admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 86

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

    27-06-2015—சனி

    நல்ல குழந்தைகளை உருவாக்கப் பெற்றோர்கள் நல்லவர்களாக வாழ வேண்டும்.
    பெற்றோர்களின் வாழ்க்கையானது குழந்தைகளின் பாடப்புத்தகமாக அமைகிறது.

    ……. ஆர்னால்ட் பென்னட்.

    பெற்றோர்கள் குழந்தைகளின் நிரந்தரமான ஆசிரியர்கள். அவர்களுக்கு விடுமுறையே கிடையாது.

    ……எம் கோர்க்கி.

    பயிற்சி— 1) இவ்விரண்டு அறிஞர்கள் ஆதங்கப்படும் பெற்றோர்களுக்கு உதவக்கூடியக் கலை எது?
    2) எப்போது அக்கலையை பயில ஆரம்பிக்க வேண்டும்? எப்போது முடிக்க வேண்டும்?
    3) குழந்தைகளின் முதல் ஆசிரியர் யார்?

    4)அறிஞர் எம். கோர்க்கி அவர்கள்  “பெற்றோர்களை நிரந்தரமான ஆசிரியர்கள் என்றும், அவர்களுக்கு விடுமுறையே கிடையாது என்றும்” கூறுவதன் மூலம் மனித குலத்திற்கு என்ன தெரிவிக்கிறார்?

     

     

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளா்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 85

    வாழ்க மனித அறிவு                                 வளர்க மனித அறிவு

    26-06-2015—வெள்ளி

    “வாழ்க்கையின் இலட்சியம் இன்பம் என்று எண்ணி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் ஞானம் தான் நம்வாழ்வின் உண்மையான இலட்சியம்.”              

                                                                                                             …… சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி— 1) இது எவ்வாறு சரி?
    2) சிந்தித்து கட்டுரை எழுதி உங்களுக்குள்ளாகாகவும் மகிழுங்கள்.  பகிர்ந்து பிறரையும் மகிழச்செய்து மகிழுங்களேன். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-84

    வாழ்க மனித அறிவு                                  வளர்க மனித அறிவு

    25-06-2015 – வியாழன்

     

    “இன்பமும் துன்பமும் வேறு வேறல்ல. அவை ஒரே உணர்ச்சியின் இரு நிலைகளே” என்கிறார் மகரிஷி அவர்கள். இது எப்படி?

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளர்க அறிவுச் செல்வம்

    Loading