சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள் – 332-சுயமாய் சிந்தி!

    வாழ்க மனித அறிவு!                                                                                      வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க அமுத மொழிகள் – 332

     

        02-04-2022 — சனி

    சுயமாய் சிந்தி!

    எல்லாம் வல்ல தெய்வமது.  எங்கும் உள்ளது நீக்க மற.  சொல்லால் மட்டும் நம்பாதே. சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்!”

                                                                 — வேதாத்திரி மகரிஷி

    பயிற்சி—

    1. தெய்வம் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதை அப்படியே நம்புவது சரியில்லையா?

    2. மகரிஷி அவர்கள் கூறுவதை நம்பவேண்டாம் என்று அவரே எச்சரிப்பது வியப்பாக இருக்கின்றதல்லவா? ஏன் அவ்வாறு கூறுகின்றார்? 

    3. காரணம் இல்லாமலா இருக்கும், சிந்திப்போம்.  அந்தக் காரணத்தை  அறிவதற்கும்  சிந்திப்போம் என்றுதான் கூறுகிறோம்!  ஆறாம் அறிவின் உச்சமான சிறப்பான சிந்தனை ஆற்றல்  தடத்தை(pondering channel) திறக்கச் சொல்கிறாரா வேதாத்திரி மகரிஷி அவர்கள்?!

    4. தெய்வம் பற்றி கூறிவிட்டு ஏன் சுயமாக சிந்தித்துத் தெளிவு பெறச்சொல்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    5. சிந்தித்தல் என்றால்  எவ்வாறு சிந்திக்க வேண்டும்?  அதனைக் கூறவில்லையே! எங்கிருந்து சிந்தித்தலை ஆரம்பிக்க வேண்டும்?  எங்கு முடிக்க வேண்டும்?

    6. முதலில் சிந்தித்தல் மீது தீராத ஆர்வம் கொள்ள வேண்டுமல்லவா?

    7. அன்னமய கோசம், மனோமய கோசம் ஆகிய இரண்டில் மட்டுமே இயங்கும் எண்ணத்தை பிராணமயகோசத்திற்கு கொண்டு வந்து பிறகு விஞ்ஞாணமயகோசத்திற்கு கொண்டு வருவதற்கு  சுயமாய்ச் சிந்திக்கச் சொல்கிறாரா? 

    7. சிந்தித்தலை அவர் எவ்வாறு ஆரம்பித்தார் என்பதனைக் கவனித்தால் நாமும் சிந்தித்தலை அவ்வாறே ஆரம்பிக்கலாம் அல்லவா?

    8. சிறு வயதிலேயே அவருக்குள் எழுந்த மகானாக்கிய நான்கு மகோன்னத கேள்விகள் இருக்கின்றனவே. அவற்றையே நாம் சிந்தித்தலுக்கு ஆரம்பமாக வைத்துக் கொள்ளலாமன்றோ?

    9. சிந்தித்தலால் தெளிவு பெறச்சொல்கிறார். நம்பிக்கை வேறு,  தெளிவு வேறா?  தெளிவு என்றால் என்ன?  தெளிவின் பயன் என்ன?

    10. தெய்வம் பற்றி அறிவதற்கு மட்டுமா சிந்தித்தலை பயன்படுத்த வேண்டும்? மானுடவியலைப் பற்றி அவர் கூறியவற்றை உறுதிபடுத்துவதற்கும் பயன் படுத்தவேண்டுமா?

    11. சிந்தித்தலை எவ்வாறு அவரிடமிருந்து கற்றுக்கொள்வது? அவருடன் இணைந்தால் கற்றுக்கொள்ள முடியுமா?

    12. இப்போது அவர் இல்லையே இப்புவியில்! எவ்வாறு அவருடன் இணைந்துகொள்வது?

    13. அவருடைய சிந்தனை ஆற்றலைப் போற்றி, மகிழ்வுற்றால் அவருடன் இணைப்பு கிடைத்துவிடுமா?

    14. தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர் வாழ்ந்த காலத்தில் பிறவாத மகரிஷி அவர்கள் எப்படி அம் மூவரையும் குருமார்களாகக் கொண்டார்?

    15. அதே யுக்தியை நாமும் பயன்படுத்தலாமன்றோ?!

    16.எவ்வளவு காலம் தேவை தெய்வத்தைப் பற்றி சுயமாய்ச் சிந்திக்க ஆரம்பித்து சிந்தித்தல் முடிந்து தெளிவு பெறுவதற்கு? சிந்தித்தலுக்கு முடிவு என்று ஒன்று இருக்கின்றதா?

          16.1.ஒரு நொடி போதுமா? 

         16.2. ஒரு மணித்துளி போதுமா?

         16.3. ஒரு வாரம் போதுமா? 

        16.4. ஒரு மாதம் போதுமா? 

        16.5. ஒரு வருடம் போதுமா? 

        16.6. இந்தப்பிறவிக்காலம் போதுமா? 

         16.7. செயலற்று/உறங்குகின்ற(dormant) சிந்தினை  ஆற்றல் தூண்டப்பட்டு விழித்தெழுவதைப் பொருத்து கால அவகாசம் மாறுபடுமா?

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!


    வாழ்க மனித அறிவு!  வளர்க மனித அறிவு!!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                          வளா்க அறிவுச் செல்வம்!!

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 331

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     

     01-04-2022— வெள்ளி

    ஒன்றை மனதில் எண்ணி அதையே சிந்தனை செய்து கொண்டிருந்தால் அவனது உள்ளம் அதே வழியைச் சென்று அடைந்துவிடும்.

    …..புத்தர்.

    பயிற்சி—
    1) இவ்வுண்மையில், புத்தருடன் மகரிஷி அவர்கள் எவ்வாறு ஒன்று படுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 330(26-03-2022)

    வாழ்க மனித அறிவு !                          வளர்க மனித அறிவு !!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 330

    26-03-2022 — சனி

    “ஆணவம் இல்லாத இடத்தில் அருள் ஒளி வீசும்.”
                                                                                             . . . வள்ளலார்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அருட்பிரகாச வள்ளலார்?
    2) ஆணவம் என்று எதனைக் குறிப்பிடுகிறார்?
    3) அருள் என்பது என்ன?
    4) ‘அருள் ஒளி’ என்பது என்ன?
    5) அருள் நமக்கு வேண்டுமல்லவா?
    6) அருளுக்குப் பாத்திரமாக என்ன செய்ய வேண்டும்?
    7) ‘ஆணவம் இல்லாத இடத்தில்’ என்பதால் அந்த இடம் எது?

    வாழ்க அறிவுச் செல்வம்!                       வளா்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 329-25-3-22

    வாழ்க மனித அறிவு!                                                                வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க அமுத மொழிகள் – 329

        25-03-2021 — வெள்ளி

     

    Fraction demands Totality supplies

                                                          . . . வேதாத்திரி மகரிஷி

    பயிற்சி:

    1) என்ன கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

     2) ‘Fraction’ என்று எதனைக் குறிப்பிடுகிறார்? 

    3) ‘Totality’ என்று எதனைக் குறிப்பிடுகிறார்?

    4) மனிதகுலத்திற்கு என்ன தெரிவிக்க எண்ணி இப் பொன்மொழியினை அருளியுள்ளார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    5) இப் பொன்மொழிக்கும் நேற்றைய(24.03.2022) சிந்திக்க வினாப் பயிற்சியில் சிந்தித்த கேள்வியான ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதற்கும் தொடர்புள்ளதா? (Click here)

    6) தொடர்பு இருப்பின் என்ன தொடர்பு?

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                          வளா்க அறிவுச் செல்வம்!!


     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 328

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்- 328

    15-08-2020— சனி

    அமைதி

     

    உன்னைத் தவிர வேறு யாராலும் உனக்கு அமைதியைத் தர முடியாது”

    . . .   எமர்சன்

    பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் அறிஞர் எமர்சன்?  உண்மைதானே!
    2. (i) அமைதி என்பது என்ன? (ii) அது எப்படி இருக்கும் மனதிற்கு ? (iii) அதனை மனம் எப்படி, எப்போது,  எப்படி இருந்தால் அனுபவிக்க முடியும்?
    3. அமைதியை வேறு யாரும் தர முடியாது என்றால் என்ன பொருள்?
    4. (i)அமைதி என்பது மனிதகுலத்தின் பூர்வீகச் சொத்து. எவ்வாறு? (ii)அமைதி பூர்வீகச் சொத்தாக இருந்தும் ஏன் பூர்வீகச் சொத்தை அனுபவிக்க முடியவில்லை மனிதகுலத்தால்?
    5. (i) மனிதன் உண்மையில் அமைதியை அனுபவிக்க விரும்புகின்றானா? (ii) இல்லையெனில் ஏன் விரும்புவதில்லை? (iii) விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?
    6.   மனிதனுள்ளே  ஆனந்தவடிவமான உத்தமன் கோயில்கொண்டிருந்தும், மனிதனால் ஏன் உத்தமனாக இருந்து,  அமைதியையும், அதற்கு அடுத்த நிலையான பேரானந்தத்தையும் அனுபவிக்க முடியவில்லை?

            உடம்புக்குள் இறைவன் இருப்பதை அறிவீர்

      “உடம்பினை முன்னம் இழுக்குஎன்று இருந்தேன்

    உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்

            உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று

    உடம்பினை யான்இருந்து ஓம்புகின் றேனே.”

                                                                  . . . திருமூலர் –  திருமந்திரம் 725

         7.  அமைதிக்கு திருவேதாத்திரியம் அருளும் அருமருந்து என்ன? அது ஒன்றா  அல்லது இரண்டு கலந்த கூட்டு அருமருந்தா(Combined Divine Medicine)

    வாழ்க உலக அமைதி!   வருக உலக அமைதி விரைவில்!!

    வாழ்க திருவேதாத்திரியம்!   வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 327

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்- 327

    14-08-2020— வெள்ளி

     

     

    “பிறவிப்பயனை எய்துவதற்கும், ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றிலிருந்து விடுபடுவதற்கும் உரிய செயல் எதுவோ அதுவே புண்ணியம்”

    வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
    2. (i) பிறவிப்பயன்என்பதுஎன்ன?                                                                                      ii) மனிதகுலம் முழுவதும் இதனைஅறிந்துள்ளதா? அல்லது அறியவில்லையா?   என்ன காரணம்?                                                                          (iii) பயனைக் கருதும் இயல்புடையது மனிதமனம். மனிதப்பிறவியின் பயனை அறியவில்லையோ மனிதகுலம்?ஆகவேதான் பிறவிப்பயனை அடைவதற்கான பிரயத்தனம் செய்யாமல் உள்ளனவோ மனிதமனங்கள்?
    3. i) பிறவிப்பயனை அடைவதற்கும் மும்மலங்களுக்கும் என்ன தொடர்பு? ii) பிறவிப்பயனை அடைவதற்கு எவ்வாறு ஆணவம், கன்மம், மாயை ஆகியன எதிராக உள்ளன?
    4. (i) இந்த மூன்றிலிருந்து விடுபட மனிதனுக்குத் தயக்கம் ஏன்?                     (ii) அல்லது முயற்சியிலும் பயிற்சியிலும்  தடங்கல்கள் ஏன் வருகின்றன?
    5. பிறவிப்பயனை அடைவது, ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றிலிருந்து விடுபடுவது என்பது ஆன்மசாதகர்களுக்கு மட்டுமே பொருந்துவதா?  அல்லது இரு தரப்பினருக்குமே உலகியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும் பொருந்தக்கூடியதா?
    6. i) மாயை என்பது என்ன?                                                                                                                 ii) மாயை மெய்ப்பொருளை எவ்வாறு திரைபோன்று மறைத்துவிடுகின்றது  என்கின்றனர் ஆன்மீகத்தில் வெற்றி பெற்ற அருளாளர்கள்?                                      iii) மாயையால் மனிதகுலத்தின்  இரு தரப்பினருக்கும் (ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் அல்லது ஆன்மீக  வாழ்க்கையைத் தவிர்த்து உலகியல் வாழ்க்கை மட்டுமே வாழ்பவர்கள்) வரும் விளைவுகள் என்ன?
    7. இறைநம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் புண்ணியத்தில் நம்பிக்கையுள்ளவர்களே. அப்படியிருக்கும்போது புண்ணியம் தேட என்னென்ன செய்ய வேண்டும்?
    8. புண்ணியத்திற்கு அறிவியல் அடிப்படையில் என்ன பொருள்?
    9. இரண்டொழுக்கப் பண்பாடும் புண்ணியத்தைச் சேர்ந்ததுதானே?
    10. இரண்டொழுக்கப் பண்பாட்டால் ஆணவம் கன்மம் மாயை விலகிவிடுமா? இதில் உள்ள அறிவியல் என்ன?
    11. ஆனந்தமய கோசத்திற்கும் பிறவிப்பயனை எய்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?

    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 326(56)

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 326(56)

    08-08-2020— சனி

    ஆடம்பரம் அதிகரிக்க, அதிகரிக்க ஒழுக்கம் மறைய ஆரம்பிக்கின்றது!

    … ரூஸோ

    பயிற்சி—

    1)ஆடம்பரம் என்றால் என்ன?

    2)ஒழுக்கம் என்றால் என்ன?

    3)ஆடம்பரமும் ஒழுக்கமும் ஒன்றுக்கொன்று எதிரானதா?

    4)ஆடம்பரம் அதிகரிக்க, அதிகரிக்க ஒழுக்கம் எப்படி மறைகிறது?

    5)ஆடம்பரத்தின் எதிர்ச்சொல் என்ன? அதனைத் தெரிந்து கொண்டு, கடைபிடிக்கலாமன்றோ, ஒழுக்கம் அதிகரிப்பதற்கும், நிலைப்பதற்கும்!

    வாழ்க வளமுடன்

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 325(57)

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 325(57)

    07-08-2020— வெள்ளி

    நீ உலகிற்குச் செய்யும் முதல்தரமான சேவை உன்னை நீ அறிந்து விடுவது ஒன்றுதான்.

    …ஸ்ரீ சாந்தானந்தர்

    பயிற்சி—
    1) இந்த அமுத மொழி கூறுவதென்ன?
    2) தன்னை அறிவது உலகிற்குச் செய்யும் சேவை என்கிறாரே ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள். எவ்வாறு?
    3) அந்த சேவை முதல்தரம் என்கிறாரே. எப்படி?

    வாழ்க வளமுடன்

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 324

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்- 324

    01-08-2020  — சனி

    ஆனந்தம் நம் உள்ளத்தில் எந்த அளவுக்கு மறைமுகமாக உண்டாகின்றதோ அந்த அளவுக்கு நாம் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் உடையவர்களாக இருக்கிறோம்.”

    -சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
    2. ஆன்ம சாதனையில் ஆனந்தம் ஏன் மறைமுகமாக  ‘உண்டாகிறதோ’ எனக் கூறுகிறார்?
    3. நேரடியாக ஆனந்தம் தெரியாதா? மறைமுகமாகத் தான் இருக்குமா? மறைமுகமாக உண்டானால் எப்படி ஆன்மசாதகன் அறிந்துகொள்ள முடியும்?
    4. ஆன்ம சாதனையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு அளவுகோலா?
    5. ஆன்மசாதகனுக்கு மறைமுகமாக உண்டாகும் ஆனந்தம் தெரியவந்தால் விளக்கப்பதிவு வலிமை பெற்று வருகின்றது என்றுதானே பொருள்?
    6. பழக்கப்பதிவு வலிமை இழந்து வருகின்றது என்றுதானே பொருள்?
    7. உள்ளத்தில் ஆனந்தம் உண்டானால், அன்னமய கோசம் மற்றும் மனோமய கோசத்தில் மட்டுமே இயங்கிவந்த ஆன்ம சாதகனின் ஆன்மா, அவற்றையெல்லாம் கடந்து, பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம் மற்றும் ஆனந்தமய கோசத்திற்கு வந்துவிட்டது என்றுதானே பொருள்?
    8. பலன் ஏதும் இல்லாமல் எந்த ஒரு செயலையும் எவ்வாறு தொடரமுடியும்? அவ்வாறிருக்க ஆத்ம சாதகனுக்கு அந்த மறைமுக ஆனந்தம்தானே பயிற்சியை தொடர்ந்து செய்வதற்கு ஊக்கம் தரும்?
    9. இந்த அமுதமொழி ஆன்மசாதகர்களுக்கு ஊக்கம் அளிக்கிறதல்லவா? 

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க  திருவேதாத்திரியம்!!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 323

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்- 323

     

    31-07-2020  — வெள்ளி

    பழக்கமும் விளக்கமும்

    பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் ஜீவன் மனிதன்.

    — வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம்

    எண்ணிலடங்கா பிறவிகளில் பெற்ற பழக்கப்பதிவுகள் இப்பிறவியில் மட்டுமே பெற்ற விளக்கப்பதிவை வெற்றிகொள்கின்றது. பழக்கப்பதிவுகள் விளக்கப்பதிவைத் தன்பக்கம் சாய்த்து விடுகின்றது.

     

    பயிற்சி:

    1. பதிதல், பதிவு என்றால் என்ன?
    2. (i) பழக்கம் என்பது என்ன?   (ii) பழக்கப்பதிவு என்றால் என்ன? (iii) அது எப்படி நடைபெறுகின்றது?
    3. விளக்கம் என்பது என்ன?
    4. (i) விளக்கப்பதிவு என்றால் என்ன? (ii) அது எவ்வாறு நடைபெறுகின்றது?
    5. போராட்டம் என்கிறாரே மகரிஷி அவர்கள்! அப்படியென்றால் என்ன பொருள்?
    6. ஏன் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம் நடக்கின்றது?
    7. பழக்கப்பதிவை விளக்கப்பதிவு வெற்றிகொள்ள ஆன்மசாதகன் என்ன செய்ய வேண்டும்?
    8. விளக்கப்பதிவை வலிமையாக்க ஆன்மசாதகன் என்னென்ன செய்ய வேண்டும்?
    9. (i) ஊக்கமுடைமை என்றால் என்ன? (ii) ஊக்கமுடைமை விளக்கப்பதிவை வலிமையாக்குமா?
    10. முயற்சி…?
    11. (i) சத்சங்கம் என்றால் என்ன? (ii) சத்சங்கத்தை எத்தனை வகையாக கொள்ளலாம்? (iii) சத்சங்கத்தால் விளக்கப்பதிவின் வலிமையை அதிகரிக்க முடியுமா?
    12. விளக்கப்பதிவின் வலிமையை அதிகரித்துக் கொண்டு   பழக்கப்பதிவை  வெற்றிகொள்ள  ஐயன் திருவள்ளுவரும், அவ்வைத்தாயும் எவ்வாறு உறுதணையாக இருக்கின்றனர்? Avvaiyar & Thiruvalluvar - Prosper Spiritually
    13. (i) இயல்பூக்க நியதி  எவ்வாறு  பழக்கப்பதிவை விளக்கப் பதிவு வெற்றிக்கொள்ள  உதவியாக இருக்கும்? (ii) இயல்பூக்க நியதி தானாகவே உதவி செய்யுமா? (iii) அல்லது ஆன்மசாதகன் இயல்பூக்க நியதியை யுக்தியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா?  வாழ்க வளமுடன்!

    வாழ்க வேதாத்திரியம்!  வளர்க வேதாத்திரியம்!!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 322(268)

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்- 322(268)

    25-07-2020  — சனி

    எண்ணத்தின் வலிமை


    மனிதத் தன்மை, மேன்மை கைக்கு எட்டாத வானமல்ல, நாம் விரும்பினால் கைக்கு எட்டக்கூடியதே!

                                                                           . . .   கன்பூசியஸ்


     பயிற்சி—

    1)    என்ன கூறுகிறார்  சீன அறிஞர் கன்பூசியஸ்?

    2)    மனிதன் என்பவன் யார்?

    3)    மனிதனை வரையறை செய்ய முடியுமா(Can man be defined)?

    4)    i)தன்மை என்றால்  என்ன? 

           ii) மனிதத் தன்மை என்றால் என்ன?

        iii) மனிதனின் சிறப்புகள் பற்றி நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்               என்ன கூறுகிறார்? 

           iv) அக்கவியினை (ஞா.க.கவி எண் 290)நினைவு கூர்வோம்? 

            v) அவற்றில் எத்தனை   நம்மிடம்     உள்ளன என தற்சோதனை செய்து                          பார்க்கலாமே!

    5)  i) மேன்மை என்றால் என்ன?

         ii) மனித மேன்மை என்றால் என்ன?

    6)  அறிஞர் கன்பூசியஸ்  ஒப்புமையில் பயன்படுத்துகின்ற உவமேயத்தின் சிறப்பு என்ன? ஏன் வானம் என்கின்ற உவமேயத்தைப் பயன்படுத்துகிறார் அறிஞர் கன்பூசியஸ்?

    7) கைக்கு எட்டினால் …………….. ????!!!!

    8) அறிஞர் கன்பூசியஸ் மொழிகின்ற அமுத மொழியின்  அறிவியல் என்ன?

    9) அறிஞர் கன்பூசியஸ் கண்டுபிடித்த உண்மைக்கும் மனவளக்கலையின் சங்கல்பத்திற்கும் தொடர்பு/உறவு இருக்கின்றதா? எவ்வாறு  தொடர்புள்ளது?

    10)    பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கன்பூசியஸ் எண்ணியது இப்போது நிறைவேறி வருகின்றதா?  இப்போது என்றால் …………  ?????!!!!!

    11)    எண்ணத்தின் வலிமைதான் என்னே!  நாமும் அது போன்ற சமுதாயநல எண்ணங்களை பிரயோகிப்போமே!

    12)    அன்று  கன்பூசியஸ் கூறிய  ‘விருப்பம் கைகூடக்கூடியது’  என்பதனை இந்த நூற்றாண்டில் நிறைவேற்றிக் கொண்டிருப்பது எது?

     

    வாழ்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!

    வளர்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!!

    வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading