admin

Author Archives

  • FFC – 154-வினா விடை 6

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    வினா விடை 6

     FFC – 154

    13-01-2016–புதன்

    சிந்திக்க வினாக்கள்-117
    (19-10-2015 – திங்கள்)

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!

    சொல்லாத முன் இருந்த ——— ப்போல
    சொரூபமெல்லாம் பூரிக்குமுன் ——– .

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    விடை:-

     

    குறிப்பு:-

    சிந்திக்க வினாக்கள் பகுதியில், நேரடி வினாவாக மட்டும் இல்லாமல் , ‘கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!’ என்கின்ற முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை சற்று அறிந்து கொள்ளலாமே.

    பெரும்பாலும் ‘கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!’ என்கின்ற பகுதியில், உள்ள வினாக்கள் மகரிஷி அவர்களின் சிந்தனாப் பள்ளியிலிருந்துதான் கேட்கப்படுகின்றன. மகரிஷி அவர்களின் சிந்தனாப்பள்ளியில் மாணவர்களாக இருப்பவர்கள் அவருடைய வரையறைகள்(definitions) மற்றும் பொன்மொழிகளை நினைவில் வைத்திருப்பது அவசியமாகின்றது. அவற்றை நினைவில் கொள்வதோ அல்லது சொல்லிப்பார்ப்பதோ மனதிற்கு இதமாகவும், ஆனந்தமாகவும் இருக்கும். மேலும் மனவளக்கலைஞர்கள் இறைத்தூதுவர்களாக இருப்பதால் அதனை மற்றவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பில் உள்ளதால் மகரிஷி அவர்களின் வரையறைகள், மற்றும் பொன் மொழிகளை நினைவில் வைத்துக்கொள்ளுதல் அவசியமாகின்றது.
    உதாரணத்திற்கு மனதிற்கான வரையறை — ‘உயிரின் படர்க்கை நிலையே மனம்’ இதனை அவ்வாறே நினைவில் கொண்டிருத்தல் வேண்டும். ‘மாறாக உயிரிலிருந்து வெளிவருவது மனம்’ என்று சொல்வது மனதின் சரியான வரையறை கிடையாது. ஏனெனில் ‘படர்க்கை நிலை’ என்பதில் பொருள் மிகுந்துள்ளது. எனவே படர்க்கை நிலை என்று கூறும்போதே மனதைப் பற்றிய விளக்கம் மனதில் படம்போட்டுக் காட்டும். ஏனெனில் Definition is to be said as defined by the Inventor. Who is the inventor and why is he called as inventor? MAHARISHI is the Inventor of Mind, which so far has no definition. Definitions cannot be said by using one’s words or jumbling the words found in the definition given by the Inventor. விஞ்ஞானத்திலும் சரி கணிதத்திலும் சரி வரையறைகள் அவை உருவாக்கப்பட்ட சொற்களாலேயே, சொற்களை இடம் மாற்றி அமைக்காமலும் கூறப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டுதான் ‘கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!’ என்கின்ற முறை சிந்திக்க வினாக்கள் பகுதியில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. இப்போது விடைக்கு வருவோம்.

    சொல்லாத முன் இருந்த சொல்லை ப்போல

    சொரூபமெல்லாம் பூரிக்குமுன்    அரூபம்.

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இப்போது மேலே குறிப்பில் சொல்லப்பட்டுள்ளதற்கும், பூர்த்தி செய்த பிறகு வாசிப்பதில் வரும் ஆனந்தத்திற்கும் உள்ள தொடர்பினை உணர்ந்து கொள்ள வேண்டும்.
    இப்பிரபஞ்சமே தோன்றா முன்னர், என்னவாக இருந்திருக்கும் இயற்கையின் நிலை என்பதனை உவமானத்துடன் கூறுகின்றது இந்த அமுதமொழி.. உருவம் ஒன்றிருந்தால் அது இல்லாத நிலையும் உண்டு. அதுபோல் துகள்களால் உருவாவதற்கு(manifested) முன்னர் இருந்த நிலை unmanifested. Unmanifested என்பது அரூபமாகத்தான் இருக்கும். ஒன்றுமில்லாதது இல்லை. இருக்கும் என்றாலே அது இருக்கின்றது என்றுதானே பொருளாகின்றது.
    ஒரு சொல்லை சொல்லும்போது அது ஒலியாக காதுகளில் ஒலிக்கின்றது. அதற்கு முன்னர் அது என்னவாக இருந்தது? Unmanifested காந்தமாக இருந்தது. ஒரு சொல்லை சொல்லும்போது அரூபமாக இருந்து காந்தம் சொல்லின் ஒலியாக வருகின்றது. அது போல் உருவங்கள் தோன்றாமுன்னர் அதன் மூலநிலை அரூபம். இந்த முதல் நிலை உண்மை எந்த அளவிற்கு ஐயமின்றி விளங்கிக் கொள்ளப்படுகின்றதோ அந்த அளவிற்கு வேதாத்திரிய இயற்கையியல்/இறையியல் நாளடைவில் மிக மிகத் தெளிவாகிவிடும்.

    சிந்திக்க வினாக்கள்-118
    (22-10-2015 – வியாழன்)

    (அ) நிறை மனம் என்றால் என்ன?
    (ஆ) அது எப்போது வரும்?

    விடை:-

    மனமோ அரூபம். உருவமில்லாதது. உருவமில்லாததில் எதனைக் கொண்டு எவ்வாறு நிரப்புவது?
    உருவமில்லாததை உருவமில்லாததைக் கொண்டுதான் நிரப்ப முடியும் அல்லவா!

    இயற்கையின்/இறையின் ஆதிநிலையே அறிவாகவும், மனமாகவும் இருப்பதால் அதனைக் கொண்டு நிரப்புவதுதான் எளிதாக இருக்க முடியும். இந்த நுட்பத்தை கைக் கொள்ளும் பயிற்சியினை மனவளக்கலைஞர்கள் நன்கு அறிவர். மனதை துரீயாதீத தவத்தில் கொண்டு நிறுத்தி நிறுத்தி பழகப்பழக மனம் அதோடு ஒன்றி இரண்டறக்கலந்துவிடும் நுட்பம் தான் அது.

    இவ்வாறு பழக்கப்பட்ட மனம் தான் நிறை மனம் எனக் கொள்ளப்படும்.

    இஃதல்லாது நீள்சக்தியுடைய மனம்(mind is an elastic bag) எல்லையுடைய, தேவைக்கு மிஞ்சிய வேறு உலகியல் பொருட்களை போட்டுக் கொண்டே இருந்தால் மனம் நிறைவு பெறாது. மனதின் ஆசைகள் பெருகிக் கொண்டேதான் போகும். ஆசைகள் பெருகுவது என்பது, அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகிய மூன்று வழிகளில் அறிவைக் குறைவுடையதாக்கிக் கொள்கின்ற செயலாகும். இறையே நமக்குள்ளே அகமாக இருந்தும் அதனை அறியமுடியாமல், இரு பொருட்கள் தள்ளி இருந்தால் தூரம் வந்து விடுவதுபோல் அதற்கும் நமக்கும் உள்ள தூரத்தை அதிகரித்துக் கொண்டே போவது விந்தையிலும் விந்தையாகத்தான் இருக்கும். இதுவரை விந்தையாக இருந்துவந்த இறை மிக மிக எளிதான(Truth is Simple) ஒன்றாக விளங்கியபிறகு அதனை நம்முள் வைத்தும்; ஏற்றியும்; போற்றியும், வர, நம்மை அவன் இணைத்துக் கொள்ளும் அருள் வாய்ப்பை பெறுவோம். இதற்கு திருவருளும், நம் நேரிடை குருஉள்பட, அறிவை அறிந்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை அருளாளர்களின் அறிவாற்றலும் துணை நிற்குமாக. வாழ்க திருவேதாத்திரியம் வளர்க திருவேதாத்திரியம்.

    மகரிஷி அவர்களின் நிறை மனதை நாம் அவர் கூற அறிவோம்.

    FFC-154-நிறை உணர்வு

    இந்நிலையை தனது எழுபத்தைந்தாவது வயதில், அதாவது 1986 இல் (World Peace Year-1) அவர் கூறினாலும்,

    அவரை முடிவில்லா தெய்வீக தொடர் ஒட்டத்தில்(Endless Divine Relay Race),

    இப்பூவுலகம் உய்வதற்கு, வழிகாட்டி, அறிவொளியை வீசச்செய்துள்ள அறிவுப்பகலவனாக அனுப்பிவைத்த இயற்கை/இறை

    இருபது வருடங்கள் கழித்தே அவரின் வயது மூப்பின் காரணமாகவும்,

    மனவளக்கலை-இறைத்தூதுவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க எண்ணி,

    அவரை மீண்டும் அவரின் 95 வது வயதில் தன்னிடம் இணைத்துக் கொண்டது.

    அந்த இருபது ஆண்டுகளில் இயற்கை/இறை நிர்குணமானது என்று கருதப்பட்டாலும், ‘இச்சை இன்றி ஏது இப்பிரபஞ்சம்’ என்பதுபோல் தன்னுடைய நோக்கமான ‘தன்னைப் பற்றி தன் மக்களுக்கு விரைவில் விளங்க வைப்பதற்கு’ மனவளக்கலை மன்றங்களின் அதீத வளர்ச்சியின் வாயிலாக சாதித்துக் கொண்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

    வாழ்க மனவளக்கலை மன்றங்கள்.     வளர்க மனவளக்கலை மன்றங்கள்.

    வாழ்க வேதாத்திரியம்.   வளர்க வேதாத்திரியம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                  வளர்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு:-

    வாழ்க வளமுடன்.

        அடுத்த அடுத்த அறிவிற்கு விருந்து சத்சங்கத்தில்

    (17-01-2016 ஞாயிறு)

    1)   சீர்திருத்தம் எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது? என்கின்ற வினாவிற்கான விடையும்,

     

    2)   ‘முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்.’ என்கின்ற …ஸ்பானியப் பழமொழியின் கீழ் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கான விடைகள் பகிர்ந்து கொள்ளப்படும்.

    வாழ்க வளமுடன்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-141

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    11-01-2016 – திங்கள்

    இறையை விட வலிதானது எதேனும் உளதா?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                           வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • FFC – 153-வினா விடை – 5

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

                                                                                 வினா விடை – 5

                                                                                                             FFC – 153

    10-01-2016–ஞாயிறு

    சிந்திக்க வினாக்கள்-112
    (01-10-2015 – வியாழன்)

    1) செய்த பாவத்திற்கு தண்டனை வழங்கப்படும்.
    2) செய்த பாவத்திற்கு பாவமே தண்டனை வழங்கும்.

    இவ்விரு கூற்றுக்களில் எது சரியாக இருக்கும், ஏன்?

    விடை:-

    பாவம் என்பது, தீமையைத் தரும் ‘செயல். செயலுக்கு விளைவு உண்டு’ என்பது நியதியாக இருப்பதால் பாவச் செயலுக்கு விளைவாக தண்டனை வருகின்றது. ஆகவே ‘செய்த பாவத்திற்கு தண்டனை வழங்கப்படும்’ என்றால் மனிதன் செய்கின்ற பாவச் செயலுக்கு தண்டனை யாரோ ஒருவர் தனியாக இருந்து கொண்டு வழங்குவதாக பொருள்படுகின்றது.
    அவ்வாறு கூறுவதனைவிட ‘செய்த பாவத்திற்கு பாவமே தண்டனை வழங்கும்’ என்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் செயலுடன் விளைவு தொக்கி நிற்கின்றது. அதனால்தான் ‘செயலிலே விளைவாக வருபவன் இறைவன்’ என்கின்றது திருவேதாத்திரியம்.


     சிந்திக்க வினாக்கள்-113
    (05-10-2015 – திங்கள்)

    (அ) எண்ணம் எவ்வாறு இயற்கையின் சிகரமாகின்றது?
    (ஆ) இயற்கையின் சிகரமாகிய எண்ணத்தைக் கொண்ட மனிதகுலம் எவ்வாறு இருக்க வேண்டும்? ஏன்  அல்லலுறுகின்றது?

    விடை:-

    அ) இயற்கையின் ஆதிநிலை/ஆரம்ப நிலை எது? இயற்கையின் ஆதிநிலை வெட்டவெளி, இறைவெளி. இறை வெளி பேரறிவையுடையது. அந்த பேரறிவுதான் மனிதனிடம் ஆறாம் அறிவாக தன்மாற்றம் அடைந்துள்ளது. எண்ணம் என்பது என்ன? எண்ணம் என்பது ஆறாம் அறிவு தான் எண்ணுகின்றது.
    சிகரம் என்பது என்ன? மலையின் உயர்ந்த பகுதியினை சிகரம் என்போம். இந்தப் பொருளை வைத்துக் கொண்டு ஒன்றின் உயர்ந்த நிலையான சிறப்பையோ, உன்னதத்தையோ குறிப்பதற்கு சிகரம் என்போம்.
    ஆகவே இயற்கையாகிய பேரறிவே ஆறாம் அறிவாக உள்ளதால், ஆறாம் அறிவு எண்ணுகின்ற எண்ணம் என்பது இயற்கையின் சிகரமாகின்றது.
    ஆ) இயற்கையே/இறையே மனிதனாக தன்மாற்றமடைந்து ஆறாம் அறிவாக வந்துள்ள மனிதனின் எண்ணம் என்பது வேறுயாருடையதுமல்ல. எண்ணம் என்பது இயற்கையே/இறையே எண்ணுவதுதான். அவ்வாறிருக்கும்போது இயற்கையோ/இறையோ எதனை எண்ணும்? நல்லதையேதான் எண்ணும். ஆனால் மனிதன் என்னவெல்லாம் எண்ணுகிறான்?! அல்லலுறவேண்டிய தீய எண்ணங்களையும் எண்ணுகிறான். எனவே செயல் விளைவுத் தத்துவப்படி தீய எண்ணங்களுக்கு விளைவாக துன்பம் வருகின்றது. . இறையருள் இழக்கப்படுகின்றது, எனவே மனிதன் அல்லலுறுகிறான்.
    தெய்வமே மனிதனாகியும், அந்த தன்மாற்றத்தில் விலங்கினங்களாகி மனிதனாக வந்துள்ளதால், மனித ஆன்மா அதனை நீக்க பலபிறவிகளாக முயற்சி செய்யப்படாத, அழுத்தம் பெற்றுள்ள விலங்கினப்பண்பு வலிமையாக உள்ளது. ஆகவே மனிதன் முழுமையாக தெய்வீகத்தை வெளிப்படுத்த முடிவதில்லை. இதனையே சுவாமி விவேகானந்தர் மனிதன் என்பவன், விலங்கினப்பண்பு, மனிதப்பண்பு, தெய்வீகப்பண்பு ஆகிய மூன்றினையும் கொண்ட கலவை என்கிறார்.
    ஆகவேதான் மனவளக்கலையில் முதல் தற்சோதனை—செயல்முறை பாடமாக ‘எண்ணம் ஆராய்தல் வைக்கப்பட்டுள்ளது.
    மகான் மகா கவி பாரதியார் ‘எண்ணிய முடிதல் வேண்டும், அதே நேரத்தில் நல்லவை எண்ணுதல் வேண்டும்’ எனவும் இறைவியை வேண்டச் சொல்கிறார்.

    சிந்திக்க அமுத மொழிகள்- 113
    (02-10-2015—வெள்ளி)

    குருவின் பணி, உன்னை உனக்குள் இருக்கும் குருவை நோக்கித் திருப்பிச் செலுத்துவது ஆகும்.
    ….. ஸ்ரீ ரமண மகரிஷி

    பயிற்சி—
    1) “உனக்குள் இருக்கும் குரு என்பவர்” என்பவர் யார்?
    2) இக்கூற்றின் வாயிலாக பகவான் ரமணர் என்ன கூறுகிறார்?

    விடை:-

    1) வேதாத்திரிய இறையியல் என்ன கூறுகின்றது? அந்த இறையியல் அறிவைப்பற்றிய புதிய அறிவியலை Science of Consciousness) உருவாக்கியுள்ளது. வேதாத்திரிய—இறையியல்–அறிவியல், இறை எது என்றும், இறையேதான் உயிராகவும், அறிவாகவும், ஆன்மாவாகவும் உள்ளது என்கின்றது. அறிவு மனமாக இயங்குகின்றது. எவ்வாறு இயங்குகின்றது? உயிரின் படர்க்கை நிலையாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதாவது மனம் காந்த அலையாக உள்ளது.
    பொதுவாக அலை என்றால் அதற்கு இரு முனைகள் உண்டு. எங்கிருந்து அலை புறப்படுகின்றதோ அந்த முனை ஒன்று, மற்றொன்று எங்கு சென்றடைகிறதோ அது ஒரு முனை. உயிரின் படர்க்கை நிலையாகவும், மனம் காந்த அலையாக உள்ளதால், மனஅலைக்கும் இருமுனைகள் உண்டு. மனம் கருமையப் பதிவுகளிலிருந்து புறப்படுவதால் அது ஒரு முனையாகவும், எங்கு சென்று முடிவடைகின்றதோ/எந்த புறப்பொருட்களோடு தொடர்பு கொள்கின்றதோ அது ஒரு முனை.
    இந்த இரண்டு முனைகளில் புறப்படுகின்ற முனையை ‘மறுமுனை’ என்கின்றார் மகரிஷி அவர்கள். அந்த மறுமுனை புறப்படுகின்ற இடம்தான் தெய்வமே வீற்றிருக்கும் அகம். ஆகவே மனதின் மறுமுனை தெய்வம் என்கிறார் மகரிஷி அவர்கள்(The other end of mind is God). எனவே அகத்தே–உள்ளே, மனிதனுக்குள்ளும் இருப்பது தெய்வமேதான். அகத்தே தெய்வம் இருக்க, அகத்தை தூய்மை செய்து வர வர அதுவே உள்ளொளியாகி ஆன்மஒளியை வீசி வழிகாட்ட ஆரம்பிக்கின்றது. திக்குத் தெரிய இருண்ட காட்டில் வழிதெரியாமல் அலைந்து கொண்டிருந்தவருக்கு இருளை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி மெல்ல மெல்ல வழி காட்டுகின்றது. அப்படியானால் வழிகாட்டுபவருக்கு என்ன பெயர்? என்ன பெயர் வைக்கலாம்? குரு என்றுதான் பெயர்.
    அறிவை அறிந்த அருளாரிடம் தீட்சை பெறும்போது, உயிரிலிருந்து புறத்தே ஓடிக்கொண்டிருக்கின்ற மனம் உயிர் மீதே வைக்கப்படுகின்றது அருளாரின் கருணைச்செயலால் மனம் உள்ளே திருப்பி விடப்படுகின்றது. எனவே இதனைத்தான் குருவின் பணி, உன்னை உனக்குள் இருக்கும் குருவை நோக்கித் திருப்பிச் செலுத்துவது ஆகும்.
    2) இக்கூற்றின் வாயிலாக தெய்வம் வீற்றிருக்கும் அகத்தை தூய்மை செய்து வரும்போது அகமாகிய தெய்வமே குருவாக வழிகாட்டிவரும் என்கிறார் பகவான் ஸ்ரீ ரமணர்.

    சிந்திக்க அமுத மொழிகள்- 114
    (03-10-2015—சனி)

    “நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆவீர்கள்”

    …. சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி—
    1) .இது எந்த விதியின் கீழ் நடைபெறுகின்றது?
    2) இந்த விதியைச் சுட்டிக்காட்டும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் பாடலை நினைவு கூறவும்.

    விடை:-

    1) இயல்பூக்க நியதியின் கீழ் நடைபெறுகின்றது.
    2)
    குருவின் சேர்க்கை(15-08-1984)
    “எப்பொருளை எச்செயலை எக் குணத்தை
    எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
    அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
    அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும்;
    இப்பெருமை இயல்பூக்க நியதி ஆகும்;
    எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
    தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
    தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்,”
    …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    அவ்வையார் கூறும் ‘அறிவினரை கனவிலும் நனவிலும் காண்பது இனிதினும், இனிது’ என்கின்ற எளிதான ஆன்மீகத் தொழில் நுட்பத்தை(Simple Spiritual Technique) அறிந்து அதனை பயன்படுத்த வேண்டும்.
    ஐயன் திருவள்ளுவர் ‘பெரியாரைத் துணைகோடல்’ என்கின்ற அதிகாரத்தில் பத்து வெவ்வேறு கோணங்களில் கூறியுள்ளதில், எது தனக்கு உகந்ததாக உள்ளதோ அதனைக் கண்டறிந்து அல்லது இயன்றால் எல்லாவற்றின் வழியாகவும், நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு திருவள்ளுவர் அவதரித்து 20 நூற்றாண்டுகள் கழிந்தும், திருவள்ளுவரையும் மானசீக குருவாக்கிக் கொண்டாரோ அதுபோல் அவருடைய சீடர்களாகிய நாமும் திருவள்ளுவரையும் மானசீகக் குருவாக்கிக் கொண்டு, ‘தகவல், உறுதிபடுத்துதல், மாற்றமடைதல்––Inforamation. Confirmation. Transformation’ என்கின்ற தாரக மந்திரப்படி ஆட்சேபமில்லாது உறுதிபடுத்திய பிறகு, பின்வாங்காமல் பூரண முழுமனத்தோடு (in implicit obediience) தன்னை மாற்றிக் கொள்ள செயலில் இறங்க வேண்டும். இந்த ஆண்டு 2016 ஐ இறையுணர் ஆண்டாக மலரச்செய்வோம். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளா்க அறிவுச் செல்வம்

    Loading