இன்றைய விருந்து

  • அறிவிப்பு

    வாழ்க மனித அறிவு                                                                                                      வளர்க மனித அறிவு

     

    28-11-2014

    வாழ்க வளமுடன். தவிர்க்க முடியாத காரணங்களால் 28-11-2014 லிருந்து 01-12-2014 வரை சந்திக்க

    இயலாமையைத் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது. பொருத்தருள்க. வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                            வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • இறை அருள் பெற……

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    இறை அருள் பெற……

    FFC – 30

    27-11-2014

     

    நேற்று பேரறிவாகிய இறையே மனித அறிவாக இருந்தாலும் அது நேரிடையாக மனித அறிவாக வரவில்லை. அது விலங்கின அறிவாக வந்துதான் மனித அறிவாக வந்துள்ளதால் அறிவுடன் பரிணாமக் கசடு வந்து விட்டது என்று பார்த்தோம். இன்று அதிலிருந்து தொடர்வோம். பரிணாமக் கசடு என்றால் என்ன? பரிணாமக் கசடு வந்து விட்டது என்பது, விலங்கினப் பண்பும் மனிதனிடம் வந்துவிட்டது என்பதனைக் குறிக்கின்றது. விலங்கினப் பண்பு என்பது பிறர் வளம் பறித்துண்ணலாகும். புலி மானைக் கொன்று தின்பது பிறா் வளம் பறித்துண்பதாகும். பிறர் வளம் பறித்தலில், மூன்று கொடூரச் செயல்கள் நடக்கின்றன. அவையாவன,

    பிற உயிர் வாழும் சுதந்திரத்தை அழித்தல்

    பிற உயிரைச் சித்திரவதைச் செய்தல்,

    கொலைசெய்தல்,

    ஆகிய மூன்று செயல்கள் நடை பெறுகின்றன. விலங்கினத்தில் அது செயல்களாக் கருதப்படுகின்றன. ஆனால் விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் மனிதனிடம் காணப்பட்டால் அது மூவகைக் குற்றங்களாகி விடுகின்றன.. புலி மானைக் கொன்று உணவாகக் கொள்வது இயற்கையால் அனுமதிக்கப்பட்டது. ஆனால் மனித அறிவிற்கு பிறா்வளம் பறித்தல் என்பது அநீதியானது. எனவே இவ்வகைக் குற்றம் புரிந்தவா்களைத் தண்டிக்க சட்டங்கள் உள்ளன. இருப்பினும் சட்டத்தின் கண்களுக்குத் தெரியாமலும் பிறர்வளம் பறித்தல் அடிப்படையாகக் கொண்டக் குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எந்தவகைக் குற்றங்களாக இருந்தாலும் பெரும்பாலானக் குற்றங்கள் விலங்கினப் பண்பை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கும்.
    புலி மானைக் கொள்ளும் நிகழ்ச்சியில் புலிக்கு மானின் உணர்வைத் தன்னுணர்வு போல் மதிக்கத் தெரியாது. ஒரு வேளைத் தெரிவதாக வைத்துக் கொண்டால் புலி மானைக் கொல்லாது. இது சாத்தியமில்லை புலிக்கு. புலி புல்லைத்தான் தின்ன வேண்டியிருக்கும். ஆகவே விலங்கினப் பண்பில் பிறா் உணர்வை தன்னுணர்வு போல் மதிக்கும் பண்பு கிடையாது. அந்த விலங்கினப் பண்பே மனிதனிடம் இன்னமும் அதாவது மனித இனம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் மறைய வில்லை. மனிதனின் தரம் மனித அளவிற்கு உயரவில்லை. ஆகவேதான் முன்னாள் பாரத ஜனாதிபதியும், தத்துவஞானியுமான டாக்டா். இரதாகிருஷ்ணனுக்கு ”இன்னமும் பரிணாமம் பூர்த்தியாகவில்லை-Evolution is still not complete) என்கின்ற உண்மையை பதியவைக்க வேண்டிய அவசியம் வந்தது.
    புலி மானைக் கொன்று உணவாகக் கொள்கின்ற உதாரணத்தின் மூலம் விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் பறித்தல் என்பதனை விளக்கி, அந்த பிறர் வளம் பறித்தல் மனிதனிடம் கசடாக உள்ளது என்பதால். ”எல்லா மனிதர்களும் அவ்வாறு பிறர் வளம் பறித்தலாகிய கொலை செய்வதில்லை, எனவே விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் பறித்தல் மனிதனிடம் உள்ளது என்பது சரியில்லை” என ஒரு சிலர் நினைக்கலாம்.
    குடும்பங்களிலேயேகூட பிறர்வளம் பறித்தலைக் காணமுடியும். மாமியார் மருமகளை தன்மகள் போல் பார்க்க வேண்டியவள் மருமகளை சொல்லால் கடிவது விலங்கினப் பண்பையேச் சாரும். எப்படி? விலங்கினப் பண்பில் உள்ள, பிறர் உணர்வைத் தன்னுணர்வு போல் மதிக்காமை மாமியாரிடமும் உள்ளது. அதாவது மாமியார் கடிவதால் மருமகள் துன்புறுவாளே என்பதனை தன்னுணர்வு போல் கருதாமை தான் காணப்படுகின்றது. தெரிந்திருந்தால் அன்பாகச் சொல்லியிருக்கலாம். இது மருமகளுக்கும் பொருந்தும். மருமகள் மாமியாரை தாய் போல் கருதுகின்ற பெருந்தன்மை இருக்க வேண்டும். இச்சூழலில் பிறக்கும் வருங்கால சமுதாயச் செல்வங்களான குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும்?
    நிறுவனத்தில் வேளலச் செய்பவர்களுக்கு பதவி உயா்வு அளிக்கும் போது, அந்த உயர் பதவிக்கானத் தகுதியும் திறமையும் உள்ளவர்தான் தோ்ந்தெடுக்கப்படுவார். எப்படி பதவி உயர்விற்கு அப்பதவிக்கான தகுதியும் திறமையும் அவசியமோ, அதுபோல் வாழ்க்கையில், மகளாக இருந்து மருமகளாக உயரும் போது அதற்கானத் நற்குணத் தகுதிகளையும், நற்குணத் திறமைகளையும் பெற்று குணவதியாக, மகளாக இருக்கும் போதே பெற்றிருக்க வேண்டும். இதற்கு பெற்றோர்கள் துணை புரிய வேண்டும். அம்மாவாக இருந்து மாமியாராக உயர இருக்கும் குடும்பத்தலைவிக்கும், மகளாக இருந்து மருமகளாக உயர இருக்கும் பெண்ணிற்கும் ஆலோசனைக் கூறும் பயிற்சி (counselling course) தேவையாக உள்ளது. அந்தத் தேவையினை ஏற்கனவே மனவளக்கலைப் பூர்த்தி செய்து வருகின்றது என்றால் மிகையாகாது. மனிதனை மாண்புடையவனாக்கும் பயிற்சியான மனவளக்கலையை திருமணத்திற்கு முன்பே, அதாவது பதினைந்து வயதிலிருந்து பத்து வருடங்கள் முறைப்படிக் கற்றுப் பயிற்சியும் செய்து வந்தால் இது போன்ற குடும்பச் சிக்கல்கள் தீர்ந்து மாண்புடையக் குழந்தைகள் பிறக்க ஏதுவான சூழ்நிலை நிலவும்.

    . . . . .நாளைத் தொடர்வோம்

    Loading

  • இறை அருள் பெற …….

    வாழ்க மனித அறிவு                                                                                    வளர்க மனித அறிவு

    இறை அருள் பெற …….

    FFC – 29

    26-11-2014

    இறையே அறிவாக மனிதனிடம் உள்ளது. இறையையே மனிதன் தன்னிடம் வைத்துக் கொண்டு ஏன் துன்பத்துக்குள்ளாக வேண்டும்? .மனிதனின் செயலில் விளைவாக வருவது இறை என்கின்ற நியதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இறையே மனிதனிடம் அறிவாக இருந்தாலும், மனிதனுடையச் செயலைப் பொருத்து விளைவுகள் துன்பமாக வரும். இறையே, முதல் மனுநீதிச் சோழன்.

    அறிவிற்கு விழிப்புணர்வு வேண்டும். ஒரு செயலைச் செய்யும் முன்னரே அதன் விளைவைக் கணித்து அச்செயலைச் செய்ய வேண்டும். ஏற்கனவே அச்செயலைச் செய்து அதன் விளைவை இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ அனுபவித்திருக்கலாம். மீண்டும் அச்செயலை செய்ய வேண்டிய சூழல் இப்போது வருமானால், ஏற்கனவே அச்செயலை செய்து அனுபவித்த அனுபவம் கவனத்திற்கு வந்து அச்செயலை செய்வதா செய்ய வேண்டாமா என்கின்ற முடிவை அந்த நொடியிலேயே அறிவு எடுக்க வேண்டும்(Quick insight of the mind). நுண்மாண் நுழைபுலன் (விரைந்துணர் அறிவாற்றல், அறிவின் தெளிவும் விரைவும் கூடிய தன்மை = perspicacity) வேண்டும். நுண்மாண் நுழைபுலன் மூன்று சொற்களை கொண்டது.
    1) நுண்: – நுண் என்றால் நுட்பம் அல்லது நுண்ணியது, கூர்மையானது என்று பொருள்.
    2) மாண்: – மாண் என்றால் மாண்புடையது என்று பொருள். அதாவது நுண்மாண் என்பது விரிந்த சிந்தனையால் உயர்ந்த ஒரு பெருந்தன்மை எனலாம்.
    3) நுழைபுலன்: – நுழைபுலன் என்றால் ஊடுருவி அறியும் திறன்.

    தவறு செய்வது. நாணத்தை(வெட்கத்தை) ஏற்படுத்த வேண்டும். திருவள்ளுவர் மனிதனுக்கு இருக்க வேண்டிய உடைமைகளை(சொத்து, உரிமையடையது) வலியுறுத்திக் கூற வந்தவர் அன்புடைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பொறை உடைமை, அறிவு உடைமை, அருள் உடைமை, ஊக்கம் உடைமை, ஆள்வினை உடைமை, பண்பு உடைமை, ஆகிய ஒன்பது உடைமைகளைக் கூறி கடைசியாக நாண் உடைமை என்கின்ற உடைமையையும் சோ்த்து பத்து அதிகாரங்களை ஏற்படுத்தியுள்ளார். மனிதனுக்கு இருக்க வேண்டிய மற்றவைகளைக் கூறிவிட்டு கடைசியாக நாணம் இருக்க வேண்டும் என்கிறார்.
    அப்போதுதான் மனிதன் முழுமை அடையமுடியும். எப்படி? தவறு செய்ய மாட்டான். ஆகவேதான் தவறுகளே செய்யாத சான்றோர்களுக்கு நாணம் என்பது அணிகலன் என்கிறார், நாணமுடைமையில்லை என்பதால்தான் குடும்பத்திலிருந்து சமுதாயம் வரைக் குற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.. ஆகவே, வெட்கப்படவேண்டியிருக்கச் செய்கின்ற செயல்களாகிய தவறுகளைச் செய்யக் கூடாது,
    அந்த சான்றோன்மையாகிய பெருந்தன்மை இருந்தால், அறிவு எந்தச் செயலையும் செய்வதற்கு முன்னர் நுணுகி ஊடுருவி அறிந்து முடிவு எடுக்கும். இதற்கு நினைவாற்றல் மிக மிகத் தேவை. அநேகர் நினைவாற்றல் குறைவுடையோர்களாக இருப்பதால் அவர்களுக்கு நுண்மாண் நுழைபுலன் என்கின்ற அறிவின் திறன் எவ்வாறு இருக்க முடியும்? அவா்களிடம் இறையே அறிவாக இருந்தும் என்ன பயன்? எவ்வாறு காப்பையும், இறையருளையும் பெறமுடியும்?
    ஆறாம் அறிவு அறியும் திறனுடையது. எனவே ஆறாம் அறிவு தன்னுடைய எல்லாத்திறன்களையும் அறிந்து பயிற்சி செய்ய வேண்டும். வெறும் புலன்வழி வாழ்க்கையையே முக்கியமாகக் கருதி வாழ்ந்தால், அதாவது வெறும் அன்னமய கோசம் மற்றும் மனோமய கோசத்திலேயே மனிதனின் எண்ணம் செயல்பட்டுக் கொண்டிருந்தால் அறிவு தன்னுடைய முக்கியமான, தன்னிடம் மறைந்து இருக்கின்ற புதையலாக உள்ள திறன்களைப் பயன்படுத்த முடியாது. அதற்கு, புதையல்கள் என்னென்ன என்று தெரிந்து அவைகளைப் பயிற்சி செய்து பழைய பழக்கத்தை வென்று அறிவை முழுமைப் படுத்த வேண்டும். மனவளக்கலையின் நோக்கமே பேரறிவின் பின்னமாக மனித அறிவு இருந்தாலும் பரிணாமக் கசடுகளால் அது குறையுடையதாக இருப்பதால் அதனை முழுமையாக்கி முக்தி நிலையை அடையச்செய்வதாகும்.
    ”அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்,
    அறிவு முழுமை அது முக்தி.” என்கிறார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    பேரறிவாகிய இறையே மனித அறிவாக இருந்தாலும் அது நேரிடையாக மனித அறிவாக வரவில்லை. அது விலங்கின அறிவாக வந்துதான் மனித அறிவாக வந்துள்ளதால் அறிவிற்கு பரிணாமக் கசடு வந்து விட்டது. (கசடு என்றால் பொருள் உற்பத்தியில் ஏற்படும் கழிவு). பரிணாமக் கசடுகள் என்றால் என்ன என்று நாளைய விருந்தில் பார்ப்போம். . . . . .நாளைத் தொடரும்
    வாழ்க அறிவுச் செல்வம்.                                                                                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • மகானாக்கும் மகோன்னத வினாக்கள்7/7

    வாழ்க மனித அறிவு                                                                             வளர்க மனித அறிவு

    மகானாக்கும் மகோன்னத வினாக்கள்7/7

    FFC  – 27

     நேற்றையத் தொடர்ச்சி

                          25-11-2014

    வறுமை ஏன் வருகின்றது?

                                                                        

                               கொடிது ! கொடிது ! வறுமை கொடிது !

                       அதனினும் கொடிது இளமையில் வறுமை? …….அவ்வையார்

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளளார்.

    தனியொருவனுக் குணவிலை யெனில்  ஜகத்தினை அழித்திடுவோம்” என்கிறார் மகாகவி பாரதி மகான்

     

    நேற்று முன்றாவது வினாவான கடவுள் என்பவர் யார் என்று பார்த்தோம். இன்று வறுமை ஏன் வருகின்றது என்கின்ற வினாவிற்கானக் காரணத்தைப் பார்ப்போம்.

       மகரிஷி அவர்கள் பத்து வயதிலேயே வறுமையின் பிடியில் சிக்கியவர்.. சிறுவனாக இருந்தபோதே தறியில் உழைப்பார் மகரிஷி அவர்கள். ஒரு நாள் காலையிலிருந்து தறியில் வேலை செய்துவிட்டு வந்தவருக்கு நண்பகல் உணவாக கஞ்சிகூட பெற்றோர்களால் கொடுக்கமுடியாத வறுமை நிலையை அனுபவித்தவர். அவ்வையார் கூறியுள்ளது போல் இளமையில் வறுமை என்கின்ற மிகக் கொடிய நிலையை. அனுபவித்தவர்.

       ஏன் இளமையில் வருமை கொடியது என்கிறார் அவ்வையார்? இளமையில் பசியினைக் குழந்தைகளால் தாங்கிக் கொள்ள முடியாது. மேலும் இளமை என்பது வளரும் பருவம். வளரும் நிலையிலேயே வறுமை இருந்தால் உடலளவில் எவ்வாறு வளர முடியும்? பிறகு குணத்திலேயும் வளர வேண்டியதுள்ளது. எனவேதான் அவ்வையார் இளமையில் வறுமை கொடியதிலும் கொடியது என்கிறார்.

       எதனையும் அதன் போக்கிலே விட்டுவிடாமல் ஏழ்மை ஏன் வருகின்றது என வினாவினைக் கேட்டார் மகரிஷி அவர்கள். இன்பம்,துன்பம் ஏன் வருகின்றன என வினாவினார். தன்குடும்ப வறுமையைப் போக்க. நல்ல வருவாயுள்ள தொழிலாகத் தேர்ந்து எடுத்து அதைச் செய்வதன் மூலம் போக்க முடியும் எனக்கண்டறிந்தார். அதுபோலவே வறுமையை ஒரு அளவிற்கு சமாளித்தார். வறுமை இருப்பினும் தன்னுடைய நான்கு வினாக்களுக்கான விடைகளைக் கண்டு பிடிப்பதில் ஆராய்ச்சியோடு இருந்து வந்தார்.

    தனக்குள்ள வறுமையை மட்டும் தீர்வு காணாமல், சமுதாயத்தில் உள்ள வறுமையையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார்.   பொருள் வறுமை இல்லை, அறிவின் வறுமைதான் உள்ளது எனக் கண்டு பிடித்தார். பகிர்ந்துண்ணும் நிலைக்கு அறிவு நிலை பண்படாததை அறிவின் வறுமை என்கிறார்.  வறுமை என்கின்ற துன்ப அலை வீசும் போது மற்றவர்கள் எவ்வாறு நலமாக வாழ முடியும்?

     இயற்கை அன்னை ஒவ்வொரு உயிரையும் படைக்கும் முன்னரே அது வாழ்வதற்கான வளங்களை வைத்து விட்டுத்தான் படைக்கிறாள். ஏழ்மையில் சிலர் வாழ வேண்டும் என்றா படைத்திருப்பாள்? ஆகவே ஏழ்மை என்பது மனிதனால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. ஆகவே சமுதாயம் நினைத்தால் ஏழ்மையை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

       பொருளாதார ஏற்றத்தாழ்விற்குக் காரணங்களைக் கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார். பொருள்துறையில் சமநீதி தேவை என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.

         ”பார் முழுதும் பொருள் துறையில் சமநேர் நீதி

           பல நாடும் ஒன்றிணைந்த பொருளாதாரம்

         சீர்திருத்தச் சிக்கனமாம் சிறந்த” வாழ்வு காண்போம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    ,     ” உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்

           பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்” என்று உலகைத் தினந்தோறும் அவரது மாணவர்களையெல்லாம் வாழ்த்தச் செய்திருக்கிறார்.

    உலகநல வேட்பில்.

         மக்கள் உழைத்துண்டு வளம்காத்து வாழவேண்டும் ” என்கிறார்.

    சமூகச்சிக்கல்களுக்கான காரணங்களில் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு காரணம் என்று கூறி தீர்வுகளைக் கூறியிருக்கிறார்.

         மனித வாழ்க்கை அறநெறியாக இருக்கவேண்டும் என்று எண்ணி., ஒழுக்கம். கடமை, ஈகை ஆகிய மூன்றையும் கொண்டது அறம் என்று, இது வரை துல்லியமாக வரையறுக்கப்படாத இருந்து வந்த அறத்தை வரையறுத்திருக்கிறார்.

         ”குலமுதலாய் பேதங்கள் கொள்ளும் நிலைமாற்றி

       பலரும் கூடி உழைத்துப் பங்கிட்டு வாழ்ந்திடுவோம்

       உலகில் பிறந்து விட்ட ஒவ்வொர் மனிதனுக்கும்

         நில உலகம் சொந்தமென்ற நீதிநிலை நாட்டிடுவோம்.”  ……. என்கிறார் மகரிஷி அவர்கள்.

       இந்த நான்கு வினாக்களும் தனிமனித மற்றும் சமுதாய நலனைக் கருதியதாகின்றன. இந்த வினாக்களுக்கான விடைகள் இன்றுள்ள சமுதாயத்தை உய்விக்கச் செய்யவல்லன.    ஏழு நாட்களாக மகானாக்கும் மகோன்னத வினாக்கள் என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம்.

       இந்த மகோன்னத வினாக்கள் வேதாத்திரிய சிறுவனை பின்னர் மகானாக்கியது என்பதால், அவரைப் பற்றி மட்டும் சிந்திப்பதற்காக ”மகானாக்கிய மகோன்னத வினாக்கள்” என்று தலைப்பை வைத்து சிந்தித்திருக்கலாம். ஆனால் மகானாகுதல் எனும் வாழ்வின் நிகழ்ச்சி முடிந்து விட்டதாகக் கருதாமல், மகானாக்கும் மகோன்னத வினாக்கள்” என்று தலைப்பை வைத்து மகானாகுதல் என்பது ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே மனித குலத்தில் அவசியமாகின்றது என வலியுறுத்தப்படுகின்றது..  

       இதனை எண்ணித்தான் மகரிஷி அவர்கள் “Vision”என்கின்ற ஆன்மீக கல்வி நிறுவனத்தை நிறுவி அதன்வழியாக யோகமும் மனித மாண்பும்” என்கின்ற கல்வியினை பள்ளியிலிருந்து பல்கலைக்கழங்கள் வரை கொண்டுசென்று மனிதர்களையெல்லாம் பண்பேற்றம் பெறுவதற்காக வழிவகைகள் செய்துள்ளார்.

       ஆகவே இந்த நான்கு வினாக்களுக்கும் விடைகள் தெரிந்து விட்டது இனிமேல் இந்த வினாக்களை எழுப்பி விடைகாண வேண்டிய அவசியம் இல்லை எனக்கருதவே முடியாது. இந்த நான்கு வினாக்களுக்கான விடைகள் சரியா, எவ்வாறு சரி, அறிவுபூர்வமாக உள்ளனவா என ஆராய வேண்டும். அவ்வாறு ஒவ்வொரும் ஆராய்ந்து சரி என ஒப்புதல் வழங்கும் போதுதான் வேதாத்திரியம் மேலும் மேலும் பூத்து காய்த்து கனிகளாகிப் பயன்படுவதற்கு மக்களின் ஆத்மார்த்த எண்ண ஆதரவு திரண்டு உலக மக்களால் ஏற்கப்பட்டு, பாரதியாரின் இளைய சகோதரரான மகரிஷி அவர்கள் கனவு கண்ட உலக சமாதானம் விரைவில் மலரும்.

         ” எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்”

           என்றுரைத்தான் கண்ண பெருமான்;

         எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை

           இந்தியா உலகிற் களிக்கும் ஆம்

         இந்தியா உலகிற் களிக்கும் – ஆம் ஆம்

           இந்தியா உலகிற் களிக்கும்”

    என்கின்ற பாரதி மகானின் சத்திய வாக்கினை, அவரது தம்பியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழியாக நிஜமாக்குவதற்காக இயற்கை அன்னை, தன்னுடைய தன்மாற்றத்தில் உறுதியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு அவளுடைய குழந்தைகளான நாம் துணை நிற்போம். பேரறிவில் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை மகான்களின் அறிவாற்றலும் இவ்வுலகத்தை உய்விக்கட்டும். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

                     இச்சிந்தனை இப்போதைக்கு முற்றிற்று.. ஆனாலும் இது பற்றிய சிந்தனை மேலும் உள்ளது.

    வாழ்க உலக சமாதானம். வருக உலக சமாதானம் விரைவில் என 

                                                         வாழ்த்துகிறோம்.

     

     

     

     

     

    Loading

  • 27-மகானாக்கும் மகோன்னத வினாக்கள் 6/7

     

    வாழ்க மனித அறிவு                                                                             வளர்க மனித அறிவு

    மகானாக்கும் மகோன்னத வினாக்கள் 6/7

    FFC  – 27

     

    நேற்றையத் தொடர்ச்சி

     

    24-11-2014

        

    இன்று மூன்றாவது வினாவான “இறைவன் என்பவர் யார்?” என்றும் ”அவர் ஏன் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தார்?” என்கின்ற வினாவினை சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். மகரிஷி அவர்கள், அவருடைய தந்தையார் பழக்கியபடி கடவுளிடம் மிகவும் பக்தி கொண்டிருந்தார். கடவுள் இருக்கிறார் என்கின்ற நம்பிக்கை மகரிஷி அவர்களுக்கு இருந்தாலும், மற்றவர்களைப்போல் நம்பிக்கையோடு இருந்து விடாமல் அவருடைய உள்ளம் கடவுள் என்பவர் யார். என்கின்ற வினாவை சிறு வயதிலேயே எழுப்பிக் கொண்டிருந்தது,

    ஒரு சிலரைத் தவிர கடவுள் நம்பிக்கையுள்ள மற்றவர்களுக்கு நம்பிக்கையை உறுதி படுத்தாமலேயே, அதாவதுக் கடவுளைக் காணாமலேயே வாழ்க்கை முடிந்து விடுகின்றது. பக்தியிலேயே திளைத்து ஒரு சிலர் கடவுளைக் கண்டதாக வரலாறுகள் கூறுகின்றன. காட்டிற்குச் சென்றுக் கடுந்தவம் புரிந்ததன் பயனாக கடவுள் காட்சி கொடுத்தார் என்றும் ஆன்மீக வரலாறுகள் செப்புகின்றன. கடவுளைச் சிலை வடிவில் வணங்கி கடவுளைக் கண்டவர்கள் கடவுளை உருவகப்படுத்தி பாடல்கள் அருளியுள்ளனர், சித்தா்கள், மனதை ஒரு முகப்படுத்தி கடும் தவம் புரிந்து கடவுளைக் கண்டார்கள் எனவும் செய்திகள் உள்ளன. சித்தர்கள் கடவுள் நிலையை அரூபம் என்றனர்.

    பக்தியின் வழியாக கடவுளைத் தரிசித்தவர்களும் அல்லது அரூப வழிபாட்டில் கடவுளைத் உணர்ந்தவர்களும் வாழ்க்கையில் ஒழுக்கச் சீலர்களாக இருந்தனர் என்பது அவர்களது வாழ்க்கை வரலாறுகள் தெரிவிக்கின்றன. அதுதானே சமுதாயத்திற்கு அவசியம். அறவாழ்வு வாழ்ந்துள்ளனர். கடவுள் அன்பும் கருணையுமானவன் என்கின்றனர் இருதரப்பினருமே. இரு தரப்பினருமே கடவுள் நிலையைப் பற்றியும், மனிதன் எவ்வாறு அறவாழ்வு வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தி அறநூல்கள் எழுதியுள்ளனர், இருப்பினும் சாதாரண மனிதனுக்கும் விளங்குகின்ற அளவில் கடவுள் நிலைவிளக்கம் இல்லை.

    தந்தை யார்? தாய் யார்? என்று ஒவ்வொரு குழந்தைக்கும் தெரிவதுபோல் கடவுள் யார்? என்கின்ற கடவுள் நிலை விளக்கம் இல்லை. கடவுள் நிலையைப்பற்றி குழப்பம் தான் உள்ளது. சமுதாயச் சிக்கல்களுக்கானப் பல காரணங்களில் ஒன்று கடவுள் நிலையைப் பற்றியக் குழப்பம். இதனை மகரிஷி அவர்கள் சமுதாயச் சிக்கல்களும் அதற்கானத் தீா்வுகளும் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    மெய்ஞானமும் விஞ்ஞானும் இணைய வேண்டும் என்கின்ற எண்ணமும் எழுந்து விட்டது. மெய்ஞானமும் விஞ்ஞானமும் இணைய வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். முன்னவர் விரும்பினார். அதனையே பின்னவரான உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் மெய்ஞானமில்லாத விஞ்ஞானம் நொண்டி, விஞ்ஞானமில்லாத மெய்ஞானம் குருடு (Science without Religion is lame and religion without Science is blind) என்று கூறியுள்ளார். அடுத்த பின்னவரான வேதாத்திரி மகரிஷி அவா்கள் மெய்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் இணைத்துவிட்டார்.

    எல்லோரும் கடவுளைக் காண முடியவில்லை. நம்பிக்கையில்தான் கடவுள் வணங்கப்படுகிறார். அதுவும் இணக்கமில்லாத வணக்கம்தான் நடைபெறுகின்றது. மூட நம்பிக்கைகள் பெருகிவிட்டன. ஆகவே கடவுளை விஞ்ஞான ரீதியாக உறுதி படுத்த வேண்டும் என்கின்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆதிமூலம் என்று கடவுளுக்குப் பெயா் வைத்திருந்தாலும் அதனை வைத்து கடவுள் ஏன் ஆதிமூலம் என அழைக்கப்படுகிறார் என்று கேள்வி கேட்டு கடவுள் நிலையை உறுதி படுத்தப்படுவதில்லை.

    கட+உள்=கடவுள் என்றும். இப்பிரபஞ்சத்தை (ஆட்சியின்றி என்பது கவனிக்கத்தக்கது) ஆண்டு கொண்டிருப்பதால் ஆண்டவன் என்றும், கடவுள் எங்கும் நீக்கமற இருக்கிறான் என்று கூறி, அதாவது இறைந்து கிடப்பதால் கடவுளுக்கு இறைவன் என்கின்ற பெயரும் உள்ளன. ஆனால் கடவுள் நிலை அறுதியிட்டுக் கூறப்படவில்லை. கடவுள் எல்லாவற்றையும் விட வலிமையானவன் அதாவது mightiier than all என்பதால் Almighty என்றும், G(generation)+O(opeation)+D(destruction)=GOD என்கின்ற உருவாக்கிய சொல்லாக கடவுளை ‘GOD’ என்றும் ஆங்கிலத்தில் கடவுளை அழைக்கின்றனர்.

    இந்த நிலையிலே கடவுள் என்பவர் யார் என்றும், அவர் ஏன் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்கின்ற வினாவைினை அரூபமான இயற்கேயே / இறையே

    சிறுவர் வேதாத்திரியிடம் கேள்வியாக வந்து,

    அதுவே தன் நிலையை அப்பட்டமாக தெளிவாக விடையாகத் தந்து

    வேதாத்திரியை மகானாக்கி, மகாத்மாவாக்கி.

    அறிவினரைச் சேர்தல் மூன்றாம் இனிதாக அவ்வையார் கூறும் அறிவினராக்கி(குருவாக்கி),

    மனிதன்(துவைத நிலையில்) ஏற்படுத்திய சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று குருவைப்பற்றிக்      கூறுவதற்கிணங்க தானே வேதாத்திரிய வடிவில் குருவாகி, உலகிற்கு அறிவொளியைத் தந்துள்ளது..   இதுதான் ஒன்றே பலவாகியது என்கின்ற சுத்த அத்வைத விஞ்ஞானம்.

     

    சுருக்கமாக, இயற்கை வேதாத்திரியத்தின் வாயிலாக இறையைப்பற்றி்க் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

     

    வெட்டவெளியேத் தெய்வம்

    வெட்ட வெளியை பாழ்நிலை, அது ஒன்றுமில்லாதது என்று கூறப்பட்டு வந்ததற்கு, மாற்றாக, அது வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் ஆகிய நான்கு தரங்களை(quailties as adjectives)யும், அது மட்டுமல்லாது தன்மாற்றம், இயல்பூக்கம், கூர்தலறம் என்கின்ற மூன்று திறன்களையும் கொண்டுள்ளது என்கின்றது வேதாத்திரியம்.

     

    தெய்வம் பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை. வெட்டவெளியே தெய்வம் என்கின்றபோது அது எப்படி படைக்கமுடியும்?. வெளியாகிய தெய்வமே தானே பிரபஞ்சமாக மாற்றம் அடைந்துள்ளது. தானே மாற்றம் அடைந்துள்ளதால் வேதாத்திரியம் அதனை தன்மாற்றம் (self transformation) என்கின்றது.

     

    மேலும் உருவமில்லாத வெட்டவெளி எவ்வாறு உருவமுள்ளதாக முடிந்தது என்பதனை விளக்குவதற்குக் காரணம் அதற்கு தன்னிருக்க ஆற்றல் (self compressive force)இருந்தது என்கின்றது வேதாத்திரியம்.

    அதற்கு மேலும் தனித்தனியே வெளியிலிருந்து துகளானது எவ்வாறு சுழற்சி பெற்று, எவ்வாறு அவைகள் ஒன்று கூடி தொகுப்பாகி விண்ணாகவும் மற்ற பஞ்ச பூதங்களாக முடிந்தது என்பதற்கு காரணமாக இருந்தது சூழ்ந்தழுத்தும் ஆற்றல் surrounding pressure force என்கின்றது வேதாத்திரியம். நேரமின்மையைக் கருதி சிந்தனையை வேதாத்திரியம் அருளியுள்ள ஒரு கவியுடன் இன்றையச் சிந்தனையை முடித்துக் கொள்வோம்.

    வெட்டவெளியே பேராற்றல்(08-07-2001)

     

              வெட்டவெளி சக்தியென்பது இல்லை ஆனால்,

    வேறு எந்தப் பொருள் வலிது பிரபஞ்சத்தில்?

    தொட. தொடப்பட்ட இருசீவர்களுக்குக் குள்ளே,

    தொட, தொட்டதாய் எண்ணும் அறிவு யாது? வெளிதான்!

    பட்டப்பகலில் வானில் விண்மீன் தோன்றா,

    பார்வை இல்லார்க்கு அவை எப்போதும் காணா

    எட்டவில்லை அறிவுக்கு என்றால் , அந்த

    இயற்கைத் தத்துவம்எங்கே ஒளிந்து கொள்ளும்?   அறிவோம்!

    …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இவ்வளவு திட்டவட்டமாக, அறுதியிட்டு, தெளிவாக இதுவரை காணமுடியதிருந்த தெய்வத்தை கருத்தியலாக அறிந்து கொண்டு. அதனை அவரவர்களே செய்முறையாகவும் உணரச் செய்துள்ளது வேதாத்திரியம். இது காலத்தின் கட்டாயமும் அவசியமும். இத்துடன் இன்றைய சிந்தனையை முடித்துக் கொண்டு நாளைக் கூடுவோம். வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.  

                                                                            ……..நாளைத் தொடரும்.

     

    Loading