இன்றைய விருந்து

  • ஆன்ம அலங்காரம்1/3

                                                                                ஆன்ம அலங்காரம்1/3  -08-11-2014                               

     

                                                                                                                                         நாள் – 08-11-2014

                 இன்றைய சிந்தனைக்கு எடுத்துக் கொண்ட பொருள் ஆன்ம ‘அலங்காரம்’. தலைப்பில் ஆன்மா மற்றும் அலங்காரம் ஆகிய இரண்டு சொற்கள் உள்ளன. ஆன்மா எது என்பது பற்றி அறியாதவர்கள் அநேகா் இருக்கலாம். ஆனால் மனவளக்கலைஞர்கள் ஆன்மாவைப் பற்றி அறிந்தவர்கள்.  அலங்காரம் என்கின்ற சொல்லின் பொருள் பற்றி எல்லோருமே அறிவர். இருப்பினும் அலங்காரம் என்பதனை ஆன்மாவுடன் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்போம். அலங்காரம் என்றால் என்ன? அலங்காரம் எதற்காக?

         அலங்கரி என்றால் அழகுபடுத்து என்று பொருள். அலங்காரம் என்பது ஒப்பனையால் அலங்கரிக்கப்பட்ட நிலை. அழகு படுத்துவது அலங்காரம். எது அழகு? எதற்காக அழகுபடுத்துதல் அவசியமாகின்றது? அழகு என்பது கண்களாலோ, காதுகளாலோ, மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி. அழகிற்கு,

     ü  பொருத்தமான குணம்,

    ü  தகுதியான தன்மை.

    ü  ஒழுங்கு முறை ஆகிய பொருட்களும் (meanings) உண்டு.

          அலங்காரத்தில் முடி அலங்காரம் ஆடை அலங்காரம், நகை அலங்கராம் இவ்வாறாக பல்வகைகள் உள்ளன. வாசனைப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன.

    • இயற்கையாக, இயல்பாக இருக்கும் அழகைவிட செயற்கையால். மிகைப்படுத்திக் காண்பிக்கவும், பார்க்கவும்,
    • தன்னை அழகுபடுத்தி தானே மகிழ்ந்து கொள்ளவும்,
    • பிறருக்கு தன்னை எடுத்துக்காட்டி, பிறர் புகழ தான் மகிழ்ச்சி அடைவதற்காகவும்,,
    • முதுமையை மறைத்து இளமையாகக் காட்டிக் கொள்வதற்கும்,
    • தற்காலிக போலி இன்பம் காண்பதற்காகவும்,. தற்காலிகமாக போலியாக மகிழ்ச்சி அடைவதற்காகவும்,.

     அலங்காரம் செய்து கொள்ளப் படுகின்றது.

          அசலில் அழகில்லை(originally) என்றுதானே செயற்கையாக அழகூட்டப்படுகின்றது. அலங்காரம் ஒரு போலிச்செயல். அலங்காரம் நிலையானது அல்ல. அலங்காரம் கலையக்கூடியது. ஆதலால் அலங்காரம் கலைந்தால், அழகில்லை எனக்கருதப்பட்ட முந்தைய அசல்தான் மிஞ்சும்.

     சுருங்கச் சொல்வதென்றால்,

    • மிகைப்படுத்திய அலங்காரம் தன்முனைப்பின் மறைமுக வெளிப்பாடு.
    • தன்னை உடலுடன் தவறாக அடையாளம் காண்பது.
    • தன்னுடைய சரியான அடையாளத்தை மறந்துவிடுவதாகின்றது,
    • தான் ஆன்மா என்பதனை மறந்துவிடுதல். இவைகளெல்லாம் தன்முனைப்பின் வெளிப்பாடுதானே?
    • இதனால் தானே பிறவிதோறும், மீண்டும், மீண்டும் பிறவி எடுக்கின்ற வினைகள் ஆன்மாவில் அழுத்தமாகப் பதிந்து கொள்கின்றது.
    • மண்ணிற்கோ அல்லது நெருப்பிற்கோ இரையாகவிருக்கின்ற உடலை அலங்காரம் செய்துகொள்வதில் இருக்கின்ற ஆர்வம் அழியாத ஆன்மாவை அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாதது அறியாமைதானே!

                       இதற்கெல்லாம் காரணம்

    • ஆன்மா கண்களுக்குத் தெரியாதது.
    • அல்லது ஆன்மா என்றும் அழியாதது, மற்றும் செயல்களை பதிவு செய்து (recording) அதற்கேற்ற விளைவுகளைத் தரும்(playing) தெய்வீக நீதிமன்ற, காந்த குறுந்தகடு (மறைந்துள்ள – invisible but existing magnetic compact disc) என்கின்ற விஞ்ஞானத்தை அறியாதிருத்தல்.

          ஆன்மா(கருமையம்) தெய்வீக நீதி மன்றம் என்கின்ற விஞ்ஞானத்தை மறந்து அறியாமையில் இருக்கின்றான் மனிதன். ஆகவே ஆன்மாவை (கருமையத்தை) அலங்காரம் செய்து கொள்ளவதில்லை.

       அப்படியே ஆன்மாதான் தெய்வீக நீதி மன்றம் என்று கருத்தியலாக (theoretically) தெரிந்திருந்தாலும், அதனை செயல்முறையில் (practically) உறுதி படுத்தாததும் காரணம்.

        அரூபமாகிய தெய்வத்தை ஆலயத்தில் சிலை வடிவத்தில் அலங்காரப்படுத்திப் பார்த்து இன்பம் அடைகிறான் மனிதன். ஆனால் அதே தெய்வம், தன்னுடைய ஊனுடம்பு ஆலயத்தில் நீதி மன்றமாக இருக்கும் ஆன்மாவைச் சுத்தமாகவும் நீதி வழுவா நிலையில் வைத்திருக்க அலங்காரம் செய்து பார்த்து பேரின்பமடைய அவனுக்குத் தெரியவில்லை.

         கண்களுக்குத் தெரியாமல் அகத்தே அரூபமாக இருக்கும் ஆன்மாவை எப்படி அலங்காரம் செய்வது என்கின்ற ஐயம் எழலாம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் எனப்படுவது எதனைத் தெரிவிக்கின்றது?  மனத்தூய்மை என்கின்றச் சொற்றொடர் எதனைக் குறிக்கின்றது? ஆன்மாவைப் போல் மனதிற்கும்தான் உருவமில்லை. மனம் அரூபா–ரூபம். உருவமில்லாத மனதை எவ்வாறு தூய்மை செய்ய முடியும் என்கின்ற ஐயம் அங்கே எழவில்லையே! அகத்தின் அழகு எனப்படுவது எதனைக் குறிக்கின்றது,? அகம் என்றால் உள்ளே என்று பொருள். ஆகவே உள்ளம் என்பது உள்ளே இருக்கின்ற மனதின் மறுமுனையான உள்ளத்தைக்குறிக்கின்றது. உள்ளத்திற்கு உருவம் இருக்கின்றதா? அகத்தின் அழகு என்பது எதனைக்குறிக்கின்றது? உள்ளே இருக்கும் மனதின் மறுமுனையான உள்ளமாகிய தெய்வத்தைத் தான் குறிக்கின்றது.

    அதனால்தான் திருவள்ளுவர்

                                         ” ஐயப் படா அது அகத்து உணர்வானைத்

                                        தெய்வத்தோடு ஒப்பக்கொளல்”           . . . . .என்கிறார்

         பொதுவாக தூய்மை என்பது என்ன? சுத்தமாக இருப்பது தூய்மை. மனம் சுத்தமாக இருந்தால் அது தூய்மையாக இருக்கின்றது எனப் பொருள். மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல். செயல் ஆகிய மூன்றும் எப்போதும் தனக்கும் பிறர்க்கும் சமுதாயத்திற்கும் நலம் பயப்பதாக இருக்க வேண்டும்.   இதற்கு மனதில் எப்போதுமே நல்ல எண்ணங்களே நிறைந்திருக்க வேண்டும். இதுதான் மனத்தூய்மை எனப்படும். நற் சொற்களுக்கும், நற்செயல்களுக்கும் விதை நல்லெண்ணம், நிலம் மனம். ஆகவே மனதை நல்லெண்ணங்களால் அலங்கரிக்க வேண்டும். மனதில் தோன்ற வேண்டிய நல்லெண்ணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன? ஆன்மாவில் உள்ள பதிவுகளுக்கேற்பவே மனதில் நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் தோன்றுகின்றன. அலங்காரத்தில் தூய்மை இடம் பெற்றிருப்பதால் ஆன்மாவைத் தூய்மைப் படுத்துவதைத்தான் அலங்காரம் என்கிறோம்.

        ஆன்மா கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் அதனை அரூபம் என்று சொல்ல முடியாது. ஆன்மா கண்களுக்குத் தெரியவில்லை என்றாலும் அது இருக்கின்றது. ஆகவே ஆன்மாவை அரூபா—ரூபம் எனக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு காற்று கண்களுக்குத் தெரியவில்லை.   காற்று கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் காற்றை இல்லை எனக் கூறமுடியாது. காற்று அரூபா-ரூப நிலையில் உள்ளது காற்று இருக்கின்றது என்பதனை தோலின் மூலம் உணரமுடிகின்றது.

          அந்த தெய்வீகக் கருமையத்தில்தான் மனிதன் செய்கின்ற முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் கணக்கில் வைக்கப்பட்டுள்ளன. அந்தத் தெய்வீக நீதி மன்றத்தில் பதிவான பதிவுகளின் (registered cases) அடிப்படையில் வழங்கப்படும் தெய்வீகத் தீர்ப்பின்படிதான்(divine judgement) வாழ்க்கையில் இன்பம் துன்பம் அனுபவிக்க வேண்டியுள்ளது.

     

    சிந்தனையை நாளைத் தொடர்வோம்   . . . . .

     

                                                                                                                

     

    Loading

  • சிந்தனை விருந்து என்றால் என்ன? சிந்தனை விருந்து என்றால் என்ன? (நேற்றையத் தொடா்ச்சி) 2/2

    வாழ்க மனித அறிவு                                                                    வளர்க மனித அறிவு
                          சிந்தனை விருந்து என்றால் என்ன?                                                                                         
       07-11-2014

                                                                                  FFC – 11

       அறிவிற்கு சிந்தனை என்கின்ற உணவின் அவசியத்தையும், சிறப்பையும் கருதி அதனை விருந்து என அழைக்கப்படுகின்றது, அதாவது சிந்தனை விருந்து. சிந்தனை செய்ய எந்த ஆராய்சிக் கூடமோ, கருவியோ அவசியமில்லை. உயிருள்ள, மனமுள்ள, அதாவது அறிவுள்ள மனிதன் சிந்திக்கலாம். அறிஞர்கள் தானாகவே சிந்திப்பர். சிலர் அறிஞர்களின் தூண்டுதலால் சிந்திப்பர். நாளடைவில் அந்த சிலரும் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்துவிடுவர். சிந்திப்பது அரிய கலை. சிந்திக்கப் பழக வேண்டும். சிறந்த சிந்தனை
                      • அறிவிற்கு உயர்வை அளிக்கும்.
                     • வாழ்க்கையில் தெளிவினை உண்டாக்கும்.
                      • சிந்தனை இருளைப் போக்கி வாழ்வில் விளக்கேற்றும்.
                      • சிந்தனைப் பிரச்சனைகளைத் தீர்க்கும்.
                      • சிந்தனை அறிவிற்குச் செல்வமாகும்.
                      • சிந்தனை எப்போதும் விழிப்பு நிலையிலேயே இருக்கச் செய்யும்.
          மூச்சை யாரும் விரும்பி விடுவதில்லை. அது இயல்பாக நடக்கின்றது. அதுபோல் சிந்தனை செய்வது இயல்பாக இருக்க வேண்டும். பழக்கமாகிவிட்டால் மூச்சு விடுவது போல் சிந்தனையும் இயல்பாகிவிடும்.   அதற்கு ஒரு உதாரணம் வேதாத்திரி மகரிஷிகளாவார் மகரிஷி அவர்கள் வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளை ஆராய்ச்சி செய்வது தனக்கு நாளடைவில் பழக்கமாகி விட்டது என்கிறார் தனது வாழ்க்கை விளக்கத்தில். சிந்தனை   சுகம் தரும்.
          தினம் தினம் சிந்திக்க வேண்டுமா? நேரம் கிடைக்கும் போது சிந்திக்கலாமா? எந்நேரமும் சிந்திக்க வேண்டும். மற்ற வேலைகள் பாதிக்காதா? மற்ற பணிகளைச் செய்து கொண்டே சிந்தனை செய்ய முடியுமா? ஒன்றே பலவாகிய நாடகத்தில்(சுத்த அத்வைதம்). எந்த பணியைச் செய்வதும் அது இறையின் நிகழ்ச்சி தானே. அதனால் எந்தப் பணியிலும் இறையின் செயல்பாட்டினை அறிந்து கொண்டு மகிழலாமே.
             மனிதன் எண்ணுகின்றானே. அது சிந்தனை இல்லையா? எல்லோரும்தான் எண்ணுகின்றனர். எண்ணுவது சிந்தனை இல்லை. “சி;ந்தனையாளர்” என்று இந்த சமுதாயம் ஒரு சிலரை மட்டுமேதான் அழைக்கின்றது. எண்ணுவது சிந்தனையால் எல்லாருமே சிந்தனையாளர்களா? சிந்தனை ஆழ்ந்து இருக்க வேண்டும். விருப்பத்தோடு சிந்திக்க வேண்டும். விடையும், தெளிவும் கிடைக்கும் வரை சிந்திக்க வேண்டும். ஏன், எதற்கு, எப்படி என வினா எழ வேண்டும்.
             சிந்தனையாளருக்கு இயற்கையே ஆசானாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகின்றது. இயற்கை வழிகாட்டவில்;லை எனில் வேறு யார் வழிகாட்டுவது? சிந்தனையால் உள்ளொளி பெருகும்.
         சிந்தனையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் கருதிதான் வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்ற ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் சிந்திப்பதற்கான நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
             சென்னை வானொலி நிலையம் காலையில் குறளமுதம், பிறகு சான்றோர் சிந்தனை போன்ற நிகழ்ச்சிகள் ஒலி பரப்பி வருகின்றது. செய்தித் தாள்களில் ஆன்மிக சிந்தனை என்கின்ற தலைப்பிலே அன்றைய சிந்தனை விருந்து இடம் பெறுகின்றது.
         தொலைக்காட்சி வந்த பிறகு வானொலி கேட்பவரின் எண்ணிக்கை மிகமிகக் குறைந்து விட்டது. தொலைக்காட்சியிலும் சிந்தனைக்கான நிகழ்ச்சிகள் உண்டு. அவை காலை 6.00 மணிக்கு மட்டுமேதான் இடம் பெறும். அப்படி வானொலி கேட்பவர்களில் சான்றோர் சிந்தனை, குறளமுதம், போன்ற நிகழ்ச்சிகளைக் கேட்பவர்கள் மிக மிகக் குறைவாகத்தான் இருப்பர். ஏனெனில், காலையில் ஆறு மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்திருப்பதே அரிது. அப்படி எழுந்தாலும் அலுவலகம் புறப்படுவதற்கே நேரம் சரியாக இருக்கும். அவ்வாறு வாழ்க்கை இயந்திரமயமாகிவிட்டது.
           ஊடகங்கள் மூலமாக சிந்திக்க வைக்கின்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
         எழும்போதே சிந்தனையில் அந்த நாளைத் துவக்கினால் அந்த நாள் முழுவதும் அறிவு அதே சிந்தனையில் விழிப்புடன் இருக்கும். அதுதான் அறிவிற்கு விருந்து. அதில் சுகம் உண்டு.   அதோடு மட்டுமல்லாது சிந்தனையை வளர்க்கக் கூடிய நூல்களையும் தினமும் படிக்கும் பழக்கம் வேண்டும்.
          ஊடகங்களில் ஒன்றுதான் இணையதளமும். இதன் மூலம் அறிவிற்கு சிந்தனை விருந்து அளிக்கவே “அறிவிற்கு விருந்து” என்கின்ற பகுதி தொடங்கப்பட்டுள்ளது. அந்த விருந்தினை உண்டு களிப்பதற்கு அன்புமிக்க பார்வையாளர்களாகிய உங்களது ஒத்துழைப்பு மிக மிக அவசியம். நீங்கள் பயன் பெற வேண்டும். உங்கள் நண்பர்களுக்கும் இந்த ‘Prosper Spiritually’ (ஆன்ம செழிப்புறு) இணைய தள சத்சங்கத்தைப்(Satsangh through Website) பற்றித் தெரிவியுங்கள். உங்கள் கருத்துக்களையும், படித்துப் பயன் பெற்றதையும் (feed back) தயவு செய்து தெரிவிக்கவும்.
     வாழ்க மனித அறிவு, வளர்க மனித அறிவு.
    வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச்; செல்வம்.
    *****
    வாழ்க அறிவுச் செல்வம்                                                             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்தனை விருந்து என்றால் என்ன?1/2

    1

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனிதஅறிவு

                                       சிந்தனை விருந்து என்றால் என்ன?1/2

      06-11-2014

    FFC – 10

     

       உணவு, விருந்து என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். உணவு என்பது சாதாரணமானது. அன்றாடம் சாப்பிடுவது. விருந்து என்றால் சிறப்பான உணவு(FEAST, DINNER). பிறந்தநாள். திருமணம். வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு விசேஷமாக அளிக்கப்படும் உணவை விருந்து எனக் கூறுகிறோம்.
         உணவு எதற்காக? உடலுக்கு உணவு அவசியம். வயிற்றுப் பசியினைப் போக்க உணவு அவசியம்.   எளிமையான. சத்துள்ள. சுகாதாரமான உணவு போதுமான அளவு. சரியான நேரத்தில் தேவை. விருந்தில் பல்வேறு வகையான சுவைமிக்க உணவு வகைகள் இருக்கும். விருந்து என்றாலே உணவுப் பண்டங்கள் அளவு(LIMIT) மீறியும் முறை(METHOD) மாறியும் இருக்கும். .
         விருந்தை விரும்பிச் சாப்பிடுவோம். உணவாக இருந்தாலும். விருந்தாக இருந்தாலும் சாப்பிட்ட நான்கு மணி நேரத்தில் சீரணமாகி சத்துக்கள் உறிஞ்சப்பட்டு சக்கை இருபத்து நான்கு மணி நேரத்தில் மலமாக வெளியேறும். இதனை யாவரும் அறிந்ததே.
           ஆனால் இங்கு நாம் சிந்தனை விருந்து என்கிறோம். இந்த விருந்து உடலுக்கா அல்லது அறிவிற்கா?   மண்ணாகப் போகின்ற உடலுக்கு மட்டும் உணவு அவசியம் என அறிந்திருக்கின்றோம்.   ஆனால் உடலைத் தவிர உயிர் இருக்கின்றது. உயிர் இருப்பதால் மனமும். அறிவும் இயங்குகின்றது. இந்த மூன்றிற்கும் உணவு அளிக்கப்படுவதில்லை.
             உயிர் அழிவதில்லை. உயிரை ஒட்டிய கருமையமும் (ஆன்மாவும்) அழிவதில்லை. அழியாத கருமையத்திற்கும் உணவு அவசியம்.   ஆனால் உணவு அளிப்பதில்லை. அழிகின்ற உடலுக்கு மட்டும் உணவு அளிக்கின்றோம். ஏன்?
           உயிரோ. கருமையமோ. அறிவோ கண்களுக்குத் தெரிவதில்லை. கண்களுக்குத் தெரியாத. வாய் இல்லாத ஒன்றிற்கு உணவு அவசியமா என ஐயம் எழலாம். அறிவிற்கும் உணவு அவசியம்தான். அதுவும் அது விருந்தாக இருக்க வேண்டும். வயிற்றுப் பசிக்கு உணவு அளவுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் அசீரணம் ஏற்படும்.   ஆனால் அறிவி்ற்கு விருந்து தேவையாய் இருக்கின்றது. இங்கே அளவு கிடையாது.
         ஏனெனில் எல்லையில்லா(infinite) இயற்கையின் ஆதிநிலையாகிய பேரறிவே மனித சிற்றறிவாக வந்துள்ளதால், அது தன்னை அறிந்து கொள்ள தெளிந்த தெளிவு பெறவேண்டும். அதற்கு தினந்தோறும் அறிவிற்கு விருந்துதான் அவசியம். தினந்தோறும் அறிவிற்கு அளிக்கப்படும் விருந்தால் அசீரணம் ஏற்படாது. மாறாக மேலும் மேலும் தெளிவினை அளித்து எப்படி வாழ வேண்டும் என் உறுதி செய்து அதுபோல் வாழ்ந்து இப்பிறவியிலேயே பிறவிப்பயனை நல்கிவிடும்.
             ஆறாவது அறிவின் சிறப்பே சிந்தனைதான். பேசுவது. எழுதுவது, படிப்பது. பட்டம் பெறுவது, இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றுவது மட்டும் ஆறாவது அறிவின் சிறப்புகளல்ல.
               ஆறாவது அறிவு அறிய வேண்டியதை அறிய வேண்டும். அறிய வேண்டியது என்பது தனது மூலத்தை(Source), மூலத்திலிருந்து இன்று வரையுள்ள தன்னுடைய மாற்றமான, தன்மாற்றத்தை (Self realisation/God Realisation/Liberation/Perfection of Consciousness) அறிதலாகும். உடலுக்கு அவசியமான உணவை உட்கொள்ளும் போது அறிவுதான் சுவையை உணர்கின்றது.   ஆனால் தனக்கே தேவையான உணவு (அறிவிற்கு) கிடைப்பதில்லை.   ஆறாவது அறிவிற்கு தேவையான உணவுதான் சிந்தனையாகும். மற்ற உயிர்களுக்குச் சிந்திக்கத் தெரியாது.      ஆனால் மனிதன் சிந்திக்க முடியும். ஆனால் சிந்திப்பதில்லை.
     மனிதனும் சிந்திக்காமல் இருந்தால், ஐந்தறிவு விலங்கினத்திலிருந்து வந்த மனிதனுக்கும் விலங்கினத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். உடல் வளர்ச்சிக்கும், நலத்திற்கும், வளத்திற்கும் உணவு அவசியம் என்பது போல் அறிவின் வளர்ச்சிக்கும், நலத்திற்கும், வளத்திற்கும் உணவு அவசியம்.   உருவமற்ற (அரூபமான) அறிவிற்குத் திட உணவையும், திரவ உணவையும் அளிக்க முடியாது. உருவமற்ற அறிவிற்கு உருவமற்ற உணவுதான் அளிக்க முடியும். அந்த உருவமற்ற உணவுதான் சிந்தனை.    
                                                             …… இதன் தொடர்ச்சியை நாளைச் சிந்திப்போம்.
    வாழ்க அறிவுச் செல்வம்                                                         வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  •   வேதாத்திரியம்ஒருபாரிஜாதமலர் 2/2

     வேதாத்திரியம்ஒருபாரிஜாதமலர் 2/2

    FFC-8

     4-11-2014

                    

     

    மனித வாழ்வு முழுமை அடைவதற்கு, இத்தனை பிறவிகளில் ஏற்படாத தெளிவு இப்போது அறிவிற்கு அவசியமாகின்றது. இதனை அறிவு விரும்பிக் கொண்டிருக்கின்றது. ஆனால் மனிதன் அதனை அறியாமல், “மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்”; என்கின்ற அறிவுரை இருந்தும் மனம் போன போக்கெல்லாம் போய்க்; கொண்டு அல்லலுறுகிறான்.
    மனிதன் விரும்புவதெல்லாம் எதுவாக இருக்க வேண்டும்? உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஆகிய ஐந்து வளங்களையும் மனிதன் விரும்புவதாக இருக்க வேண்டும். இவற்றில் முதல் நான்கு கிடைத்து விடலாம். ஐந்தாவது வளம் கிடைப்பதற்கு அறிவு மேம்பட வேண்டும். அந்த அறிவு மேம்பட, அறிவிற்கு சிந்தனை ஆற்றல் வளர வேண்டும். சிந்தனையை அறிவின் செல்வமாக்கிடவேண்டும்.
    அதற்கு ‘வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம்’ என்கின்ற எண்ண ஆதரவு (Slogan)கோருதலின் வாயிலாக மனித எண்ணங்களின் ஆதரவினைத் திரட்ட வேண்டும். பாரிஜாத மலர் விரும்பியதையெல்லாம் கொடுக்கும் என்பதுபோல், இயற்கைக்கு புறம்பாக இல்லாமல், நியாயமான, இறுதியாக மனிதன் விரும்ப வேண்டிய மெய்ஞ்ஞானத்தை அடைய, மனித அறிவு தெளிந்த நல்லறிவாவதற்கு வேண்டிய விருந்திற்கெல்லாம் விருந்தினை அளிக்க வல்லது வேதாத்திரியம்.
    மனிதன் தன்னிடம் எழும் எல்லா ஐயங்களுக்கும், புரிதலையும் தெளிவையும் விரும்புவான். அந்த விரும்புதலை அள்ளித் தர வல்லதுதான் வேதாத்திரியம். ஆகவேதான் இதனை ஒரு பாரிஜாத மலர் என்கிறோம். விரும்பியதையெல்லாம் அளிக்கும் பாரிஜாத மலர் இன்று வேதாத்;;;திரியத்தின்; அருமை பெருமைகளைக் கூறி அறிவுத் தேனீக்களை ஈர்க்க, எடுத்துச் சொல்வதற்கு உவமையாக இருந்துள்ளதை நினைக்கும் போது உள்ளம் பூரிக்கின்றது. இப்போது வேதாத்;;;;;திரியம் மெய்ஞான மலராகிவிட்டது.
    இதுவரை எத்தனையோ ஆன்மீக மலர்களை காலத்திற்கேற்ப மனித அறிவின் நிலைகளுக்கேற்ப இயற்கை மலரச்; செய்துள்ளது. ஆனால் இன்று பூக்களிலேயே சிறந்த பூவான, விரும்பியதைக் கொடுக்கும்; பாரிஜாத வேதாத்திரிய மலரை அளித்துள்ளது இயற்கையின் கருணையன்றோ. வேதாத்திரியத்தி;ல் என்னென்ன உள்ளன என்று கேட்பதைவிட, உங்களுக்கு எது தேவையோ அது இருக்கின்றதா என்று கேளுங்கள். இருக்கும். தட்டுங்கள் திறக்கப்படும். இது மிகையல்ல. வேதாத்திரிய பாரிஜாத மலரில் கிடைக்கும் ‘அறிவுத் தேன்’ நான்கு வகைகளில் கிடைக்கின்றன.
    1) கடவுள் என்பவர் யார்? இயற்கை என்பது எது?
    2) உயிர் என்பது என்ன?
    3) இன்பதுன்பம் என்பது என்ன?
    4) வறுமை ஏன் வருகின்றது?
    ஆகிய நான்கு வினாக்களுக்கான விடைகளின் வாயிலாக, அறிவுத் தேனீக்கள் வேதாத்திரிய பாரிஜாத மலரிலுள்ள தேனை நான்கு வழிகளில் அருந்தலாம். இது தவிர வேறு எது மனிதஅறிவிற்குத் தேவையாக இருக்க முடியும்? இந்த நான்கும் மகோன்னத கேள்விகள். எனவே இந்த மகோன்னத கேள்விகளுக்குத் தெளிவைப் பெறுவது என்பது, இதுவரை அறிவு விரும்பியதன்றோ! இது வரை இது மறைமுக விரும்புதலாக (latent desire) இருந்து வந்தது. ஆகவேதான் வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர் என புகழ் ஏத்தி வணங்குகிறோம். வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.
    மலர் என்று ஒன்று இருந்தால் அதிலுள்ள தேனை அருந்துவதற்காக தேனீக்கள் வந்து மொய்ப்பதை போன்று இன்று மலா்ந்துள்ள பாரிஜாத மலரான வேதாத்திரியத்தில் உள்ள அறிவுத் தேனை பருக அறிவுத் தேனீக்கள் ஏற்கனவே மொய்த்துக் கொள்ள ஆரம்பித்துவிட;டன. ஆகவே இதனை கண்ணுறும் அனைவரும் வேதாத்;திரி அறிவுத்தேனைப் பருக ஓடோடி வாருங்கள். அனுபவித்துவிட்டு மற்றவர்களையும் பாமர அறிவிலிருந்து அறிவுத்தேனீயாக்க வழியைக்காட்டி புண்ணியத்தைச் சேர்த்திடுங்கள்.
    வாழ்க வேதாத்திரியம், வளர்க வேதாத்திரியம்;
    வாழ்க மனித அறிவு, வளர்க மனித அறிவு.
    வாழ்க அறிவுச் செல்வம், வளர்க அறிவுச் செல்வம்.
    வாழ்க உலக மக்கள் அனைவரும்.
    வாழ்க உலக அமைதி;. வருக உலக அமைதி விரைவில்.
    *****

     

    Loading

  • வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்1/2

    வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்1/2

    FFC 7

    03-11-2014

    மலரை நாடி தேனீக்கள் வரும். ஏன்? மலரில் தேன் உள்ளதால் தேனீக்கள் மலரை நாடிச் வருகின்றன.. மலர்களில் பல உள்ளன. அதில் பாரிஜாத மலரும் ஒன்று தேவலோகத்தில் பாரிஜாத மரம் உள்ளதாகவும், அந்த மரத்தில் பூக்கும் பாரிஜாத மலர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
    ‘வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்’ என்கிறோம். ஏன்? இது ஒரு வார்த்தை ஜாலமா? அல்லது உண்மையில் வேதாத்திரியம் பாரிஜாத மலர் தானா? ஆம். பாரிஜாத மலர்தான். எவ்வாறு வேதாத்திரியம் பாரிஜாத மலரின் தன்மையாக உள்ளது என்பதனை அறிந்து கொண்டு பயன் பெறுவோமே. பாரிஜாத மலர் விரும்பியதை எல்லாம் தரும் என்று சொல்லப்படுவதைப் போல் வேதாத்திரியம் விரும்பியதை எல்லாம் தரும். மனிதன் எதனை விரும்ப வேண்டும்? சிந்திப்போம்.
    மனிதன் தனக்கு வேண்டியதை விரும்புகிறான். அவ்வாறு மனிதன் விரும்புவது அல்லது விரும்ப வேண்டியது என்ன? நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைவான செல்வம், உயர்ந்த புகழ் ஆகியவைகள் மனிதன் விரும்புவதாக இருக்க வேண்டும். இந்த நான்கிற்கும் மேலாக, மனிதன் வாழ்வதற்கு அவசியமானவை ஏதாவது உள்ளதா? உண்டு.
    இந்த வாழ்க்கை எதற்காக மனிதன் வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டதோ, அந்த காரணத்தை அறிந்து
    அதனை அடைய வேண்டும்.
    இயற்கையின் ஆதிநிலையாகிய பேரறிவுதான் தன்னை அறிய வேண்டி மனித அறிவாக தன்மாற்றமடைந்துள்ளது. [The premordial state of Nature, the Consciousness, Almighty the God itself has transformed into human consciousness]
    கடலிலிருந்த நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, மேகமாகி, குளிர்ந்த பின்னர் மழையாகப் பொழிந்து, ஆறாகி, நதியாகி, நிலப்பரப்பில் ஆர்பரித்து ஒடி, கடலில் கலந்து தன் சுழற்சியை முடித்துக்கொண்டதும் ஆர்பரிப்பு நின்று அமைதி கொள்கின்றது. அது போல்,
    பேரறிவிலிருந்து பின்னப்பட்ட (fractioned) மனித அறிவு,
    மீண்டும் பேரறிவுடன் கலந்து,
    தன்னை அறிந்து கொண்டு,
    தன் சுழற்சியை முடித்துக் கொள்ளும் போதுதான் பேரமைதி உண்டாகும் அதற்கு.
    அதாவது ஆறாம் அறிவு தன்னை அறிந்;து கொண்டு இன்பமுறவே, இந்த மனிதவாழ்க்கை. இவ்வாறு வந்த அறிவின் பயணத்தில், அறிவு ஒரு பிறவியிலேயே அதனை அடைய முடியாது. பல கோடிப் பிறவிகள் எடுத்து,
    அப்பிறவிகளிலெல்லாம், மனிதப் பிறவிக்கு இயற்கை வைத்துள்ள நோக்கம் அறியாத அறியாமையால்;
    புலன்வழி வாழ்க்கையையே வாழ்ந்து, மயக்கம் கொண்டு,
    அளவு மீறியும், முறை மாறியும் வாழ்ந்து
    ஏற்படுத்திக் கொண்ட வேண்டாத துன்பப்பதிவுகளைத் தன்
    ஆன்மாவில் பதிய வைத்துக் கொண்டு,
    அவற்றின் விளைவுகளை அனுபவிக்கவே வந்த பிறவிதான், தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்தப் பிறவி. ஆகவே மனித வாழ்;க்கைக்கு அவசியமான உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ் ஆகிய வளங்களுடன் மெய்ஞ்ஞானம் என்கின்ற ஐந்தாவது வளமும் அவசியமாகின்றது. இந்த மெய்ஞ்ஞான வளத்துடன் மனித வாழ்வு முழுமை அடைகின்றது.

    …… நாளைத் தொடரும்

    Loading