April 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 174

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     30-04-2016—சனி

    கடவுளின் நாடக அரங்கம் என்று இந்த உலகை ஏற்றுக் கொள். நாயகனாகிய இறைவனின் முகமூடியாக இருந்து உனக்குள் அவனை இயங்கவிடு.

    . . . ஸ்ரீ அரவிந்தர்.

    பயிற்சி:
    1) உலகம் எவ்வாறு கடவுளின் நாடக அரங்கமாகின்றது?
    2) ‘இறைவனின் முகமூடி’ என்பதன் உட்பொருள் என்ன?
    3) உனக்குள் அவனை இயங்கவிடு என்பது மனவளக்கலைஞர்களுக்கு எவ்வாறு விளங்குகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்              வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 173

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    29-04-2016—வெள்ளி.

    பொறுமைக்கும் எல்லை உண்டு என்பது சுத்தத்தவறு. பொறுமைக்கு எல்லை வரையறை செய்தால் அதுதான் வஞ்சம்.

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி:
    1) ‘சுத்தத்தவறு’ என்று அழுத்தமாக ஆணித்தரமாக சொல்வதால், இதனை ஆழ்ந்து விரிந்து சிந்திக்க வேண்டியுள்ளதல்லவா?
    2)  வஞ்சம் வரும் வழி, போகும் வழி   என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-172

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    28-04-2016 – வியாழன்

    அமைதி இருக்கும் இடத்தில்தான் இறைவன் அருள் இருக்கும் எனப்படுகின்றது. இது எவ்வாறு?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்