சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 291(175)

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    08-05-2020— வெள்ளி

    சிந்திக்க அமுத மொழிகள்- 291(175)

    பேரின்பம்

    இறைநிலையான மன அலை விரிந்த சுத்த வெளியுடன் அபூர்வமாக ஒன்றிணைந்து தனது சொந்த ஆற்றலையே ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு பொருளிலும் அதன் செயல் ஒழுங்காக மெய்யுருவாக்கிக் காணும்போது, அது இன்பமும், திருப்தியும், கலந்த உணர்வாக அமைவது பேரின்பம்”.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி:
    1) ஏன் அபூர்வமாக என்கிறார் மகரிஷி அவர்கள்?

    2) ‘தனது சொந்த ஆற்றல்’ என்பதன் பொருள் என்ன?

    3) ஒவ்வொரு இடத்திலும், பொருளிலும் என்பதன் பொருள் என்ன?

    4) ‘செயல் ஒழுங்காக’ என்பதன் பொருள் என்ன?

    5) ‘மெய்யுருவாக்கிக் காணும்போது’ என்பதற்குப் பொருள் என்ன?

    6) மகரிஷி அவர்கள் சுருங்கச் சொல்வதென்ன?

    7). பேரின்பத்திற்கான மேற்கண்ட வரையரையை மகரிஷி அவர்கள் தமது எந்த நூலில் அருளியுள்ளார்?

    வாழ்க அறிவுச் செல்வம்            வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்-290

    வாழ்க மனித அறிவு!                                                             வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-290

     

    02-05-2020-சனி

    தெய்வநிலை அறிந்தோர்கள் கோடி என்றால்,

    தெளிவாக அறிவறிந்தோர் ஒருவராகும்.”

                                            . . . . .    வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     பயிற்சி:

    1. என்ன கூறுகின்றார் மகரிஷி அவர்கள்?
    2. தெய்வநிலை அறிந்தோர்களில் இருவகை உள்ளனர் என்பதுபோலல்லவா கூறுகின்றார்?
    3. தெய்வம் ஒன்றுதான். அவ்வாறிருக்கும்போது தெய்வநிலை அறிந்தவர்களில் இரண்டு வகையினர் எவ்வாறிருக்க முடியும்?    
    4. உயிரை உணர்ந்தவர்கள் தான் தெளிவாக தெய்வத்தை அறிந்தவர்களோ?
    5. தெளிவாக அறிவறிந்தவர் ஒருவராகும் என்பதால் அறிவே தெய்வம் என அறிந்தவர்கள்தான் கோடியில் ஒருவரா?
    6. அப்படியானால் வேதாத்திரி மகரிஷி அவர்களின் சீடர்களாகிய நாம் கோடியில் ஒருவரா?  அந்த புண்ணியம், பெரும்பாக்கியம்  செய்தவர்கள்தானே  நாம் அனைவரும்?! அவர் கூறும் ஒருவர் இப்போது பலராகிவருகின்றனரா அவருடைய போதனையும்  சாதனையும்  கொண்ட மனவளக்கலையால்?
    7. என்ன சொல்ல வருகிறார் மகரிஷி அவர்கள்? அதனை அறிய ஞானக்களஞ்சியம் பாடல் எண். 1693 ஐ வாசிக்கவும்.
    8. வேறுயாராவது இது போன்று(in this context)  கூறியுள்ளனரா? 

    வாழ்க வளமுடன்!

                       

     வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

     வாழ்க அறிவுச் செல்வம்!                                                வளர்க அறிவுச் செல்வம்!!   


     

       

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்-289

    வாழ்க மனித அறிவு!                                                                  வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-289

                                                                                                                          01-05-2020-வெள்ளி

             புலனில்  வாழ்க்கை இனியுண்டோ? நம்மி லந்த

             வாழ்க்கை இனியுண்டோ’’ 

    . . . . .    மகா கவி பாரதியார்.

    பயிற்சி:

    1. என்ன கூறுகின்றார் மகா கவி பாரதியார்?
    2. இந்த அமுத மொழியினைக் கண்ணுறும்போது நமது சிந்தனை எங்கு செல்கின்றது?
    3. புலனில் வாழ்க்கை என்றால் என்ன பொருள்?
    4. இனியுண்டோ என்பதனால் புலனில் வாழ்க்கை விரும்பத்தக்கதல்ல என்றுதானே கூறுகிறார் மகா கவி? புலனில் வாழ்க்கையால் துன்பம் என்கிறார்தானே?
    5. அப்படியானால் எந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்கிறார்?
    6. பாரதியாருக்கு 19 நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவதரித்த ஐயன் திருவள்ளுவர் புலனில் வாழ்க்கையின் தொடர்பாக என்ன கூறியுள்ளார்?
    7. திருவள்ளுவர் புலன் வழி வாழ்க்கையைப் பற்றி கூறி 19 நூற்றாண்டுகள் கடந்தும்  மக்கள் மாறினார் இல்லை என்பதால்  மகா கவி பாரதியாரும் புலன் வழி வாழ்க்கையைப் பற்றி கூறுகிறார்?   
    8. மேலும் கூறுகிறார் “நம்மில் புலனில் வாழ்க்கை இனி இருக்குமா? என வினவுகிறார்?
    9. இதனைக் கூறி ஒரு நூற்றாண்டு ஆகின்றது? அவர் கூறிய புலனில் வாழ்க்கை இன்னமும் நடக்கின்றதா? இல்லை மாறிவிட்டதா சமுதாயம்?
    10. புலன்கள் ஐந்து இருக்கின்றன. வாழ்வதற்குத்தானே அப்புலன்கள் உள்ளன!  புலனில் வாழ்க்கை கூடாது என்றால் எவ்வழி  வாழ்க்கை வாழ வேண்டும்?
    11. அவ்வழி வாழ்க்கைக்கு 21 நூற்றாண்டிலாவது ஏதாவது அறிகுறி தோன்றியுள்ளதா?
    12. இதற்கு இறைநேசச் செல்வர்கள், உலக நல ஆர்வலர்களின் பதில் என்ன?

                        வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

     வாழ்க அறிவுச் செல்வம்!                                                வளர்க அறிவுச் செல்வம்!!   


     

       

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்-288

    வாழ்க மனித அறிவு!                                                                             வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-288

                                                                                                                           25-04-2020 — சனி

    தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம்.”
                                                                                                                              – சாக்ரடீஸ்

    பயிற்சி:

    • தேவைகள் குறைவதற்கும் தெய்வத்தன்மைக்கும் என்ன தொடர்பு?
    • அந்த தொடர்பு அறிவியல் அடிப்படையிலானதா?
    • முதல் தத்துவஞானியான சாக்ரடீஸ் அவதரித்த  பின்னர் முன்னூறு ஆண்டுகள் கடந்து  அவதரித்த  திருவள்ளுவப் பெருந்தகை இந்த உண்மையினை  எவ்வாறு இயம்புகிறார்?
    • இருபது நூற்றாண்டுகள் கழித்து, வள்ளுவப் பெருந்தகையை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்கள் இந்த உண்மையை எவ்வாறு கூறுகிறார்?
    • பொதுவாக ஆன்மிக உலகில் இவ்வுண்மையை குருமார்கள் தனது சீடர்களுக்கு எவ்வாறு உணர்த்துகின்றனர்?

    சிந்திப்போம்! 

     வாழ்க வளமுடன்!


    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

     வாழ்க அறிவுச் செல்வம்!                                                வளர்க அறிவுச் செல்வம்!!

     குறிப்பு:  நாளைய (26-04-2020) சத்சங்க நிகழ்ச்சியில் அறிவிற்கு விருந்து பகுதி 288 ல் பாரதியார் கூறிய “இனியெரு விதி செய்வோம்” பற்றி ஆராய இருக்கிறோம்.

         


     

       

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 287

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    lotus


    சிந்திக்க அமுத மொழிகள்- 287


    23-04-2020 — வியாழன்

    சாகா வரமும்  பரிபாக நிலையும்!

    பயிற்சி—

    1. இந்த செய்தியிலிருந்து ஆன்மீக சாதகர்களுக்கு என்ன அறிவுறுத்தப்படுகின்றது?
    2. வள்ளலாரின் விருப்பம் என்ன?
    3. வள்ளலாரின் பூதவுடல் இல்லாதபோதும் அவருடைய இலக்கு என்ன?
    4. மக்களை எத்தனை வகையாக பிரித்துப் பார்க்கிறார் வள்ளலார்?
    5. சாகா வரம் என்பது என்ன? அதனை இதுவரை நாம் அறிந்தமட்டில் யாருக்கேனும் அளித்துள்ளாரா?
    6. பரிபாக நிலை என்பது என்ன?
    7. இச்செய்தியில் நம்பிக்கையூட்டும் அம்சம் என்ன?
    8. இதேபோன்று நம்பிக்கையூட்டிய பெருமகனார்கள் யார் யார்?
    9. அந்த அருட்ச்செய்திகளை நினைவுபடுத்தி மகிழ்வோம். மகிழ்ந்து அப்பெருமகனார்களின் புனித எண்ணத்திற்கு மேலும் வலுவூட்டுவோமாக!
    10. வள்ளலாரின் அழுத்தமான எண்ணமே மனவளக்கலை மூலம் நம் அனைவரையும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் சீடர்களாக்கியுள்ளதல்லவா?
    11. அப்பயனை இப்பிறவியிலேயே நாம் அனைவரும் பெறுவோமாக!
    12. யார் யாருக்கு என்ன வரம் அளிக்கவிருக்கிறார் என்பது அவரவர்கள் நிலையைப் பொருத்தது என்பதனை நினைவில் கொண்டு பயிற்சிகளை செய்வோம். இப்பிறவியை கடைசியாக்கிக் கொள்வோம். 

    வாழ்க திருவேதாத்திரியம்                                             வளர்க திருவேதாத்திரியம்!!

                     வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்


     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

     

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- C-286

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    lotus


    சிந்திக்க அமுத மொழிகள்- C 286


    21-04-2020செவ்வாய்

    Desirelessness is the Highest Bliss 

    – நிசர்கதத்தா மகராஜ்

     

    பயிற்சி—


    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்


     குறிப்பு:    நாளைய (22-04-2020) சத்சங்க நிகழ்ச்சியில் சிந்திக்க        அமுதமொழி      பகுதி 290 ல்

                                        விதி செய்வது குறித்து சிந்திப்போம்.  

     

    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

     

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- C-285

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- C 285

    12-10-2019 — சனி

    ‘உலக சிக்கல்களை ஒரு நொடியில் உணர்த்திடலாம். ஒருவராலும் அதனை உடன் திருத்திட முடியாது’

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) ஏன் அவ்வாறு கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
    2) பின்னர் எவ்வாறு தீர்க்க முடியும்?
    3) இதில் மனவளக் கலைஞர்களின் பெரும் பங்கு என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுதமொழிகள் – 284

    சிந்திக்க அமுதமொழிகள் – 284

                                             02-10-2019 – செவ்வாய்

     “ அறிவின் பயனை அடைய சினத்தை தவிர்க்க வேண்டும்.”

                                                                               அண்ணல் காந்தி அடிகள்.

    பயிற்சி—

    1. என்ன கூறுகிறார் அண்ணல் காந்தி அடிகள்?
    2. அறிவின் பயன் ஒன்றா? பலவா?  
    3. என்னென்ன?
    4. இறுதியான பயன் என்ன?
    5. இதுவரை சினத்தின் தோற்றம், விளைவுகள் பற்றி சிந்தித்தது உண்டா?
    6. அறிவின் பயனை அடைவதற்கு சினம் எவ்வாறு தடையாக இருக்கும்? எவ்வாறு தடையாக உள்ளது?
    7. அத்தடையாகிய சினத்தை எவ்வாறு தவிர்ப்பது?
    8. விலங்கினப் பண்பிலிருந்து மனிதனிடம் வந்துள்ள  சினத்தை தவிர்ப்பது சாத்தியமா?
    9. எவ்வாறு சாத்தியம்?

    வாழ்க அறிவுச் செல்வம்!                        வளர்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 330(26-03-2022)

    வாழ்க மனித அறிவு !                          வளர்க மனித அறிவு !!

    lotus

                                           அருள் ஒளி வீச

    சிந்திக்க அமுத மொழிகள் – 330

     

    26-03-2022 — சனி

    “ஆணவம் இல்லாத இடத்தில் அருள் ஒளி வீசும்.”
                                                                                             . . . வள்ளலார்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அருட்பிரகாச வள்ளலார்?
    2) ஆணவம் என்று எதனைக் குறிப்பிடுகிறார்?
    3) அருள் என்பது என்ன?
    4) ‘அருள் ஒளி’ என்பது என்ன?
    5) அருள் நமக்கு வேண்டுமல்லவா?
    6) அருளுக்குப் பாத்திரமாக என்ன செய்ய வேண்டும்?
    7) ‘ஆணவம் இல்லாத இடத்தில்’ என்பதால் அந்த இடம் எது?

    வாழ்க அறிவுச் செல்வம்!                       வளா்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 282

    வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 282

     

    29-12-2018 — சனி

    “ பழக்கம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே நல்ல செயல்களையே பழகிக்கொள்ள வேண்டும்”                                                                                                          

                                                                                                                                                                                     . . .    ஓர் அறிஞர்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர்?
    2) பழக்கம் என்பது என்ன?
    3) பழக்கம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது என்றால் என்ன பொருள்?
    4) பழக்கம் என்பது சக்தி வாய்ந்தது என்று சொல்லி இருக்கலாம் அறிஞர். ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது என்கிறார் அறிஞர். இதனை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்?
    5) ஒழுக்கம் என்பதற்கும் பழக்கம் என்பதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா?
    6) பழக்கத்திற்கும் எண்ணத்திற்கும் தொடர்புள்ளதா?
    7) இந்த அறிஞரும் வேதாத்திரி மகரிஷி அவர்களும் பழக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது என்கின்ற கண்டுபிடிப்பில் எவ்வாறு இணைகிறார்கள்?
    8) விளக்கம் என்பதற்கும் பழக்கம் என்பதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா?
    9) பண்பேற்றம், பழக்கம், விளக்கம், ஒழுக்கம் இந்நான்கிற்கும் என்ன தொடர்பு?
    10) அறிஞர் ரூஸோ ஒழுக்க வாழ்வு பற்றி என்ன கூறுகிறார்? (இந்த இணையதள சத்சங்கத்தில் அது பற்றி உரையாடி இருக்கிறோம்.)
    11) ‘இளமையில் கல்’ என்று ஏன் கூறுகின்றார்?
    12) ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ ,’தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பதற்கும் பழக்கத்திற்கும் என்ன தொடர்பு?
    13) இச்சிந்தனையின் முடிவில் நாம் என்ன முடிவிற்கு வர இருக்கிறோம்?
    14) வேதாத்திரியக் கல்வி முறையில் ஒழுக்கப்பழக்க அறிவு இடம் பெற்றிருப்பதாலும், கல்வி என்பது பள்ளியிலிருந்து ஆரம்பிப்பதால், கருத்தியலும், செய்முறையும் இணைந்த ஒழுக்கவியல் பாடம் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை மற்ற பாடங்களைப்போல் கட்டாயப் பாடமாக்க வேண்டும். இந்த புனித அலைகளை எல்லா அருளாளர்களையும் மனதில் நினைந்து வணங்கி வான்காந்தத்தில் பரவவிடுவோம்.

     

    வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                                  வளா்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 281

    வாழ்க மனித அறிவு!                                                        வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 281

     

    21-12-2018 — வெள்ளி.

    “மனிதனுடைய சிந்தனையும் செயலும் சேர்ந்து செயல்படும்போது உண்டாகும் இன்பம் பேரின்பமாகும்.”

    . . . புளூடார்க்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர் புளூடார்க்?
    2) சிந்தனையும் செயலும் சேர்வது என்பது என்றால் என்ன பொருள்?
    2) சிந்தனையும் செயலும் சேர்ந்து செயல்படும்போது இன்பம் உண்டாகுமா? எப்படி?
    3) அந்த இன்பம் எப்படி பேரின்பமாகும்?
    4) மனித மனம் லாபம் பார்த்து (கணக்குப்பார்த்து – human mind is so calcurlive) செயல் புரியும் தன்மை
    உடையதால், இன்பத்தைவிட பேரின்பம் அதிகமாக இருக்கும்போது அறிஞர் புளூடார்க் கூறுகின்றபடி
    சிந்தனையையும் செயலையும் சேர்த்து செய்து பேரின்பம் அடையலாமே!
    5) இதே போன்று சிந்தனையுடன் செயலையும் இணைத்து ஏதாவது கவி அருளியுள்ளாரா வேதாத்திரி
    மகரிஷி அவர்கள்?
    6)  இரு அறிஞர்களும் எவ்வாறு இணைகிறார்கள் இவ்வுண்மையின் கண்டுபிடிப்பில்?

     

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 280

    வாழ்க மனித அறிவு!                                             வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 280

     

    08-12-2018 — சனி

     

    “ சமமான உணர்ச்சிகளும், அதில் ஊக்கி விடப்பட்ட உணர்ச்சிகளும் இன்பம் என்று சொல்லாம்.”

    . . . வேதாத்திரி மகரிஷி.

    பயிற்சி—

    1) அமுதம் என்றால் என்ன?

    2) ‘அமுதம்’ என்கின்ற சொல்லின் பொருள்படி அல்லது ‘அமுதம் என்பதற்கான உங்களது வரையறைப்படி இந்த அமுத மொழியால் அறிவு அமுதம் பருகவில்லையா?
    3)என்ன   கூறுகிறார் இன்ப-துன்ப இயல்(Science of Enjoyment and Suffering) அருளியவேதாத்திரிமகரிஷிஅவர்கள்?
    4) உணர்ச்சிஎன்றால் என்ன?
    5) சமமான உணர்ச்சி என்றால் என்ன?
    6) ஊக்கிவிடப்பட்டஉணர்ச்சி என்றால் என்ன? 

    7) இதனை எவ்வாறு கண்டுபிடித்தார் மகரிஷிஅவர்கள்?

                                அப்படியானால்
    8) எது துன்பம்?
    9) எது அமைதி?
    10) எது பேரின்பம்?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                     வளா்க அறிவுச் செல்வம்!!

    Loading