October 2014

Monthly Archives

  • சிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி

    சி.அ.சு.ப.எண்- 05-01

    இப்பயிற்சியின் நோக்கம் அவரவர்களே தங்களை சோதித்துக் கொள்ளுதலாகும். இதற்காக ஒரு நாட்குறிப்பை (diary) வைத்துக் கொள்ளுங்கள். அதில் தினந் தோறும், காலையிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நீங்கள் அறிஞர்களின் வாயிலாகத் தெரிந்து கொண்டது, மற்றும் நீங்களாக சிந்தித்தது ஆகியவைகளைக் குறித்து வாருங்கள். உலாவச்செல்லும்போது கூட நாட்குறிப்பை எடுத்துச் செல்லுங்கள். சில நேரங்களில் அரிய கருத்துக்கள் உதிக்கும். அவற்றைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் அக்கருத்துக்கள் மறந்து போகலாம். மீண்டும் நினைவிற்கு வராமல் போகும்.
    *****

  • சி.கு-சீ-உ-.எண்- 04-01

    • குறிப்பு: முகப்பிலுள்ள இப்பயிற்சியின் நோக்கத்தை வாசிக்காதவர்களின் வசதிக்காக, இப்பயிற்சிக்குள் செல்லும் முன் இப்பயிற்சியின் நோக்கத்தை அறிந்து விட்டு பயிற்சிக்குள் செல்வதற்காக மீண்டும் இப்பயிற்சியின் நோக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் நோக்கத்தை முகப்பில் வாசித்தவர்கள் நேரிடையாக பயிற்சிக்குள் செல்லலாம். வாழ்க வளமுடன்.

    மூன்று வகையான சிந்தனைப் பயிற்சியின் நோக்கங்களை தனித்தனியாக இதுவரைப் பார்த்தோம். இப்போது நான்காவதான குரு – சீடர் உரையாடல் என்கின்ற சிந்தனைப் பயிற்சியின் நோக்கத்தை அறிவோம். தழிழ் இலக்கியம் இயல், இசை. நாடகம் ஆகிய மூன்றைக் கொண்டது. இப்போது . மூன்றாவதான நாடக வடிவில் இந்த பயிற்சி அமையும். ஆகவே இணைய சத்சங்கம். இயல், இசை. நாடகம் ஆகிய மூன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நாடகம் என்பது என்ன? சமுதாய நலன் கருதி சொல்லவேண்டியக் கருத்தை நாடக வடிவில் எடுத்துக் கூறப்படும். நாடகத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்கள் நடிப்பார்கள். சொல்ல வேண்டியக் கருத்தை நேரிடையாகச் சொன்னால் புரியாமல் போகலாம். ஆகவே அக்கருத்தை நாடக வடிவில் சொல்லப்படுகின்றது. மகாத்மா காந்தி அடிகள் சிறு வயதில், அரிச்சந்திரன் நாடகம் பார்த்துவிட்டுத்தானே உண்மையே பேசவேண்டும் என்கின்ற உறுதி பூண்டார். நாடகம் தானே அவரை உண்மையைப் பேசுவதற்குத் தூண்டி விட்டது.

    ஒரு பொருளைப் பற்றி நேரிடையாகக் கூறுவதற்கு அதிக நேரம் தேவையில்லை. ஆனால் நாடக வடிவில் காட்சிப் படுத்திக் கூறும் போது நாடகம் முடிந்த பிறகும், அது மனதில் நின்று சிந்திக்கச் செய்யும். குரு – சீடர் உரையாடல் பயிற்சியில் இரண்டு பாத்திரங்களே உள்ளனர். குரு மற்றும் சீடர். குருவிடம் மாணவன் ஒரு பொருள் பற்றி அறிந்து கொள்ள கேள்விகளைக் கேட்பார். குரு அதற்குப் பதில் சொல்வார். சீடர் அறிய வந்த பொருள் பற்றி அவரது ஐயங்களைப் பல கேள்விகளாகக் கேட்பார். குருவும் சீடரின் நிலை அறிந்து பதில் கூறுவார், சீடருக்கு முற்றிலுமாக ஐயமின்றி அறியவந்த பொருள் பற்றி அறியும் வரை குரு – சீடர் நாடகம் தொடரும். சீடர் அறிய வந்த பொருள் அறிந்ததும் நாடகம் முடிவுறும்.

    பயிற்சிக்குள் செல்வோம் நாள் 28-10-2014

    குரு- சீடர் உரையாடல்

    தலைப்பு—உயிர்.

    சீடர்: வணக்கம் ஐயா.
    குரு: வா. உட்கார். நலமாக இருக்கிறாயா? என்ன சந்தேகம் உனக்கு இன்றைக்கு?
    சீடர்: உயிர் என்பது என்ன?
    குரு: உயிர் என்பது ஆற்றல்.
    சீடர்: ஆற்றல் என்றால் என்ன?
    குரு: ஆற்றல் என்பது சக்தி. ஆங்கிலத்தில் Energy என்று பெயர்.
    சீடர்: எதற்கு ஆற்றல் வேண்டும்?
    குரு: உடல் ஓர் இயந்திரம். இயந்திரம் இயங்குவதற்கு ஆற்றல் தேவையல்லவா? மாவு அரைக்கும் இயந்திரத்திற்கு மின்சாரம் தேவையில்லையா? அது போல் உடலாகிய இயந்திரம் இயங்க ஆற்றல் தேவை. அந்த ஆற்றலைத் தருவது உயிர் தான். எனவே தான் உயிரை ஆற்றல் என்கிறோம்.
    சீடர்: உடலை ஏன் இயந்திரம் என்கீறிர்கள் குருவே!
    குரு: உடலுக்குள் பல உறுப்புகள் இருக்கின்றன. அவை தானாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதேபோன்று கைகள், கால்கள், கண், மூக்கு, காது, வாய், நாக்கு ஆகிய வெளி உறுப்புகள் இருக்கின்றன. எல்லா உறுப்புகளும் இயங்கி மனிதன் தன் பணியைச் செய்வதால் உடலை இயந்திரம் என்கிறோம்.

    …..தொடரும்

  • சி.ப. (த) – எண்.1- 02

    29-Oct-2014

    குறிப்பு: முகப்பிலுள்ள இப்பயிற்சியின் நோக்கத்தை வாசிக்காதவர்களின் வசதிக்காக, இப்பயிற்சிக்குள் செல்லும் முன் இப்பயிற்சியின் நோக்கத்தை அறிந்து விட்டு பயிற்சிக்குள் செல்வதற்காக மீண்டும் இப்பயிற்சியின் நோக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் நோக்கத்தை முகப்பில் வாசித்தவர்கள் நேரிடையாக பயிற்சிக்குள் செல்லலாம். வாழ்க வளமுடன்.

    இப்பயிற்சியின் நோக்கம்

    ”அறிவிற்கு விருந்து”ப் பகுதியில் ஒரு பக்க அளவிலே சிந்தனை விருந்து தரப்பட்டுள்ளது. இது ஒரு, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விருந்தாகும். இதுவும் சிந்தனையைத் தூண்டி விடும். ஆனால் ”சிந்திக்க வினாக்கள் மட்டும்” என்கின்ற இப்பயிற்சியில் வினாக்களை மட்டும் தந்து விட்டு விடையைத் தரவில்லையே என நினைக்க வேண்டாம். அவரவர்களே சிந்திக்கப் பழக வேண்டும்(சுய சிந்தனை) என்பதுதான் இப்பயிற்சியின் நோக்கம். இங்கே அறிவிற்கான விருந்தை நீங்களே தயார் செய்து அருந்துவதாகும். எனவே சிந்தனையைத் தூண்டுவதற்கான வினா (thought provoking questions) மட்டுமே தரப்பட்டுள்ளது.

    இந்த வினாவையே சிந்தனையாகக் கொண்டு விடையைக் கண்டுபிடிப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். சிந்தனைக்குரிய இக்கேள்வியினைச் சிந்திக்க சிந்திக்க சிந்திப்பது பழக்கமாகும். நீங்களே ஒரு நிலையில் சிந்தனை வினாக்களுக்குரிய விடையை கண்டுபிடிப்பீர்கள். அப்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அது பேரின்ப நிலைக்கான வாயில். பயிற்சிக்குள் செல்வோம்.

    சி.ப. (த) – எண்.1- 02 நாள் 29-10-2014

    சிந்திக்க — வினாக்கள்

    1. இயற்கையின் ஆரம்பம் என்ன? இயற்கை எங்கிருந்து ஆரம்பித்தது?
    2. பரிணாமம் (என்றென்னும் நிரந்தரமான ஆற்றலின் தன்மாற்றம்) இன்னும் பூர்த்தியாகவில்லையா?
    3. பூர்த்தியாகிவிட்டது என்றால் எப்படி சொல்கிறீர்கள்? பூர்த்தியாகவில்லையெனில் ஏன்?
    4. மனிதப் பிறவிக்கு இயற்கை வைத்துள்ள குறிப்பிட்ட நோக்கம் யாது?
    5. இயற்கை என்கின்ற சொல்லுக்கு எதிர்ச் சொல் உண்டா? இதற்கான உங்கள் விடையினை நியாயப் படுத்துவீர்களா?
    6. இறை எங்கும் உள்ளது என்கிறார்கள் அறிஞர்கள். இது அதற்கு (இறைக்கு) சாத்தியமா? இறை இல்லாது ஒரு பொருள் இருக்க முடியாதா? உங்கள் விடையினை நியாப்படுத்துங்கள்.

    QTP (ENG) – NO.1- 02

    QUESTIONS TO PONDER

    1. What is the origin of Nature? Where from has Nature begun?

    2. Is evolution (Transformation of Eternal power) is incomplete? If your answer is yes how do you say that ? If no why?

    3. What is the specific purpose set by Nature for human birth?

    4. Is there a word opposite to the word “NATURE” ? Can you justify your answer?

    5. God exist everywhere. Is it possible for HIM? How ? Without God does anything exist ? Justify your answer.