இன்றைய விருந்து

  • FFC – 276 செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும் – 11/11

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    lotus

    கருமையம்
    (பாகம்-6)

    FFC – 276
    அ.வி. 276

    17.12.2017 – ஞாயிறு

    [rev_slider home-slider-1]

    வாழ்க வளமுடன்!

    சென்ற அறிவிற்கு விருந்தில் அழகணி சித்தரில் விளக்கப்பதிவு வென்ற அனுபவத்தை பாடலின் வழியாக அறிந்துகொண்டோம். இன்றைய சிந்தனையில் அப்பாடலுக்கான பொருளை மகரிஷி அவர்கள் விளக்கியவாறு அறிந்து கொள்வோம்.

    காட்டானை மேலேறிக் கடைதெருவிலே போகையிலே
    நாட்டார் நமை மரித்து நகைபுரியப் பார்ப்பரன்றோ
    நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
    காட்டானை மேலேறி, என் கண்ணம்மா, கண் குளிர காண்பேனோ?

                                                                                               . .  . அழகணிசித்தர்
    ‘கண்ணம்மா’ என்பதனை அறிவு என்கிறார் மகரிஷி அவர்கள்.
    ‘காட்டானை’ என்பதற்கு ‘காட்டுயானை’ என்பது பொருளல்ல. ‘காட்டானை’ என்கின்ற சொல் ‘காட்டமாட்டான்’ என்கின்ற சொல்லில் இருந்து வந்ததாகக் கூறுகிறார். அதாவது இறைவன் இருக்கிறான். மற்றவர்கள் பார்க்கும் அளவுக்கு அவன் இருக்கவில்லை என்கிறார். மேலும் விளக்குகிறார். அதாவது புலன்களாலே பார்க்கும் அளவிற்கு அவன் இருக்கவில்லை என்று பொருள்.
    காட்டான் = அரூபியாக உள்ள அறிவு.
    ‘ஐ’ மேலேறி = ஐந்து புலன் உணர்ச்ச்சிகளையும் தாண்டி,
    கடைத்தெருவில் போகையிலே = கெட்டிப்பொருள், நீர், நெருப்பு, காற்று. விண் ஆகிய ஐம்பூதங்களிலிருந்து எழுச்சி பெறக்கூடிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் அல்லது உருவமாக ஐந்து நிகழ்ச்சிகளையும் தாண்டிக் கடைசியிலே உள்ளது எது என வினவுகிறார். பிரம்மம்; சுத்த வெளி என்கிறார், அதுதான் கடைசி நிலை. கடைநிலை என்றால் கடைசி நிலை என்று பொருள்.
    அந்தக் காலத்தில் கிராமங்களிலே மற்ற எல்லாத் தெருக்களையும் தாண்டி கடைசியிலே ஒரு தெரு அமைப்பார்களாம். அவரவர்களுக்கு வேண்டிய பொருளை வாங்கிக் கொள்வதற்கும், தேவையில்லாத பொருட்களை விற்றுக்கொள்வதற்காகவும் கிராமங்களிலே ஒரு தெரு அமைப்பார்களாம். அது கடைசியிலே இருப்பதினால் கடைத் தெரு என்று பெயர்.

    பிரம்மத்தினையும் ‘கடை’ என்று சொல்வது அறிஞர்களின் வழக்கு என்கிறார் மகரிஷி அவர்கள். இங்கே இராமலிங்கர் கூறியதனையும் நினைவு கூற விரும்பி, ‘கடைவிரித்தேன்; கொள்வாரில்லை.’ என்று சொன்னதை நமக்கு நினைவு படுத்துகிறார் மகரிஷி அவர்கள்.

    அந்தக் ‘கடை’ என்று சொல்லக் கூடிய மறைபொருள் என்பது ‘பிரம்மம்’. பிரம்மத்தின் நிலையை நல்ல முறையிலே தெளிவாக விரித்துக் கூறிவிட்டேன்; எடுத்துக் காட்டிவிட்டேன்; ஆனால் அதை விளங்கிக் கொண்டு பின்பற்ற யாருமே வரவில்லை!’ என்று வள்ளலார் ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்கின்ற வள்ளாலாரின் வரிகள் சொல்வதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

    இறைஉணர் ஆன்மீகப்பயிற்சி என்பது என்ன?

    பிரம்மத்தை நோக்கிய வாழ்க்கைப் பயணம். அறிவு தனது முழுமையை நோக்கிய பயணம். ஐந்தறிவு வரை உயிரினங்கள் அனுபவித்தது என்ன? காந்த தன்மாற்றங்களான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை ஐந்து புலன்களின் வாயிலாக அனுபவித்ததேயாகும். அப்படியானால் ஆறாம் அறிவாக மனிதன் வந்தபோது அவன் அனுபவிக்க வேண்டியது என்ன? வாழ்வில் ஐந்து புலன்களின் வழியாக அனுபவிப்பதோடு நின்றுவிடாமல், அதனையும் தாண்டி,
    பிரத்யேகமாக புலன் ஏதும் உருவாகாமல், பேரறிவிலிருந்து வந்துள்ள மனிதஅறிவு
    அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய நிகழ்ச்சிகள் என்பது என்ன,
    அந்நிகழ்ச்சிகள் எவ்வாறு உண்டாகின்றன,
    அந்நிகழ்ச்சிகளை உணர்கின்ற நான் யார்
    என்பதற்கான விளக்கத்தினை அறியவேண்டும்.

    அவ்விளக்கங்களை அறியும்போது முடிவாக இப்பிரபஞ்சத்தின் மூலம் எது என்பதையும், அதுவே பிரம்மம்-கடவுள் என்று கூறப்படுகின்றது என்பதும் அறியப்படும்.

    இந்தக் கருத்தினைத்தான் திருவள்ளுவர்,

    சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்ற ஐந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு” . . . குறள் 27

    என்கின்ற குறளின் வாயிலாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துரைத்துள்ளார். அதாவது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியன உருவான வகையை தெரிந்துகொள்ள வேண்டும். ஐந்தின் வகை தெரியும்போது பிரம்மமே தான் எல்லாமாக ஆகியுள்ளது என்பது அறியப்படும். அதாவது இறைஉணர்வினைப் பெறமுடியும். இதற்காகப் பிறந்தவன்தான் மனிதன் என்கிறார் திருவள்ளுவர். அப்படி இல்லாவிடில் உயிரினப்பரிணாமத்தில் வேறு எதற்காக மனித இனம் தோன்றிற்று?
    எனவே வாழ்க்கைப் பயணம் என்பதே பிரம்மத்தை நோக்கிய பயணமேதான்! இந்த உண்மையினை அறியாமல்தான் மனித குலம் உள்ளது. இதனை இருபதாம் நூற்றாண்டிலிருந்து திருவேதாத்திரியம் எடுத்துக் கூறி வருகின்றது.
    எனவே
    1) ‘காட்டான் ‘ஐ’ மேலேறி கடைத்தெருவில் போகையிலே’ என்பது அந்த பிரம்மத்தை நாடி அங்கேயே போய் அடக்கம் பெற்று இந்தத் தன்முனைப்பை நீக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு இறைநிலைக்குப் போய் நிலைத்து வரவேண்டும் என்று போகும்போது;
    2) நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பரன்ரோ’ என்றால் இந்த உலகிலே வாழ்ந்து பதிவுகளைக் கொண்டு, அந்த எண்ணங்களெல்லாம், அந்தப் பதிவுகளெல்லாம் இருக்கின்றனவே, அவைகளெல்லாம், ‘ஓகோ? நீ எங்களையெல்லாம் விட்டு தாண்டிப் போய்விட முடியுமா?’ என்று எள்ளி நகையாடுவது போலல்லாவா இருக்கின்றது என பாடலில் அழுகணிச்சித்தர் தெரிவிக்கிறார் என்கிறார் மகரிஷி அவர்கள். அழகணிச்சித்தரின் இந்த அனுபவத்தை இயற்கை நமக்கு வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாகத் தெரிவித்து சிந்திக்க வைப்பது என்ன?

    அஞ்ஞானிக்கு மட்டும் பழக்கப்பதிவுகள் உண்டு என்பதல்ல.

    அஞ்ஞானிக்கு மட்டும்தான் பழக்கப்பதிவுகள் உண்டு என்பதல்ல. ஞானிக்கும் பழக்கப்பதிவுகள் உண்டு. எனவே ஞானி பழக்கப்பதிவை வென்று விளக்கப்பதிவில் வாழ்வதுபோல், ஒவ்வொரு அஞ்ஞானியும் பழக்கப்பதிவை வென்று விளக்கத்தில் வாழவேண்டும். ‘Every Saint has a past and every sinner has a future.’ இங்கே மற்றொன்றை அறிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.

    முந்தைய பழக்கப்பதிவுகள் ஒன்று சேர்ந்து ‘ஓகோ? நீ எங்களையெல்லாம் விட்டு தாண்டிப் போய்விட முடியுமா?’ என்று எள்ளி நகையாடுவது போன்று அழகணிச்சித்தருக்கு இருந்ததாக அவரே பாடலின் வாயிலாகத் தெரிவிக்கிறார். இதுபோன்று அவருக்கு மட்டுமா இத்தகைய அனுபவம்/உணர்வு ஏற்படும்? திருந்த வேண்டும் என்கின்ற ஆழ்மன எண்ணத்தோடு ஆன்மீகப் பயிற்சியினைச் செய்கின்றவருக்கும் ஏற்படலாம்.

    விளக்கத்தை விட முடியவில்லை. ஏன்?

    ஏனெனில் பரிணாமத்தில் விளக்கம் பெறுகின்ற நிலைக்கு அறிவு வரும்போதுதான், வாழ்க்கையைப் பற்றிய புரிதல் விளக்கமாக கிடைக்க ஆரம்பிக்கும். அறிவு என்பதே அறிவதற்காகத்தானே உள்ளது. ஆகவே அறிகின்ற நிலைக்கு வந்த அறிவிற்கு விளக்கத்தைவிட்டு விட மனமுமில்லை; அதே நேரத்தில் இதுவரையுள்ள பழக்கப்பதிவுகளின் ஆதிக்கமோ மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. வள்ளலார் ‘பெருநெறி பிடித்தொழுக வேண்டும் என்றும் மதமான(செருக்கு, ஆணவம்) பேய் பிடிக்காமல் இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுவதை நினைவு கொள்வோம்.
    எந்த தரப்பினராக இருந்தாலும் தீயபழக்கப்பதிவுகளால் துன்பமே என்பதனை கவனத்தில் கொண்டு பழக்கப்பதிவின் போராட்டத்தில் வெற்றி பெற்றிடவேண்டும். அதனால்தான் ‘ஒழுக்கப்பழக்க அறிவு’, எனும் பாடத்தை கல்வியில் சேர்க்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
    இதனையே சுவாமி விவேகானந்தர் ‘Education is the manifestation of perfection already present in man’ என்று ஏற்கனவே கூறியிருக்கிறார்.

    Education-Swami Vevekananda

    3. ‘நாட்டார் நமை மறித்து நகைபுரியப் பார்த்தாலும்’ என்பது அப்படியெல்லாம் எத்தனையோ கோடி எண்ணங்கள்(பழக்கப்பதிவுகள்) குறுக்கிட்டபோதிலும் மன உறுதியோடு, பயிற்சியினாலே,

    4. ‘காட்டானை மேலேறிக் கண்குளிரப்பாரேனோ’ என்றால் ஐம்புலன் அனுபவப்பதிவுகளையும் தாண்டி மேல் ஏறி கடைசியிலே உள்ள பிரம்மத்தை, அந்த அரூபமான நிலையிலே உள்ள பிரம்மத்தைக் கண்குளிர, நான் அறிவு பூர்வமாக, மனநிறைவு பெறுமளவிற்குப் பார்க்க மாட்டேனோ, உணர மாட்டேனோ’ என்று தனது உறுதியினை சமுதாயத்திற்குத் தெரிவிக்கிறார் அழகணிச்சித்தர் என்பது செய்யுளின் சாரம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    இதுவரை அழகணிச்சித்தரின் பழக்கப்பதிவிற்கும் விளக்கப்பதிவிற்கும் ஏற்பட்ட போராட்ட அனுபவத்தை அழகணிச்சித்தர் அருளிய பாடலிருந்து, மகரிஷி அவர்கள் கூற அறிந்து கொண்டோம்.

    அஞ்ஞானிக்குமட்டுமே பழக்கப்பதிவுகள் உண்டு என்பதில்லை; ஞானிக்கும் பழக்கப்பதிவு இருந்து, அதனை விளக்கப்பதிவால் வென்றுதான் ஞானியாகிறார் என்று அறிந்து கொண்டோம். அறிவிற்கு முழுமையான தெளிவு ஏற்பட்டதுமே(ENLIGHTENMENT) பழக்கப்பதிவுகளாகிய தீயவினைப்பதிவுகள் செயலிழந்துவிடும். முழுமையாக வினைப்பதிவுகள் செயலிழந்த பிறகுதான் தெளிவு/இறை உணர்வு ஏற்படும் என்பதில்லை. பெற்ற தெளிவின் அடிப்படையில் இறை உணர்வு என்பது எதிர்பார்க்காத சமயங்களிலும் நடைபெறும். எதிர்பார்த்து நடப்பதன்று இறை உணர்வு. ஆனால் இறைஉணர்வு ஏற்பட்டதும் அதுவரை கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து வந்த வினைகள் முழுவதுமாக செயலிழந்து விடுகின்றன.

    பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே மனிதன் போராடிக் கொண்டிருக்கிறான்’  (click here for FFC-188, Dt. 11-05-2016) என்கிறார் மகரிஷி அவர்கள்.

    போராட்டம் என்பது என்ன?– கயிறு இழுக்கும் போட்டி (tug of war)

    ஒழுக்கமின்மை–பழக்கத்திற்கும், ஒழுக்கவாழ்வு—விளக்கத்திற்கும்(between habit and wisdom) இடையே கயிறு இழுக்கும் போட்டி போல் (tug of war) போராட்டம் நடைபெறுகின்றது. எண்ணிலடங்கா தலைமுறைகளில் ஏற்பட்டுள்ள ஆன்மாவின் பழக்கப்பதிவுகளின் அழுத்தத்தை, இப்பிறவிக்கு கொண்டு வந்துள்ள மனிதன், இப்பிறவியில் விளக்கம் கிடைத்த பிறகு, ‘ஒழுக்க வாழ்வு வாழவேண்டும்’ என்கின்ற முடிவு எடுத்தாலும், விளக்கப்பதிவுகளின் அழுத்தம் மிக மிகக் குறைவாக இருப்பதால் பழக்கப்பதிவை வெற்றி கொள்வதில் அதிக சிரமம் உள்ளதாக இருக்கின்றது. இதனைத்தான் போராட்டம் என்கின்றனர் அறிஞர்கள். இதனை கயிறு இழுக்கும் போட்டியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஏற்கனவே இணையதளத்தில் இது பற்றிய விளங்கள் தரப்பட்டுள்ளன.

    அப்படியானால், விளக்கப்பதிவின் அழுத்தம் அதிகரிக்க எத்தனை தலைமுறை காத்திருக்க வேண்டுமோ என ஐயமும், அச்சமும் எழலாம். இப்பிறவியிலே மட்டும், பெற்ற விளக்கப்பதிவுகளைக் கொண்டே, பழக்கப்பதிவை இப்பிறவியிலேயே வெற்றிக் கொள்வதற்காக இயற்கை கருணையோடு கொடுத்ததுதான் கருத்தியல், செய்முறைப் பாடங்கள் அடங்கிய திருவேதாத்திரியமாகும். எனவே கருவில் திருஉடையவர்களல்லாதவர்கள்கூட இப்பிறவியிலேயே திரு எய்த முடியும் என்கின்ற உறுதியினை அருளுகிறார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    நிறைவாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது யாதெனில், சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா ஆகிய மூன்று வகை பதிவுகளும் கருமையத்தில் உள்ளன. இப்பதிவுகளின் தன்மைக்கேற்பவே மனிதன் இன்பமோ, துன்பமோ அனுபவிக்கிறான். கருமையத்தை தெய்வீக நீதி மன்றம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    முடிவாக குருவின் சேர்க்கை எதற்காக என்று மகரிஷி அவர்கள் ஒரு கவியின் வாயிலாக அறிவித்துள்ளதை நினைவுபடுத்திக்கொள்வோம்.

    FFC-62-PNG- எப்பபொருளை-4-3-15-6-00am

    ஆகவே இப்பிறவியில் துன்பத்திலிருந்து மீளவும், கருத்தொடராக வரும் வம்சாவளிக்கும் நல்வினைப்பதிவுகளையே அளிக்கவும், அதற்கும் மேலாகவும் பூர்விகச் சொத்தான அமைதியினை அனுபவிக்க, இயல்பூக்க நியதியை பயன்படுத்தியும், குருவை மதித்து ஒழுகியும் வாழ்ந்து பிறவிப்பயனை இப்பிறவியிலேயே அடைவோம். அதற்கு இறை அருளும், குருவின் அருளும் துணை நிற்குமாக!!!

    guru_paadham

    வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளர்க அறிவுச் செல்வம்

  • FFC – 275 செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும் – 10/?

              வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

     lotus

    செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும் – 10/?

     FFC – 275 

    அ.வி. 275   

                                                                 13.12.2017- புதன்

    கருமையம்

    (பாகம்-5)

    [rev_slider home-slider-1]

     வாழ்க வளமுடன்!

                   சென்ற அறிவிற்கு விருந்தில் கவிகளின் சிறப்பை அறிந்து, கருமையத் தூய்மை பற்றி மகரிஷி அவர்கள் அருளிய பாடலின் உட்பொருளை விரிவாக அறிந்து கொள்ளத் தொடங்கி, கருமையத்தூய்மையைக் கெடுக்கும் செயல்களான

    1. கறை படுத்தும் எண்ணம்
    2. நிறைவு பெறாமல் இருக்கும் ஆசைகளின் கூட்டம்.
    3. நெஞ்சம் மனம் பேச்சு இடை பிணக்காகும் பொய்கள்.
    4. மறைமுகமாய் நேர்முகமாய் பிறர்உளம் வருத்தல் ஆகிய நான்கு காரணிகளை ஆராய்ந்தோம்.

    இன்று

    5. மற்ற உயிர் சுதந்திரமும் வாழ்வின் வளம் பறித்தல்,

    6. நிறைவழிக்கும் பொறாமை, சினம், வஞ்சம் காத்தல்,

    7. மேலும் உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு,

    ஆகிய மூன்று காரணிகளையும் ஆராய்வோம்.

                              5. மற்ற உயிரின் சுதந்திரமும், வாழ்வின் வளமும் பறித்தல்

    விலங்கினப்பண்பு செயலற்றுவிட வேண்டும்:

             விலங்கினத்திலிருந்து இயற்கை/இறை, தன்னை (இறையை) உணர்ந்து கொள்வதற்காக மனித இனமாக, தன்மாற்றம் அடைந்துள்ளது. இறையை உணரவேண்டுமெனில் கருமையத்தில் உள்ள விலங்கினப்பண்பு மறைய வேண்டும். விலங்கினப் பண்பு மறையவில்லை எனில் மனிதனின் கருமையம் தூய்மை அடையவில்லை என்றுதானே பொருள்? எந்த ஒரு பதிவும் கருமையத்தை தூய்மை செய்கின்றது என்றால் அது இறைஉணர்வை ஏற்படுத்துவதாகவும், இறைஉணர்வை தாமதப்படுத்தாமலும், இறை உணர்வை துரிதப்படுத்துவதாகவும் அல்லவா இருக்க வேண்டும்? இறை உணர்வு பெறுவதனை தாமதப்படுத்துவதாகவும் அல்லது தடுப்பதாகவும் இருந்தால் அது கருமையத்தூய்மையைக் கெடுக்கின்றது என்று தானே பொருள் கொள்ள வேண்டும்?

    6.  நிறைவழிக்கும் பொறாமை, சினம், வஞ்சம் காத்தல்

    நிறைமனம் அயரா விழிப்புணர்வோடு இருக்க. . . :

            நிறை பொருளே மனமாக இருப்பதால்கருமையத் தூய்மை அடைந்து வர வர குறுகிய நிலையில் சுருங்கி இருந்த மனம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவினை எய்தி வரும். இறைஉணர்வின் அடையாளமாக மனம் நிறைபொருளாகி நிறைமனமாக ஆக வேண்டும். ‘தான்’, ‘தனது’ நீங்கிய மனம்தான் நிறைமனமாக இருக்க முடியும். அப்போதுதான் நிறைமனம் விழிப்போடு இருந்து கொண்டு எந்த வகையிலும் துன்பம் தரக்கூடிய செயல்கள் புரியாமல் இருக்கும். அவ்வாறிருக்கையில், சினம், வஞ்சம் ஆகியவை ‘தான்’, ‘தனது’ என்கின்ற இருதம்பதிகளுக்கு பிறந்த அவலக்குழந்தைகள் என்கின்றபோது சினமும், வஞ்சமும் நிறைவை அளிக்கக் கூடிய கருமையத்தூய்மையை அல்லவா கெடுக்கும்? நிறை பொருளே மனமாகியும், மனதை நிறைபொருளால் நிரப்பமுடியவில்லை. இதுவும் விந்தையிலும் விந்தையாகவே உள்ளது.

    7. மேலும் நெறி பிறழ்ந்த உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு 

    இன்பதுன்ப அறிவியலின் சாம்யம்:

        மகரிஷி அவர்களை பின்னாளில் மகானாக்கிய நான்கு மகோன்னத வினாக்களில் ஒன்று ‘இன்பதுன்பம் ஏன் வருகின்றது’ என்பதுவும் ஒன்று. இன்பதுன்பத்தைப்பற்றி அறிவியல் ரீதியாக விளக்கம் கொடுக்கமுடிந்ததால்தான் ‘ஆன்மிகத்திற்கு ஆசை கூடாது’ என்று இருந்து வந்த தவறான கருத்தில் தெளிவினை ஏற்படுத்துமாறு இச்சையைப்பற்றி 1957 ஆம் ஆண்டே எண்பது வரிகளைக் கொண்ட பாடல் இயற்றமுடிந்தது. ஞானக்களஞ்சியம்- கவி எண் 493 ல் கூறப்பட்டுள்ளதுபடி இறை மகரிஷி அவர்களின் உள்ளத்தில் இச்சையைப் பற்றிய உண்மை-கருத்தாய் மாறி உருண்டுருண்டு வார்த்தைகளாய்க் கவிகளாகி, எண்பது வரிகளில் பாடலை இயற்ற வைத்துள்ளது. இன்பமே துன்பமாக மாறுகின்றது என்கின்ற உண்மையைக் கண்டுபிடித்துள்ளார் மகரிஷி அவர்கள்.

       ‘இன்பம் புறப்பொருட்களில் இல்லை’ என்கின்றன வேதங்கள். ஆனால் அதனை அறிவியல் ரீதியாகக் கூறவில்லை. ஏனெனில் அறிவியல் வளராத காலத்தில் எழுதப்பட்டன வேதங்கள். அறிவியல் வளர்ந்த காலத்தில் அவதரித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் இன்பதுன்ப நிகழ்வை அறிவியலாக்கியுள்ளார். இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்று அறிவியல் ரீதியாக எடுத்துரைக்கின்றார் மகரிஷி அவர்கள்.

     அந்த அறிவியல் கண்டுபிடிப்பில் உருவானதுதான் ‘அளவும், முறையும்-Limit and Method’ என்கின்ற சாம்யம்(Formula). இந்த கண்டுபிடிப்பினைக் கருத்தில் கொண்டுதான் உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் ஆகிய ஐந்தும் அளவோடும், முறையோடும், காலத்தோடும் இருக்க வேண்டும் என்கிறார்.   அளவும், முறையும், காலமும் நெறி தவறினால் அங்கே ஒழுக்கம் கெடும். ஒழுக்கம் கெடும் செயல்கள் கருமையத்தூய்மைக்கு பங்கம் விளைவிக்கும். ஆகவே நெறி பிறழ்ந்த உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு ஆகியவை கருமையத்தூய்மைக் கெடுக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

     கருத்தொடு சீர்செய்வோம்:

         கருமையத்தூய்மை என்கின்ற பாடலிருந்து கருமையத் தூய்மையைக் கெடுக்கும் செயல்களை அறிந்து கொண்டோம். பாடலில் கருமையத்தைக் களங்கப்படுத்தி விடும் செயல்களை எடுத்துரைத்ததோடு, அவற்றை எவ்வாறு ‘கருத்தொடு சீர் செய்வது’ என்றும் கடைசி வரியில் கூறுகிறார் மகரிஷி அவர்கள். சீர் செய்வது என்று கூறியிருக்கலாம், ஆனால் ‘கருத்தொடு சீர்செய்வோம்’ என்கிறார். ‘கருத்தொடு’ என்றால் என்ன பொருள்? கருத்தொடு என்றால் ஒரு பொருள் பற்றி முறைபடுத்தப்பட்ட சிந்தனை என்று பொருள். மேலும் மிகவும் கவனத்துடன்(serious attention) என்றும் பொருள். ‘சீர்செய்வோம்’ என்கிறார். ‘சீர்’ என்றால் என்ன பொருள் என்பதனையும் அறிந்து கொண்டு அவ்வாறே கருமையத்தூய்மை செய்வதில் அக்கறை கொள்ள வேண்டும். ‘சீர்’ என்றால் இயல்பான தன்மை, ஒழுங்கு(regularity, orderliness) என்று பொருள். இயல்பான தன்மை, ஒழுங்கு என்றால் என்ன என்று அறிந்து கொண்டு நம்மை சீர் செய்து கொள்ள வேண்டும். இறையே தன்மாற்றம் அடைந்து மனிதனாக வந்துள்ளது.   அவ்வாறிருக்க மனிதனின் இயல்பான தன்மை என்பது அமைதி, தெய்வீகம். ஒழுங்கு என்பதுதான். ஆதிநிலையில் பேரறிவாக இருந்தது உயிரற்ற சடப்பொருட்களில் ஒழுங்காற்றலாக திகழ்ந்தது.ஒழுங்காற்றலாய் திகழ்ந்த பேரறிவேதான் மனிதனிடம் ஆறாம் அறிவாகத் திகழ்கின்றது. எனவே மனிதன் தன்னை சீர் செய்து கொள்ள வேண்டும் என்றால் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று பொருள்.

    இறையைத் துன்படுத்துவற்கு ஒப்பான செயல்:

      ‘கல்லார் கற்றார் செயல் விளைவாய் காணும் இன்பதுன்பமவன்’ என்று மகரிஷி அவர்கள் கூறுவது போன்று நமது அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகிய மூன்று அறிவின் ஏழ்மைகளால் இறையேதான் துன்பப்படுகின்றது.  அத்வைதியாக வேண்டுமென்றாலும் கூட  இறைமீது காதல் கொள்ள வேண்டும்.  பக்திமான்கள் தெய்வத்தின் மீது காதல் கொள்வதில்லையா? 

        அதனை இங்கே அத்வைத பயிற்சியில் கடைபிடிக்க வேண்டும் என்கின்றபோது, மனிதனின் தவறான செயல்களால் தன்னையும், பிறரையும் துன்பப்படுத்துவது என்பது,  தன்னுள்ளும், பிறருள்ளும் வீற்றிருக்கின்ற உத்தமனை(இறையை)  அல்லவா துன்பப்பட வைப்பதற்கு ஒப்பாகிவிடும்?  இறைவன் மீது அன்பு உள்ளவர்கள் அச்செயலை செய்யமாட்டார்கள் அல்லவா?

     அறிவின் ஏழ்மையை சரிசெய்து கொண்டு அறிவுச் செல்வத்தை வளர்த்துக் கொண்டு நாமும் பயன் பெற்று சமுதாயமும் பயன்பெற வேண்டும் என்பதே மனவளக்கலையை அமைத்துக்கொடுத்த இயற்கையின்/இறை நோக்கம்.

       கருமையத்தூய்மை என்கின்ற தலைப்பில் உள்ள பாடல் எட்டு வரிகள்தான். ஆனால் அதன் உட்பொருள் எத்தனை வரிகளாக பரிணமித்துள்ளது?  உட்பொருள்  எவ்வாறு இத்தனை வரிகளானது? காரணம் கவிகள் அருளாளர்களின் அனுபவ-உண்மைக் கண்டுபிடிப்பின் சுருக்கிய வடிவம்(CONDENSED FORM). எனவே ‘கவிகளின் வரிக்கு வரி பொருள் காண்பதைத் தவிர்த்து வரிகளுக்கு இடையேயும்(in between lines) உள்ள பொருளையும் அறிந்து கொள்வதால் எட்டு வரிகள் கொண்ட கவியின் பொருள் அதனைவிட பன்மடங்கு வரிகளைக் கொண்டதாக அமைந்துவிட்டது. அறிஞர்களின் அமுத மொழிகள்(golden sayings) அபயம் தரக்கூடியவை என்கிறார் ஓர் அறிஞர்.  அமுத மொழிகள் என்றால் ஓரிரு வரிகள் தான் இருக்க வேண்டும் என்பது  கிடையாது.  அறிஞர்கள் தான் கண்டுபிடித்ததை சமுதாய நலன் கருதி அறிவிப்பது (மொழிவது) அனைத்துமே அமுத மொழிகள் தான்.  அப்படிக் கருதும்போது கவிகளும் அமுத மொழிகள்தான்.

     ஐயம் எழலாம்!  

                    பல்லாயிரம் பிறவிகளில் ஏற்ற பழிச்சுமைகளை இந்த ஒரு பிறவியிலேயே மாற்றி தெய்வநிலையை உணர்ந்து கொள்ள முடியுமா என்கின்ற ஐயம் எழலாம்.  இந்த ஐயம் கொண்ட எண்ணம் இயற்கையின்/இறையின் காதுகளுக்கு எட்டியிருக்கின்றது. எனவே அந்த நியாமான ஐயத்தைப் போக்கும் முகத்தான் மகரிஷி அவர்களின் வாயிலாக வினைப்பதிவுகள் தூய்மை என்கின்ற தலைப்பில் பாடலை அருளியுள்ளது.  அப்பாடலை நினைவுகூர்வோம்.

    Scientist of Consciousness

    this_birth_is_enough_for_liberation

          இப்பாடலின் வாயிலாக இயற்கையே/இறையே மனிதசமுதாயம் தனது பூர்வீக சொத்தான அமைதியினை அனுபவித்து வாழ்வதற்கான நம்பிக்கையையும்,  ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அளிக்கின்றது.

     இப்பிறவியிலேயே முடியுமா என்கின்ற ஐயம் எழக்காரணம் என்ன?

        பழக்கப் பதிவின் காரணமாக விளக்கப்பதிவை நடைமுறைக்கு கொண்டுவரமுடிவதில்லை.  பழக்கப்பதிவே விளக்கப்பதிவினை வெற்றி கொள்கின்றது. ஏனெனில் பல ஆயிரம் பிறவிகள் ஏற்ற பழிச்செயல் பதிவுகளை ஒரு பிறவி காலத்திலேயே மாற்றி அமைக்கலாம் என்று மகரிஷி அவர்களின் வாயிலாக அறிவித்த பேரறிவே பழக்கப்பதிவு விளக்கப்பதிவை வெற்றி கொள்கின்ற அறிவியலையும் கூறியிருக்கின்றது.  அது என்ன? ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன் என்கின்றது’ அந்த அமுத மொழி. 

       ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன்‘ என்பதனைக் கண்டுபிடித்த பிறகே,  அதற்கானத் தீர்வாக வினைப்பதிவுகள் தூய்மை என்கின்ற பாடல் அருளப்பட்டுள்ளது.

     அழுகணி சித்தரில் விளக்கப்பதிவே வென்றது: 

          அருளார்களுக்கும்  ஆன்மிகத்தில் வெற்றி பெறுவதில் சிரமங்கள் இருந்திருக்கின்றன.  1911 பிறகு ஆன்மிகத்தில் ஒரு திருப்புனை ஏற்படும்போது வருங்கால சமுதாயத்திற்கு வேதாத்திரி மகரிஷி அவர்களின்  வாயிலாக எடுத்துக்காட்டுவதற்கு  அழுகணி சித்தரின் அனுபவத்தை அவர் தம்  திருக்கரங்களாலேயே கவி ஒன்றின் மூலம் அருளியுள்ளது இறை என்றால் மிகையாகாது.  அப்பாடலை இப்போது நினைவு கூர்வோம்.

         கருவில் திருஉடையவர்களுக்கு கருமையத்தை தூய்மை செய்வது எளிமையானதுதான்.  ஆனால்  கருவில் திரு அல்லாதவர்கள்  கருமையத்தூய்மையை எய்துவதற்கு பழக்கம் ஒருவேளை  எதிரியாகவும், தடையாகவும் இருக்கலாம். ஆனாலும் அழுகணிசித்தரைப் போன்று  பழக்கப்பதிவை விளக்கப்பதிவைக் கொண்டு வென்றெடுக்க வேண்டும்.  ஞா.க. க.எண். 493 ல் உள்ள உண்மை, வாழையடி வாழையாக வரும் திருக்கூட்ட மரபினில் மகரிஷி அவர்களின் மூத்தவரான அழுகணிச்சித்தருக்கும் பொருந்துமன்றோ!  எவ்வாறு மகரிஷி அவர்களுக்கு கவி மின்னல்போன்று வெளிப்படுத்துகின்றதோ, அதுபோல் அழுகணி சித்தருக்கும், அவர் வழியாக வருங்கால சமுதாயத்திற்கும்  ஒரு பாடலை அறிவித்திருக்கின்றது. அதனை நாம் நினைவு கூர்வோம்.  இப்பாடலை மகரிஷி அவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டி நினைவுகூர்வது வழக்கம்.  எனவே நாமும் அழுகணி சித்தரின் பாடலை நினைவு கூர்வோம்.

     காட்டானை மேலேறிக் கடைதெருவிலே போகையிலே

        நாட்டார் நமை மரித்து  நகைபுரியப் பார்ப்பரன்றோ

      நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்

    காட்டானை மேலேறி, என் கண்ணம்மா, கண் குளிர காண்பேனோ? 

          இப்பாடலுக்கான விளக்கத்தையும் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம் ஏன் என்பதனை அடுத்த அறிவிற்கு விருந்தில்(17-12-2017-ஞாயிறு) அறிந்து கொள்வோம்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளர்க அறிவுச் செல்வம்

  • FFC – 274செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும் – 9/?

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

    lotus

    FFC – 274
    அ.வி. 274

    10-12-2017-ஞாயிறு

    கருமையம்
    (பாகம்-4)

     [rev_slider home-slider-1]

     வாழ்க வளமுடன்!

    சென்ற மூன்று அறிவிற்கு விருந்து நிகழ்ச்சிகளில் கருமையம் பற்றி சிந்தித்து வருகிறோம்.  இன்று கருமையத் தூய்மை பற்றி மகரிஷி அவர்கள் அருளியுள்ள பாடலின் உட்பொருளை விரிவாக அறிந்து கொள்வோம்.  அதற்கு முன்னர் கவிகளின் சிறப்பு பற்றி அறிந்து கொள்வோம். கவிகள் சிறப்பு பற்றி பதிமூன்று கவிகள் அருளியுள்ளார் மகரிஷி அவர்கள்.  அவற்றில் ஒரு கவியினை  நினைவுகூர்வோம். அக்கவிக்கும் பொருள் காண்போம்.

     கவிகளின்  சிறப்பை நினைவில் கொண்டு,

    ஒவ்வோரு கவிகளின் பொருளை அறிந்துகொள்ளும் போதுதான்,

    அக்கவியின் பொருளை எதற்காக அறிகிறோம் என்பதும்,

    எந்த நோக்கத்தோடு அந்தக் கவிஞர் வழியாக இறையால்  அருளப்பட்டதோ

    அந்த நோக்கமும் நிறைவேறும்.

     இறையின் நோக்கம் என்கின்றபோது இறைஉணர் பாதையிலே பயணிப்பவர் இறையின் நோக்கத்தை சிரமேற்கொண்டல்லவா ஏற்பார்!

     சிந்திக்க கவிகள் பயிற்சியின் அவசியம்:

     கவியின் சிறப்பினை உணர்ந்து கொண்டால் நாம் அறியவேண்டிய  கருமையத்தூய்மை என்கின்ற பாடலின் பொருள் கருத்தோடும், ஆழமாகவும் உள்ளத்திற்குள் சென்றடையும். எனவே  ‘கருமையத் தூய்மை’ என்கின்ற பாடலின் உட்பொருளுக்குள் செல்வதற்கு முன் ‘கவியின் சிறப்பினை’ அறிந்துவிட்டு கருமையத்தூய்மை என்கின்ற பாடலுக்குள் செல்வது ‘சிந்திக்க கவிகள்’ பயிற்சியின் அவசியத்தை நமக்கு எடுத்துக் கூறுவதாக அமையும்.  கவியின் சிறப்பினை’ சமுதாயத்திற்கு  எடுத்துக்கூறுவதற்கும்  கவிகளையே பயன் படுத்துகிறார் மகரிஷி அவர்கள்.  என்னே அவர்களின் கவித்துவம்!   வாழ்க திருவேதாத்திரிய மந்திரம். வளர்க திருவேதாத்திரிய மந்திரம்.

     கவியின் சிறப்பு பற்றி எட்டு வரிகளில் பதிமூன்று கவிகளை அருளியுள்ளார் அருட்கவிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  எல்லாவற்றையும் (ஞானக்களஞ்சியம் பாகம் -1 ல் 4.18) அன்பர்கள் வாசித்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.  எனினும் கவியின் சிறப்பு பற்றி ‘நிறைவாய் இருக்க’ என்கின்ற தலைப்பில் இயற்றிய ஒரு கவியை மட்டும் நினைவுகூர்ந்துவிட்டு,  ‘கருமையத் தூய்மை’ என்கின்ற பாடலின் பொருளுக்குள் செல்வோம் அன்பர்களே!

     

    FFC-274-நிறைவாய்-கவியின் சிறப்பு

     

    பாடல் வரிகள் அன்பர்கள் உள்ளத்தை நிரப்பும்போது அவர் அடையும் பேரின்பத்திற்கு எல்லை இல்லை என இறையிடம் சமர்ப்பிக்கிறார். இங்கே  இறைக்கு  மகரிஷி அவர்கள் நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவிப்பதுவுமன்றி, பின்னர் வரும் சமுதாயத்திற்கும் எவ்வாறு கவிகள் உருவாகின்றன என்பதனை தெரிவிக்க விரும்புகிறார்.  வார்த்தைகள் உருண்டுருண்டு கவிகளாகியுள்ளன என்பதனை அறியும்போது எத்தகைய மகிழ்வினை அடைகின்றோம் நாம்.?!!

     இவ்வாறு கூறுதலே நாமும் இறைக்கும், கருவியாகிய நம் குருநாதருக்கும் உளம் பூரித்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  இத்தகைய குருநாதரை இந்த  நூற்றாண்டில் நாம் பெற்றதே நம் கருமையம் அத்தகைய தூய்மையாக இருந்ததால்தான் சாத்தியமாகியது என்றால் அது மிகையாகாது.  முழுமையாக கருமையத்தூய்மையினை அடைய அது பற்றி சிந்திக்கும் நாம் இவ்வாறு தெரிவிப்பது நம் கடமை அன்றோ.  மேலும்  மேலும் அறிய வேண்டியது இறையே சொல்ல மகரிஷி அவர்களின் திருக்கரங்களால் கவிகள் எழுதப்படுகின்றன என்பதனையும் அறிந்து மகிழ முடிகின்றது.

    அன்பர்கள் உள்ளத்தில் நிரப்பும் போது மகரிஷி அவர்கள் அடையும் பேரின்பத்திற்கு எல்லை இல்லை என்று கூறியிருப்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.   கவிகளால் அன்பர்களின்  உள்ளம் நிரம்புவதால், மகரிஷி அவர்களுக்கு ஏற்படும் பேரின்பத்திற்கு எல்லை இல்லை என்கிறார்.  இதுதானே தந்தையின் உள்ளம்!   தந்தை கற்றுத்தரும் பாடத்தினை தனது குழந்தை ஆரம்பத்தில் புரிந்து கொள்ள சிரமப்பட்டு பின்னர் புரிந்து கொள்ளும்போது தந்தை அடையும் மகிழ்ச்சிபோல், தனது குழந்தைகளின்(அன்பர்கள்)   உள்ளம் நிரம்புவதைக் கண்டு அருட்தந்தைக்கு   பேரின்பம் உண்டாவது இயல்புதானே!  ஆகவே குருநாதரின் அடிபற்றி இறைஉணர் பாதையிலே வாழ்கின்ற அவரது குழந்தைகளான மாணவர்களுக்கும் அதே பேரின்பம் ஏற்பட வேண்டும்.

     கவிகளை வாசிக்கும்போது அன்பர்களது உள்ளம் நிரம்பவேண்டும். அந்த பேர்வாய்ப்பினைப் பெற வேண்டும்.  அப்போதுதான் கவியின் முழுப்பயனையும் அடைய முடியும்.  இதனைக் கருத்தில் கொண்டுதான் இணையதள சத்சங்கத்தில் சிந்தனைப் பயிற்சியில் ‘சிந்திக்கக் கவிகள்’ என்கின்ற பயிற்சி வைக்கப்பட்டுள்ளது.  மேலும் அறிய வேண்டியது யாதெனில்,  இறைவன் சொல்லச் சொல்ல,  தான் எழுதியதை(it is not mere dictation) காட்சிப்படுத்துகிறார் மகரிஷி அவர்கள் நம் நன்மைக்காக.

     அது எவ்வாறு இருந்ததாம்?  ‘மின்னி வெளி வந்த’ என கவிகள் வெளிவந்ததை வர்ணிக்கிறார்.  மின்னல் வேகத்தை யாவரும் அறிவர்.  அதுபோன்றே மனிதன் ஐயப்படாது அகத்தை உணர்வானேயாகில் அவனை தெய்வத்திற்கு ஒப்பாகக் கொள்ளலாம்

    சந்தேகமின்றி  அகத்தை உணர்வாராகில் அவரைத் தெய்வத்திற்கு ஒப்பாகக் கொள்ளலாம் என்கிறார் பொய்யா மொழிப் புலவர் திருவள்ளுவர்.  அந்த நிலையை அடைந்த அத்வைதிக்கு இறை தெரிவிப்பது மின்னல் போன்றுதான் வெளிப்படும். மேலும் அவர் கூறுவதனைக் கவனிக்க வேண்டும்.  அக்கவிகளை எழுதுவதோடு இருந்து விடாமல் மீண்டும் அதனை நினைவு படுத்திக் கொள்ளும்போது நிறைவு  ஏற்படுகின்றது என்பதனையும் அன்பர்கள் கவனிக்க வேண்டும்.  இரவு நேரங்களில் இரண்டு மணிக்கு எழுந்து மண் எண்ணெய்  விளக்கு வெளிச்சத்தில்  கவிகள் மற்றும் உரைநடைகளை எழுதுவாராம் மகரிஷி அவர்கள். எழுதி விட்டு உறங்கச் சென்றிடுவாராம்.  ஆனால் உறக்கம் வராமல் மீண்டும் படுக்கையிலிருந்து எழுந்து எழுதியதை வாசித்து ஆனந்தமடைவாராம் மகரிஷி அவர்கள். தான் எழுதியதை மீண்டும் மீண்டும் வாசித்து இன்பமுற்று நிறைவாய் இருப்பதனை இறைவனுக்கும் தெரிவிக்கின்ற  அதேவேளையில், அன்பர்களும் அவருடைய அருள்அனுபவத்தை  அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பாடலின் கடைசி இரண்டு வரிகள் உருவாகியுள்ளன.  அன்பர்களும் அறிந்து அவர்களது  பயணத்தில் இதனை அனுபவிக்க வேண்டும்.

     இதுவரை  கவியின் சிறப்பை அறிந்து கொண்டோம். இதனை எப்போதும் மனதில் கொண்டு அருட்கவிகளை வாசிக்கும்போது அனுபவித்து வாசிக்க வேண்டும்.

     இப்போது கவிகளின் சிறப்பினை நினைவிற் கொண்டு கருமையத்தூய்மை என்கின்ற கவியின் உட்பொருளுக்குள் செல்வோம்.

      ‘கருமையத்தூய்மை’ பாடலின் பொருள்:

    FFC-274-கருமையத்தூய்மை

    பாடலின் பொருள்:

                    பாடலின் பொருள் எளிமையானதுதான்.  இருப்பினும்  கவியின் சிறப்பை சற்றுமுன் அறிந்தோம்.  அதனை நினைவில் கொண்டு, பாடலின் பயனை  பெறும் வகையில், பாடலின் உட்பொருளுக்குள் செல்வோம்.  பாடலின் உட்பொருள் மனதில் நின்று அயரா விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்  என்பதற்காக, கருமையத் தூய்மையைக்கெடுக்கும் ஒவ்வொன்றும் எவ்வாறு தூய்மையைக் கெடுக்கின்றன என்றும் அறிந்து கொள்வது மிக்க நலம் பயக்கும்.  மேலும் பாடலை வாசிப்பது என்பது பாடலின் வரிக்கு வரி பொருள் கொள்வதோடு  முடிந்துவிடுவதில்லை. பாடல் ஆசிரியர்எந்த நோக்கத்தோடு அப்பாடல் வரிகளை அமைத்தாரோ அல்லது அமைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தினை அப்பாடலை கண்ணுறுபவர்கள் அறிந்து கொள்ள  வரிகளுக்கிடையே மறைந்திருக்கும்(hidden in between lines) பொருளையும் சேர்த்து அறிந்து கொள்வது முழுப்பயனையும் தரவல்லது.

    கருமையத்தூய்மையைக் கெடுக்கும் செயல்களை அட்டவணையிட்டுள்ளார் மகரிஷி அவர்கள்.

    1. கறை படுத்தும் எண்ணம்
    2. நிறைவு பெறாமல் இருக்கும் ஆசைகளின் கூட்டம்.
    3. நெஞ்சம் மனம் பேச்சுஇடை பிணக்காகும்  பொய்கள்.
    4. மறைமுகமாய் நேர்முகமாய் பிறர்உளம் வருத்தல்
    5. மற்ற உயிர் சுதந்திரமும் வாழ்வின் வளம் பறித்தல்
    6. நிறைவழிக்கும் பொறாமை, சினம், வஞ்சம் காத்தல்,
    7. மேலும் நெறி பிறழ்ந்த உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு

     ஆகிய ஏழும் தெய்வீக நீதி மன்றமாகிய  கருமையத்தைக் களங்கப்படுத்திவிடும் என்கிறார்.  பொதுவாக கருமையத்தூய்மை எதற்காக?  விலங்கினத்திலிருந்து வந்த மனிதனின் கருமையம், விலங்கினப்பண்பை செயலிழக்கச் செய்து மனிதப்பண்பில் உயர வேண்டும்.  இஃதல்லாத செயல்களெல்லாம் கருமையத்தைக் களங்கப்படுத்துவதாகவே இருக்கும் என்கின்ற புரிதலுடன் சிந்தனையைத் தொடர்வோம்.

     1. கறை படுத்தும் எண்ணம்

    இன்பவாழ்விற்கு நல்ல செறிவுள்ள வித்து:

     எண்ணமே இயற்கையின் சிகரம் என்கிறார் மகரிஷி அவர்கள்.  இயற்கையின் சிகரமாகிய எண்ணம் மனிதனிடமிருந்துதான் வெளிப்படுகின்றது. அவ்வாறு எண்ணம் மனிதனிடமிருந்து வெளிப்படும்போது அது கருமையத்தில் கறையை ஏற்படுத்திவிடக்கூடாது.  ‘எண்ணமே வாழ்க்கையின் சிற்பி’, ‘எண்ணம்போல் வாழ்வு’ என்பதால் வாழப்பிறந்த மனிதன் வாழ்வாங்கு வாழ மனிதன் முத்தொழில்களின் முதன்மையானதுமான எண்ணத்தில் தூய்மை வேண்டும்.  எண்ணமே இன்பதுன்பத்திற்கு வித்தாக அமைகின்றது என்பதால் துன்பமில்லா இன்ப வாழ்வு வாழ்வதற்கான நல்ல செறிவுள்ள வித்தாக அமைய வேண்டும்  எண்ணம்.  எனவேதான் மனவளக்கலையின் செய்முறைப் பயிற்சியான தற்சோதனையில் எண்ணம் ஆராய்தலை முதலில் வைக்கப்பட்டுள்ளது.  எண்ணத்தை ஆராய்ந்து பயன்படுத்துவதில் முழுவெற்றி பெற்றுவிட்டால் ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் ஆகிய பயிற்சிகளில் வெற்றி பெறுவது எளிதாகிவிடும்.

     2.நிறைவு பெறாமல் இருக்கும் ஆசைகளின் கூட்டம்

     ஒரே வீட்டில் உள்ள இருவருக்கும் இடைவெளி!

    மனிதனைத் தெய்வமாக்கும் அகத்தாய்வுப் பயிற்சியில் இரண்டாவது பயிற்சியாக ‘ஆசை சீரமைத்தல்’ என்கின்ற பயிற்சியினை வைத்துள்ளார் மகரிஷி அவர்கள்.

     உத்தமன் உள்ளத்திலே கோயில் கொண்டிருக்கின்றான் என்பது அருளாளர்களின் சத்தியவாக்கு. அவ்வாறிருக்கும்போது  உத்தமனுக்கும் மனிதனுக்கும் இடைவெளி இருக்கின்றது என்பது (ஒரே வீட்டில் உள்ள இருவருக்கும் இடைவெளி என்பது) ஒருவகையில் நமக்கு ஆச்சரியத்தை அளித்தாலும், உத்தமனுக்கும் நமக்கும் உள்ள ‘இடைவெளி அறிவியலை-the Science of distance between God and individual’ அறிய முடிகின்றதல்லவா!?

          இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள அந்த இடைவெளி என்பது அவன் கொண்டுள்ள ஆசைகளின் பட்டியலே என்கின்றனர்.  ஆசைகளில் தேவையான ஆசைகளை அந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. 

    தேவையற்ற ஆசைகள்,

    முறையற்ற ஆசைகள் மற்றும்

    உத்தமன் மீது கொள்ளாத ஆசை ஆகியவற்றைக் கொண்ட பட்டியலைத்தான் இடை வெளி என்கின்றனர் அருளாளர்கள்.

     ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்:

          தேவையற்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளத்தான் உள்ளம் பாடுபடுமே  தவிர உள்ளத்திலே அமர்ந்திருக்கும் உத்தமனை அறிந்து அவனோடு உறவு கொள்ள வேண்டும், உரையாடவேண்டும் என்கின்ற எண்ணமே இராது போய்விடும். உத்தமனை அறிய விருப்பம் கொள்ளாத கருமையம் தூய்மை அற்றதாகவே கருதப்படும்.  கருமையம் தூய்மையாக இருந்தால் மட்டுமேஅது உத்தமனை நாடும். முத்தொழில்களில் தூய்மை அடையாது உத்தமன் மீது நாட்டம் கொள்வது என்பது இயலாத காரியம். அப்படியே உத்தமன் மீது நாட்டம் கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தாலும் அது ‘ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால்’ வைத்திருப்பதற்கே ஒப்பாகும்.

     

    3. நெஞ்சம் மனம் பேச்சு இடையே பிணக்காகும்  பொய்கள்

     காரண அறிவிற்கு ஏற்புடையதா?( Is it logical?):

     இதனைக்கருத்தில் கொண்டதுதான்  ‘உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் உறவு கலவாமை வேண்டும்’ என வள்ளலார் இறைஞ்சுவது.  புத்தரும் பாவங்களிலிலே தலையாயது பொய் என்கிறார்.  மெய்யை(உண்மையை –truth) அறிய வேண்டிய பயிற்சியில் பொய் பேசுவது கருமையத்தை தூய்மையைக் கெடுப்பதுதானே! இது காரண அறிவிற்கு ஏற்புடையதாகவா இருக்கின்றது?! (Is it  logical?). பொய் பேசுவது வாழ்வில் இயல்பாக உள்ளதால் அதனை சரி என்றோ, நியாயப்படுத்துவதோ சரியாகாது.  ஏன் பொய் பேச வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது?  உண்மையை மறைக்கப் பொய்யை பயன்படுத்த வேண்டியுள்ளது.

    உண்மையை அறியும் பயிற்சியில் பொய் பேசுவது எவ்வாறு சரியாக இருக்க முடியும்?  குழந்தைககள் தாங்கள் செய்த தவறை பெற்றோர்களிடம் மறைக்க பொய் பேசுவது வழக்கம். அப்போது குழந்தைகள் பொய் பேசுவதை பெற்றோர்கள் விரும்புவதில்லை. ‘பொய் பேசக்கூடாது’ என்று அறிவுரை கூறியும், ‘இனிமேல் பொய் பேசமாட்டேன் என்று சொல்’ என்கின்ற உறுதியையும்  குழந்தைகளிடமிருந்து பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.  இதில் நியாயம் உள்ளது தான்.  ஆனால் அதே  போன்று உண்மை பேசும்  பொறுப்பை நம்மிடம் நாமே  எதிர்பார்ப்பதில்லை.  பொய் பேசுவதுதானே என்று அலட்சியப்படுத்த முடியாது.  பொய் பேசுவதால் என்ன ஆகிவிடப்போகின்றது என்று கருதுகின்ற நிலைமை மாறவேண்டும்.

     பொய் பேசுவதால் கருமையம் தூய்மை கெடுகின்றது என்பதில் உள்ள அறிவியலை அறிந்து கொள்வது நலம் பயக்கும்.  வேதாத்திரிய உலக சமாதான திட்டங்கள் முழுமையாக அமுலுக்கு வரும்போது மனிதர்கள் பொய்பேச விரும்பினாலும் பொய் பேசும் அவலநிலை அன்று இல்லை. வாழ்க உலக சமாதானம்! விரைவில் வருக உலக சமாதானம்!!   நாகரீகத்தை பொய்யில்லா  உண்மையோடு இணைக்கிறார் மகரிஷி அவர்கள்.  பொய்பேசுவது அறிவின் வளர்ச்சியினைத் தடுக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்.  அறிவின் வளர்ச்சியால்தான் உயிர் ஆக்க வாழ்வு பெறமுடியும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

     4.மறைமுகமாய் நேர்முகமாய் பிறர் உளம் வருத்தல்

     நியாயமான எதிர்பார்ப்பில் உள்ள நியாயம்:

           மனிதன் எப்போதும் இனியவையே பேசவேண்டும் என்பதனை அறிவுறுத்தவே இனியவை கூறல் எனும் தனி அதிகாரத்தையே இயற்றியுள்ளார் திருள்ளுவர்.  யார் நமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறோமோ அதனையே நாமும் பிறர்க்கு செய்ய வேண்டும். ‘யாரும் நமக்குத் துன்பம் தரக்கூடாது’ என்கின்ற நியாயமான எதிர்பார்ப்பில் உள்ள நியாயத்தை நாமும் பிறர்க்குத் துன்பம் தரக்கூடாது என்பதை நிலை நாட்டுவதில் உறுதியாக இருக்க  வேண்டும்.

     மனிதனின் அறமற்ற செயலை சீரணிக்க முடியவில்லை:

     இங்கே இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னரே  இன்னா செய்யாமை என்கின்ற அதிகாரத்தை

    ஏற்படுத்தி, அதில் திருவள்ளுவர் எட்டாவது குறளில் மொழிந்துள்ளதை நினைிவில் கூர்வது நலம் பயக்கும்.

    தன்உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்கொலோ

    மண்உயிர்க்கு இன்னா செயல்.”              . . . குறள் எண் 318

      பொருள்:   பிறர்  செய்யும் தீங்குகள் தன் உயிர்க்குத் துன்பம் தருவதை அனுபவித்து அறிபவன், பிற உயிர்களுக்குத் தான்  துன்பம் செய்வது என்ன காரணத்தாலோ?

     ‘என்ன காரணத்தாலோ?’ என்கின்ற வினாவோடு தான் அக்குறளை முடித்திருக்கிறார்.  இது எதனை அறிவிக்கின்றது?  அவரால், மனிதனின் இந்த அறமற்ற செயலை சீரணிக்க முடியவில்லை. திருவள்ளுவருக்கு இளையவரான முன்னாள் பாரத ஜனாதிபதியும், தத்துவ ஞானியுமான டாக்டர் இராதாகிருஷ்ணன் ‘பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை’ என்றுகூறுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது என்பதனை உறுதிப்படுத்துகின்றதல்லவா!   இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர்  அறிவுறுத்தியிருந்தும் அறமற்ற  செயல்கள் சமுதாயத்தில் மறையவில்லை என்பதனைக் கருதி இதனை எவ்வாறு சரிசெய்வது என்பதனைக் கருத்தில் கொண்டுதான் இரண்டொழுக்க பண்பாட்டினை சங்கல்பமாக வைத்துள்ளர் மனவளக்கலை பயிற்சியில். 

    இந்த இரண்டொழுக்கப் பண்பாட்டின் அலைகள் கருமையத்திலும், வான்காந்தத்திலும் பதிந்து அழுத்தம் பெற்று மனித அறிவு பரிணாமத்தில் நாளடைவில் வளரும் என்பதே இரண்டொழுக்கப் பண்பாட்டு சங்கல்பம் ஏற்படுத்தியதன்  நோக்கம்.

    இரண்டொழுக்கப் பண்பாடு மலரவேண்டுமே!

     அந்த வகையில் நம் உள்ளம் வருத்தப்பட பிறர் மறை முகமாகவோ அல்லது நேர்முகமாகவோ வருத்தப்படுத்துவதை நாம் விரும்புவோமா?  விரும்ப மாட்டோம். பிறர் துன்பத்தை நம் துன்பம் போல் கருதி இரங்கி உதவி செய்வதே அறம் என்கின்றபோது பிறர் உள்ளத்தை வருத்தப்படுகின்ற செயல் அறமற்ற செயலாகவே உள்ளது.  பிறர் வருந்துவதை நம் உள்ளம் வருந்துவதுபோல் எண்ணி  பிறர் உள்ளம் வருத்தப்படுகின்ற செயல்களைச் செய்யக் கூடாது.  இந்த சமுதாயத்தில்  இரண்டொழுக்கப் பண்பாடு மலரவேண்டுமே!  அதற்காகத்தானே தவத்தின் முடிவில் இரண்டொழுக்க பண்பாட்டு சங்கல்பத்தை வான்காந்த களத்திலே பரவ விடுகிறோம். அவ்வாறிருக்க பிறர் உள்ளத்தை வருத்தப்படுத்துதல் இரண்டொழுக்கப் பண்பாட்டிற்கு முரணாகவல்லவா ஆகிவிடும்.

     கருமையத்தூய்மை எதற்காக?

     இறை உணர்வு பெறுவதென்றால்  கருமையத் தூய்மை பெறுவதே ஆகும்.  இறை உணர்வின் பயன் என்ன?  அறம் மலர்தலேயாகும். ஆகவே கருமையத்தூய்மையின் பயன்  அறம் மலர்வது. ஆகவே மறைமுகமாயும், நேர்முகமாயும் பிறர் உள்ளத்தை வருத்தப்படுகின்ற செயலில் அறம் மறைந்து விடுகின்றது. அறத்தை மறைக்கக்கூடிய கருமையம் தூய்மையற்றதே என விளங்கிக் கொள்ள வேண்டும்.

     இதுவரைமற்ற கருமையத்தூய்மையைக் கெடுக்கும் நான்கு காரணிகளைப் பற்றி சிந்தித்தோம்.  மற்ற காரணிகளான ‘உயிரின் சுதந்திரமும், வாழ்வின் வளம் பறித்தலும்’, நிறைவழிக்கும் பொறாமை, சினம், வஞ்சம் காத்தல், மேலும் நெறி பிறழ்ந்த உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு ஆகிய வற்றைப் பற்றி அடுத்த அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்(13-12-2017-புதன்) அன்று சிந்திக்க இருக்கிறோம்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                          வளர்க அறிவுச் செல்வம்


     

  • FFC – 273-செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும் – 8/?

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    lotus

    செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும் – 8/8

    FFC – 273
    அ.வி. 273

    06-12-2017-புதன்

    கருமையம்
    (பாகம்-3)

    வாழ்க வளமுடன்!

    சென்ற அறிவிற்கு விருந்தில், கருமையம் பாகம் இரண்டில் ‘முன்னோர்கள் செய்த சஞ்சித கர்மாவையும்’ இப்பிறவியில் அனுபவிக்க வேண்டியுள்ளது என்றும், அதற்கு உதாரணமாக பட்டினத்தடிகளார் சுவாமிகளின் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றினை நினைவு கூர்ந்ததன் மூலம் உறுதிபடுத்தினோம்.

    பட்டினத்தடிகளார் வாழ்ந்த காலத்தில் இறைஉணர்வு பெறுவதற்கு இருந்த துறவு நிலை கடுமையானது என்றும்,

    அந்த துறவு நிலையை இருபதாம் நூற்றாண்டில் வாழ்வாங்கு வாழ்ந்த ஓர் அறிஞரின் வழியாக எளிமையாக்கி சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளது இயற்கை/இறை என்றும்,

    அந்த அறிஞர் யார் என்கின்ற வினாவுடன் சத்சங்கத்தை சென்ற அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில் முடித்துக் கொண்டோம்.

    அந்த அறிஞர் யார் என இன்றைய விருந்தில் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

    இருபதாம் நூற்றாண்டின் சுவாமிகளே ஆவார் அவர்:

    அந்த அறிஞர் வேறு யாருமில்லை. நம் குருநாதர் அவர்களே. இருபதாம் நூற்றாண்டில் இயற்கை, துறவு நிலையின் உண்மை நிலையை நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வழியாக எடுத்துக் கூறியுள்ளது. எனவே இருபதாம் நூற்றாண்டில் அவதரித்த பட்டினத்து சுவாமிகளான வேதாத்திரி மகரிஷி அவர்களின் துறவு பற்றிய தெளிவினை நினைவு கூறுவது நலம் பயக்கும்.

    ‘உறவின் உண்மை நிலை துறவு’ என்கிறார் இருபதாம் நூற்றாண்டில் அவதரித்த வேதாத்திரி சுவாமிகள். ‘புவிவாழ்வின் இயல்பொக்க’ வாழ்வதற்கு யோசனை கூறுகிறார். எனவேதான் ஈகையை உள்ளடக்கிய அறத்தைப் போதிக்கிறார். மேலும் மகரிஷிகள் கூறுவதனைக் கவனிப்போம்.

    FFC-272-உறவுகளில் - Copy

    என்கிறார் ஆன்மீகத்திற்கு பிரம்மசரியம் அவசியமில்லை என்றுரைத்து இல்லறத்தையும் துறவறத்தையும் இணைத்தே வாழ்ந்த நமது சுவாமிகள் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பதிதல் மனிதனிடம் எங்கு பதிவாக முடியும்/பதிவாகின்றது?

    பதிதல் இல்லாமல் எந்த நிகழ்வும் இல்லை என்பதனை அறிந்துகொண்டோம். மனிதனில் நடக்கும் எந்த நிகழ்வுகள் பதிகின்றன? மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் பதிகின்றன. மனித உடலில் எங்கு பதிவாக முடியும்? பதிதல் நடக்க வேண்டுமெனில் அதற்கு காந்த-ஊடகம்(magnetic medium) அவசியம். செயற்கையாக ஒலி-ஒளியை பதிவு செய்ய தயாரிக்கப்படும் ஒலி-ஒளி நாடாவில் (cassette) காந்த பூச்சு(magnetic coating) செய்யப்பட்டுள்ளது. இயற்கையில், பதிதல் காந்த ஊடகத்தில் நடக்கின்ற அற்புதநிகழ்வை(phenomenon) வைத்துக்கொண்டுதான் விஞ்ஞானம் செயற்கையாக பதிவு செய்வதற்கு காந்த ஊடகத்தைப் பயன்படுத்துகின்றது.

    உடலெங்கும் இரத்தம் ஓடினாலும் அதற்கு மையம் இருதயம் இருப்பதுபோன்று உடலெங்கும் காந்த ஓட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் அதற்கு ஒரு மையம் உள்ளது. அதுதான் கருமையம் என்கிறார் மகரிஷி அவர்கள். உடலில் உள்ள காந்த மையமான கருமையத்தில் ‘பதிதல் நிகழ்வு’ நடக்கின்றது.

    அழியாத ஒன்றில் வினைகள் பதிகின்றன:

    அது என்ன அழியாத ஒன்று? மரணத்திற்கு பின்னர் உடல் உறுப்புகள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. ஆனால் ஆன்மா அழிவதில்லை. எப்படி? மரணத்தின் போது உயிர் உடலைவிட்டு வெளியேறிவிடுவதால் ஆன்மா அழிவதில்லை. அழியாத ஆன்மாவில்தான் மனிதன் ஆற்றும் வினைகள் பதிகின்றன. காரணம் மனிதன் ஆற்றிய வினைகளுக்கு விளைவு நிச்சயம் உண்டு என்பதாலும், அதற்கான விளைவுகள் அவன் வாழும் காலத்திற்குள் வராதுபோகும் பட்சத்தில் மனிதனின் அழியக்கூடிய உடல் உறுப்புகளில் பதியுமனால் அவனுடைய வினைப்பதிவுகளும் உடல் அழியும் போது அழிந்து விடும். அதாவது அவனது வினைப்பதிவுகளின் கணக்கும் (account of imprints of his deeds) இறந்த பிறகு அழிந்துவிடும். எனவே வாழும் காலத்தில் மனிதனின் வினைப்பதிவுகள் அழியாத ஒன்றான காந்த மையமான கருமையத்தில் பதிகின்ற ஏற்பாடு இயற்கையில் அமைந்துள்ளது.

    மேலும் பதிதலின் விளைவு ஒருவர் வாழும் காலத்திலும் வரலாம், அல்லது அவருக்குப் பின்னரும் வரலாம் என்றிருக்கின்றது. எனவே மரணம் சம்பவித்த பிறகு உடல் உறுப்புகள் அழிந்து விடுகின்றன. ஆகவே பருஉடல் மூலம் ஒருவர் செய்த வினைப்பதிவுகளை carry forward செய்ய முடியாது. carry forward செய்ய உடலில் மரணத்திற்கு பின்னரும் பலன் அல்லது விளைவினை தரத்தக்க அழியாத ஒன்றின் மீதுதான் பதிதல் நடக்க வேண்டும். உயிர் என்றுமே அழிவதில்லை. மரணத்தின் போது உயிர் வெளியேறிவிடுகின்றது. ஆகவே பதிதல் உயிரில்தான் நடக்க வேண்டும். மேலும் பதிதலுக்கு காந்த ஊடகம் தேவைப்படுவதால் உயிரால் ஏற்படுகின்ற காந்த ஊடகமான கருமையத்தில் பதிதல் நடக்கின்றது,

    கருமையம் என்பது என்ன?

    உயிர்த்துகள்கள் உடலில் ஓடிக்கொண்டிருக்கின்றது. உயிர்த்துகள்களால் காந்தம் உருவாகின்றது. அதுவே சீவகாந்தம் எனப்படுகின்றது. சீவகாந்தமும் ஓடிக்கொண்டிருக்கின்றது. சீவகாந்தம் திணிவு பெறுகின்றது. அதற்கு ஒரு மையம் ஏற்படுகின்றது. அந்த மையமே கருமையம் என்கிறார் மகரிஷி அவர்கள். காந்த கருமையத்தில்தான் பதிதல் நடைபெறுகின்றன.

    இப்பிறவியில் செய்த வினைகளின் பதிவுகள், சஞ்சித கர்மாவின் பதிவுகள், முன்னோர்களிலிருந்து பின்னோக்கி சென்றால், ஆதிமனிதன் வரை செய்துள்ள வினைகளின் பதிவுகள், அதற்கும் பின்னோக்கி சென்றால் விலங்கினப்பதிவுகள்,அதற்கு முன்னர் பஞ்சபூதங்கள் உருவாகிய நிகழ்வுகள், அதற்குமுன்னர் துகள்கள் உருவாகியபோது பதிந்த பதிவுகள் அனைத்தும் பதிந்துள்ளன உயிர்த்துகள்களில் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    இவற்றில் மனிதனின் இனிமையாக வாழ்வதற்கு வேண்டிய பதிவுகள் எவை?

    இவற்றில் இனிமையாக வாழ்வதற்கான பதிவுகளே வாழ்வின் நோக்கத்தையும் நிறைவேற்றும் வினைப்பதிவுகளாகும். அப்படியானால் அது என்ன பதிவுகள்? துகள்கள் உருவான பதிவுகள், அதற்குமேலும் பஞ்சபூதங்கள் உருவானபோது பதிந்த பதிவுகள், பிறகு உயிர் தோன்றிய பதிவுகள், விலங்கினத்திலிருந்து ஆதிமனிதன் உருவாகியபோது பதிந்த பதிவுகள், ஆக பிரபஞ்ச உற்பத்தி இரகசியப்பதிவுகள் எல்லாம் அகக்காட்சியாக கிடைக்க வேண்டும். அப்போதுதான்

    நாம் யார்,
    நாம் எங்கிருந்து வந்தோம்,
    நாம் எதற்காக வந்தோம்,
    என்ன செய்து கொண்டிருக்கிறோம்,
    எங்கே செல்லப்போகிறோம்,
    வாழ்க்கை என்பது என்ன,
    இதற்கிடையில் இன்பம், துன்பம் வருகின்றதே, அது எங்கிருந்து வருகின்றது,
    ஏன் வருகின்றது,
    மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி,
    இன்ப துன்பங்களை அனுபவிக்க மீண்டும் பிறக்க வேண்டுமா

    போன்ற ‘நான் யார்?’ வினாவிற்கான துணை வினாக்களுக்கு விடை கிடைத்து குழப்பமுற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவிற்கு தெளிவினும் தெளிவு ஏற்பட முடியும். ஆகவே இத்துனைப் பயன்தரக்கூடிய அகக்காட்சி கிடைப்பது எப்போது என்கின்ற ஐயம் எழுகின்றது அறிவிற்கு. அகக்காட்சி கிடைப்பது மனவளக்கலையின் செய்முறை பயிற்சியின் வெற்றியால் மட்டுமே கிடைப்பதாகும். கருமையத்தில் பதிந்துள்ள துன்பமளிக்கும் வினைப் பதிவுகளைப்போக்கி வாழ்வின் நோக்கம் நிறைவேற்றுதற்கான பதிவுகளை ஏற்படுத்துவதே கருமையத்தூய்மை எனப்படுகின்றது.

    கருமையத் தூய்மையைக் கெடுக்கின்ற செயல்கள் யாவை?

    வாழ்க்கையில் இன்பம், அமைதி, பேரின்பம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கும், அறிவின் முழுமைப் பேற்றினைப் பெறுவதற்கும் கருமையத்தை எப்போதும் வளமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். கருமையத்தைத் தூய்மையாக வைத்திருக்க ஏற்ற வகையில் ஆக்கப்பூர்வமான எண்ணங்களும், உயர்ந்த செயல்களும் இருக்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். அதற்கு கருமையத்தின் தூய்மையைக் கெடுத்து களங்கப்படுத்தும் எண்ணங்களும், செயல்களும் என்ன என்று தெரிந்து கொண்டால் அவற்றினைத் தவிர்க்கலாம். கருமையத் தூய்மை குறித்து மகரிஷி கூறுவதனை அவர்களின் வாய்மொழியாக அறிவோம்.

    கருமையத் தூய்மை

    நிறைவு பெறாமல் இருக்கும் ஆசைகளின் கூட்டம்,
    நெஞ்சம் மனம் பேச்சுஇடை பிணக்காகும் பொய்கள்,
    மறைமுகமாய் நேர்முகமாய் பிறர்உளம் வருத்தல்,
    மற்றஉயிர் சுதந்திரமும் வாழ்வின்வளம் பறித்தல்,
    நிறைவழிக்கும் பொறாமை சினம்வஞ்சம் காத்தல், மேலும்
    நெறிபிறழ்ந்த உணவு உழைப்பு உறக்கம் உடலுறவு
    கறைபடுத்தும் எண்ணம் இவை கருமையம் தன்னைக்
    களங்கப்படுத்திவிடும்; கருத்தொடு சீர்செய்வோம். . . . (ஞா.க:1805)

    . . . வேதாத்திரி மகரிஷி.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்(10-12-2017)பாடலுக்கான பொருளை விரிவாக அறிந்து கொள்வோம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்


  • FFC – 272- செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும்-7/?- கருமையம் (பாகம்-2)

    வாழ்க மனித அறிவு                                           வளர்க மனித அறிவு

    lotus

    FFC – 272
    அ.வி. 272

    03-12-2017-ஞாயிறு

    செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும் 7/?

    கருமையம்  (பாகம்-2)

    வாழ்க வளமுடன்!

          கருமையத்தில் பல்லாயிரம் பிறவிகளில்  பதிந்துள்ள வினைப்பதிவுகளை யாரே அறிவார்? பேரறிவாளர் ஒருவரே(இயற்கை/இறை) அறிவார். எடுத்துள்ள இந்த ஒரு பிறவியில் செய்துள்ள பதிவுகளாக மட்டுமே இருந்தாலும் பரவாயில்லை; ஞாபகம் வைத்திருக்கலாம்.  அப்படியே எடுத்துக்கொண்டாலும் இந்த ஒரு பிறவியில் செய்த வினைகள் எல்லாவற்றையுமே ஒருவர் ஞாபகம் வைத்துக்கொள்ளவும் முடியாது எனலாம். ஏனெனில் தீய வினைகள் அறியாமையாலும், அலட்சியத்தாலும், உணர்ச்சிவயத்தாலும் அன்றாடம் நடந்து கொண்டிருப்பதால், சில சில சிறு  தீய வினைகளையெல்லாம்  ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாமல் போகக் கூடும். அறியாமை மற்றும் உணர்ச்சிவயத்தால் தீயவினைகளைச் செய்துவிட்டு  ‘தீயவினைகளைத்தான் செய்தோமோ’ என்றே வினை செய்தவர் நினைக்கக்கூடிய  நிலையேதான் காணப்படுகின்றது.

         கருமையத்தில் ‘பதிதல்’ ஏற்படுவதால், சென்ற அறிவிற்கு விருந்தில்இயற்கையின் அதி அற்புத நிகழ்வான ‘பதிதல்’ பற்றி மட்டுமே  கருமையம் – முதல் பாகத்தில் விரிவாக சிந்தித்தோம்.  ‘பதிதல்’ என்பது இயற்கையின் அதி அற்புத நிகழ்வு என்று அறிந்து கொண்டோம். எந்த பிரபஞ்ச நிகழ்விலும் பதிதல் இல்லாமல் இல்லை என்றும் அறிந்து கொண்டோம்.  இன்று கருமையம் பற்றிய உண்மைகளை அறிய இருக்கிறோம்.

    இயற்கைநீதி எப்போதுமே தவறிடாதா?!

    11230650_1612478765690891_6536263016119760624_n

        ஆம். எப்போதுமே இயற்கை நீதி, தவறிடாது. ஏன் இவ்வாறு  ஐயம் எழுகின்றது? பிரபஞ்சத்தில் கோள்கள் தவறிடாது உலவி வருகின்றதுபோல், மனிதனுடைய செயல்களுக்கும் விளைவை அளிப்பதிலும் இயற்கை தவறிடாதல்லவா?   இயற்கை நீதி எப்போதுமே தவறாததுதான். ‘Unfailing Law of Nature’ என்பார் மகரிஷி அவர்களும். அதனால்தானே அது நீதி என்று அழைக்கப்படுகின்றது. இயற்கையே/இறையே நீதியாகவே உள்ளது. ஐயம் நீங்க மேலும் சிந்திப்போம். பதிந்த குறுந்தட்டினைக்(Recorded cassette) கண்களால் காண முடிகின்றது.  அதுவும் குறுந்தட்டினை மட்டும்தான் காணமுடியும், அதில் பதிந்துள்ளதை கேட்கவும், பார்க்கவும் முடியாது. ஆனால்  அதற்குரிய சாதனத்தின் (audio/video player) மூலம் குறுந்தட்டில் பதிந்துள்ளதைக் கேட்கவோ, பார்க்கவோ முடியும். ஆனால் அது போன்று கருமையத்தை பார்க்கவோ அல்லது கருமையத்தில் பதிந்துள்ளதையோ படிக்கவோ அல்லது பார்க்கவோ முடியாது.ஆனால் மனிதனின் முத்தொழில்களும் ஒன்றுவிடாது தவறிடாது கருமையத்தில் பதிந்து கொண்டிருக்கின்றன. முத்தொழில்களின் விளைவுகளாக இன்பமோ, துன்பமோ வருகின்றன.

     சில விளைவுகளுக்கு  மூலமான செயலை மனிதன் தன் வாழ்நாளில் செய்திருக்க மாட்டான். பின்னர் அவன் செய்யாத செயலுக்கான விளைவை அவன் ஏன் அனுபவிக்க வேண்டும்?     இங்கேதான் இயற்கையின் நீதி எப்போதுமே தவறாதா என ஐயம் எழுகின்றது.  மேலும் தெளிவு ஏற்படுத்திக் கொள்வதற்காகவே இந்த ஐயம் எழுகின்றது. இன்று வருகின்ற விளைவிற்கு மூலமான செயல் அவன் வாழ்நாளில் செய்யவில்லை என்றால், அந்த மூலச்செயலின்(action–source) வினைமுடிச்சு(பதிவு) அவனது சஞ்சிதகர்மா என்கின்ற வினைமூட்டையிலிருந்து அவிழ்ந்திருக்கின்றது என்று பொருள். ‘சஞ்சிதகர்மா’ என்கின்ற வினைமூட்டை என்பது  முற்பிறவிகளில் அவனது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட வினைப்பதிவுகள் நிறைந்தது.  கருமையத்தில் அப்பதிவுகளை எல்லாம் பதியப்பெற்ற கருமையத்துடன் பிறக்கின்றான் மனிதன்.  ஆகவே இப்பிறவியில் ஏதும் தீயவினைகளை செய்யாவிடிலும், ஒருவேளை தீயவினைப்பதிவுகளின் காரணமாக துன்பம் வந்தாலும் அது  அவனது முற்பிறவிகளில் செய்த தீயவினைப் பதிவுகளின்  விளைவேதான்என்பதை தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும்.ஒரு காரணம்  இறைநீதி தவறு செய்யாத ஒருவனை தண்டிக்காது என்பதற்காக மட்டுமல்ல.    மற்றொரு காரணம்  முற்பிறவிகளின் உயிர்த் தொடர்புதானே தற்போதைய மனிதனும்.  அவரவர்கள் செய்த வினைகளின் பதிவுகள் அவரவர்களின் கருமையத்தில்தான் பதிந்து இருக்கின்றன.

     மூலத்தைப்போன்றுதானே நகலும் இருக்கும்:

     குழந்தைகள் ‘பெற்றோர்களின் நகல் (copy) தானே’ என்பார் மகரிஷி அவர்கள். மூலத்தைப்போன்றுதானே நகலும் இருக்கும். இதில் சந்தேகம் இருப்பதற்கே வாய்ப்பில்லை. ஆகவே தான் இப்பிறவியில் தீயவினைகளை செய்யாதாயிருப்பினும் ஒருவேளை துன்பம் வரின் அது முன்வினைப்யனாகவே வந்ததுதான் என்பதில் ஐயம் இருக்கக் கூடாது.  வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் அனுபவத்தை அறிந்து கொண்டால் இவ்வுண்மையை நன்றாக உறுதிப்படுத்திக்  கொண்டு நாமும் வாழ்வாங்கு வாழ பேருதவியாக இருக்கும். அவ்வாறே உறுதிபடுத்திக் கொள்ள  ஒர் அறிஞரின் வாழ்நாள் நிகழ்ச்சியினை நினைவுகூர்வது நலம் பயக்கும்.

     அந்த அறிஞர் யார்?

     ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்கின்ற இயற்கையின் எதார்த்தத்தைக் கண்டுபிடித்து எடுத்துச் சொன்னவரான  பட்டினத்து சுவாமிகளே (பட்டினத்தார்) அந்த  அறிஞர்.  இப்பூலகிற்கு வரும்போதும் மனிதன் சஞ்சிதகர்மா எனும் வினைமூட்டையைத் தவிர வேறு உலகியல் பொருட்களைக் கொண்டு வருவதில்லை.  அதுபோல் இப்பூவுலகைவிட்டு செல்லும் போதும் உலகியல் பொருட்கள் ஒன்றையும்  கொண்டு செல்வதில்லை.  ஆனால்

    வரும்போது கொண்டு வந்த  சஞ்சித வினைமூட்டையைக் காலி செய்யாமலும்,

    வாழ்நாளில் சேர்த்த பிராரப்த மற்றும் ஆகாம்ய வினைகளையும் சேர்த்து கொண்டு போவதைத் தவிர

    சேர்த்து வைத்த உலகியல் பொருட்களை யாருமே கொண்டு செல்ல  முடியாது.

    எங்கு போகிறோம் என்பதே தெரியாது, போகின்ற இடத்தில் எங்கு வைப்பது கொண்டு செல்கின்ற

    பூவுலகில் சேர்த்தப் பொருட்களை?

          இந்த  எதார்த்தத்தை எல்லோரும் அறிந்திருந்தாலும் உலக மக்கள்  பிறப்பு இறப்பு எனும் சக்கரத்திலிருந்து(cycle of birth and death) விடுபடவில்லையே!  ஆனால் ‘காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’ என்கின்ற தெய்வீக அறிவுறுத்தல்தானே(எதார்த்த வாழ்வின் அறிவுறுத்தல்தானே!) பட்டினத்து சுவாமிகளுக்கு  ஞானத்தைத் தந்தது.  ஆன்மீக சரித்திரத்தில் அழியா இடம் பெற்றதோடு வருங்கால சந்ததிக்கு  எப்போதும் உதவக்கூடிய வாழ்க்கையைப்பற்றிய எதார்த்த உண்மைகளை விளங்கங்களாகத் தந்துள்ளார் பட்டினத்து சுவாமிகள்.

     பட்டினத்து சுவாமிகளை தடுத்தாட்கொண்ட  நிகழ்ச்சி:

       ஒருநாள் இரவு பட்டினத்தடிகள் விநாயகர் கோவில் ஒன்றில் தியானம் செய்துகொண்டிருந்தார்.  பத்திரகிரி என்கின்ற அரசனது அரண்மனையில் பல விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையிட்டு திரும்பிக் கொண்டிருக்கும்போது, நள்ளிரவில் விநாயகர் கோவிலுக்கு வந்தனர் கொள்ளையர்கள்.  விநாயகரை வணங்கி, விநாயகருக்கு ஒரு மணிப்பதக்கத்தை அணிவிக்க எண்ணினர் கொள்ளையர்கள். இருட்டில் அங்கு தியானத்தில் இருந்த பட்டினத்தடிகளின் கழுத்தில் தவறுதலாக அணிவித்துச் சென்று விட்டனர்.  மறுநாள் அரண்மனைக் காவலர்கள் சோதனைக்கு வந்தபோது  அகப்பட்டுக் கொண்டார் பட்டினத்தடிகள்.  கழுவில் ஏற்றுமாறு அரசன் உத்திரவு பிறப்பித்தான்.  அப்போது “என்செயலாவது யாதொன்றுமில்லை” என்று பாட, கழுமரம் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அதனைக் கேட்டறிந்த பத்திரகிரியார் ஓடிவந்து பட்படினத்து சுவாமிகளிடம் மன்னிப்பு கேட்டு சரணடைந்தார்,  அவருக்கு ஞான உபதேசம் செய்து அருளினார் பட்டினத்து சுவாமிகள்.  பின்னாளில் பத்திரகிரியாரும் ஞானம் பெற்றார், அந்த அருட்பாவை பட்டினத்து சுவாமிகளின் வாய்மொழியாகவே அறிவோம்.

    FFC-272-பட்டினத்தார்-3-12-17

     விளக்கம்:  இறைவனே! எல்லாம் உன் செயலால் மட்டுமே நடக்கின்றது  என்செயல் என்று ஒன்றும் இல்லை.  இங்கு நடக்கும் அனைத்தும் உன் செயலே என்பதை உணர்ந்து கொண்டேன்.   இந்த உடம்பை  எடுத்த பிறகு இந்த பிறவியில் நான் செய்த தீவினை ஏதும் இல்லை.  ஆனால் இப்புவியில் பிறந்து நான் படும் துன்பங்களுக்கு காரணம் முற்பிறவியில் யான் செய்த பாவத்தின் விளைவாக வந்திருக்கலாம்.

           ‘வினைப்போகமே ஒரு தேகம் கண்டாய்’ என்கின்ற மறுபிறவிக்கான  காரண-உண்மையினைக் கண்டுபிடித்த பட்டினத்து சுவாமிகளை கழுகேற்றும்போது, அவரை தன்னிடம் பரிபூரண சரணாகதி  அடையச் செய்து தடுத்தாட்கொண்டார் இறைவன்(இறைவன்/இறை).  அது மட்டுமின்றி அரசரான பத்திரகிரியாரையும் தெளிவு பெறச்செய்து அவரையும் அருட்பாதைக்கு அழைத்துக் கொண்டார் இறைவன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்திருக்கிறார் போலும் இறைவன்(இறைவன்/இறை)! அரச பதவியைத் துறந்த பத்திரகிரியாரும்  பின்னாளில் ஞானத்தை முழுமையாக அடைந்தார். நலம் பயக்கும் என்பதால் மற்றொரு அறிஞரையும் இங்கே நினைவு கூர்வோம்.  அந்த மற்றொரு அறிஞர் புத்தராவார்.

     துன்பம் ஏன் வருகின்றது என்று ஆழ்மனம் எழுப்பிவிட்டால் நடப்பது என்ன?

         புத்தரும் அரசனின் ராஜகுமாரன். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையுமாகிவிட்டார்.   அந்நிலையில்  துன்பம் ஏன் வருகின்றது என்கின்ற வினாவை எழுப்பக் கூடிய காட்சிகளைக் கண்டார் என்பது அனைவரும் அறிவர்.  யாரிடமும் கேட்டும் அதற்கு  விடை கிடைக்கவில்லை.  விடைகாண அன்று இரவே அரண்மனையிலிருந்து வெளியேறி துறவு பூண்டார் என்று சரித்திரம் கூறுகின்றது. இங்கே மகரிஷி அவர்கள் கூறுவதனை  நினைவில் கொள்வது சிறப்பாகும்.

     ‘யார் ஒருவருக்கும் துன்பம் ஏன் வருகின்றது என்கின்ற வினாவை ஒருவரின் அடிமனம் எழுப்பி விட்டால் அவர் இப்பிறவியிலேயே பிறவிப்பயனை அடைந்துவிடமுடியும்’ என்கின்ற மகரிஷி அவர்களின்  இன்றைய (இருபதாம் நூற்றாண்டின்) பொன்னான அனுபவக்கூற்று. ‘ஏன் துன்பம் வருகின்றது?’ என்கின்ற கேள்வி  ஏற்கனவே இருபது  நூற்றாண்டுகளுக்கு  முன்னரேயும் எழுந்து, விடைதேடுதலில் முடிவாக  ஞானம் அடையச்செய்துள்ளது இயற்கை/இறை என்பதனை அறியமுடிகின்றது.  எனவே ‘ஏன் துன்பம் வருகின்றது?’ என்று அடி மனம் எழுப்புகின்ற வினாவில் உள்ள அறிவியல்(சூத்திரம்) என்ன என்றும் அதற்கான விடை கிடைத்தலில் எவ்வாறு  அறிவியல் ரீதியாக இறையை உணர முடிகின்றது என்பதனை மனவளக்கலைஞர்கள் சிந்தனை செய்து அறிந்து கொள்ளுதல் நலம் பயக்கும். 

      ‘யார் ஒருவருக்கும் துன்பம் ஏன் வருகின்றது என்கின்ற வினாவை ஒருவரின் அடிமனம் எழுப்பி விட்டால் அவர் இப்பிறவியிலேயே பிறவிப்பயனை அடைந்துவிடமுடியும்’ என்கின்ற மகரிஷி அவர்களின் பொன்னான குறிப்பினை   மீண்டும் நினைவில் கொள்வோம்.  இதற்கு ஓர் உதாரணம், வேதாத்திரி மகரிஷி அவர்களே ஆவார்.  எப்படி?  வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு இளமையிலிருந்தே ஆன்ம தாகம் ஆரம்பித்து விட்டது,   அதன் விளைவாக பன்னிரண்டு வயதிற்குள்ளாகவே அவரது உள்ளம் சில குறிப்பிடத்தக்க வினாக்களை எப்போதும் எழுப்பிக் கொண்டேயிருக்கத் தொடங்கியது.  பின்னாளில் அவரை ஒரு மாபெரும் மனிதராக, உலகம் உள்ளளவும் அவர் புகழ் மறக்கப்படாமல்  இருக்கச் செய்த அந்த வினாக்கள் என்ன?

    மகானாக்கிய மகோன்னத வினாக்களே அவை.

    1. இன்பம் துன்பம் என்கின்ற உணர்ச்சிகள் யாவை?  இவற்றின் மூலமும் முடிவும் என்ன?

    2. நான் யார்? உயிர் என்பது என்ன? உயிர் உடலில் எவ்வாறு இயங்குகின்றது?  நோயும் முதுமையும் ஏன் உண்டாகின்றன? எப்படி உண்டாகின்றன?

    3. கடவுள் என்பவர் யார்? பிரபஞ்சத்தை ஏன் அவர் படைத்தார்?

    4. ஏழ்மை ஏன், எப்படி உண்டாயிற்று?  அதைப் போக்குவதற்குவது எப்படி?

    இந்த நான்கு வினாக்களில் ஒன்று ‘இன்பம் துன்பம் என்பது என்ன?’ என்கின்ற வினாவும் இருப்பதனைக் காணலாம்.  பின்னாளில் இந்த நான்கு வினாக்களுக்கும் கிடைத்த விடைகளே இப்போது நம்மால் போற்றி போற்றி வணங்கி ஏற்றுக்கொள்ளபட்டுவரும் திருவேதாத்திரியம் ஆகும்.  இதனை  நாமும் பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கின்ற ஆன்றோர் மொழிக்கேற்ப திருவேதாத்திரியத்தை சமுதாயத்திற்கு கொண்டு செல்லும் அரிய அறிவுப்பணியை மகரிஷி அவர்கள் உள்ளிட்ட  இதுவரை அவதரித்துள்ள அனைத்து  அருளாளர்களின் ஆசிகளின் துணை கொண்டு உலகநலத் தொண்டு செய்து வருவதற்கு காரணகர்த்தாவாக அமைந்தன அவ்வினாக்களின் விடைகள்.  இதனை நினைக்கும்போது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.  வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    ‘துன்பம் ஏன் வருகின்றது’ என்கின்ற வினாவை ஒருவரின் அடிமனம் எழுப்பி விட்டால் அவர் இப்பிறவியிலேயே பிறவிப்பயனை அடைந்துவிடமுடியும்’ என்று பின்னாளில் மகரிஷி அவர்கள் கூறிய பொன்னான கூற்று  அவர்களது வாழ்க்கையில் நிஜமாகியுள்ளது என்பதனை அறிய முடிகின்றது.  இல்லை!  இப்படி கூறுவதைவிட  அவரது வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கையில் அனுபவித்த அனுபவ-உண்மையை பின்னாளில் அவர் சமுதாயத்திற்காக கூறியுள்ளார் என்று கூறுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    ஒப்புதல் அளித்தல்(Confession)

    முன்னோர்கள் செய்த நல்வினைப் பயனாலும் நன்மைகளும், தீவினைப்பயனால் தீமைகளும் வரும் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  நல்வினைப்பயன் என்பதற்கான உதாரணத்தைக் கவனிப்போம்.  நம் அனைவரின் வாழ்விலும் நடந்துள்ள நிகழ்ச்சியே அந்த உதாரணம்.  நம் முன்னோர்கள் செய்த நல்வினைப் பயனால்தான் இருபதாம் நூற்றாண்டில் கிடைத்தற்கரிய ஜகத் குருவைத் தரிசித்ததும்,  தொடர்ந்து அவரது பாதையில் கீழ்படிதலுள்ள மாணவர்களாக (implicit obedience) சென்று கொண்டிருக்கிறோம் என்பது மாதா பிதா செய்துள்ள நல்வினைப்பயனே ஆகும்.

    ஒரு வேளை மனிதன் இப்பிறவியில் ஏதும் தீவினை செய்யாதிருப்பினும்,  துன்பம் ஏதேனும் அனுபவிக்க நேர்ந்தால் அது அவனது முன்னோர்கள் செய்த தீயவினைப்பதிவுகளை பெற்றோர்களின் மூலம் பிறந்த போது கொடுத்தனுப்பிய ‘சஞ்சிதகர்மா’ என்னும் வினை மூட்டையிலிருந்து அவிழ்ந்த முடிச்சே ஆகுமே அன்றி  வேறு எதுவும் காரணமில்லை என்பதனை உணர்ந்து கொண்டு ‘துன்பம், தான் செய்த தீவினையால்தான் வந்தது’ என்றுணர்ந்து  ஒப்புதலை(confession) அளிக்கும் முகத்தான் இயற்கை/இறையிடம் அறிவியல் ரீதியாக சரண் அடைந்து விட  வேண்டும் மனிதன்.  அது என்ன அறிவியல் ரீதியான சரண்?

    அறிவியல் ரீதியாக இறையிடம்  சரண்:

    தன்முனைப்புள்ள நானிலிருந்து (Egoful I) ‘தன்முனைப்பில்லா நான்(Egoless I) ஆகி பண்பேற்றம் பெற்று அறிவை முழுமைப்படுத்துவதற்கு   இயற்கையிடம்/இறையிடம் அறிவியல் பூர்வமாக சரணடைய வேண்டும். (To become ‘Egoless I’ surrender scientifically to Nature/God)அறிவியல் ரீதியாக இறையிடம் சரணடைய, நம் குருநாதரின் மானசீகக் குருவான   சித்தர் வழி அவதரித்த திருமூலர் நமக்கு அறிவுறுத்தக் காத்துக் கொண்டிருக்கிறார்.  நாமும் திருமூலரை உடல், மனம், மொழி ஆகியவற்றால் வணங்கி குருநாதரின் மானசீகக் குருவை நாமும் மானசீகக் குருவாக ஏற்றுக் கொள்கிறோம்.  நம் மானசீகக் குருவான திருமூலர்  ‘சஞ்சிதகர்மா’ எனும் வினைமூட்டையிலுருக்கும் வினைமுடிச்சுகளை எல்லாம்  அவிழ்க்கக்  கூறும் அறிவுரையை  அச்சித்தர் பெருமானார் வாய்மொழியாகவே அறிவோம்.

    FFC-272-திருமூலர்

     

    அன்றும் இன்றும் துறவு பூண்டது ஒரே பேரறிவுதான்:

    ஞானிகள் தோன்றுவது முடிவில்லா தெய்வீகத் தொடர் ஓட்டம்(Never ending Divine Relay Race).  வாழையடி வாழையாக அவதரிக்கின்ற திருக்கூட்ட மரபினில் வருபவர்கள் அவர்கள். ஆனால் இன்றுள்ள உலக மக்கள் தொகைக்கு இந்த உணர்ந்தவர் உணராதவர் விகிதாசாரம் போதுமானதன்று என்று இயற்கை/இறை எண்ணி, கருணை கொண்டு இந்தக் குறைவான விகிதாசார நிலையினை உயர்த்துவதற்கு இருபதாம் நூற்றாண்டில்(1911 ற்குப் பிறகு) மனவளக்கலையினை அருளியுள்ளது என்றால் அது மிகையே அன்று.  இது அனுபவ பூர்வமாக காணுகின்ற நிகழ்வு என்பதால் மிகையாகாது. வேண்டியதெல்லாம் வினைகளைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும்.  அதுவும் தொடர் விடாமுயற்சியால் அழுகணி சித்தரைப்போன்று பழக்கப்பதிவுகள் வந்து பயமுறுத்தினாலும் தெய்வமாகும் மனவளக்கலைப் பயிற்சிப் பயணத்தில் வெற்றி பெற்றே தீருவேன் என்கின்ற உறுதியோடும், திடத்தோடும் இருந்து பயிற்சிகளை செய்து வரவேண்டும். என்பதே அழுகணி சித்தர் மற்றும் மகரிஷி அவர்களையும்  உள்ளடக்கிய வாழையடி வாழையாக வரும் திருக்கூட்ட மரபினில் அவதரித்த எல்லா அருளாளர்களின் ஆசியுமாக உள்ளது  இந்த மனிதகுலத்திற்கு.

    கடுமையாக இருந்த துறவு இருபதாம் நூற்றாண்டில் எளிமையாகியது:

    பட்டினத்து அடிகள் செல்வந்தராக இருந்து துறவு மேற்கொண்டார் என்பதனை அறிகிறோம்.  ஆனால்   அது பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த கடுமையானத் துறவுநிலை. இந்த அறிவியல் மற்றும் பரபரப்பான உலகில் அது மக்களுக்கு பொருந்தாது/சாத்தியமாகாது.  எனவே இருபதாம் நூற்றாண்டில் இயற்கை/இறை எளிமை படுத்திக் கொடுத்துள்ள  துறவு நிலையை அறிந்து கொள்வோமே!

    சுத்த அத்வைத தத்துவப்படி அன்றும் பேரறிவுதான் பட்டினத்து அடிகளின் வழியாக அந்த துறவு நிலையை மேற்கொண்டு தன்னை உணர்ந்து கொண்டது.  இருபதாம் நூற்றாண்டிலும் அதே பேரறிவுதான் கருணை கொண்டு,

    பயத்தால் பெரும்பாலும் மக்களால்  ஒதுக்கப்பட்டுள்ள  ஆன்மிக வாழ்வை இல்லற வாழ்வோடு இணைத்து

    பயமின்றி மேற்கொண்டு,

    பிறவிப்பனை அடையும் பொருட்டு,

    துறவறத்தின் உண்மையை விளக்கத்தைக் கூறி,

    துறவறத்தை எளிமையாக்கி பொருளுடையதாக்கியுள்ளது

    ஒர் அறிஞரின் வாழ்க்கையின் வாயிலாக.

    அந்த அறிஞர் யார் என அறிந்து கொள்ள ஆவல் உள்ளதல்லாவா!!

    அந்த அறிஞரின் வாழ்க்கையின் வாயிலாக இயற்கை/இறை என்ன செய்தியினை கூறியுள்ளது என்பதனை  அடுத்த அறிவிற்கு விருந்தில்(06-12-2017-புதன்) கருமையம் பாகம் மூன்றில் அறிந்து கொள்வோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                 வளர்க அறிவுச் செல்வம்