admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 322(268)

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்- 322(268)

    25-07-2020  — சனி

    எண்ணத்தின் வலிமை


    மனிதத் தன்மை, மேன்மை கைக்கு எட்டாத வானமல்ல, நாம் விரும்பினால் கைக்கு எட்டக்கூடியதே!

                                                                           . . .   கன்பூசியஸ்


     பயிற்சி—

    1)    என்ன கூறுகிறார்  சீன அறிஞர் கன்பூசியஸ்?

    2)    மனிதன் என்பவன் யார்?

    3)    மனிதனை வரையறை செய்ய முடியுமா(Can man be defined)?

    4)    i)தன்மை என்றால்  என்ன? 

           ii) மனிதத் தன்மை என்றால் என்ன?

        iii) மனிதனின் சிறப்புகள் பற்றி நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்               என்ன கூறுகிறார்? 

           iv) அக்கவியினை (ஞா.க.கவி எண் 290)நினைவு கூர்வோம்? 

            v) அவற்றில் எத்தனை   நம்மிடம்     உள்ளன என தற்சோதனை செய்து                          பார்க்கலாமே!

    5)  i) மேன்மை என்றால் என்ன?

         ii) மனித மேன்மை என்றால் என்ன?

    6)  அறிஞர் கன்பூசியஸ்  ஒப்புமையில் பயன்படுத்துகின்ற உவமேயத்தின் சிறப்பு என்ன? ஏன் வானம் என்கின்ற உவமேயத்தைப் பயன்படுத்துகிறார் அறிஞர் கன்பூசியஸ்?

    7) கைக்கு எட்டினால் …………….. ????!!!!

    8) அறிஞர் கன்பூசியஸ் மொழிகின்ற அமுத மொழியின்  அறிவியல் என்ன?

    9) அறிஞர் கன்பூசியஸ் கண்டுபிடித்த உண்மைக்கும் மனவளக்கலையின் சங்கல்பத்திற்கும் தொடர்பு/உறவு இருக்கின்றதா? எவ்வாறு  தொடர்புள்ளது?

    10)    பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கன்பூசியஸ் எண்ணியது இப்போது நிறைவேறி வருகின்றதா?  இப்போது என்றால் …………  ?????!!!!!

    11)    எண்ணத்தின் வலிமைதான் என்னே!  நாமும் அது போன்ற சமுதாயநல எண்ணங்களை பிரயோகிப்போமே!

    12)    அன்று  கன்பூசியஸ் கூறிய  ‘விருப்பம் கைகூடக்கூடியது’  என்பதனை இந்த நூற்றாண்டில் நிறைவேற்றிக் கொண்டிருப்பது எது?

     

    வாழ்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!

    வளர்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!!

    வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 321(248)

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்- 321(248)

    24-07-2020  — வெள்ளி

                                        சொல்வதுபோல் வாழ்வது


    நம்மை அறிமுகப்படுத்துபவை நம் சொற்கள் அல்ல.நம் வாழ்க்கையே நம்மை அறிமுகப்படுத்துகின்றது.”

                                                                                                          . . . மகாத்மா காந்தி


    பயிற்சி:

    1) என்ன கூறுகின்றார் மகாத்மா காந்தி?

    2) மனிதகுலத்திற்கு தேவையானதைத்தானே அறிஞர்கள் பொன்மொழிகளாக வெளிப்படுத்துகின்றனர். ஆகவே இங்கே ‘அறிமுகப்படுத்துவது பற்றி கூறப்படுவதால் அறிமுகப்படுத்துவது மனிதனுக்குத் தேவையாகின்றதல்லவா?

    3) அப்படியானால் ‘அறிமுகப்படுத்துவது’ என்றால் என்ன?

    4) இப்பொன்மொழியின் உட்கருத்து என்ன?

    5) உட்கருத்தை நேரிடையாகவே சொல்லியிருக்கலாம் அல்லவா?! ஏன் இவ்வாறு அறிஞர்கள் மறைமுகமாகக் கூறுகின்றனர்?

    6) இப்பொன்மொழிக்கும் புகழ், உயர்புகழ் ஆகியவற்றிற்கும் தொடர்பு உள்ளதா?

    வாழ்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!

    வளர்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!!

    வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-316(277)

    வாழ்க மனித அறிவு!                     வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்-316(277)

     ரிஷிகேஷில் சிறப்பு பயிற்சியின்போது ஒரு நாள் கங்கைநதிக்கரையில் எடுத்த படம்

                                                                                                               23.07.2020- வியாழன்

    உடைமை

    வாழ்க வளமுடன்!

    பயிற்சி வினாக்கள்:

    1. உடைமை என்றால் என்ன?
    2. செல்வம் என்றால் என்ன?  செல்வமும் உடைமையும் ஒன்றா அல்லது வேறா?
    3. எத்தனை வகை உடைமைகள் அவசியம் என்கிறார் வேதாத்திரி மகரிஷியின் மானசீகக் குருவான அறிஞர் திருவள்ளுவர்?
    4. ஒவ்வொரு உடைமையும் எவ்வாறுஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமாகின்றது?
    5. திருவள்ளுவர் கூறும் எல்லா உடைமைகளும் தனிமனிதனிடம்  தற்போது உள்ளனவா?
    6. என்னென்ன உடைமைகள் ஒவ்வொரு தனிமனிதனிடம்   தற்போது உள்ளன? 
    7. தனிமனிதடம் இல்லாத உடைமைகள் என்னென்ன? 
    8. ஏன் அந்த உடைமைகள் இல்லை?
    9. இல்லாத உடைமைகளைப்  பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
    10. இல்லாத உடைமைகளைப்பற்றியும் சுயசோதனை செய்ய வேண்டியது அவசியமா?
    11. உடைமைகளிலே முதன்மையானது என்று எந்த உடைமையைக்  குறிப்பிட முடியும்? ஏன்?   
    12. திருவள்ளுவர் கூறும் உடைமைகளின் பயன்களையும், தீமைகளையும் பட்டியலிட வேண்டியது அவசியமா?  பட்டியலிட்டு சுயசோதனை செய்து பார்க்கலாமே!    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்!                             வளர்க அறிவுச் செல்வம்!!

    Loading