் பரிணாமச் சுழற்சியை முடித்துக் கொள்ள தன்னை தூய்மைப் படுத்திக் கொண்டு பேரான்மாவாகிய இறைநிலையுடன் இணைந்துவிட வேண்டும். இதற்காகவே தான் மனிதப் பிறவி. ஆன்மா பிறவி எடுத்த பிறகு மனிதனின் வாழ்க்கை தொடங்க ஆரம்பிக்கின்றது. மனித வாழ்க்கை என்பது இயற்கை மனிதனைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி எனக்கொள்ளலாம்.
    கல்வித் தேர்வில், பூச்சியத்திலிருந்து நூறு மதிப்பெண்கள் வரை எடுக்கலாம். எல்லோராலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க முடிவதில்லை. ஆகவே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தது நாற்பது மதிப்பெண்களாவது எடுக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் உள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறாதவர் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அந்தத் தேர்விலும் தேர்ச்சி பெறாதவர் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதனை யாவரும் அறிவர். தேர்ச்சி பெற்றால் தான் அந்த கல்வித் தகுதியை வைத்து வேலை கிடைத்து வாழ்க்கைக்கு வேண்டிய பொருளை ஈட்டி நிறைவாக வாழமுடியும்.
    அதேபோன்றுதான் இயற்கை நடத்துகின்ற வாழ்க்கை என்கின்ற மனிதத் தேர்வில், அதாவது மனிதம் வெளிப்படுத்துவதில், தேர்ச்சி பெற வேண்டும். அதுவும் நூறு மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெறுவது விரும்பத்தக்கதுதான். நடைமுறையில் அப்படி இல்லை. ஒரு கோடியில் ஒருவர்தான் நூறு மதிப்பெண்கள் எடுத்து மனிதத் தேர்வில் தேர்ச்சி பெறமுடிகின்றது. பெரும்பாலோர் குறைந்தது நாற்பது மதிப்பெண்கள் கூட எடுத்து தேர்ச்சி பெற முடிவதில்லை. தேர்ச்சிக்கான குறைந்த பட்ச மதிப்பெண்களுக்கும்(நாற்பது விழுக்காடு) கீழ் பூச்சியத்திலிருந்து முப்பத்தொன்பது வரை எடுக்கும் நிலைதான் உள்ளது.
    இந்த மனிதத் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்தவர் தான் அறிஞர் அல்லது ஞானி. எப்படி கல்வித் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்தவருக்கு அவருக்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களைவிட நல்ல வேலை கிடைத்து பொருளை செழிப்பாக ஈட்டி வாழ முடிகின்றதோ வாழ்க்கையில் அதுபோல் kspjமனிதத் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்த ஞானியால் இன்பத்திற்கெல்லாம் பெரிதான பேரின்பம், பெற்று வாழமுடிகின்றது.
    மனிதத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றவர்கள் அவரவர் மதிப்பெண்களுக்குத் தக்கவாறு இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து தான் நுகரலாம். நூறு மதிப்பெண்கள் எடுத்தவரைப் போன்று சலிப்பில்லா, துன்பமில்லாப் பேரின்பத்தைப் பெறமுடியாது.
    மனிதத்தேர்வில் தேர்ச்சியே பெறாதவர்கள் இன்னும் மனித உடலில் விலங்கினமாகவே வாழ்பவர்கள். அவர்கள் துன்பத்தையே அனுபவிக்க வேண்டும். கல்வித் தேர்விலாவது மீண்டும் ஒரு முறையோ அல்லது இரண்டு அல்லது மூன்றாவது முறையோத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது சாத்தியமாகின்றது. ஆனால் மனிதத் தேர்வில் மட்டும் மீண்டும் மீண்டும் பல்லாயிரம் முறை (பிறவி) எடுத்தாலும் தேர்ச்சி பெற முடிவதில்லை. இந்த அவல நிலைதான் இன்று மனிகுலத்;தின் அமைதியின்மைக்குக் காரணம்.
    இந்த நிலையை மாற்றியமைக்க, மனிதன் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் தேவையிருந்தது இயற்கைக்கு. இப்போது இயற்கை கருணையோடு அளித்ததுதான் வேதாத்திரியம்.
    வேதாத்திரியம்
    1) மனிதத்தேர்வில் முதலில் மனிதனை மனிதனாக்கி, அதாவது மனிதத் தேர்வில் 40-99 மதிப்பெண்கள் எடுக்க வைப்பது.
    2) பிறகு improvement exam எழுதி அதிக மதிப்பெண்கள் எடுப்பதுபோல் அந்த மனிதனை இந்தப் பிறவியிலேயே நூறு மதிப்பெண்கள் எடுக்கச் செய்து அறிவை அறிந்த அறிஞராக்குவது.
    ஆகிய இரண்டு பணிகளைச் செய்து மனிதசமுதாய வாழ்க்கையில் புரையோடிக்கிடக்கின்ற மூடப்பழக்கங்களையும் மற்றும் தேவையற்றவைகளை அடியோடு நீக்கி புதிதாக நலம் தரும் அறிவு பூர்வமானப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்தி எந்நிலையிலும் ஒழுக்க வாழ்வு மலர்வதற்கு (revamp), இயற்கை கொண்டுவந்த திட்டம்தான் வேதாத்திரியம் என்கின்ற பெயரால் சமுதாயத்திற்கு கிடைத்துள்ளது. எனவே இந்த வேதாத்திரியத்தை வாழ்த்துவோம். வணங்குவோம்.

    வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்

     வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    Loading

  • சிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி

    சி.அ.சு.ப.எண்- 05-01

    இப்பயிற்சியின் நோக்கம் அவரவர்களே தங்களை சோதித்துக் கொள்ளுதலாகும். இதற்காக ஒரு நாட்குறிப்பை (diary) வைத்துக் கொள்ளுங்கள். அதில் தினந் தோறும், காலையிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நீங்கள் அறிஞர்களின் வாயிலாகத் தெரிந்து கொண்டது, மற்றும் நீங்களாக சிந்தித்தது ஆகியவைகளைக் குறித்து வாருங்கள். உலாவச்செல்லும்போது கூட நாட்குறிப்பை எடுத்துச் செல்லுங்கள். சில நேரங்களில் அரிய கருத்துக்கள் உதிக்கும். அவற்றைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் அக்கருத்துக்கள் மறந்து போகலாம். மீண்டும் நினைவிற்கு வராமல் போகும்.
    *****

    Loading