இன்றைய விருந்து

  • இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும். 3/?

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

     
    அ.வி. 197

    12-06-2016-ஞாயிறு

    FFC-197-12-6-16-இறைநீதியின்-sub title

    ‘இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்’ என்கின்ற தலைப்பில் கடந்த இரண்டு அறிவிற்கு விருந்துகளில் சிந்தித்து வருகிறோம். இன்று செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற தத்துவத்தை ‘கூர்தலறம்’ என்று பெயரிட்டு, அதனை இறைநிலையின் திறன்களில் மூன்றாவதாக ஏன் அழைக்கிறார் மகரிஷி அவர்கள் என்றும், கூர்தலற நெடிய – முடிவில்லாத் தொடர் பயணத்தின் மூன்றாவது பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவு எவ்வாறு இறையால்/இயற்கையால் கருமையப் பாலங்கள் வழியாக வழங்கப்படுகின்றது என்பதனை அறிய இருக்கிறோம்.
    செயலுக்கு ஏற்ற விளைவைத் தருவது என்பதால், கூர்தலறம் என்பது பெரும்பாலும் மனிதனுடைய செயலுக்கு விளைவினைத் தருவது என்கின்ற கண்ணோட்டத்தில் மட்டுமே விளங்கிக் கொள்ளப்பட்டுவருகின்றது.
    இறையின் மூன்று திறன்களில்(capabilities) ஒன்றாக இருக்கும் கூர்தலறம்,
    தன்னுடைய பரிபாலனத்தை,
    மனிதன் தோன்றிய பிறகுதானா,
    அவனுடைய செயலுக்கு ஏற்ற விளைவினைத் தருவதில் மட்டுமா,
    ஆரம்பித்திருக்கும்? அப்படி இருக்க முடியுமா?!

    இறைமுழுவதுமாக வெளியாக இருந்தபோது, அதாவது முதல் துகள்கூட உருவாவதற்கு முன்னர், அதற்கு ஆட்சியோ, ஆளுகையோ தேவையில்லை. ஆனால் எப்போது முதல் துகள் உருவாக ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே கூர்தலறம் செயலுக்கு வந்து விட்டது. ஏனெனில், இறைவெளியின் முதல் துகள் என்பது இறைவெளியின் முதல் செயலுக்கான விளைவு. இறைவெளியின் தன்னிறுக்கச் செயலால் உருவாகிய துகள்களை விளைவாகத்தானே கருதமுடியும்?
    நொறுங்கியது மட்டுமல்ல நொறுங்கியவுடன் சுழலவும் ஆரம்பித்துவிட்டது. சுழல்வதும் விளைவுதான். சுழற்சி என்கின்ற விளைவிற்கு தொடர் விளைவும் ஏற்பட்டுள்ளது. அது எது?
    தன்னுடைய செயலாகிய நொறுங்குதலால் துகளாகி, துகள் சுழன்றதன் விளைவாக விரிவலை தோன்றியது; அதன் தொடர் விளைவு தான் காந்தம். மேலும் பஞ்சபூதங்களாகி, காந்தத்தின் திணிவால், அழுத்தமாக, ஒலி, ஒளியாக, சுவையாக, மணமாக தன்மாற்ற தொடர் விளைவுகளாகியது. இந்த காந்த தன்மாற்ற விளைவுகளை உணா்வதற்காக ஓரறிவு உயிரினங்களிலிருந்து ஐயறிவு வரை சீவஇனங்களாகத் தன்மாற்றங்களாகியது. இப்போது நாம் சிந்திப்பதுபோல் தானே தன்னையே ரசிக்க, சிந்திக்க, ஆறாம் அறிவுடைய மனிதனாக வந்துள்ளது. இந்த தன்மாற்ற நிகழ்ச்சியில், சடப்பொருட்களாகியதும், உயிரினங்களாகியதும், இறையின் இயக்கம் தானே. எனவே, எவ்வாறு மனிதன், இப்போது தான் தயாரிக்கும் இயந்திரத்தில் அதன் இயக்கம் அதற்கான ஒழுங்கின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றானோ, அதுபோல்தான் இறையின் ஒவ்வொரு தன்மாற்ற நிலையிலும் ஒழுங்கு அவசியமாக இருக்கின்றது. அது இயல்பாக பேரறிவாகிய இறையில் இல்லை என்றால் தன்மாற்றமே வெற்றி அடைந்திருக்க முடியாது.

    இயக்கம் என்றாலே அதில் ஒழுங்கு இருக்க வேண்டும். இயக்கத்தில் ஒழுங்கு இருந்தால்தான் அந்தந்த இயக்கத்திற்குரிய விளைவு வரமுடியும். ஆகவே இயக்க ஒழுங்கே அறமாகும்.வ்வொரு இயக்கத்திலும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் அறத்தில், கூர்ந்து கவனித்து நுட்பமாகவும், நிச்சயமாகவும், இம்மிகூட பிசகாமல் உரிய விளைவுகளைத் தரக்கூடிய இறைத் தன்மையை ‘கூர்தலறம்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.
    தொடர் விளைவாகிய காந்தத்தை மலரச் செய்யக்கூடியத் திறமையைத்தான் மகரிஷி அவர்கள் இறைநிலையின் கூர்தலறம் என்கின்ற புனிதச்சொல்லால் அழைக்கிறார். தானே நொறுங்கியது. அது அதனுடைய செயல். நொறுங்கிய விளைவிக்குத் தொடர் விளைவாக காந்தமாக மலர்ந்ததும் இறையேதான். ஒன்றேதான் பலவாகியது என்பதால் செயல் புரிந்ததும், விளைவாக வருபவனும் அவனே என்றாகத்தானே இருக்க முடியும்! ஆகவே இறையின் கூர்தலறம் என்பது முதல் துகள் ஆனதிலிருந்தே ஆரம்பித்து விடுகின்றது. அது இன்றும் மனிதனுடைய 720 கோடி உலக மக்கள் வாழ்விலும் இடைவிடாது நொடிக்கு நொடி ஆளுகை புரிந்து கொண்டிருக்கின்றது. எப்போதும் மனிதர்களின் வாழ்வில் செயல்புரிந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது. அதாவது மனிதனுடைய ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவினைத் தந்து கொண்டிருக்கின்றது.
    ஆகவே கூர்தலறம் முதல் துகள் உருவானதிலிருந்து விளைவைக் கொடுக்க ஆரம்பித்து, இந்த நொடி வரை செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. இனிமேலும், எப்போதும் தவறாது செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இத்தகைய இறைவெளிக்கே உள்ள திறமையை ‘கூர்தலறம்’ என்கின்ற சொல்லை அறிமுகப்படுத்தி அழைக்கிறார் மகரிஷி அவர்கள். முதல் துகள் நொறுங்கியதிலிருந்து கூர்தலறத்தின் நெடிய பயணத்தை மூன்றாகப் பிரிக்கலாம்.

    1) முதலாவது, முதல் துகள் உருவானதிலிருந்து பஞ்சபூதங்கள் உருவாகியது வரை.

    2) இரண்டாவது, ஓரறிவு சீவனிலிருந்து ஐயறிவு சீவன்கள் தோன்றியது வரை.

    3) மூன்றாவது, ஆறறிவு சீவனாகிய ஆதிமனிதனிலிருந்து இப்போது வரை.

    இப்போது நாம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வது முன்றாவது பகுதியாகும். ஏனெனில் மற்ற பகுதிகளைவிட மூன்றாவது பகுதி மனிதனோடு சம்பந்தப்பட்டு இருப்பதால் தன்னைப்பற்றி அறிய மனிதனுக்கு ஆவல் அதிகம் இருக்கும் என்பதாலும், மேலும் மனிதகுலத்தில் மட்டும்தான், மனிதனால் ஏற்படுத்தப்படும் சிக்கல்கள் பெருகி தனிமனிதனிலிருந்து சமுதாயம் வரை துன்பக்கடலில் மூழ்கி அல்லறுவதால், அதற்கு தீர்வு காண்பதற்கு வழிவகுக்கும் இந்த மூன்றாம் பகுதியை மட்டும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். மற்ற இரண்டு பகுதிகளையும் மனிதன் அறிய வேண்டியதுதான். அதனை வேறொரு சமயத்தில் எடுத்துக் கொண்டு சிந்திப்போம். இறைநீதிதான் கூர்தலறம், செயல்விளைவுத்தத்துவம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த இறைநீதி எவ்வாறு பரிபாலனம் செய்கின்றது என்பதனை அறிந்து கொள்வோம். அதற்கு பரிபாலனம் என்றால் என்ன என்று அறிய வேண்டும்.

     பரிபாலனம் என்றால் என்ன?

    பரிபாலனம் என்றால் ‘நிர்வாகம்’, ‘ஆட்சி’ ‘ஆளுகை’ ‘காவல்’ ‘பாதுகாப்பு’(protect)என்று பொருள். உதாரணத்திற்கு: — அரசர் ராஜ்யத்தை நீதி தவறாமல் பரிபாலனம் செய்தார். ஆட்சி பரிபாலனம் என்றால் பாதுகாப்புடன் செய்தல் என்று பொருள். நீதிபரிபாலனம் என்றால் நீதிதவறாமல் ஆட்சிசெய்தல் என்று பொருள். நீதிதவறாமல் ஆட்சி செய்தாலே அது பாதுகாப்பான ஆட்சியாகத்தானே இருக்கும். ‘ராஜ்யபரிபாலனம்’ என்றால் ‘to reign well’ என்று பொருள். ‘இறையின் நீதிபரிபாலனம்’ என்றால் ‘செயலுக்குரிய விளைவை’த் தரக்கூடிய நீதி, நோ்மை உடைய செங்கோலாட்சி இறையால் நடத்தப்படுகின்றது என்று பொருள்.
    இதுவரை தலைப்பிலுள்ள சொற்களான, இறை, நீதி – கூர்தலறம், பரிபாலனம் ஆகியவற்றிற்கான பொருட்களை அறிந்து கொண்டோம். கருமையம் என்பதனை ஏற்கனவே அறிவோம். கருமையம் என்பது மனிதனின் பெருநிதி. மனிதனின் செயலுக்கேற்ற விளைவைத் தரும் தெய்வீக நீதி மன்றம். வங்கியில்(bank) பணம் செலுத்தும் போதும், எடுக்கும் போதும் குறிக்கப்படும் Pass Book ஐப் போன்றது கருமையம். வங்கியில் ஒருவர் செலுத்தும் பணத்தை செலுத்துபவரின் கணக்குப்புத்தகத்தில்(Pass Book) குறிப்பதோடு மட்டுமல்லாது, வங்கியின் பதிவேட்டிலும் (ledger) குறிக்கப்படுவதுபோல் வான்காந்தத்திலும் ஒரு தனிமனிதனின் செயல்பதிவுகள் கருமையத்தில் பதிவாவது போல் பதிவாகின்றது. கருமையப்பதிவு பற்றியும், வான்காந்தப் பதிவுபற்றியும் எளிதில் புரிந்து கொள்வதற்காக இந்த உதாரணம் எடுத்துக் கொள்ளப்பட்டது, இதற்கு மேலும் சிந்தனையில் ஆழ்ந்து சென்று, இவ்விரண்டு மறைபொருட்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

    பாலம் என்றால் என்ன?

    இப்போது ‘பாலங்கள்’ என்கின்ற சொல்லிற்கு வருவோம். பாலம் என்றால்  இரு பகுதிகளை இணைப்பதற்கானப் பாதை(bridge). செயலுக்குரிய விளைவைத் தருவது இறைநீதி – செயல் விளைவு நீதி. மனிதன் செய்யும் செயல்களுக்குரிய விளைவு இன்பமாகவும் இருக்கலாம். அல்லது துன்பமாகவும் இருக்கலாம். இன்பம், துன்பம் என்பது செயலின் தன்மையைப் பொருத்திருக்கும். செயலுக்கான விளைவு கருமையப்பாலங்களின் வழியாகத்தான் வருகின்றன. எவ்வாறெல்லாம் இறை நீதி பரிபாலனம் செய்கின்றதை அறிய கருமையப் பாலங்கள் பற்றிய சிந்தனை உதவியாக இருக்கும். மனிதனின் செயலுக்குரிய விளைவுகள் ஒன்று இன்பமாக இருக்க வேண்டும். அல்லது துன்பமாக இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் கருமையப் பாலங்கள் வழியாகத்தான் (channels) மனிதனை வந்தடைய வேண்டும். கருமையம் நான்கு வகையிலே, மனிதனின் செயல்களையும் அதற்கான விளைவுகளைத் தருவதில் மனிதனை இணைக்கின்றது. அந்த கருமையப் பாலங்கள் என்னென்ன?
    1) உடலுக்கும் – மனதிற்கும் இடையே உறவாக ( ஒத்த உறவு – co-ordination)
    2) தனிமனிதனுக்கும் – சமுதாயத்திற்கும் இடையே நட்பாக (நட்புநலம்)
    3) மனிதனுக்கும் – பூமி முதலான நவகோள்களுக்கும் இடையே இனிமையாக(இனிமை காத்தல்)
    4) மனிதனுக்கும் – அருட்பேராற்றலுக்கும் இடையே அருட்பாலமாக ( அருளைப் பெறுதல்)
    இவ்வாறாக இணைப்புகளாக, பாலங்களாக அமைந்து மூன்று மறைபொருட்களான, இறை, உயிர், மனம் ஆகியவற்றின் இருப்பிடமாக (Store House) அமைந்ததுதான் கருமையம். இருந்தாலும் மனிதனுள் மற்ற உறுப்புகள் போல் அல்லாமல் கருமையம் மறைந்தே இருப்பதால், இதனை மறைபொருள் என்றும், அதுவும் மகாமறைபொருள் என்றும் கூறலாம். ஏனென்றால் அது ஒரு தெய்வீக நீதிமன்றமல்லவா?
    இந்த நான்கு பாலங்கள் வழியாகத்தான் மனிதனுடைய செயல்களுக்குரிய விளைவுகளான இன்பமோ, துன்பமோ, அமைதியோ, பேரின்பமோ வருகின்றது.

    செயலின் விளைவு துன்பமாக இருந்தால் அச்செயல் பாவம் என்றும், இன்பமாக இருந்தால் அச்செயல் புண்ணியம் என்றும் கூறுகிறோம். பாவப்பதிவுகளின் சின்னம் உடலில் நோய், உள்ளத்தில் களங்கம். உடலைப் பேணிக்காக்காமல் அலட்சியத்தாலோ, அறியாமையாலோ உடலை இயக்கினால் வருவது துன்பமாகிய நோய். உதாரணம் — அதிக உணவு துன்பமாகிய அஜீரணத்தை ஏற்படுத்தும். உள்ளத்தில் களங்கம். களங்கம் என்றால் அவப்பெயர்; ஒழுக்க நடத்தையில் கெட்டப் பெயர். உடலுக்கும் மனதிற்கும் இடையே ஒத்தஉறவு இருக்க வேண்டும். நல்வாழ்விற்கு உடலுக்கும் மனதிற்கும் இணக்கம் வேண்டும்.

    தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே இனிமை காக்க வேண்டும். மனிதன் தனித்து வாழ்வதில்லை. சமுதாயத்தில் இருந்துகொண்டு, சோ்ந்துதான் வாழ்கிறான். அப்போது தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் சுமுக உறவு இருக்க வேண்டும். வாழ்க்கை வள உயர்வுப் படிகளில் ஒன்றான நட்பு நலம் அவசியம். நட்புநலம் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுகின்றது. காரணம், அவரவர்களின் கருமையப் பதிவுகளே. நட்புநலம் இல்லை எனில் பகை, வெறுப்பு, பிணக்கு ஆகியவை ஏற்பட்டு, அவற்றின் விளைவுகளாகத் துன்பங்கள் உண்டாகும். கருமையப் பதிவுகளுக்கு ஏற்பதான் நட்புநலம் இருக்கும்.

    மனிதனுக்கும் கோள்களுக்கும் தொடர்பு உள்ளது. ஒவ்வொரு கோள்களிலிருந்தும் வரும் காந்த அலைகள் மனிதனை வந்தடையும் போது சில மாற்றங்களை உடலிலும், உள்ளத்திலும் ஏற்படுத்துகின்றது. நல்ல கருமையப்பதிவுகள் இருப்பின் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இன்பத்தையும், தீய கருமையப்பதிவுகள் இருப்பின் துன்பங்களையும் ஏற்படுத்தும். இவ்வாறாக மூன்றாவது வழியாக கருமையப்பதிவுகளுக்கு ஏற்ப துன்பமோ அல்லது இன்பமோ வருகின்றன.

    மேற்கூறிய மூன்றின் வழியாக துன்பத்தையோ அல்லது இன்பத்தையோ விளைவுகளாக தருவதோடு மட்டுமல்லாது மனித வாழ்வு சிறப்புற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு அவசியமான இறையருளைத் தருவதற்கும் நான்காவது இணைப்பை பயன்படுத்திக் கொள்கின்றது கருமையம். கருமையப் பதிவுகளுக்கு ஏற்ப இறையருளுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு தகுந்த குருவை தரிசிக்க வைப்பதுகூட கருமையப்பதிவுகளே. அதனால்தான் குருவை தரிசிப்பதுகூட பூர்வபுண்ணியத்தால்தான் என்பர் பெரியவர்கள்.

    பூர்வபுண்ணியம் திடீரென்று எங்கிருந்து வருகின்றது?

    கருமையத்திலிருந்து வருகின்றது. ஏற்கனவே செய்துள்ள நற்காரியங்கள் ஒவ்வொன்றும் கருமயத்தில் பதிந்துள்ளன.  நற்காரியங்களில் சிலவற்றிற்கு பயன் உடனேவும் வரலாம். அல்லது சில நேரங்களில் நற்காரியங்கள் செய்த அன்றே, விளைவுகள் உடனே வராமல், ஏற்கனவே பதிந்துள்ள கருமைய–நற்பதிவுகள் பின்னர், உரிய நேரத்தில் நல்விளைவுகளை ஏற்படுத்தும்.  அப்போது இப்போது வரும் நல்விளைவை ஏற்கனவே செய்துள்ள நற்செயல்களோடு இணைத்துப்பார்க்க முடியாமலும் இருக்கலாம். காரணம் இப்பிறவியில் செய்துள்ளதாக அந்த நற்செயல்கள் இருந்தாலும் அவை மனிதனின் ஞாபகத்தில் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அல்லது இப்பிறவியில் அந்நல் வினைகள் செய்யாதிருந்து நம்முடைய முன்னோர்கள் செய்திருந்து கருமையத் தொடர்பாக நம்மிடம் வந்து, விளைவுகள் இப்போது நம் வழியாக வரலாம். இந்த நேரத்தில்தான் நல்விளைவுகள் வரும்போது ‘பூர்வபுண்ணியத்தால் வந்தது’ எனப்படுகின்றது.

    அடுத்த விருந்தில் (15-06-2016-புதன்) குருதரிசனத்தையும், அதன் பின்னர் சீடனிடம் ஏற்படும் மாற்ற விளைவுகளையும், முன்னேற்றங்களையும், கருமையம் தன்னிடம் பதிந்துள்ள பதிவுகளுக்கேற்ப, தனது நான்காவது பாலத்தின் வழியாக நிறைவேற்றுவது பற்றி அறிவோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்’ 2/?

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

     
    அ.வி. 196

      08-06-2016 – புதன்

     

    FFC-196-SUB TITLE

    சென்ற விருந்தில் கருமையம் ஒரு surveillance camera என்றும் அது மனிதனின் முத்தொழில்களையும் தப்பாது பதிவு செய்து, அதற்குரிய விளைவை அவ்வப்போது தந்து கொண்டிருக்கும் தெய்வீக நீதிமன்றம், என்றும் இறையைப்பற்றி சுருக்கமான விளக்கத்தையும் அறிந்து கொண்டோம்.
    இப்போது ‘நீதி’ என்பது என்ன என்று அறிவோம். நீதி என்பது,
    1) காரணங்களைக் கூறி நடுநிலையோடு வழங்கும் முடிவு,
    2) எது சரி, எது தவறு என்கின்ற ஒழுங்கைக் கூறுவது.
    3) ஒன்றை நெறிப்படுத்துதலையும் குறிக்கும்.

    அதாவது நெறிபடுத்துதல் என்பது மனித ஒழுக்கத்திற்காக மேற்கொள்கின்ற முறை.
    நீதி என்பது என்ன என்று இப்போது அறிந்து கொண்டோம். இறை என்பது என்ன என்று நமக்குத் தெரியும். பேரறிவே இறை; ஒழுங்காற்றலே இறை. ‘இவ்விரண்டு சொற்களின் பொருளைக் கொண்டு இறைநீதி என்பதனை மனிதன் எவ்வாறு சுருக்கமாக ஒரே வாக்கியத்தில் விளங்கிக் கொள்ளலாம் என்றால்: …
    இறைநீதி என்பது, காரணங்களோடு, நடுநிலையோடு இருந்து, எது சரி, எது தவறு என்று ஒழுங்குடன் முடிவெடுக்கின்ற, ஒழுங்கை நெறிப்படுத்தும் திறனாகும்.
    இறை, தன்னுடைய பூரணத்தால்,
    பஞ்சபூதங்களாகி, ஓரறிவிலிருந்து ஐயறிவு உயிரினங்களாகி, கடைசியாக ஆறாம் அறிவுடைய மனிதனாகியுள்ளது. இம்மூன்றையும் இறை எவ்வாறு ஆளுகை செய்ய முடியும்?
    ஒரு உதாரணத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். அலுவலகங்களில் ஒரு புதிய பதவி ஏற்படுத்தப்படும் போது அப்பதவிக்கான கடமையும், பொறுப்பும் (duties and responsibilities) என்ன என்று வரையறுக்கப்படும். அதாவது, அந்தப் பதவியில் அமர்த்தப்படுபவர், தான் செய்ய வேண்டிய கடமையைச் சீராகச் செய்வதற்கு, அவருக்கு அதிகாரமும் இருந்தால்தான், அந்த அதிகாரி திறம்பட, பொறுப்புடன் பணியாற்ற முடியும் என்பதால் அதிகாரமும் வழங்கப்படும்.
    மனித சமுதாயத்தை ஆட்சி செய்ய முறையான ஆட்சியை (conventional Governance) சமுதாயம் அமைத்துக் கொள்வதுபோல், இறைக்கு, அம்மாதிரியான ஆட்சி ஏதும் இல்லை. காரணம் இறைவன் அரூபி. உருவமற்றவன். இருந்தாலும் இறை ஆட்சியை நடத்த வேண்டுமல்லவா?. இப்போது, மகரிஷி அவர்கள் பேரின்பக் களிப்பில் இயற்றிய பாடலின் 48 வரிகளில் இறைவனை ‘ஆட்சியின்றி ஆளுகின்ற ஐயன்’ என்று குறிப்பிடும் வரியினை மட்டும் நினைவு கூர்வோம். (மீதமுள்ள வரிகளை அன்பர்களே வாசித்து இன்புறவும்.)
    பேரின்பக் களிப்பு (1984)
    “சின்னஞ்சிறு சிறுசெல்கள் சேர்ந்திணைந்து ஒத்துழைத்து,
    சிந்தனைக்கு எட்டாச்செயல்கள் சிறப்புடலில் நிகழ்த்துவன;
    முன்னம் ஒருதுளியான மூலவிந்து நாதத்தால்,
    முழுமையாய் எனதுஉடல் முற்றறிவன் திருவருளால்,
    சூட்சுமமாய்க் குறுகிநின்று தொடங்கியது தன்வளர்ச்சி;
    சொல்லறிய மறைபொருளாய்த் தொடர்ந்து வரும் வினைக்கேற்ப*,
    ஆட்சியின்றி ஆளுகின்ற ஐயன் திருவருளால்
    அன்னை கருப்பைவிடுத்து, அடைந்து விட்டேன் மண்ணுலகை! …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    *வினைக்கேற்ப—கூர்தலறத்தின் – செயலுக்கு(வினை) ஏற்ற விளைவைத்தரும் பரிபாலனத்தின்படி)

    இறை தானாகவே தன்மாற்றமாகியுள்ள
    அண்ட சராசரங்களையும் நெறி தவறாது இயக்கிக் கொண்டும்,
    உயிரினங்களில் உயிராக, அறிவாக இருந்து இயக்கியும், ஆளவும் செய்கின்றது. இதற்குத் தேவையான அதிகாரத்தை யார் அளிப்பது? யாரும் அளிக்க முடியாது? எல்லாம்வல்ல அதனிடமுள்ள இயல்பானத் தன்மையே தான் அந்த அதிகாரம், இறைநீதி என்பதே அது. எந்த ஒரு செயலுக்கும் (action) ஏற்ற (appropriate) விளைவினைத் (result) தரும் வல்லமை உடையது.
    இதனை இயற்கை நீதி (Law of Nature) என்றும் சொல்கிறோம்.
    செயலுக்கு ஏற்ற விளைவினைத் தருகின்ற செயல் விளைவுத் தத்துவம் என்றும் கூறுகிறோம்.

    ஆதிநிலைப் பொருளான மெய்ப்பொருளுக்கு வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் என்கின்ற நான்கு தன்மைகளையும், தன்மாற்றம், இயல்பூக்கம், கூர்தலறம் என்கின்ற மூன்று திறன்களையும் கூறுகின்றது திருவேதாத்திரியம். இந்த ஏழு சொற்களில் ‘கூர்தலறம்’ என்கின்ற சொல் இறைநீதியை/இயற்கை நீதியை/செயல்விளைவுத் தத்துவத்தை குறிக்கின்றது. ‘கூர்தலறம்’ என்கின்ற இச்சொல் தமிழ் மொழியில் ஏற்கனவே வழக்கில் உள்ள சொல்போல் தெரியவில்லை. புதிதாக, திருவேதாத்திரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்ச்சொல். ‘கூர்தலறம்’ என்பதனை ஆங்கிலத்தில் ‘cause and effect’ என்கின்றது திருவேதாத்திரியம். அதாவது விளைவிற்குக்(effect) காரணம்(cause) இருக்கின்றது என்று கூறும் நியதியை ‘cause and effect’ எனக் கூறாமல் வேறு எவ்வாறு கூறமுடியும்?
    கூர்தலறம் என்றால் என்ன? இறைநீதியை திருவேதாத்திரியம் ‘கூர்தலறம்’ என்பதால் அதற்கான விளக்கத்தையும் அறிந்து கொள்வோம். ‘கூர்தலறம்’ என்கின்ற சொல் தனித்த ஒரே சொல் அல்ல. அதில் ‘கூர்தல்’ மற்றும் ‘அறம்’ என்கின்ற இரு சொற்கள் உள்ளன. ஆகவே ‘கூர்தலறம்’ என்றால் என்ன என்று அறிந்து கொள்ள ‘கூர்தலறம்’ என்கின்ற சொல்லில் உள்ள இருசொற்களான கூர்தல் மற்றும் அறம் என்கின்ற இரு சொற்களின் பொருளையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
    ‘கூர்தல்’ என்கின்ற சொல்லை நம் ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம். ‘கூர்’ என்றால் — ஊசி, கத்தி போன்ற கருவியில் குத்தும் அல்லது வெட்டும் முனையாகும். கூர் என்கின்ற சொல்லுக்கு மேலும் சில பொருளைக் காண்போம். அதுதான் நம் சிந்தனைக்கு உதவ இருக்கின்ற பொருளாக இருக்கும்.
    கூர் என்றால், வைத்தல், செலுத்துதல், கொள்ளுதல் என்பது பொருள். உதாரணங்கள்:– அன்பு கூர்ந்து– இறைவன் நம்மீது கருணை கூர்ந்தார்.
    கூர்தல் என்றால் ‘கூர்’–‘கூர்ந்து’ என்கின்ற சொல்லின் பெயர்ச் சொல் வடிவம் கூர்தல்(noun form). கூர்ந்து என்றால் முழுக்கவனத்தையும் செலுத்துவது மற்றும் ‘உற்று’ ‘keenly’, ‘intently’, என்று பொருள். கூர்ந்து என்கின்ற சொல் ‘கவனி’, ‘பார்’, ‘நோக்கு’, ‘கேள்’ ஆகிய வினைச் சொல்லுடன் சோ்த்துச் சொல்லப்படுவது.
    கூர்ந்து கவனி, கூர்ந்துப் பார், கூர்ந்து நோக்கு. கூர்ந்து கேள்.
    ஆகவே கூர்தல் என்றால் என்ன என்று அறிந்து கொள்வோம். ‘நினைவு கொள்வோம்’ என்பதனை சில இடங்களில் ’நினைவு கூர்தல்’ என்கிறோம். ஏன்? ‘நினைவு கொள்வோம்’, ‘நினைவு கூர்தல்’ என்கின்ற இரண்டுமே ‘நினைப்பது’ என்கின்ற வினையைக் குறித்தாலும், இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. நினைவு கொள்வோம் என்பது ஏதோ நினைவிற்கு கொண்டு வருதல் (Just to remember) என்றாகின்றது. ஆனால் ‘நினைவு கூர்தல்’ என்பதில் கூர்தல் என்கின்ற சொல் சேர்ந்துள்ளதால் அச்சொல்லிற்கானப் பொருள் ‘நினைவு’ என்கின்ற வினைக்குச் சிறப்பைக் கூட்டுகின்றது.
    திருவேதாத்திரியத்தின் குருவணக்கம் என்கின்ற கவியின் இறுதியில்
    “அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,
    அதனை வாழ்ந்துகாட்டினோர், நினைவு கூா்வாம்”
    என்று முடிக்கிறார் மகரிஷி அவர்கள். நினைவு கொள்வோம் என்று முடித்திருக்கலாம். ஆனால் நினைவு கூர்வோம்(கூர்வாம்) என்று முடித்துள்ளார். இவ்வாறு அவர் முடித்துள்ளது, கூர்தல் என்கின்ற சொல்லின் சிறப்பைக்கருதியே. அவரின் அருட்கவித்துவத்தில் அந்த சொல் எழுத்துவடிவில் மலா்ந்து சிறப்புப் பெருகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். அருளாளர்களை நினைப்பது என்பது ‘Just to remember’ என ஆகி விடக்கூடாது என்று கருதிதான், அருளாளர்களை மரியாதையுடனும், மிகச்சிறப்புடனும் கூர்ந்து நினைவு கொள்ள வேண்டும் என்பதால்தான், ‘கூர்தல்’ என்கின்ற சொல்லால் அந்த மந்திரத்தின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும், பயனையும் எடுத்துக் கூறுகின்றது.
    அறம் என்பது என்ன? ‘கூர்தல்’ என்றால் முழுக்கவனத்தையும், உன்னிப்பாக செலுத்துவது என்று பொருளாகின்றது. கூர்தலறத்தில் உள்ள கூர்தல் என்கின்ற சொல்லிற்கான சிறப்பான பொருளை அறிந்து கொண்டோம். கூர்தலறம் என்கின்ற சொல்லின் மறுபாதியான அறம் என்கின்ற சொல்லின் பொருளையும் அறிந்து கொண்டு கூர்தலறம் என்கின்ற புதிய தமிழ்ச்சொல்லிற்கான புனித அர்த்தத்தை அறிந்து கொள்வோம். இறைவனை அறிய வேண்டுமெனில் அவன் புனிதத்தையெல்லாம் முதலில் அறிய வேண்டுமல்லவா? அப்போதுதான் இறைவன் மீது முழுக்கவனமும், நாட்டமும், ஆர்வமும், இணைப்பும்-பிணைப்பும், அன்பும் ஏற்படும்.
    அறம் என்பது என்ன? அறம் என்பதற்கு பொதுவான பொருள் என்ன? குடும்ப வாழ்வும், பொது வாழ்வும் சீராக இயங்க வேண்டுமானால் ஒருவா் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கக் கண்ணோட்டத்துடன் கூடிய நெறிமுறைகள் அல்லது கடமைகளே(ethical codes). இறையின் மூன்றுத் திறன்களைக் குறிக்கும் சொற்களில் தன்மாற்றம், இயல்பூக்கம், கூா்தலறம் ஆகியவற்றில் மூன்றாவதாக கூர்தலறத்தைக் குறிப்பிடுகின்றார் மகரிஷி அவர்கள்.
    1) ஆதிநிலையாகிய மெய்ப்பொருளே – வெட்ட வெளியே – இறைவெளியே, தன்னிறுக்கத்தால் நொறுங்கி, தானே மாற்றம் அடைந்ததால் அதனைத் ‘தன்மாற்றம்’ என்றும்,
    2) ஒரறிவிலிருந்து ஆறறிவு வரை உயரினங்களாக பரிணமிக்க வைத்த தனது தனது ஊக்கஇயல்பை ‘இயல்பூக்கம்’ என்றும், குறிப்பிடுகின்றார் மகரிஷி அவர்கள்.
    ஆதிநிலையின் முதல்இரண்டு திறன்களான தன்மாற்றம் மற்றும் இயல்பூக்கம் மட்டுமே இருந்து, கூர்தலறலம் என்பது இல்லாது இருந்து, துகள்களாகி, பஞ்சபூதங்களாகி, பிரபஞ்சமாகி, ஒரறிவிலிருந்து ஆறறிவு வரை உயிரினங்களாகியிருந்தால், இறை எவ்வாறு ஆட்சி நடத்த முடியும்? மூன்றாவது திறனான/தன்மையான கூர்தலறம் இல்லாதிருந்தால் ஆட்சியின்றி ஆளுகின்ற இறையின் ஆட்சி-without conventional Governance (பேரின்பக்களிப்பு – 1984 கவி எண் 1647 வரி எண் 11) எவ்வாறு இருந்திருக்கும் எனக் கற்பனை செய்து பார்ப்போம். இறை ஆட்சியே நடந்திருக்கமா? நீதியில்லாமல் எவ்வாறு ஆட்சி செய்ய முடியும்? அடுத்த விருந்தில் கூர்தலறம் என்கின்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டக் காரணத்தையும், கூர்தலறத்தின் நெடிய பயணத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள பயணத்தை மூன்றாகப் பிரித்தும், தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

    தொடரும் . 12-06-2016–ஞாயிறு

    Loading

  • ‘இறையின் நீதிபரிபாலனமும்* கருமையப் பாலங்களும்’-1/?

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    FFC – 195

     
    05-06-2016-ஞாயிறு

    FFC-195-SUB title-5-6-16

    வாழ்க வளமுடன்!

    இன்றைய அறிவிற்கு விருந்தாக ‘இறையின் நீதிபரிபாலனமும்* கருமையப் பாலங்களும்’ என்கின்ற தலைப்பினை எடுத்துக் கொண்டுள்ளோம். இவ்வரியச் சிந்தனைக்கு நம் குருதேவர் மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாள—அறிவாளிகளும் துணைபுரிவதற்கு, நாம் அவா்களை வணங்கி நினைவு கூர்வோம். *பரிபாலனம் என்பதற்கு ‘ஆளுகை’ (rule, governance), ‘அருளுதல்’ என்பது பொருள்.

    முதலில் ஏன் இந்த தலைப்பினை எடுத்துக் கொண்டுள்ளோம் என்பதனை ஆராய்ந்துவிட்டு தலைப்பிற்குள் செல்வோம். மனித மனம் எப்போதுமே ஆதாயத்தை தேடும் இயல்புடையது(Human mind is so calculative). ஆகவே இந்த தலைப்பின் சிந்தனையால் நாம் பெறப்போகும் ஆதாயம் என்ன என்று தெரிந்து கொண்டால் இச்சிந்தனையின் மீது ஆர்வமும், பொறுப்பும் மிகும்.

    என்றும் அழியாத ஆன்மா எடுக்கின்ற பிறவிகளை எண்ணிக்கையால் குறிப்பிட முடியாது என்பதால், எடுத்தபிறவிகளை, பெருங்கடலோடு ஒப்பிடுகிறார் திருவள்ளுவர். அந்தப் பெருங்கடலை நீந்துவதற்கு இறைவனடியைச் சேரவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அதாவது மீண்டும் மீண்டும் பிறப்பதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்கிறார். ஏன்? பிறவியில் இன்பம் மட்டுமே அனுபவிப்பதாக இருந்தால், பிறவி எடுத்துக் கொண்டே இருக்கலாமே என எண்ணலாம். அவ்வாறுதான் இல்லையே!

    இன்பம் மட்டுமே இருக்கும் பட்சத்திலும், அந்த நிலை எப்போதுமே நீடிக்குமா என்றால் அதற்கு என்ன உத்திரவாதம்? யார் உத்திரவாதம் அளிப்பது? உத்திரவாதம் என்பது கருமையப் பதிவுகளைப் பொருத்துதான் இருக்கும். இப்போது, கருமையப் பதிவும், தற்போதைய நேரமும்(அதற்கேற்றார்போல் வானில் கோள்களின் சஞ்சரிக்கும் நிலை கருமையப்பதிவுகளுக்கு உகந்ததாக) நன்றாக உள்ளது என்பதால் இன்பமாக இருக்கலாம். கருமையத் தீயப்பதிவு ஆதிக்கத்திற்கு வரும் காலத்தில், அதாவது பொதுவாகச் சொல்லப்படும் மனிதனின் கெட்டநேரத்தில் தீய விளைவுகளே வரும்.

    ஆகையால் எவ்வாறு பணம் எதிர்காலத்தில் தேவையிருக்கின்றதோ தேவையில்லையோ, தேவை வந்தால் செலவழிப்பதற்குச் சேமிக்கின்றோமோ, அதுபோல் புண்ணியத்தையும்(நற்செயல்கள் புரிவதனை) எப்போதும் செயலில் சேர்த்துக் கொண்டே வரவேண்டும். அதாவது ஒரு வேளை எதிர்காலத்தில் தீயப்பதிவுகள் வருவதாக இருந்தால், இது வரை செய்து வந்த புண்ணியப்பதிவுகளால், வருகின்ற தீயவினைப்பதிவுகளின் விளைவை எதிர்கொள்வதில் சிரமம் இருக்காது. அதாவது இப்போது நம்நேரம் நல்லதாக உள்ளது என்பதற்காக, நல்ல நேரத்திற்கு காரணமாக இருந்த ஒழுக்கத்தை மறந்து விடாமல் தொடர்ந்து ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.

    பிறவி என்பது ஆன்மாவிற்கு பிணியாகும். எனவே பிறவிப் பெருங்கடலை நீந்தியவர்கள், பிறவி என்பது ஆன்மாவிற்கான பிணியாகக் கருதி, அதனை பிறவிப்பிணி என்கின்றனர். மீண்டும் பிறவா வரத்தினை இறைவனிடம் வேண்டுகின்றனர் பக்தியில் சிறந்து விளங்கியவர்கள். பிறக்கும்போது பிணியோடு பிறப்பது என்பது பிறவிப்பிணியிலிருந்து வேறுபட்டது. பிறக்கும்போதே சில குறைபாடுகளுடன் பிறப்பது. கருமையத் தூய்மையின்மையால்தான் ஆன்மாவிற்கு பிறப்பே உண்டாகின்றது. ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கிறார் செல்வந்தராக இருந்து, தெளிவு பெற்று, தன்னிலை அறிந்து “காதருந்த ஊசியும் கடைவழிக்கே வாராது காண்” என்ற எதார்த்தத்தை எடுத்துச்சொன்ன பட்டினத்தார் அவர்கள். ஒருவர் பிறக்கும் போதே பிணியுடன் பிறப்பதும் கருமையத் தூய்மையின்மையால்தான்.

    பிறவியை பெருங்கடல் என்று கூறி அதனை நீந்திக் கடப்பதற்கு இறைவனடியைச் சேரவேண்டும் என்று கூறிய அன்றும், 2047 ஆண்டுகளுக்கு பின்னர், இன்றும் எல்லோராலும் வாழ்க்கையை சிரமின்றியும், துன்பமின்றியும் வாழ முடியவில்லையே!

    இன்று, இந்த 2047 ஆண்டுகளில் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாகிக் கொண்டுதான் வருகின்றது. அன்று வாழ்ந்த திருவள்ளுவர் இன்று உயிர்த்தெழுந்து வந்தால். ‘133 values வேண்டும் என்று கருதி ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களை எழுதி இரண்டாயிரம் ஆண்டுகள் சென்ற பிறகும், செவிடன் காதில் சங்கு ஊதியதுபோல் அல்லவா மக்கள் எல்லோரும் இருக்கின்றனா்’ எனக்கண்ணீர் விடுவார்.

    ஞானிகள் தோன்றுவது என்பது முடிவில்லாத் தெய்வீகத் தொடர் ஓட்டம் என்பதாலும், திருவள்ளுவரின் அறிவாற்றல் கண்ணீர் விட்டதால்தானோ, வேதாத்திரி என்கின்ற தன் சீடரைக் கொண்டு எழுதியதுதான் திருவேதாத்திரியத்தி்ன் 1854 பாடல்களோ?!

    விஞ்ஞானம் வளர்ந்து வருகின்றது என்றாலும், அதனை நோ்வழியில் பயன்படுத்தும் பண்பாடு வளராமையால், இரண்டு உலகப் போரினைச் சந்தித்துவிட்டது உலகம். இன்னும் பல தொடர் சிக்கல்களையும், துன்பங்களையும் சந்தித்துக் கொண்டுதான் வருகின்றது. மனிதகுலம் தனது பூர்வீகச்சொத்தான இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாகப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டதுபோல், அதே பூர்வீகச்சொத்தின் முதன்மையானதான அமைதியை அனுபவிக்கத் தெரியாமல், இழந்து, தவித்துக் கொண்டு வருகின்றது. இங்கே தனிமனிதனும் துன்பப்படுகிறான்; அதன் ஒட்டு மொத்த விளைவாக சமுதாயத்திலும் துன்பமே நிலவிவருகின்றது. சமுதாயச் சிக்கல்களுக்கும், துன்பங்களுக்கும் காரணம் இயற்கை/இறை நீதியை மதிக்காமையும், விளைவாக, நீதியை மீறினால் தண்டனை உண்டு என்கின்ற பயம் இல்லாமையும் தான் . இது எப்படி இருக்கின்றது என்பதனை இப்போது கவனிப்போம்.

    வேடிக்கைப் பார்த்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்கும் குழந்தை, ஊட்டுகின்ற உணவைச் சாப்பிட அடம் பிடிக்கும். அக்குழந்தைகளை உண்ணவைப்பதற்கு பல யுக்திகளைக் கையாள்வர் அன்னையர்கள். அதில் ஒன்று குழந்தையைப் போலியாக அச்சமூட்டி உணவை உண்ணவைப்பது. அச்சமூட்டுவது அன்னையர்களின் நோக்கமன்று. ‘இரண்டு கண்ணன்(இரண்டு கண்கள் இருப்பதால் அவ்வாறு சொல்லப்படுகின்றது) வருகிறான். சாப்பிடவில்லை என்றால் உன்னைப் பிடித்துக் கொண்டு போய்விடுவான்’ என்று கூறி அச்சமூட்டி உணவைச் சாப்பிடச் செய்வர். உண்மையில் எல்லோருமே இரண்டு கண்ணன்கள்தான். தந்தையே இரண்டு கண்ணன்தான். அச்சமூட்டும் தாயும் இரண்டு கண்கள் உடையவளே.

    குழந்தை ஏன் இரண்டு கண்ணனுக்கு பயப்படவேண்டும்? குழந்தை இதனை அறியாதது என்பதால், இரண்டு கண்ணன் என்று ஏதோ ஒன்றைக் கூறி அச்சமூட்டி உணவை உண்ண வைக்கின்றனர். (பின்னாளில் உண்மை தெரிந்த பிறகு அக்குழந்தை இரண்டு கண்ணனுக்குப் பயப்படுவதில்லை). ‘இரண்டு கண்ணன் வந்து பிடித்துக் கொண்டு போய்விடுவான்’ என்று குழந்தையை போலியாக அச்சமூட்டுவது போலன்று ‘மனிதனின் நல்வாழ்விற்கு மனத்தூய்மையும், ஆன்ம தூய்மையும்(கருமையத்தூய்மை) அவசியம்’ என்று ஆன்மீக நூல்கள் அறிவுறுத்துவது. ஆன்மீகப் பெரியவர்கள் நம்மை ஏன் அச்சுறுத்த வேண்டும்? இருக்கின்ற உண்மையைக் கூறுகின்றனர். அது பொய்யாக அச்சமூட்டுவது போல் தெரியும். அதனால்தான் எவ்வளவோ அருளாளர்கள் அறிவுரைகள் கூறியும், அறநூல்கள் எழுதியும்கூட மனிதன் மனத்தூய்மையிலும் கருமையத்தூய்மையிலும் அக்கறை செலுத்துவது இல்லை.

    ஆகவே இரண்டு கண்ணன் இருப்பது உண்மைபோல் கருமையம் இருப்பதும் உண்மை. கருமையம் பொது இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை படம்பிடிக்கும் ஒரு கண்காணிப்பு கேமரா(surveillance camera) போன்றது. அது மனிதனுடைய எல்லாச்செயல்களையும் நொடிநேரம் கூட தவறாமல் பதிவு செய்து கொண்டே வந்து, தக்க தருணம் வரும்போது விளைவுகளை இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ தந்து கொண்டிருக்கின்றது என்பது உண்மையிலும் உண்மை.

    ஆகவே
    தனி மனித துன்பத்திற்கான காரணத்தை அறிந்து,
    துன்பங்களாக வருகின்ற பாதையை (உண்மையை) அறிந்தால்
    இனிமேலாவது துன்பங்கள் வாராதவாறு செயல்கள் புரியவும்,
    ஏற்கனவே குறைந்த பட்சம் ஏழ் பிறவிகளில் – தலைமுறைகளில் செய்த செயல்களின் விளைவாக வரும் துன்பங்களை எதிர்கொள்ளும் பக்குவத்தைப் பெறவும்,
    புனர்ஜென்ம வாழ்க்கையை (புதியமாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்) வாழ்வதற்கு,
    மன தைரியத்தையும், திண்மையையும் பெற சங்கல்பம் செய்து கொள்வோம்.

    முதலில் தலைப்பிலுள்ள வார்த்தை விளக்கம் காண்போம். தலைப்பில் நான்கு வார்த்தைகள் உள்ளன.

    1) இறை
    2) நீதிபரிபாலனம்
    3) கருமையம்
    4) பாலங்கள்

    இறை என்பது என்ன? முதலில் இறை என்பது என்ன என்று அறிந்து கொள்வோம். ஏற்கனவே இறையைப்பற்றி விரிவாக அறிந்திருந்தாலும் இப்போது மீண்டும், இறைக்கான சுருக்கமான விளக்கத்தை அறிந்து கொள்வோம். பஞ்சபூதங்களுக்கு மூலமான துகள்கள் தோன்றா முன்னர் இருந்த ஆதிநிலை ஆற்றல்(வெளி) எங்கும் எதிலும் இறைந்து கிடப்பதால் இறை என்கின்ற காரணப் பெயரால் அழைக்கப்படுகின்றது. ஆகவேதான் இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் எனப்படுகின்றான். ‘நீக்கமற’ என்றால் ஓர் இடம் கூட விடாமல்; எங்கும் என்று பொருள்(everywhere, omnipresent).

    இந்த ஆற்றல் அறிவாகவும் உள்ளது. அறிவு இல்லாத எந்தப் பொருளும் இல்லை. அதாவது உயிரற்ற சடப்பொருட்களிலும் அறிவு உள்ளது. கேட்பதற்கே நம்ப முடியாமல் இருக்கலாம். இந்த ஐயம் நம் மகரிஷி அவர்களுக்கும் ஆரம்பத்தில் இருந்திருக்கின்றது. பிறகு இறை, ஐயத்தைத் தெளிவாக்கியதை, நமக்காக உள்ளம் கசிந்து கூறும் பாடல் வரிகளை இங்கே நினைவு கூர்வோம். அறிவு என்றால் அது உயிரினங்களில் தானே இருக்கும் என நினைக்கலாம். ஆம் அறிவு உயிரினங்களில் இருக்கின்றது என்பது உண்மைதான். எனினும்

    “உணர்ச்சியாய்ச் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று,
    உணர்ந்திருந்தேன் பலநாள்; மேலும் உண்மை விளங்க
    உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும்
    உனது திருநிலையும் அறிவே என உணர்ந்தேன்”

    என்று நம்குருதேவர் உள்ளம் கசிந்து கூறுவதனை இங்கே நினைவு கூர்வோம். அறிவு என்றிருந்தால் அதற்கு உணர்ச்சி உண்டு. அதற்கு மேலும் மனிதனிடம் சிந்திக்கின்றது. அவ்வாறு அறிவிற்கு இலக்கணம் வகுத்துள்ள மனிதனுக்கு, உயிரற்ற சடப்போருட்களிலும் அறிவு இருக்கின்றது என்பது ஐயத்தையும், ஆச்சரியத்தையும் கொடுக்கும்தானே!

    அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற மனிதகுலத்தை அன்பு கூர்ந்து அழைக்கும் நம் குருதேவருக்கும் இது ஆரம்பத்தில் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கின்றது. மகரிஷி அவர்கள் சிந்தனை மூச்சுடையவர் — இடைவிடாத் தொடர் சிந்தனையாளர் என்பதால், பேரறிவே ஒரு புண்ணிய நாளில் “தூணிலும், துரும்பிலும் இருப்பதாக உங்களால் பறைசாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற பேரறிவாகிய நான், உயிரினங்களாவதற்கு (உணர்ச்சிக்கும்) முன்னர், உயிரற்ற சடப்பொருட்களிலும் நான் இருந்தால்தானே உங்களின் பறைசாற்றுதல் உண்மையாக இருக்க முடியும் என்று விளக்கி, உணர்ச்சிக்கு முன்னர் விண்ணில் நான் ஒழுங்காற்றலாய் இருந்து கொண்டு முறைபடுத்திக் கொண்டிருக்கின்றேனே” என்று பிரகடனப்படுத்தியுள்ளது.

    In the Year 1984 AD(கி.பி) i.e. 73 AVM(வே.ம.பி.)(1984-1911=73AVM), Almighty Himself have declared to whole humanity through Shri Vethathri Maharishi that — “ I am present and working as order of Function in non-living beings also”

    உயிரினம் என்பது என்ன? முதல் உயிரினம் உயிரற்ற சடப்பொருட்களான பஞ்சபூதங்களின் கூட்டுக்கலவையினால் உருவாகியது. பஞ்சபூதக்கூட்டுக் கலவையால் உருவாகிய உயிரையும், அறிவையும் கொண்ட உயிரினத்திற்கு உயிரும், அறிவும் எங்கிருந்து வந்தன? உயிரினத்திற்கு உடலும், உயிரும் உண்டு. உடல் பஞ்சபூதக்கூட்டுக்கலவையினால் வந்தது என்றால் புலன்களுக்குப் புலப்படாத உயிர் எங்கிருந்து வந்தது? பஞ்சபூதங்களைத் தவிர உயிர் என்று தனியாக உள்ளதா? அப்படியில்லையே! உயிரற்ற சடப்பொருளான பஞ்சபூதங்களில் இருந்துதான் வந்துள்ளது உயிர். பஞ்சபூதங்களில் முதலில் உருவாகிய, புலன்களுக்குப் புலப்படாத விண் அந்த பஞ்சபூதக் கூட்டுக்கலவையில் தனித்து ஓடுவதே உயிர். அதனால் தான் உயிர் புலன்களுக்குத் தெரிவதில்லை.

    உணரக்கூடிய உயிர் வந்து விட்டாலே அறிவும் அங்கு இருக்கும். ஆகவே உயிரும் அறிவும் சடப்பொருளாக இருந்த விண்ணிலிருந்துதான் வந்துள்ளன. ஆகவே சடப்பொருட்களில் அறிவு இருக்கின்றது. விண்ணில் மட்டுமே இல்லை அறிவு; மற்ற நான்கு பூதங்களிலும் உள்ளது அறிவு. பஞ்சபூதக்கூட்டுச் சேர்க்கையாலானது சடப்பொருள். தன் கூட்டுச்சேர்க்கையான நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கும் இயக்குனராக (the Great Director of all directors) அறிவு, ஒழுங்காற்றல் பணியை நடத்திக் கொண்டிருக்கின்றது. அடுத்த விருந்தில் இறைநீதி என்பது என்ன, இறைஆற்றலின் மூன்றாவது திறனான ஒன்றிற்கு ஏன் கூர்தலறம் எனப் பெயரிட்டுள்ளார் நம் குருதேவர் என்பதனையும் அறிவோம்.
    தொடரும்  புதன் 08-06-2016-ஞாயிறு

    வாழ்க அறிவுச்செல்வம்                                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?   10/10

     வாழ்க மனித அறிவு                                                        வளர்க மனித அறிவு

    FEAST FOR CONSCIOUSNESS – FFC –  194
    அறிவிற்கு விருந்து – அ.வி. – 194
     01-06-2016—புதன்

    ffc-194_1

    ffc-194_2

    இக்குறளுக்கான  பொருள் பற்றி அறிஞர்கள் கூறுவதனை இச்சிந்தனையின் முடிவில் அறிவோம்.

           gurudevar

    ஒழுக்கமிருந்தால் பயம் அவசியமில்லை.  முதுகெலும்பு படுக்கை நிலையில் (horizontal position) உள்ள விலங்கினத்திலிருந்து, முதுகெலும்பு நிமிர்ந்த நிலைக்கு (vertical position) தன்மாற்றமடைந்த மனித உருவம் ஒழுக்க வாழ்வினால் நிமிர்ந்துவாழவேண்டும்.  பயத்தைப் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனை அறிந்து கொள்வோம்.

         ‘Fear is the greatest sin’ என்பார் அருட்தந்தையவர்கள். ஏனெனில் அறிவிற்கு துவைதநிலை(இரண்டு நிலை) இருக்கும்வரையில் பயம் இருக்கத்தானே செய்யும்.  எல்லாம் ஒன்றே, அந்த ஒன்றில் நானும் ஒருவன் என்கின்ற அத்வைத நிலை உருவாகிவிட்டால் பயம் ஏது? புலிக்கும் பயப்படத் தேவையில்லை.  பாம்பிற்கும் பயப்படத் தேவையில்லை.  Anxiety மற்றும் நிலையற்ற உலகியல் வாழ்க்கையில் பற்று (bondage) இருந்தால்தானே ‘என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ’ என்கின்ற பயம் இருக்கும்.  

        இருந்தாலும் மனிதனுக்கு அச்சம் வேண்டும். எதற்கு அச்சம் தேவை?  ஆன்மா தீய செயல்களை செய்வதற்கு அஞ்சுதல் வேண்டும். இந்த அஞ்சுதல் கூட வாழ்நாள் முழுவதும் இராது.  இயல்பான ஒழுக்க வாழ்விற்கு மாற்றம் (switch over) ஏற்படும் வரை, பாவம் செய்வதற்கு அஞ்சுதல் இருக்கும். ஆகவே ஆன்மா அயராவிழிப்புடன் இருக்க வேண்டும்.  ஒழுக்க வாழ்வு இயல்பான பிறகு அச்சம் என்பதற்கே இடமில்லை.     

        முறையான தவம் மற்றும் அறம் இறைஉணர்வு பெறுவதில் முடியும்.

        ஒழுக்க வாழ்வின் உச்சகட்டநிலை, இறைஉணர்வை பெறச்செய்யும்.   

        எவ்வாறு?

        தவமின்றி ஒழுக்கமில்லை. ஏனெனில் தவத்தாலான்றி மனஅலைச்சுழலை நுண்ணிய நிலைக்கு கொண்டு வரமுடியாது.  மனஅலை நுண்ணிய நிலைக்கு வரவில்லையெனில், மனம் உணர்ச்சிவயத்தில்(14 – 40cps பீட்டாஅலை) இயங்கும்.  உணர்ச்சிவயத்தில் உள்ள மனிதனிடம் ஒழுங்கு எவ்வாறு நிலைக்கும்?     ஒழுக்கமின்றி அறமும்  இல்லை.  ஒழுக்கத்தில் எவ்வாறு அறம் இருக்கின்றது என்கின்ற ஐயம் எழலாம்.  ஒழுக்கத்தில் அறம் இருப்பதால்தான்,  அறத்தில் ஒழுக்கத்தை முதல் நிலையில் வைத்து, இரண்டாவதாக கடமையையும், மூன்றாவதாக ஈகையையும் வைத்துள்ளார் மகரிஷி அவர்கள்.

       கடமையின்றி ஒழுக்கம் எவ்வாறு சிறக்க  முடியும்?

       ஈகையில்தான் வேதாத்திரிய ஒழுக்க வரையறை(Simple Definition for Discipline as per Vethathriam) செயலுக்கு வரும்;  நிரூபணமாகும்.

       அன்பிலும் கருணையிலும் தான்  ஒழுக்கம் சிறப்பு பெறமுடியும்.

       ஒழுக்க வாழ்வே அறவாழ்வாகும். 

       தவத்தின் முடிவில் இரண்டொழுக்க பண்பாட்டுச் சங்கல்பத்தை இயற்றச் சொல்கிறார்  மகரிஷி அவா்கள்.   எதற்காக? ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் அன்பும் கருணையும் மலர வேண்டும் என்பதற்காகவே.  இயற்கை இந்த சூரிய குடும்பத்தை தேர்ந்தெடுத்ததற்கு காரணம்,  இப்பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான சீதோஷ்ண நிலை பொருத்தமாக இருக்கின்றது என்பதால்தான்.  ஆனால் மனிதனைத்தவிர மற்ற உயிரினங்கள் பிறப்பதற்கும்.  வாழ்வதற்கும் இப்பூமியின் சீதோஷ்ண நிலை பொருத்தமாக உள்ளது. 

       ஆனால் மனிதன் என்கின்ற உயிரினம் பிறப்பதற்கு மட்டுமே சீதோஷ்ணநிலை மிக மிகபொருத்தமாக இருக்கின்றது.  ஏன் அவ்வாறு சொல்ல வேண்டியுள்ளது?  மனிதப்பிறப்பதற்கான சூழல் சரியாக உள்ளது என்பதால்தான் இப்பூமியில் உயிரினத்தின் கடைசி இனமான மனிதன் தோன்றியுள்ளான்.  எனினும் பிறப்பின் தொடர் நிகழ்ச்சியான வாழ்க்கைக்கு ஏற்ற சீதோஷ்ணம் (living climate)நிலவவில்லை அன்றிலிருந்து இன்று வரை? அந்த ஏற்ற சீதோஷ்ண சூழல்தான் அன்பும் கருணையும்(Climate of Love and Compassion). இது யாருடைய தவறு?  இயற்கையின் தவறா?  இயற்கையில் தவறு இருக்க முடியுமா? ஒருகாலும் இருக்க முடியாது?  இயற்கையில் குறை இருந்தால் யாரிடம் சென்று முறையிடுவது?  அப்படியே இயற்கையில் குறையுடையதாக குறையுடைய மனிதர்கள் யாரோ ஒரு சிலர், ஒருவேளை கருதினாலும், அது இயற்கைக்கு ஒத்த முறையில், இயற்கையின் இசைவிற்கு ஏற்ப இயற்கையின் இனிமை கெடாமல் வாழத் தெரியாமையையே காட்டுகின்றது.   

    இப்பூமியில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் வரையறையின்படி,

        அமைதி நிரந்தரமாக  நிலவி,

       அதனை, மனிதன் ஏற்படுத்திக் கொண்ட, சொத்துக்களில், பூர்வீகச் சொத்தை ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்க உரிமை இருப்பதுபோல்,

       அவ்வமைதியினை அனுபவிப்பதற்கான சீதோஷ்ண சூழல் நிலவவில்லை.

       அதனை மனிதன் தான் வேதாத்திரிய உலகசமாதான திட்டங்களின் வாயிலாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  வாழ்க உலக அமைதி.  வரட்டும் விரைவில் உலக அமைதி.

        ஒழுக்கம் இல்லாதவனிடம் அன்பும், கருணையும் இல்லை.  அப்படியிருக்க பிறரிடமிருந்தும் அன்பும் கருணையையும் எதிர்பார்க்க முடியாது.  ஒழுக்கமில்லாதவனின் செயலுக்கு வருகின்ற விளைவும், ஒழுக்கமில்லாத மற்றொருவரின் செயலிருந்துதானே வரும். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம் என்பதால் மனித மனம் ஒழுக்கத்தில் ஒழுக வேண்டும். 

        ஒழுக்க வாழ்விற்கு போராட வேண்டும் என்று அறிஞர்களே சொல்வதால், போராடி ஒழுக்கத்திற்கு வரவில்லையானால், ஒழுக்கமில்லா வாழ்விற்கான கடும்விளைவுகளை எதிர்கொள்ள போராட வேண்டியிருக்குமே!  ஒழுக்க வாழ்விற்கான போராட்டம் நம்மனதுடன்தான்.  இது எளிது, சுலபம். தன்னைத்திருத்திக் கொள்வதில் அக்கறையில்லாமல் வாழ்வது எவ்வாறு  சரியாக இருக்கும்? ஒழுக்கமின்மையால் வரும் விளைவுகளிடம் போராடுவது என்பது ஒழுக்கத்திற்காக மனதுடன் போராடுவதைவிட கடினமாக இருக்கும்.  ஒழுக்க வாழ்வு எதற்காக? இறைஉணர்வு பெறுவதற்கே! ஒழுக்க வாழ்விற்கு போராட வேண்டும் என்றிருந்தாலும்,  இப்பிறவியிலேயே ஒழுக்க வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என பகவான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவுகூர்வோம்.

    this_birth_is_enough_for_liberation

        ஒழுக்கமில்லாத போது  தீயவினைகள் செய்யப்பட்டன.  ஒழுக்கத்திற்கு வரும் போது நல்வினைகள் செய்யப்படுகின்றன. எனவே வினைத்தூய்மை என்பதே  ஒழுக்கத்திற்கு வருவதுதான்.     

       ஒவ்வொரு அதிகாரத்திலும், ஒவ்வொரு பொருள்பற்றி கூற விரும்பிய திருவள்ளுவர் பத்து குறட்பாக்களை அருளியுள்ளார். இதனை 133 அதிகாரங்களிலும் பின்பற்றியுள்ளார்.   என்ன காரணம்?  திருவள்ளுவர், தான் கூற வந்த பொருளை எளிமையாகத் தெளிவாக தெளிவுபடுத்த விரும்புகிறார். மேலும் மனிதகுலத்தைப்பற்றியது அவர் கூறுகின்ற 133 பொருட்களும்.  அவர்காலத்திலேயே மனிதகுலம் எவ்வாறு மனிதன் வாழவேண்டுமோ அந்நிலையில் வாழாமையால், மேலும் பல்வேறு அறிவுநிலையில் வாழும் மனிதர்களைக் கொண்ட சமுதாயத்திற்கு மனம், குணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை விளங்க வைக்க ஒவ்வொரு பொருள்பற்றியும் பத்து குறட்பாக்களில் கூறியுள்ளார்.  இதனை பத்து கோணங்களில் விளக்கியுள்ளார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

     நேரிடையாக விளக்கி, நேரிடையாக கேட்டு  விளங்கிக் கொள்வதும்  எளிது என்றிருந்தாலும்,  திருவள்ளுவர் அப்போது வாழ்ந்த சமுதாயத்திற்கும், அவருக்கு பின்னர் வந்த சமுதாயத்திற்கும் நேரிடையாக ஒவ்வொருவருக்கும் விளக்க முடியாது என்பதால்,  ஏதாவது ஒரு கோணத்திலாவது விளங்கிக் கொள்ளவேண்டும் என எண்ணி பத்து கோணங்களில் ஒரு பொருள் பற்றி கூறியுள்ளார்.  திருவள்ளுவர் பத்து குறட்பாக்களை அருளியதற்கு இது ஒரு காரணமாக இருந்தாலும், ஒழுக்கம் உடைமை எனும் அதிகாரத்தில் பத்து குறட்பாக்களை அருளியுள்ளதை  வேறொரு பார்வையில் 2 புரிந்து கொள்கிறோம்.

      எல்லா அதிகாரங்களிலும் பத்து குறட்பாக்களை அருளியதுபோல் ஒழுக்கம்உடைமை அதிகாரத்திலும் பத்து குறட்பாக்களை அருளியுள்ளார்.  மூலஆற்றலாகிய ஒழுங்காற்றலான பேரறிவே மனித அறிவாக இருந்தாலும், அறியாமையால், மூலஆற்றலின்  தன்மையான ஒழுங்கை பிரதிபலிக்கும் வகையில் ஒழுக்கமாக வாழத் தெரியாமல் அது ஒழுங்கின்றி (ஒழுக்கமின்மை) வாழ்ந்து வந்ததால், ஒழுக்கம் பற்றி கூற ஒழுக்கம் உடைமை அதிகாரத்திற்கும் பத்து குறட்பாக்களை ஒதுக்கியுள்ளார்.  2அதில் ஒன்பது குறட்பாக்கள் எவையெல்லாம் ஒழுக்கம் என்று கூறுகின்றது.   ஏனெனில் எது ஒழுக்கம், எவ்வாறு ஒழுக்கம்  மனிதகுலத்திற்கு இன்றியமையாததாக உள்ளது என்பதனை உணர்த்த வேண்டிய கடமையும், கட்டாயமும் திருவள்ளுவருக்கு அன்றைய நிலையில் இருந்தது.  

    2ஒன்பது குறளில் எவையெல்லாம் ஒழுக்கம் என்று கூறிவிட்டு, அதனை அடைவதற்கான ஒரே வழிதான் உள்ளது  என்பதால் கடைசிக் குறளில் முத்தாய்ப்பாக ஒழுக்கம் வளர்ந்து மலர, உயர்ந்தோர் கருத்துக்கிணங்க ஒழுகு முறையினைக் கையாள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

      ஒழுக்கம் என்கின்ற பொருள் பற்றி பத்தொன்பது நூற்றாண்டுகள் கழித்து அவதரித்த மகரிஷி அவர்கள், திருவள்ளுவரை மானசீக குருவாகக் கொண்டதால். அகமே மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டப்பட்டு, அதுவே அறிவு என்று திருவள்ளுவரால் அறிவிக்கப்பட்டவர் மகரிஷி அவர்கள்.

         எனவேதான் மகரிஷி அவர்கள் திருக்குறள் உட்பொருள் விளக்கம் என்கின்ற நூலை அருளி,  திருவள்ளுவர் இப்போது நேரிடையாக வரமுடியுமானால், வந்து நமக்கெல்லாம் என்ன விளக்கம் கொடுத்திருப்பாரோ, அந்த விளக்கத்தினை மகரிஷி அவர்கள் நமக்குக் கூடுதலாகவே இக்காலத்திற்கேற்ப எளிமைப்படுத்தி கொடுத்து நம்மையெல்லாம் திருவள்ளுவரை நேரிடையாக தரிசித்த அனுபவத்தை நல்கிவிட்டார்.

       மேலும்  மகரிஷி அவர்கள் திருவள்ளுவர்  எவையெல்லாம் ஒழுக்கம் என்பதனை ஒன்பது குறட்பாக்களில் கூறியுள்ளாரோ அதனை மகரிஷி அவர்கள் ஒழுக்கம் என்பதனை வரையறுத்து ஒரே வாக்கியத்தில் மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுமாறு ஒழுக்கம் என்ன என்பதனை வகுத்துக் கொடுத்துள்ளார்.

     எனவே வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஒழுக்கவாழ்வின் மூலம் உலகம் உய்வதற்கான புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளதை அறியும்போது உள்ளம் பூரித்து மகிழ்கின்றது.

       இந்த ஒழுக்கத்திற்கான வரையறையை, ஒழுக்கவாழ்வை அளக்கும் கஜக்கோலாக  (Yardstick for gauging discipline, moment to moment in day to day life-)கொள்ளலாம்  மனிதகுலம்.

        அதிலும் குறிப்பாக இறை உணர் ஆன்மீக சாதகர்கள்,  ஒழுக்க வாழ்விற்கு மாறுவதற்கான ஆரம்பகால பயிற்சியின் போது ஒழுக்கத்தின் கஜக்கோலை மனதில் இருத்தி, விழிப்போடு, நுண்மாண் நுழைவுத்திறனோடு, பொறுப்புணர்ந்து, எண்ணம், சொல், செயல் ஆகிய முத்தொழில்கள் மூன்றிலுமே, அவை நடப்பதற்கு முன்னரே அவற்றை ஒழுக்க கஜக்கோலால் அளந்து செயலாற்றி வெற்றி பெற்று இன்ப வாழ்வு வாழலாம்.

       ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து குறட்பாக்கள் அருளப்படுகின்ற நிலையில் ஒழுக்கம் உடைமை எனும் அதிகாரத்தில் பத்தாவது குறளில் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதற்கான வழியை கூறியுள்ளதை மகரிஷி அவர்கள் தற்சோதனை எனும் பயிற்சியாகவும், மேலும்  இயல்பூக்க நியதியினை பயன் படுத்திக் கொள்ளுமாறும் கூறியுள்ளது இயற்கை/இறை தனது மக்களுக்கு (சுத்த அத்வைதத்தில்—தனக்கே) காலத்திற்கேற்ப கருணையோடு கொடுத்த கொடைதானே?!

         பல்லாயிரம் பிறவிகளாக, ஒழுக்கமின்மையால் செய்துள்ள  பழச்செயல்பதிவுகளை ஒழுக்கத்திற்கு வந்து ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம் என மேலும்உத்திரவாதம் அளிக்கிறார்.  மாற்றி நலமடையலாம் என்கிறார். நலமடையலாம் என்பது, அதுவரை விலங்கினப்பதிவில் செயல்பட்டதெல்லாம் அன்பும் கருணையுமாக மாறி மனிதனாகலாம் என்கிறார்.  மனிதனாகி தெய்வமாக உயரலாம் என்கிறார். தெய்வமாக உயர்வதற்காக ஒழுக்கம் வேண்டாமா?  மனிதன் தெய்வமாக வேண்டாமா?

       சின்னம்மாள்-வரதப்பா் என்கின்ற அருட் தம்பதியினருக்கு ஏழாவதாக பிறந்த குழந்தை தெய்வமாகாதிருந்தால் திருவேதாத்திரியம் என்கின்ற அருமருந்து உலகிற்கு கிடைத்திருக்குமா? 

        “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்” என்றுரைத்த மகரிஷி அவர்களே இதற்கு தீர்வாக வழியினையும் கூறுகிறார்.

        நெடுங்காலமாக ஆதிமனிதனிலிருந்து கருமையம்  தொடர்புடையதாக இருந்தாலும்,  எப்படி போராட்டத்தில் வெற்றி பெறுவது என்பது,

        அக்கருமையத்தை அகத்தவத்தாலும், அகத்தாய்வினாலும், தூய்மை செய்து,

        இறைஉணர் பாதையிலே விழிப்புடனே ஒழுக்கவழி வாழ்வதுதான் அவ்வழி என்கிறார்.

     ‘ உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது’  எனும் அருட்பேராற்றலின் அன்புக்குரல் என்றும் நம்முள் ஒலிக்கட்டும்.

    “நல்ல பயனுள்ள அறச்செயல்களும், அதற்கேற்ற எண்ணங்களும் எவரிடம் இயங்குகின்றனவோ அவரைச் சுற்றிலும் நுண்ணலையாகிய அருட்பேராற்றலும் சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும் அனுபவத்தைக்கண்டு இன்புறுவீர்களாக” என்கிறார் மகரிஷி அவர்கள்.

        சிந்தனையின் ஆரம்பத்தில் ஒழக்கம் உடைமை என்கின்ற அதிகாரத்தில், ஒழுக்கத்தைப்பற்றி ஒன்பது கோணங்களில் கூறிவிட்டு திருவள்ளுவர், முடிவாக,  அவ்வொழுக்கத்தைப் பழக ஆரம்பிப்பது எவ்வாறு எனக் கூறியுள்ள குறளை நினைவு படுத்திக் கொண்டோம். அதன் பொருளை இப்போது அறிவோம்.

                  “உலகத்தோ1 டொட்ட ஒழுகல் பலகற்றுங்

                   கல்லார் அறிவிலாதார்.”   குறள் எண். 140.

    1  ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ என்பது எதனைக்  குறிக்கின்றது?

     பொருள்:உயர்ந்தோர் கருத்திற்கு இணங்க ஒழுகு முறையினை அறியாதவர்கள் பல நூல்களையும் கற்றிருப்பினும் அறிவில்லாதவரே ஆவர்.

         திருவள்ளுவரின் சகோதரியான அவ்வைத்தாய் கூறுவதனைக் கவனிப்போம். ஆத்திச் சூடியில்

        44 — சான்றோர் இனத்திரு

        • அறிவிற் சிறந்த ஆன்றோருடன் சேர்ந்திரு.

       82 – பெரியாரைத் துணைக் கொள்

        • அறிவிற் சிறந்த சான்றோரை நட்பாகப்பெறு வாயாக!

       94 – மேன்மக்கள் சொல் கேள்

        • பண்புடைய மேலோரின் சொல்லைக் கேட்டு அதன்படி நடக்கவேண்டும்.

     மூதுரையில்

    8 – “ நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலமிக்க

       நல்லார் சொல் கேட்பதுவும் நன்றேநல்லார்

       குணங்கள் உரைப்பதுவும் நன்றே;   அவரோடு

       இணங்கி இருப்பதுவும் நன்று”

                                                                       … அவ்வையார்

     

    பொருள்:  நல்ல பண்புகள் உள்ளவர்களைக் காண்பது, அவர் கூறும் பயன் மிகுந்த சொற்களைக் கேட்பது,

    அவரது சிறப்புகளை எடுத்துக் கூறுவது,

    அத்தகைய ஆன்றோருடன் சேர்ந்து இருப்பது ஆகிய அனைத்தும் சிறந்த நன்மைகளான பண்பேற்றம், வழிகாட்டுதல், காப்பு மற்றும் பிறவிப்பயனை அடைவதையும் நல்கும். 

     இனியது எது என அவ்வைத்தாய் கூறுவதனை அறிந்து இனியதை அனுபவிப்போம்.

     FFC-127-அவ்வையார்- இனிது

          பண்பேற்றத்திற்கு மகரிஷி அவர்கள்  இயல்பூக்க நியதியினை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்திய பிறகு, “எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும் தப்பாமல் பிறவிப்பயனை அடைவர்” என உறுதியும் அளிக்கின்றார். 

    பிறவிப் பயன்? 

    பிறவிப்பயன் என்பது என்ன?  எது எதுவாக இருந்தாலும் அது அதுவாக இல்லையோ அது தான் மனம்’ என ஆதங்கப்படுகிறார்  மகான் ஒருவர்.  ஒரு பொருள் எந்தப் பொருளிலிருந்து ஆனதோ அந்தப் பொருளின் தன்மையாக இருப்பதுதானே இயல்பு.  தங்கக் கட்டியிலிருந்து செய்யப்பட்ட நகை அந்த தங்கக்கட்டியின் தன்மையைத்தான் வெளிப்படுத்துகின்றது.  ஆனால் இது மனிதனிடம் பொய்யாகின்றது.  எவ்வாறு பொய்யெனச் சொல்ல முடியும்?

          ஒழுங்காற்றலிருந்து(இயற்கை/இறை) வந்துள்ள மனிதனிடம் ஒழுக்கம் வெளிப்படவில்லை. அதாவது ஒழுங்கு/ஒழுக்கம் மறைந்துகிடக்கின்றது.

         மனிதன் எதிலிருந்து வந்திருக்கிறான்?    எது/யார் மனிதனாக வந்துள்ளது?  இயற்கையே/இறையேதான் மனிதனாக வந்துள்ளது?  இயற்கை/இறை எத்தகையது?  ஒழுங்காற்றலாக உள்ளதே தான் இயற்கை/இறை. எல்லா நிகழ்ச்சிகளையும் ஒழுங்குடன் நடத்தி வருகின்றது.இல்லை எனில் இப்பிரபஞ்சத்தை,  கண்களுக்குத் தெரிகின்ற முறைப்படியான ஆட்சி ஏதுமின்றி அரசாட்சி செய்ய முடியுமா இயற்கையால்/இறையால்? இயற்கை/இறை அரூப ஆட்சி நடத்துகின்றது. எல்லா உயிரினங்கள் உள்பட அண்டசராசரங்களையும், தனது அரூப ஆற்றலால் எங்கும் நீக்கமற அறிவாக நிறைந்துள்ளதால் அரூப ஆட்சி நடத்துகின்றது என்பதனை தெளிவாக அறிந்து மகிழ்வோம். எனவேதான் எல்லா நாடுகளிலும், மனிதகுலம்   ஏற்படுத்திக் கொள்வதுபோன்ற ஆட்சி முறை அதற்கு தேவையில்லாமல் போய்விட்டது.    

         எனவே தான் மகரிஷி அவர்கள் பேரின்பப் களிப்பு(1984) என்கின்ற தலைப்பில் அருளியுள்ள  கவியில் ‘ஆட்சியின்றி ஆளுகின்ற ஐயன் திருவருளால்’ என இயற்கையை/இறையை வர்ணிக்கின்றார்.  ஆகவே ஒழுங்காற்றலில் இருந்து வந்துள்ள மனிதன்தான்  இயற்கையின் நிகழ்வுகளில் ஒன்றான தனது ‘வாழ்க்கை’யை ஆறாவது அறிவைக் கொண்டு ஒழுங்குடன் நடத்தி பிறவிப் பயனை அடைதல் வேண்டும். 

         பிறவிப்பயனை அடைதல் என்றால் என்ன?  வீடுபேற்றினைப் பெறுதல் பிறவிப்பயன்.  அதாவது இறை உணர்வு பெறுதல் பிறவிப்பயனாகும்.  மேலும் கூறுவதென்றால் பிறவித் தொடர் அற்றுவிடும்.  மீண்டும் பிறக்க வேண்டிய அவசியமில்லை. மறுபிறவி கிடையாது.  அதனால்தான் பக்திமார்க்கத்தில் திளைத்த மகான்கள் ‘மீண்டும் பிறவாவரம் வேண்டும்’ என இறையை இறைஞ்சியுள்ளனர்.  ஒரு பக்திப்பாடலில் “மீ்ண்டும் கருவடையும் குழியில் தள்ளி என்னை வருத்தப்படுத்த வேண்டாம்” என்று இறையை இறைஞ்சுகின்ற வரியினைக் காண முடிகின்றது.

        மறுபிறவி இல்லை என்பதால் வம்சாவளியே இல்லாமல் ஆகிவிடுமோ என்கின்ற மாயைக்கருத்து இருக்கலாமோ?

     மறுபிறவியில்லாத பிறவிப்பயனை அடைவதால் என்ன பயன் இந்தக் கடைசி வாழ்க்கையில் என ஐயம் எழலாம்!

     1)    இதுவரை பல லட்சம் பிறவிகளில் அனுபவித்திராத பேரின்பத்தை அனுபவிக்கலாம்.

    2)   மறுபிறவி இல்லை.  இதனால் என்ன ஆதாயம் எனவும் ஐயம் எழலாம்.  மறுபிறவி இருந்தால் மீண்டும் இன்னொரு முறை (another term of life) இன்பங்களையெல்லாம்(enjoyment) அனுபவிக்கலாமே என அறிவு நினைக்கலாம்.

     மனம் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் ஆகிய நான்கு நிலைகளிலும் இயங்கவல்லது. எத்தனை பிறவிகளாக, எப்போதும் ஆதாயம் தேடக்கூடிய மனம் (Mind is always so calculative), இன்பத்தைவிட ஆதாயமான பேரின்பத்தை அனுபவிக்கமால் தன்னை மாயையில் ஆழ்த்திக் கொள்ள நேரிடும். அது தன்னையே  ஏமாற்றிக் கொண்டிருப்பதற்கு ஒப்பாகும். 

     இவ்வாறு ஏமாற்றம் அடைந்த வாழ்க்கை நடத்துவதிலிருந்து உலக மக்களை விழித்திருக்கச்(awareness) செய்வதற்காகத்தான் உலக சமுதாய சேவா சங்கத்தை நிறுவி பன்னிரண்டு வருடங்கள் கழித்த பிறகு அழைப்புக்கவியினை அருளி உலக சகோதர சகோதரிகளை மன்றத்திற்கு அழைக்கிறார். அக்கவியின் ஆரம்ப வரிகளைக் கவனிக்க வேண்டும்.

     anbargale vaareer-THAI

    3)    ஆன்மாவிற்கு பிறவித்துன்பம் இல்லை. ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கிறார் அறிவைத்தூண்டுகின்ற அருளாளர் ஒருவர். 

    • பூர்வீகச் சொத்தான அமைதியினை அனுபவிக்காமலும்,
    • பேரின்பத்தை தவிர்த்த இன்பம்-துன்பக் கலவையை மட்டுமே அனுபவித்தல்,
    • இன்பம் அனுபவிக்கையில் புலன்களின் வலையில் சிக்கிக் கொள்ளுதல்,
    • அறிவுக் கூர்மையில்லாமை,
    • மேலும் துன்பத்தை எதிர்கொள்ளத் தெரியாமை

         ஆகியவற்றவைகளை மட்டுமே கொண்டுள்ள இந்த சாதாரண பிறவிக்காகவா மீண்டும் மறுபிறவித் தேவை?! சிந்திக்க வேண்டும்.  மீண்டும், மீண்டும் பிறவி என்கின்ற பிறவிச் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெறவேண்டாமா?  ஆன்மா விடுதலை வேண்டாமா?!

    பூதவுடலை உதரிய பிறகு ‘இனி மறுபிறவி இல்லை’ என்கின்ற நல்நிலையில் இப்பிறவியில் வாழும் போதும், மகரிஷி அவர்கள் கூறுவதுபோல், மறுபிறவி என்பது   வாரிசுகளே என்பதால் அவர்களுக்கும் பயன் கிடைக்குமல்லவா?

        இத்துடன் ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன் என்கின்ற சிந்தனையை முடித்துக் கொள்வோம்.  மனித குலத்தில் ஒழுக்க வாழ்விற்கான போராட்டம் விரைவில் முடிவிற்கு வரட்டும். மனித குலத்தின் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும். ஒழுக்கத்தின் மேன்மையில் மேன்மக்களாக வாழ்வோமாக. வாழ்க வளமுடன். வாழ்க திருவேதாத்திரியம்.  வளர்க திருவேதாத்திரியம். உலகெங்கும் மூலை முடுக்குகளிலும் பரவட்டும் திருவேதாத்திரியம்.

       ஒரு அன்பு வேண்டுகோள்.  ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன் என்பது பற்றி  பத்து  அறிவிற்கு விருந்துகளில் சிந்தித்து  வருகிறோம்.  ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில் பத்து குறட்பாக்கள் இருந்தாலும்,   அனைத்து குறட்பாக்களையும் நினைவு கூற முடியவில்லை.  விடுபட்டு போன குறட்பாக்களை நீங்கள் நினைவுகூர்ந்து கொண்டு பயன் பெற வேண்டப்படுகின்றது.

    அடுத்த அறிவிற்கு விருந்திற்காக05-06-2016 ஞாயிறன்று சத்சங்கத்தில் சந்திப்போம்.  வாழ்க வளமுடன்.

         எனவே மனித வாழ்வில் ஒழுக்கம் இயல்பாக பூத்துக் குலுங்க,  பள்ளிக்கல்வியில் மற்ற பாடங்கள் உள்ளதுபோல், ஒழுக்கவியல் பாடம் விரைவில்  கட்டயாமாக்கப்பட வேண்டும்.  எனவே எண்ண அலைகளை வான் காந்தத்தில் பரப்புவோம்; நிரப்புவோம். வாழ்க ஒழுக்கவியல். வளர்க ஒழுக்கவியல்.

    Don’t delay Enlightenment

     வாழ்க அறிவுச் செல்வம்                                                 வளர்க அறிவுச் செல்வம்.

     

    Loading

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?   9/?

    வாழ்க மனித அறிவு                                                        வளர்க மனித அறிவு

    FEAST FOR CONSCIOUSNESS – FFC –  193

    அறிவிற்கு விருந்து – அ.வி. –  193

     29-05-2016—ஞாயிறு

     நல்லோர் இணக்கத்தை  இளம் பருவத்திலேயே பெற்றிடல் வேண்டும்.
    Thanks: SKY-Villivakkam

    Thanks: SKY-Villivakkam

        கடந்த அறிவிற்கு விருந்துகளில் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்திலுள்ள அறிவியல் காரணங்களைப் பார்த்தோம்.  ஆதிமனிதனிலிருந்து பல்லாயிரம் தலைமுறைகளாக கருமையத்தொடர்பால் ஆன்மாவில் ஏற்பட்டுள்ள பழக்கப்பதிவுகள் வலிமை   உடையதாக இருப்பதால், அவைகள் இப்பிறவியில் மட்டுமே பதிந்துள்ள விளக்கப்பதிவை எளிதாக வெற்றி கொள்கின்றன என்று பார்த்தோம். அப்பல்லாயிரம் பிறவிகளில் குறைந்தது மனிதனுக்கு தன்னையும் சேர்த்து முந்தைய ஏழு பிறவிகளில் அவனுடன் எத்தனை  பிறவிகள் தொடர்பு கொண்டுள்ளன என்பதனை விவர ஓட்டப்படம்(flowchart) வாயிலாக இப்போது அறிந்து கொள்வோம்.

          ஒரு மனிதனுக்கு இப்பிறவியில் பழக்கப்பதிவு எவ்வளவு வலுவாக உள்ளது என்பதனை  அறிந்து கொள்ள கீழே உள்ள விவர ஓட்டப்படம்(flowchart) தயாரிக்கப்பட்டுள்ளது.     மனிதனாக உரு எடுத்த ஆன்மா, இறை உணர்வு பெறுகின்ற வரை, ஆதிமனிதனிலிருந்து பல லட்சம் தலைமுறைகள் கடக்க வேண்டியுள்ளது .  பல லட்சம் தலைமுறைகள் கடந்து வந்தாலும், இந்த விவர ஓட்டப்படம்(flowchart) ஏழு தலைமுறைகள் (பிறவி) மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

          உதாரணத்திற்கு ஒரு மனிதனின் ஆன்மா, இதுவரை அதன் முந்தைய ஏழு தலைமுறைகளில் செய்யாத ஒரு செயலை இப்போது புதியதாக செய்வதாக வைத்துக் கொள்வோம்.

         புதியதாக இந்தப் பிறவியில் செய்து, அதனால்   ஏற்படும் கருமையப்பதிவு, இனிவரும்

        ஏழு பிறவிகளுக்கும் விளைவைக் கொடுக்கும் வலிமை உடையது என்பதால்,

        அவனுக்கும், அவனுக்குப் பிறகு வருகின்ற ஆறு தலைமுறைகளுக்கும் விளைவைக் கொடுக்கும் எனலாம்.

        ஒரு வேளை அந்த ஆன்மா அடுத்த  ஆறுபிறவிகளில் அச்செயலை செய்யாமல் இருந்தால் அவனுக்கு பிறகு வருகின்ற  ஏழாவது பிறவியில் அவன்  செய்துள்ள அந்த செயல்பதிவு ஊக்குவிடப்படாமல் (not activated) இருந்தால், அக்கருமையப் பதிவு செயலிழந்து விடும் என ஆன்மீகத்தில் கூறப்படுகின்றது.  ஆகவே ஏழு தலைமுறைகள் மட்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  கருமையப்பதிவு மீண்டும் அடுத்த ஏழு பிறவிகளில் ஊக்குவிடப்படாமல் இருந்தால் செயலிழந்து விடும் என்பதனை அவ்வையார் மற்றும் திருவள்ளுவர் ஆகிய அறிஞர்களின்  பாடல்களிலிருந்து அறிய முடிகின்றது.  அப்பாடல்களாவன–

     நல்வழி – பாடல் எண் 25

         “ஆன முதலில் அதிகம் செலவானால்

        மானம் அழிந்து மதிகெட்டுப் போன திசை

        எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ் பிறப்பும் தீயனாய்

        நல்லார்க்கும் பொல்லனாம் நாடு”               …..அவ்வையார்.

     

        அதிகாரம் 13- அடக்க உடைமை 

         “ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்,

        எழுமையும் ஏமாப்பு உடைத்து,”                குறள் எண். 126

        மேலே குறிப்பிடப்பட்டுள்ள அவ்வையாரின் பாடலில், ஒரு தீயசெயலின் விளைவு ஏழ்பிறப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார். 

         அதே போல் மேலே குறிப்பிட்டுள்ள குறளில்  ‘எழுமையும்’ என்பது ஏழு பிறப்புகள் என எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது திருக்குறளின் உரையாசிரியர் பரிமேலழகரால்.

    Thanks_mdu-atkoil_facebook

         ஆகவே ஒரு மனிதன் ஏற்படுத்தும் ஒரு பதிவு, அவனையும் சேர்த்து ஏழு பிறவிகளுக்கு விளைவைக் கொடுக்க வல்லது என அறிகிறோம்.  தொடக்கத்திலிருந்து, அதாவது ஆதிமனிதனிலிருந்து இன்று வரை எத்தனை தலைமுறைகள் ஒரு மனிதனின் ஆன்மா பிறவிச்சுழற்சிப் பயணம் செய்துள்ளது என அறிவது இயலாது. 

         இருந்தாலும் முடிந்தவரை, கணக்கெடுக்கும் வரையிலாவது எத்தனை தலைமுறைகள் என கணக்கெடுக்கலாமே என எண்ணி ஏழு தலைமுறைகளுக்கான விவர ஓட்டப்படம்(flowchart) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    7-chart_new

         பல லட்சம் தலைமுறைகளில், ஏழு தலைமுறைகளில் மட்டும் அவனுடன் கருமையத்துடன்   தொடர்புள்ள குறைந்தபட்ச ஆன்மாக்களின்  எண்ணிக்கை மொத்தம் 126 (127-1=126) அதாவது  இன்று பிறக்கின்ற குழந்தை தனது வாழ்க்கை எனும் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப இருப்பாக(opening balance) கொண்டு வந்தது தனது பூர்வீகசொத்தான(சொத்து மூட்டையாக) 126 சஞ்சிதகர்மாக்களை (சஞ்சி என்றால்  பை அல்லது மூட்டை என்று பொருள்)  அதாவது 126 வினைமூட்டைகளை கொண்டுவந்துள்ளது.  அதனை வைத்து வாழ்க்கை எனும் வியாபாரத்தை ஆரம்பித்து அதில் லாபம் என்கின்ற இன்பத்தையும், நஷ்டம் என்கின்ற துன்பத்தையும் அனுபவிக்கின்றது. 

          பொருள் வியாபாரம் என்றால் அதில் லாபமும் இருக்கும்; நஷ்டமும் இருக்கும். ஆனால் ஒரு பொருள் வியாபாரம் லாபத்துடன் நடந்திட வேண்டும் என்றே வியாபாரி விரும்புவார். அதாவது  லாபத்தையும் (plus Quantity) நஷ்டத்தையும் (minus Quantity) கூட்டினால் வருவது (plus Quantity) ஆக இருக்க வேண்டும். ஆனால் இந்த வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபம் என்ன என்று கேட்டால், ஒவ்வொருவரின் பதில் என்னவாக இருக்கும்?  விழிப்பதுதான் நம்முடைய பதிலாக இருக்கும். அல்லது இப்படியெல்லாம் சிந்திக்க வேண்டுமா என்று எண்ணம்கூட எழலாம். 

         பொருள் வியாபாரத்தில் plus Quantity ஐயும் minus Quantity ஐயும் கூட்டி லாபம் கணக்கிடுவதுபோல்  வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபத்தைக் கண்டுபிடிக்க முடியுமா?  இன்பத்தையும், துன்பத்தையும் கூட்டி வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபத்தினை எவ்வாறு கண்டுபிடிப்பது?  லாபத்தினை கண்டுபிடிக்க முடியாது என்றால் வாழ்க்கையை வியாபாரத்துடன் ஒப்பிட்டிருக்கக் கூடாதோ? வாழ்க்கையை வியாபாரத்துடன் ஒப்பிட்டது சரிதான்.  வாழ்க்கை எனும் வியாபரத்தில் வரும் இன்ப-லாபத்தினையும், துன்ப-நஷ்டத்தையும் அனுபவிப்பது எது?  மனம்.  மனது நான்கு நிலைகளில் இயங்க வல்லது.  அதாவது இன்பம், துன்பம், அமைதி பேரின்பம் ஆகிய நான்காகும்.  ஆகவே வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபம், அதிக லாபம் என்பது முறையே அமைதி, பேரின்பமாகும். ஆகவே வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபம் மற்றும் அதிக லாபத்தினை ஈட்ட வழிகளை சொல்வதுதான் மனவளக்கலை எனும் அருமருந்தாகும்.

         7 தலைமுறைகளில் 127 ஆன்மாக்கள்–விவர ஓட்டப்படம்(flowchart) எதற்காக?  கருவில் திரு உடையவர்களுக்காக அல்ல இந்த விவர ஓட்டப்படம்(flowchart).  கருவில் திருவை அடையப்போகின்ற —  கருவில் திருவைப்பெற்று,  இப்பிறவியிலேயே பிறவிப்பயனை பெறுவதற்காக, ஆன்மீக பயிற்சியாளர்களுக்கு இந்த விவர ஓட்டப்படம்(flowchart) உதவும் என்பதற்காக தரப்பட்டுள்ளது.

          ஏன் ஆன்மீக பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்?  விவேகானந்தர் கூறுவதுபோல்,

              விலங்கினப்பண்பு, மனிதப்பண்பு, தெய்வீகப்பண்பு ஆகிய கலவைகளால் ஆன மனிதன்,   தெய்வீக பண்பிற்கு உயர்வதுதான்  ஒழுக்கம் என்பதால், ஒழுக்க வாழ்வு வாழ்வதில் உள்ள போராட்டத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பதாலும்,

                  மற்றும் ‘வினைப்பதிவால் உடல் எடுத்து மனிதனாக வந்துள்ளதால், வாழ்நாள் முழுவதும் புண்ணியம் செய்தே ஆக வேண்டும்’ –  (புண்ணியம்=ஒழுக்கம் என்கின்ற சமன்பாட்டின் படி ஒழுக்கமுடன் வாழ்ந்தே ஆக வேண்டும்) என்று மகரிஷி அவர்கள் பகர்ந்துள்ளதாலும், ஒழுக்கப்பாதைக்கு திரும்புவதில் வினைப்பதிவால் ஏற்படும் சிரமங்களை எதிர் கொண்டு வெற்றி பெறுவதில்

                   முழுநம்பிக்கையும்,

                   தொடர் ஊக்கமும்,

                   தளராவிடாமுயற்சியும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த விவர ஓட்டப்படம்(flowchart) உதவியாக இருக்கும் என்பதால்,  விவர ஓட்டப்படம்(flowchart)   தரப்பட்டுள்ளது. விவர ஓட்டப்படம்(flowchart)  உள்ள தகவல்களை(data) அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அன்பர்களும் தாங்களாகவே சிந்தித்து  இந்த கணித ஆராய்ச்சியின் தகவல்களை சரிபார்த்து விட்டு முடிவினை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்

     7 தலைமுறைகளில் 127 ஆன்மாக்கள்.  எவ்வாறு?

         முந்தைய தலைமுறையின் சஞ்சித, பிராரப்த, ஆகாம்ய கா்மா இன்றைய தலைமுறையின் சஞ்சித கா்மாவாகின்றது.

        முந்தைய தலைமுறையின் சஞ்சித கர்மா அவர்களின் முந்தைய தலைமுறையின் சஞ்சித, பிராரப்த, ஆகாம்ய கா்மாவைப் பொறுத்துள்ளது 

        எனவே 7 தலைமுறைகளில் 127 ஆன்மாக்கள் என்பது முதல் ஆன்மாவின்  முந்தைய தலைமுறைகளான தந்தை-தாய்,  பாட்டன்-பாட்டி, பூட்டன்-பூட்டி,ஓட்டன்-ஓட்டி, சேயோன்-சேயோள், பரன்-பரை ஆகியவர்களின்  வினை மூட்டைகளை  கணக்கில் கொண்டு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகும்.

        ஆகவே  இப்போது வாழ்கின்ற ஆன்மா குறைந்த பட்சமாக  முந்தைய ஆறு  தலைமுறைகளின் 126 வினை மூட்டைகளின் தொகுப்பைக் கொண்டுவந்துள்ளது,    

        இந்த  126  வினை மூட்டைகளின் தாக்கம் இந்த ஆன்மாவிற்கு இப்பிறவியில் விளைவுகளாக வருகின்றது,  இது மட்டுமல்ல;     முந்தைய ஏழு தலைமுறைகளுக்கு  முன்னரும், பல்லாயிரக் கணக்கில் தலைமுறைகள் உள்ளதை மறந்து விடக்கூடாது.  ஒரு ஆன்மாவிற்கு ஆதிமனிதனிலிருந்தே கருத்தொடராக தொடர்பு உள்ளது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

          126 வினை மூட்டைகளில்  விலங்கினப்பதிவும், அதனை ஒட்டிய பிறர்வளம் பறித்தலும், அது ஒழுங்கின்மைக்கு காரணமாக இருப்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

        ஒரு ஆன்மா, இதுவரை முந்தைய ஏழு பிறவிகளில் செய்யாத தவற்றை இந்தப் பிறவியில் செய்வதாக வைத்துக் கொள்வோம்.   ஆனால் இப்பிறவியில் நல்லோர் இணக்கத்தால் அந்த தவற்றை திருத்திக் கொள்ள வேண்டும் என முடிவு எடுத்தால் அதனை திருத்திக் கொள்வது எளிது.  ஏனெனில் அந்த தவறான செயலின் பதிவு ஏழு தலைமுறைப்பதிவுகளின் அழுத்தத்தைவிட வலிவு குறைந்தது.

       ஒருவேளை இந்தப்பிறவியிலேயே முதன் முதலாக செய்த தவறான செயல்கள் கூட தன் வாழ்நாளில் அதிக நாள் (say 10 years)  செய்து பழகியிருந்தால், நல்லோர் இணக்கம் ஏற்பட்டாலும்  உடனே திருத்தம் பெறமுடியாமல் பல ஆண்டுகள் முயற்சி செய்துதான் வெற்றி பெற வேண்டும். ஆகவே நல்லோர் இணக்கத்தை தன் வாழ்நாளில் இளம் பருவத்திலேயே பெற்றிட வேண்டும்.  அதுதான் சிறுவர் பருவம்.  குழந்தைகளுக்கு பெற்றோர்களைவிட, உடனே தரிசிக்கக் கூடிய நல்லோர்கள் யார் உள்ளனர்?  வேறு யாருமில்லை பெற்றோர்களேதான்!

    Thanks: SKY -Villivakkam

    Thanks: SKY -Villivakkam

    ‘வருங்காலத்தில் நல்லோர் இணக்கத்திற்கு பாத்திரமான’   பெற்றோர்களை உருவாக்க வல்லது அருங்கலையாகிய மனவளக்கலை என்னும் வாழ்க்கைக் கலை.  இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொண்டு. அடுத்த அறிவிற்கு விருந்தில் (01-06-2016 புதனன்று) ஒழுக்கம் கடைபிடிப்பதற்கான வழியைக் கூறும் குறளுடன்  சிந்தனையைத் தொடர்வோம்.  வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                              வளர்க அறிவுச் செல்வம்.

    Loading