February 2015

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 46

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    07-02-2015–சனி

    பாம்பும் அதன் மேற்சட்டையும் வெவ்வேறானவை; அதுபோலவே ஆத்மாவும் சரீரமும்
    வெவ்வேறானவை.

    … ஸ்ரீராமகிருஷ்ணர்.

    பயிற்சி: 1) இதனைக் கேட்கும்போது நமக்கு ஏற்படும் உணர்வு என்ன?

    2) எதற்காக இதனை ஸ்ரீராமகிருஷ்ணர் நமக்குத் தெரிவிக்கிறார்?

    3) “ஆத்மாவும் சரீரமும் வெவ்வேறானவை“ என்று கருத்தியலாகவும்
    (theoretically), செய்முறையாகவும்(practically) அறிவதால் என்ன பயன்?

    4) ஆன்மீகத்தில் வெற்றியைப்பற்றிக் கூறும் போது “முதலில்
    புளியங்காயாக இருந்தது பிறகு புளியம் பழமாகிவிட வேண்டும்” என்று
    கூறுவதற்கும் ”ஆத்மாவும் சரீரமும் வெவ்வேறானவை என்று கூறுவதற்கும்” ஏதாவது சம்பந்தம் உள்ளதா?

     

    வாழ்க அறிவுச் செல்வம்            வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 45

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     

                                             06-02-2015

     

      பாவப் பதிவுகளைப் போக்கி அறிவில் மேலோங்க வேண்டியதே பிறவியின் நோக்கம்.

                                                                                                                                          ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்

     

    பயிற்சி:  1) இந்த அமுத மொழி  எந்த வகையில் பிடித்திருக்கின்றது?

               2) இந்த அமுத மொழி   ஆத்ம உணர்ச்சியை எவ்வாறு தூண்டுகின்றது?

               3) பாவப்பதிவை போக்குவதன் அவசியம் தெரியும். அதே வேளையில், ‘அறிவில் மேலோங்க’ என்று கூறுவதன் பொருள் என்ன?

               4) எவ்வாறெல்லாம் அறிவில் மேலோங்க வேண்டும்?

               5) எட்டு வார்த்தைகளை கொண்ட இந்த அமுத மொழியினை மகரிஷி அவர்கள் கூறிய நிலையிலிருந்து விளங்கிக் கொள்ளவதற்கு,  ஐந்து வினாக்கள் எழுப்பிவிட்ட நிலையில்  வேறு ஏதேனும் வினாக்கள் எழுப்ப வேண்டியுள்ளதா?  வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 44

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    05-02-2015-வியாழன்

    வாழ்க வளமுடன்,

    அறம்

            1) எவை அறம் என்கிறார் மகரிஷி அவர்கள்?
            2) அறத்தின் தோற்றம் பற்றி, கவியின் வழியாக மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?
            3) மகரிஷி அவர்கள் கூறும் அறத்தின் கூறுபாடுகளுக்கும், அவரே கூறும் அறத்தின் தோற்றத்திற்கும் இடையே உள்ளத் தொடர்புகள் என்ன?

    வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு

    Loading