December 2017

Monthly Archives

  • FFC – 276 செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும் – 11/11

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    lotus

    கருமையம்
    (பாகம்-6)

    FFC – 276
    அ.வி. 276

    17.12.2017 – ஞாயிறு

    [rev_slider home-slider-1]

    வாழ்க வளமுடன்!

    சென்ற அறிவிற்கு விருந்தில் அழகணி சித்தரில் விளக்கப்பதிவு வென்ற அனுபவத்தை பாடலின் வழியாக அறிந்துகொண்டோம். இன்றைய சிந்தனையில் அப்பாடலுக்கான பொருளை மகரிஷி அவர்கள் விளக்கியவாறு அறிந்து கொள்வோம்.

    காட்டானை மேலேறிக் கடைதெருவிலே போகையிலே
    நாட்டார் நமை மரித்து நகைபுரியப் பார்ப்பரன்றோ
    நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
    காட்டானை மேலேறி, என் கண்ணம்மா, கண் குளிர காண்பேனோ?

                                                                                               . .  . அழகணிசித்தர்
    ‘கண்ணம்மா’ என்பதனை அறிவு என்கிறார் மகரிஷி அவர்கள்.
    ‘காட்டானை’ என்பதற்கு ‘காட்டுயானை’ என்பது பொருளல்ல. ‘காட்டானை’ என்கின்ற சொல் ‘காட்டமாட்டான்’ என்கின்ற சொல்லில் இருந்து வந்ததாகக் கூறுகிறார். அதாவது இறைவன் இருக்கிறான். மற்றவர்கள் பார்க்கும் அளவுக்கு அவன் இருக்கவில்லை என்கிறார். மேலும் விளக்குகிறார். அதாவது புலன்களாலே பார்க்கும் அளவிற்கு அவன் இருக்கவில்லை என்று பொருள்.
    காட்டான் = அரூபியாக உள்ள அறிவு.
    ‘ஐ’ மேலேறி = ஐந்து புலன் உணர்ச்ச்சிகளையும் தாண்டி,
    கடைத்தெருவில் போகையிலே = கெட்டிப்பொருள், நீர், நெருப்பு, காற்று. விண் ஆகிய ஐம்பூதங்களிலிருந்து எழுச்சி பெறக்கூடிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் அல்லது உருவமாக ஐந்து நிகழ்ச்சிகளையும் தாண்டிக் கடைசியிலே உள்ளது எது என வினவுகிறார். பிரம்மம்; சுத்த வெளி என்கிறார், அதுதான் கடைசி நிலை. கடைநிலை என்றால் கடைசி நிலை என்று பொருள்.
    அந்தக் காலத்தில் கிராமங்களிலே மற்ற எல்லாத் தெருக்களையும் தாண்டி கடைசியிலே ஒரு தெரு அமைப்பார்களாம். அவரவர்களுக்கு வேண்டிய பொருளை வாங்கிக் கொள்வதற்கும், தேவையில்லாத பொருட்களை விற்றுக்கொள்வதற்காகவும் கிராமங்களிலே ஒரு தெரு அமைப்பார்களாம். அது கடைசியிலே இருப்பதினால் கடைத் தெரு என்று பெயர்.

    பிரம்மத்தினையும் ‘கடை’ என்று சொல்வது அறிஞர்களின் வழக்கு என்கிறார் மகரிஷி அவர்கள். இங்கே இராமலிங்கர் கூறியதனையும் நினைவு கூற விரும்பி, ‘கடைவிரித்தேன்; கொள்வாரில்லை.’ என்று சொன்னதை நமக்கு நினைவு படுத்துகிறார் மகரிஷி அவர்கள்.

    அந்தக் ‘கடை’ என்று சொல்லக் கூடிய மறைபொருள் என்பது ‘பிரம்மம்’. பிரம்மத்தின் நிலையை நல்ல முறையிலே தெளிவாக விரித்துக் கூறிவிட்டேன்; எடுத்துக் காட்டிவிட்டேன்; ஆனால் அதை விளங்கிக் கொண்டு பின்பற்ற யாருமே வரவில்லை!’ என்று வள்ளலார் ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்கின்ற வள்ளாலாரின் வரிகள் சொல்வதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

    இறைஉணர் ஆன்மீகப்பயிற்சி என்பது என்ன?

    பிரம்மத்தை நோக்கிய வாழ்க்கைப் பயணம். அறிவு தனது முழுமையை நோக்கிய பயணம். ஐந்தறிவு வரை உயிரினங்கள் அனுபவித்தது என்ன? காந்த தன்மாற்றங்களான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை ஐந்து புலன்களின் வாயிலாக அனுபவித்ததேயாகும். அப்படியானால் ஆறாம் அறிவாக மனிதன் வந்தபோது அவன் அனுபவிக்க வேண்டியது என்ன? வாழ்வில் ஐந்து புலன்களின் வழியாக அனுபவிப்பதோடு நின்றுவிடாமல், அதனையும் தாண்டி,
    பிரத்யேகமாக புலன் ஏதும் உருவாகாமல், பேரறிவிலிருந்து வந்துள்ள மனிதஅறிவு
    அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய நிகழ்ச்சிகள் என்பது என்ன,
    அந்நிகழ்ச்சிகள் எவ்வாறு உண்டாகின்றன,
    அந்நிகழ்ச்சிகளை உணர்கின்ற நான் யார்
    என்பதற்கான விளக்கத்தினை அறியவேண்டும்.

    அவ்விளக்கங்களை அறியும்போது முடிவாக இப்பிரபஞ்சத்தின் மூலம் எது என்பதையும், அதுவே பிரம்மம்-கடவுள் என்று கூறப்படுகின்றது என்பதும் அறியப்படும்.

    இந்தக் கருத்தினைத்தான் திருவள்ளுவர்,

    சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்ற ஐந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு” . . . குறள் 27

    என்கின்ற குறளின் வாயிலாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துரைத்துள்ளார். அதாவது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியன உருவான வகையை தெரிந்துகொள்ள வேண்டும். ஐந்தின் வகை தெரியும்போது பிரம்மமே தான் எல்லாமாக ஆகியுள்ளது என்பது அறியப்படும். அதாவது இறைஉணர்வினைப் பெறமுடியும். இதற்காகப் பிறந்தவன்தான் மனிதன் என்கிறார் திருவள்ளுவர். அப்படி இல்லாவிடில் உயிரினப்பரிணாமத்தில் வேறு எதற்காக மனித இனம் தோன்றிற்று?
    எனவே வாழ்க்கைப் பயணம் என்பதே பிரம்மத்தை நோக்கிய பயணமேதான்! இந்த உண்மையினை அறியாமல்தான் மனித குலம் உள்ளது. இதனை இருபதாம் நூற்றாண்டிலிருந்து திருவேதாத்திரியம் எடுத்துக் கூறி வருகின்றது.
    எனவே
    1) ‘காட்டான் ‘ஐ’ மேலேறி கடைத்தெருவில் போகையிலே’ என்பது அந்த பிரம்மத்தை நாடி அங்கேயே போய் அடக்கம் பெற்று இந்தத் தன்முனைப்பை நீக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு இறைநிலைக்குப் போய் நிலைத்து வரவேண்டும் என்று போகும்போது;
    2) நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பரன்ரோ’ என்றால் இந்த உலகிலே வாழ்ந்து பதிவுகளைக் கொண்டு, அந்த எண்ணங்களெல்லாம், அந்தப் பதிவுகளெல்லாம் இருக்கின்றனவே, அவைகளெல்லாம், ‘ஓகோ? நீ எங்களையெல்லாம் விட்டு தாண்டிப் போய்விட முடியுமா?’ என்று எள்ளி நகையாடுவது போலல்லாவா இருக்கின்றது என பாடலில் அழுகணிச்சித்தர் தெரிவிக்கிறார் என்கிறார் மகரிஷி அவர்கள். அழகணிச்சித்தரின் இந்த அனுபவத்தை இயற்கை நமக்கு வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாகத் தெரிவித்து சிந்திக்க வைப்பது என்ன?

    அஞ்ஞானிக்கு மட்டும் பழக்கப்பதிவுகள் உண்டு என்பதல்ல.

    அஞ்ஞானிக்கு மட்டும்தான் பழக்கப்பதிவுகள் உண்டு என்பதல்ல. ஞானிக்கும் பழக்கப்பதிவுகள் உண்டு. எனவே ஞானி பழக்கப்பதிவை வென்று விளக்கப்பதிவில் வாழ்வதுபோல், ஒவ்வொரு அஞ்ஞானியும் பழக்கப்பதிவை வென்று விளக்கத்தில் வாழவேண்டும். ‘Every Saint has a past and every sinner has a future.’ இங்கே மற்றொன்றை அறிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.

    முந்தைய பழக்கப்பதிவுகள் ஒன்று சேர்ந்து ‘ஓகோ? நீ எங்களையெல்லாம் விட்டு தாண்டிப் போய்விட முடியுமா?’ என்று எள்ளி நகையாடுவது போன்று அழகணிச்சித்தருக்கு இருந்ததாக அவரே பாடலின் வாயிலாகத் தெரிவிக்கிறார். இதுபோன்று அவருக்கு மட்டுமா இத்தகைய அனுபவம்/உணர்வு ஏற்படும்? திருந்த வேண்டும் என்கின்ற ஆழ்மன எண்ணத்தோடு ஆன்மீகப் பயிற்சியினைச் செய்கின்றவருக்கும் ஏற்படலாம்.

    விளக்கத்தை விட முடியவில்லை. ஏன்?

    ஏனெனில் பரிணாமத்தில் விளக்கம் பெறுகின்ற நிலைக்கு அறிவு வரும்போதுதான், வாழ்க்கையைப் பற்றிய புரிதல் விளக்கமாக கிடைக்க ஆரம்பிக்கும். அறிவு என்பதே அறிவதற்காகத்தானே உள்ளது. ஆகவே அறிகின்ற நிலைக்கு வந்த அறிவிற்கு விளக்கத்தைவிட்டு விட மனமுமில்லை; அதே நேரத்தில் இதுவரையுள்ள பழக்கப்பதிவுகளின் ஆதிக்கமோ மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. வள்ளலார் ‘பெருநெறி பிடித்தொழுக வேண்டும் என்றும் மதமான(செருக்கு, ஆணவம்) பேய் பிடிக்காமல் இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுவதை நினைவு கொள்வோம்.
    எந்த தரப்பினராக இருந்தாலும் தீயபழக்கப்பதிவுகளால் துன்பமே என்பதனை கவனத்தில் கொண்டு பழக்கப்பதிவின் போராட்டத்தில் வெற்றி பெற்றிடவேண்டும். அதனால்தான் ‘ஒழுக்கப்பழக்க அறிவு’, எனும் பாடத்தை கல்வியில் சேர்க்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
    இதனையே சுவாமி விவேகானந்தர் ‘Education is the manifestation of perfection already present in man’ என்று ஏற்கனவே கூறியிருக்கிறார்.

    Education-Swami Vevekananda

    3. ‘நாட்டார் நமை மறித்து நகைபுரியப் பார்த்தாலும்’ என்பது அப்படியெல்லாம் எத்தனையோ கோடி எண்ணங்கள்(பழக்கப்பதிவுகள்) குறுக்கிட்டபோதிலும் மன உறுதியோடு, பயிற்சியினாலே,

    4. ‘காட்டானை மேலேறிக் கண்குளிரப்பாரேனோ’ என்றால் ஐம்புலன் அனுபவப்பதிவுகளையும் தாண்டி மேல் ஏறி கடைசியிலே உள்ள பிரம்மத்தை, அந்த அரூபமான நிலையிலே உள்ள பிரம்மத்தைக் கண்குளிர, நான் அறிவு பூர்வமாக, மனநிறைவு பெறுமளவிற்குப் பார்க்க மாட்டேனோ, உணர மாட்டேனோ’ என்று தனது உறுதியினை சமுதாயத்திற்குத் தெரிவிக்கிறார் அழகணிச்சித்தர் என்பது செய்யுளின் சாரம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    இதுவரை அழகணிச்சித்தரின் பழக்கப்பதிவிற்கும் விளக்கப்பதிவிற்கும் ஏற்பட்ட போராட்ட அனுபவத்தை அழகணிச்சித்தர் அருளிய பாடலிருந்து, மகரிஷி அவர்கள் கூற அறிந்து கொண்டோம்.

    அஞ்ஞானிக்குமட்டுமே பழக்கப்பதிவுகள் உண்டு என்பதில்லை; ஞானிக்கும் பழக்கப்பதிவு இருந்து, அதனை விளக்கப்பதிவால் வென்றுதான் ஞானியாகிறார் என்று அறிந்து கொண்டோம். அறிவிற்கு முழுமையான தெளிவு ஏற்பட்டதுமே(ENLIGHTENMENT) பழக்கப்பதிவுகளாகிய தீயவினைப்பதிவுகள் செயலிழந்துவிடும். முழுமையாக வினைப்பதிவுகள் செயலிழந்த பிறகுதான் தெளிவு/இறை உணர்வு ஏற்படும் என்பதில்லை. பெற்ற தெளிவின் அடிப்படையில் இறை உணர்வு என்பது எதிர்பார்க்காத சமயங்களிலும் நடைபெறும். எதிர்பார்த்து நடப்பதன்று இறை உணர்வு. ஆனால் இறைஉணர்வு ஏற்பட்டதும் அதுவரை கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து வந்த வினைகள் முழுவதுமாக செயலிழந்து விடுகின்றன.

    பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே மனிதன் போராடிக் கொண்டிருக்கிறான்’  (click here for FFC-188, Dt. 11-05-2016) என்கிறார் மகரிஷி அவர்கள்.

    போராட்டம் என்பது என்ன?– கயிறு இழுக்கும் போட்டி (tug of war)

    ஒழுக்கமின்மை–பழக்கத்திற்கும், ஒழுக்கவாழ்வு—விளக்கத்திற்கும்(between habit and wisdom) இடையே கயிறு இழுக்கும் போட்டி போல் (tug of war) போராட்டம் நடைபெறுகின்றது. எண்ணிலடங்கா தலைமுறைகளில் ஏற்பட்டுள்ள ஆன்மாவின் பழக்கப்பதிவுகளின் அழுத்தத்தை, இப்பிறவிக்கு கொண்டு வந்துள்ள மனிதன், இப்பிறவியில் விளக்கம் கிடைத்த பிறகு, ‘ஒழுக்க வாழ்வு வாழவேண்டும்’ என்கின்ற முடிவு எடுத்தாலும், விளக்கப்பதிவுகளின் அழுத்தம் மிக மிகக் குறைவாக இருப்பதால் பழக்கப்பதிவை வெற்றி கொள்வதில் அதிக சிரமம் உள்ளதாக இருக்கின்றது. இதனைத்தான் போராட்டம் என்கின்றனர் அறிஞர்கள். இதனை கயிறு இழுக்கும் போட்டியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஏற்கனவே இணையதளத்தில் இது பற்றிய விளங்கள் தரப்பட்டுள்ளன.

    அப்படியானால், விளக்கப்பதிவின் அழுத்தம் அதிகரிக்க எத்தனை தலைமுறை காத்திருக்க வேண்டுமோ என ஐயமும், அச்சமும் எழலாம். இப்பிறவியிலே மட்டும், பெற்ற விளக்கப்பதிவுகளைக் கொண்டே, பழக்கப்பதிவை இப்பிறவியிலேயே வெற்றிக் கொள்வதற்காக இயற்கை கருணையோடு கொடுத்ததுதான் கருத்தியல், செய்முறைப் பாடங்கள் அடங்கிய திருவேதாத்திரியமாகும். எனவே கருவில் திருஉடையவர்களல்லாதவர்கள்கூட இப்பிறவியிலேயே திரு எய்த முடியும் என்கின்ற உறுதியினை அருளுகிறார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    நிறைவாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது யாதெனில், சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா ஆகிய மூன்று வகை பதிவுகளும் கருமையத்தில் உள்ளன. இப்பதிவுகளின் தன்மைக்கேற்பவே மனிதன் இன்பமோ, துன்பமோ அனுபவிக்கிறான். கருமையத்தை தெய்வீக நீதி மன்றம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    முடிவாக குருவின் சேர்க்கை எதற்காக என்று மகரிஷி அவர்கள் ஒரு கவியின் வாயிலாக அறிவித்துள்ளதை நினைவுபடுத்திக்கொள்வோம்.

    FFC-62-PNG- எப்பபொருளை-4-3-15-6-00am

    ஆகவே இப்பிறவியில் துன்பத்திலிருந்து மீளவும், கருத்தொடராக வரும் வம்சாவளிக்கும் நல்வினைப்பதிவுகளையே அளிக்கவும், அதற்கும் மேலாகவும் பூர்விகச் சொத்தான அமைதியினை அனுபவிக்க, இயல்பூக்க நியதியை பயன்படுத்தியும், குருவை மதித்து ஒழுகியும் வாழ்ந்து பிறவிப்பயனை இப்பிறவியிலேயே அடைவோம். அதற்கு இறை அருளும், குருவின் அருளும் துணை நிற்குமாக!!!

    guru_paadham

    வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 273

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 273

    15-12-2017 — வெள்ளி

    ‘உலக சிக்கல்களை ஒரு நொடியில் உணர்த்திடலாம். ஒருவராலும் அதனை உடன் திருத்திட முடியாது’

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) ஏன் அவ்வாறு கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
    2) பின்னர் எவ்வாறு தீர்க்க முடியும்?
    3) மனவளக் கலைஞர்களின் பெரும் பங்கு என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்–269

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

    lotus

     

    சிந்திக்க வினாக்கள்–269

    14-12-2017 – வியாழன்

    ஞானத்தைப் புறக்கணித்த வாழ்வு எவ்வாறு இருக்கும் என மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளர்க அறிவுச் செல்வம்