சிந்திக்க கவிகள்-13

      வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

சிந்திக்க கவிகள்-13

05-05-2022-வியாழன்

குறிப்பு: முதல் முறையாக சத்சங்கத்தின் இப்பகுதியில்  கலந்துகொள்பவர்கள் கவியினால் பயன் பெற மேற்கண்ட புதுயுக்தியை படித்துவிட்டு வரவும். ‘கவியினால் பயன் பெற’  என்பது  கவியினால் சிந்தித்தல் என்பதாகும்.    வாழ்க வளமுடன் அன்பர்களே! பயிற்சிக்கு முன்னர் கவியினால் பயன் பெற புதுயுக்தியை படித்துவிட்டீர்களா அன்பர்களே!

இயல்பும் உயர்வும்

அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு

அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு”

. . .  வேதாத்திரி மகரிஷி

. . .  (மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து-22-12-1953)

பயிற்சி:

  1. என்ன கூற வருகிறார் அறிவிற்கு அறிவியல் தந்த அருட்தந்தை அவர்கள்?
  2. இயல்பு என்றால் என்ன?
  3. உயர்வு என்றால் என்ன?
  4. அறிவு என்பது என்ன?
  5. உணர்ச்சி/உணர்வு என்பது என்ன?
  6. இயல்பு இயல்பாகவே இருந்துவிட்டால் என்ன நேரிடும்?
  7. அறிவு உயர்ந்ததா, உணர்வு உயர்ந்ததா?
  8. ஏன் அறிவு உணர்ச்சியை வெல்ல வேண்டும்?
  9. அறிவு உணர்ச்சியை வெல்வதற்காகத்தான் அகத்தாய்வு பயிற்சியா?
  10. அகத்தாய்வு பயிற்சி எவ்வாறு அறிவு, உணர்ச்சியை வெல்ல வைக்கின்றது?
  11. “மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்“ என உலகநாதா் உலகநீதியில் கூறுவது அறிவு உணர்ச்சியை வெல்வதற்காகவா?
  12. அறிவு உணர்ச்சியை வெல்வதற்கும், அளவும்-முறையும் (Limit and Method) காப்பதற்கும் தொடர்பு உள்ளதா?
  13. பொறிவாயில் ஐந்தவித்தான் என்பதற்கும் அறிவு உணர்ச்சியை வெல்வதற்கும் தொடர்பு உள்ளதா?
  14. புலன்களின் வலையில் சிக்காமல் (பொறிtrap) இருப்பதற்கும் அறிவு உணர்ச்சியை வெல்வதற்கும் தொடர்பு உள்ளதா?  வாழ்க வளமுடன்!

வாழ்க திருவேதாத்திரியம்!  திருவேதாத்திரியம்! 

வளர்க வளர்கவே திருவேதாத்திரியம்!!