admin

Author Archives

  • FFC – 166-வினா விடை – 15

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

    வினா விடை – 15

    FFC – 166

    24-02-2016—புதன்

    சிந்திக்க வினாக்கள்-143
    (18-01-2016 – திங்கள்)

    மகரிஷி அவர்கள் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று எதனைக் குறிப்பிடுகிறார்? ஏன் அதனை அவ்வாறு கூறுகிறார்?

    விடை:

    FFC-166-dheaivappulavar

     

    ‘சிந்திக்க வினாக்கள் பயிற்சியில்’ வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூலாகக் கூறுவது எது எனக் கேட்கப்பட்டிருந்தது. மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்த நூல் எதுவாக இருக்கும் என அறிந்து கொள்வது மகரிஷி அவர்களின் சிந்தனாப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கடமை ஆகும். கடமை என்று கூறுவது நமது நன்மைக்காகத்தான்.

    எதற்காக இயற்கை/இறை நமக்கு இந்த நூற்றாண்டிலே கிடைத்தற்கரிய   குருவான வேதாத்திரி மகரிஷியிடம் புனித உறவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது?

    •   பல்லாயிரம் பிறவிகள் எடுத்து,
    •  ஆனால் பிறவியின் நோக்கமும் ஆறாம் அறிவின் ஒரே பயனுமான, அறிவாகிய தெய்வத்தை அறிந்து கொள்ளாமல்,
    • அனைத்துப் பிறவிகளையும் பிறப்பது–இறப்பது என்பதனையேதான் சாதனை வாழ்க்கையாகக் கொண்டு, சாதாரணப் பிறவிகளாகவே வீணாக்கிவிட்ட நிலையில்,
    •   இப்பிறவியில், நம்முடைய மாதாவும், பிதாவும் செய்த புண்ணியத்தால், நம்முடைய குடும்பத்திலேயே மற்றவர்களுக்கு (ஒரு வேளை உடன்பிறப்புகளுக்கு குரு-சீடா் உறவு கிடைக்காத) கிடைக்காத நிலையில்,
    •  நம்முடைய தற்போதையப்பிறவி பரிபக்குவ நிலையினை அடைந்துள்ளமையால்தான்,
    •   நெடுங்காலமாக பல்லாயிரம் பிறவிகளாகத் தொடர்புகொண்டுள்ள கருமையம் ஏற்ற பழிச்சுமைப் பதிவுகளை இந்த ஒரு பிறவிகாலத்திலேயே மாற்றி அமைத்துப், பயனடைய அகத்தாய்வும், அகத்தவமும் இறையுணர்பாதையிலே விழிப்புடன் வாழ்ந்து,
    •   நம்முடனே வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களுக்கும் இறைத்தூதுவர்களாக இறைத் தொண்டு-அறிவுத்தொண்டு செய்து வாழ்வாங்கு வாழ்வதற்கேயாம்.

                வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.

     நம்முடைய சத்சங்கத்தில் வேதாத்தரி மகரிஷி அவர்கள் உள்பட எல்லா அருளாளர்களும் எப்போதும் சூக்குமமாக எழுந்தருளி நமக்கெல்லாம் உற்ற வழிகாட்டிட வேண்டும்.

     ஆகவே இன்றைய சிந்தனை, மனிதனின் சொத்தாகிய முழுப்பண்பேற்றத்தையும் விரைவில் இப்பிறவியிலேயே அடைவதற்காக இயல்பூக்க நியதியினை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நமது குருபிரான் வேதாத்திரி மகரிஷியின் அரிய பெருமைகளை அறிந்து கொள்வதற்காக அமையட்டும்.

     குரு-சீடா் உறவு  நிரந்தரமில்லா இவ்வுலகில், இழந்த நிரந்தர மற்றும் மூல உறவை மீட்டெடுத்து சீடருக்குத் தரும் தெய்வீக இணைப்பை இயற்கை ஏற்படுத்தித் தரும் புனித உறவு ஆகும் குரு-சீடா் உறவு.

    மகரிஷி அவர்கள் எல்லா அருளாளர்களையும் வணங்கி ஆசி பெற்றுக் கொண்டவர். இதனை அவர், தன்னுடைய சீடர்கள் எவ்வாறு குருவணக்கம் செய்ய வேண்டும் என இயற்றிய பாடலிலுள்ள கடைசி இரண்டு வரிகளான,

    ‘அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்,
    அதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.’

    என்பதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது.

    அப்படியிருக்கும்போது எந்த அருளாரின் நூல் அவரைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று எதனைக் குறிப்பிடுவார்? அதற்கான விடையை குருவணக்கப்பாடலில் உள்ள முதல் ஆறுவரிகளிருந்து யூகிக்க முடிகின்றது. அப்பாடலின் முதல் ஆறு வரிகளில் நான்கு குருமார்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அந்த அருளாளர்கள் தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்கா் ஆகியவர்களே ஆவார்கள்.

    இவர்களில் எந்த அருளாளர் அருளிய நூல் மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்ததாக இருக்க முடியும்? மகரிஷி அவர்கள் சிறுவனாக இருந்தபோது பக்தி சிரத்தையோடு கலந்து கொண்ட பஜனையில் பாடப்பட்ட பாடல்களில் ஒன்றான ‘அங்கிங்கெனாதபடி’ எனத் தொடங்கும் பாடலால் தனது உள்ளம் லயித்துவிடும் என்று தனது வாழ்க்கை விளக்கம் எனும் நூலில் குறிப்பிடுகிறார். அதன் மூலம் உணர்ந்த முடிவே, கடவுள் அரூபம் என்கின்ற தெளிவு என்கிறார். இந்தப்பாடலே அவரது உள்ளுணர்வைத் தூண்டி தத்துவத்திலே தெளிவை அளித்து. இறைநிலையை உணர உதவியதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். எனவே அப்பாடல் அருளிய அருளாளர் தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார்.

    அடுத்ததாக அகத்துதான் மெய்பொருள் என்று எடுத்துக்காட்டி அறிவதனை அறிவித்தார் என்று கூறி திருவள்ளுவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார்,
    மூன்றாவதாக திருவள்ளுவர் அறிவித்த அறிவை அறிவதற்கு வழிகள் சொன்ன அறிஞா் திருமூலர் அவர்களையும் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார்.
    நான்காவதாக, தன்னுள் வள்ளாரின் ஆன்மா பத்துவருடங்கள் தங்கி வழிகாட்டியதால், அவரை குருவாக வணங்குகிறார் மகரிஷி அவர்கள்.

    இந்த நான்கு அருளாளர்கள் இயற்றியுள்ள நூல்களில் ஒன்றைத்தானே மகரிஷி அவர்களைக் கவர்ந்த ஒரு பெருநூலாக மகரிஷி அவர்கள் கூறியிருக்க முடியும்?

    அறிவைக் கவர்ந்த என்று சொல்வதானால் அது எந்த நூலாக இருக்க முடியும்?

    தாயுமானவர் ‘அறிவே தெய்வம்’ என்பது அவரைக் கவர்ந்திருக்கின்றது.

    அடுத்ததாக அகமாக உள்ளதுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி அதுவே அறிவு என்று திருவள்ளுவர் தனக்கு உணர்த்தியதாகக் மகரிஷி அவர்கள் கூறுகிறார்.

    அறிஞா் திருமூலர் அவ்வறிவை அறிவதற்கு வழிகள் சொல்லியதாகக் கூறுகிறார்.

    நான்காவதாக  அருளார்கள் எது தெய்வம் என்று கூறிய அறிவில் ஆழ்ந்து ஆனந்தக்கவியாத்தார் வள்ளார் என்பதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள் .

    இந்த நான்கு அருளார்களின் ஒருவரான திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்தான் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று குறிப்பிடுகிறார். காரணம் என்ன?

    திருக்குறளை அறிவுக் கடல் என்கிறார்.

     நாம் மகரிஷி அவர்களை அருட்தந்தை என்று அழைப்பதுபோல். மகிரிஷி அவர்கள் திருவள்ளுவரை தெய்வத்தந்தை என்று அழைக்கிறார்.
    எளிதில் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத ஐம்பது பாக்களுக்கு மட்டும் உரிய பொருளை திருக்குறள் உட்பொருள் விளக்கம் என்னும் நூலில் விளக்கியுள்ளார் மகரிஷி அவர்கள்.
    மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்திருக்கக் கூடிய ஒரு சில பாக்களை நாம் யூகத்தால் அறிந்து கொண்டதை நினைவு கூர்வோம் இத்தருணத்தில்.

    அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி, அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர் என குருவணக்கப்பாடலில் மொழிந்துள்ளதால் குறள் எண் 702 ஐ நினைவு கூர்வோம்.

    “ஐயப்படாஅது அகத்து உணர்வானைத்
    தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.”

    இக்குறளுக்கு சாதாரணமாகக் கூறப்படும் பொருள் யாதெனில், சந்தேகமின்றி மனதில் உள்ளதை உணரவல்லவனை, அவன் மனிதனே ஆனாலும் தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும் என்பது.

    ஆனால் நம்குருதேவர் கூறும் உட்பொருள் விளக்கத்தினை அறிந்து மகிழ்வோம். எவர் ஒருவா் ஆன்மாவை உணர்கின்றாரோ அவர் ஆன்மாவில் இயங்கும் அறிவை தெய்வமாகவே உணர்ந்தவராவார். ஆகவே ஆன்மாவை அதன் இயல்பு, இயக்கம், விளைவு இவைகளை சிறிதுகூட ஐயமின்றி உணர்ந்து கொள்ள வல்லவர் இறைவனாகவே மதிக்கப்படத்தக்கவர் என்று திருவள்ளுவர் கூறுவதாக நம்முடைய மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் அறிவினுடைய மதிப்பையும் அதனை அறிய வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார் அக்குறளின் வாயிலாக என்கிறார் மகரிஷி அவர்கள்.

    மேலும் மூன்று குறட்பாக்களை அறிந்து விட்டு இன்றைய சிந்தனையை முடித்துக் கொள்வோம்.

    “பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு.” . குறள் எண் 351

    “எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.“ குறள் எண் 355

    “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள் எண் 423

    மேற்குறிப்பிட்டுள்ள குறட்பாக்கள் பொருள்நிலை, மற்றும் நிகழ்ச்சி நிலை இரண்டையும் இறைஉணர் ஆன்மீகப்பயிற்சியில்  வெற்றி பெற அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியத் தெளிவை, இன்று நமக்கெல்லாம் எளிமையாக எடுத்துக்கூறுவதற்கு மகரிஷி அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கலாம்.

    மேற்குறிப்பிட்டுள்ள குறட்பாக்கள் பொருள்நிலை, மற்றும் நிகழ்ச்சி நிலை இரண்டையும் இன்று நமக்கெல்லாம் தெளிவாக கூறுவதற்கு உதவியாக இருந்திருக்கலாம்.

    மேலும் இது பற்றி விரிவாக அறிய இந்த இணையதள ஆசிரியர் இயற்றிய “நான் யார்?” எனும் நூலில், இறைவன் ஏன் மெய்ப்பொருள் என அழைக்கப்படுகிறான்? என்கின்ற பத்தாவது அத்தியாயத்தில், மெய்ப்பொருள் பற்றி வள்ளுவமும், வேதாத்திரியமும் என்ன கூறுகின்றன என்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளதனை வாசித்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

    இப்போது தெய்வப்புலவர் திருவள்ளுவரை வணங்குவோம். திருவள்ளுவரை உலகமே போற்றுவதாலும், திருக்குறள் உலகப் பொதுமறை நூல் எனப்போற்றப்படுவதாலும், திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதிலிருந்தும் திருவள்ளுவரின் அரிய பெருமைகள் தெரிய வந்தாலும், திருவள்ளுவரின் அறிவாற்றலை நினைத்துப்போற்றுவதாலும், இயல்பூக்க நியதியின் பயனை அடைய முடியும் என்பதற்காக, நம் குருதேவர் வழியாக திருவள்ளுவர் பற்றி அறிவது சிறப்புடையதாகும்.

     

    திருக்குறளை அறிவுக்கடல் என்கிறார் நம் மகரிஷி அவர்கள். அதனை நாம் ஆராய்ச்சி செய்து அதனை ஏற்றுக்கொள்ளலாமே.

     

    இறைஉணர் பயிற்சியாளர்கள் பயிற்சியில் எவ்வாறு வெற்றி பெறுவது?

     

    முதல் படி:

    ஆராய்ச்சியாகும்.

    1)   முதலில் இறை என்பது எது,

    2)   இறை எவ்வாறு இப்பிரபஞ்சமாகியது,

    3)   இறை எவ்வாறு நாமாக ஆகியுள்ளது அல்லது இறைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன,

    4)   கண்களால் காணமுடியாத ஒன்று எவ்வாறு இறையாக இருக்கமுடியும்,

    5)   அப்படியானால் இறையைக் கண்டதாக அருளாளர்கள் கூறுவது என்ன

     

    போன்ற வினாக்களின் மூலமாக ஆராய்ச்சியினைத் தொடங்க வேண்டும்.

     

    இரண்டாவது படி: தெளிவு பெறுதலாகும்.

     

    இவ்வளவு ஆராய்ச்சி செய்ததன் முடிவு என்னவாக இருக்க வேண்டும்? தெளிவு பெறவேண்டும் என்பதேயாகும். என்ன தெளிவு அது?

    1)   இறை என்பது எது,

    2) அதற்கும் நமக்கும் உள்ள உறவு என்ன,

     3) பிறந்து இறக்கப்போகின்ற இவ்வாழ்க்கையின் பொருள் என்ன,

       4) புலன்இன்பங்களில் அளவு மீறி, முறையையும் மாற்றி, மயக்கமுற்று புலன்களுக்கு அடிமையாகிய அறிவை மீட்டு விடுதலை செய்து (Liberation) தன்னையே உணர்வது ஒன்றேதான் என்கின்ற தெளிவுதான் முதற்படியான ஆராய்ச்சியின் முடிவு அது.

     

       5) இதனைத் தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை என்பதனை உறுதியாக கருத்தில் கொண்டு கடமை ஆற்றுவதே மனித வாழ்க்கையின் பொருள், அர்த்தம், நோக்கம், பயன், பேரின்பம். மரணமிலா பெறுவாழ்வு வாழ்தல் என்கின்ற தெளிவு.

     

    மூன்றாவது படி: பயிற்சியாகும்.

     

    ஆராய்ச்சி செய்து, தெளிவு பெற்ற பிறகு செய்யவேண்டியது பயிற்சியாகும். ‘கற்க கசடறக் கற்பவை; கற்ற பின் நிற்க அதற்குத் தக’ என்பதற்கேற்ப, முறையான பயிற்சியாகிய மனவளக்கலையை மேற்கொள்ள வேண்டும்.

     

    நான்காவது படி: வெற்றி பெறுவதாகும்.

     

       வெற்றி பெறுவது. இது கர்மயோக வாழ்வு வாழ்ந்து மரணமிலா பெறுவாழ்வு வாழ்வதாகும்.

       மனித வாழ்வில் முழுப்பயனளிக்கக்கூடிய, எக்காலத்திற்கும், எவ்விடத்திற்கும், பொருத்தமானவையாக இருக்கும் நூல்கள் எது எனக்கூறுகிறார் மகரிஷி அவர்கள். அவை, ஆய்வு, தெளிவு, பயிற்சி, வெற்றி என்கின்ற நான்கு படிகளின் வழியாக திறமை அடைந்த அறிஞர்கள் எழுதும் நூல்களே என்கிறார் மகரிஷி அவர்கள். அத்தகைய நூல்களில் மிகச் சிலவே உள்ளதாகவும் கூறுகிறார். அவற்றில் ஓர் சிறந்த உயர்வைப் பெற்று மிளிர்வதுதான் திருக்குறள் என்கிறார்.

     

       அத்தகைய நூலாசிரியரின் திறமை எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

     

    1)   மெய்ப்பொருள் விளக்க நிலை பெற்று முழுமை பெற்றிருக்க வேண்டும் அந்த நூலாசிரியர் என்கிறார்.

    2)   மேலும் கூறுகிறார் மகரிஷி அவர்கள்:– விரிந்த அறிவோடு வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

    3)   சிறப்புற்று வாழ்வதற்கான நெறிகளை வகுத்திருக்கப்பட வேண்டும் அந்த நூலில் என்கிறார் மகரிஷி அவர்கள்.

     

    அத்தகைய சிறப்புக்களுடைய ஒரு நூல் திருக்குறள் என்கிறார் மகரிஷி அவர்கள். இனிமேல் திருவள்ளுவர் அல்லது திருக்குறள் என்கின்ற பெயரைச் உச்சரிக்கும்போதே இத்தனை சிறப்புக்களும் காதுகளில் வந்து ஒலிக்க வேண்டும். மகரிஷி அவர்கள் தான் அடைந்த பயனின் நன்றி உணர்வாக தன்னுடைய மானசீகக்குருவாகிய திருவள்ளுரை போற்றுகிறார்.

     

    நம் நம்குருவிடம் பெற்று வருகின்ற கிடைத்தற்கரிய பயனை அடைந்து வருவதால், நாம் போற்ற வேண்டியது, மேற்கண்ட சிறப்புகள் அத்தனையும் பெற்ற ஒரு நூலாசிரியரும், நூலும் முறையே வேதாத்திரி மகரிஷி அவர்களும், அவர் அருளியுள்ள நூலான திருவேதாத்திரியமும் ஆகும் என நினைந்து நினைந்து பணிவுகலந்த பெருமையினால் மனம் குளிர்ந்து, குளிர்ந்து, குருவின் காணிக்கையாக அறுகுணங்களிலிருந்து விடுதலை பெற்று, நாம் பிறவிப்பயனை இப்பிறவியிலேயே பெற்று விடுவதேயாகும். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

    ஆகவே ஆன்மீகப் பயிற்சியில் விரைவில் பண்பேற்றம் பெறுவதற்கு மகரிஷி அவர்கள் கூறியபடி இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழியான ‘எப்பொருளை, எச்செயலை, எவ்வுயிரை, எக்குணத்தை அடிக்கடி நினைந்து வந்தால் நினைப்பவரின் ஆற்றல் அப்பொருளினுடைய தன்மையினை அறிவிலும் உடலிலும் மாற்றம் பெறக்காணலாம்’ என்கின்ற சூட்சுமத்தை பயன்படுத்திய வகையில் இன்றைய அறிவிற்கு விருந்து, தெய்வப்புலவர் திருவள்ளுவர் மற்றும் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மாக்கள், செயல்கள், குணங்களைப்பற்றியும் ஆழ்ந்து சிந்திப்பதற்கான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது குருவருளும், திருவருளும் என்பதனை நினைக்கும்போது உள்ளம் பூரிக்கின்றது.

    வாழ்க திரு பொருந்திய திருவேதாத்திரியம், வளர்க திரு பொருந்திய திருவேதாத்திரியம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்..

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-153

    வாழ்க மனித அறிவு                                 வளர்க மனித அறிவு

    22-02-2016 – திங்கள்

     

    சமுதாய நலம் எப்போதும் நிறைவாக இருக்க ஒவ்வொருவரும் கைமாறாகத் தொண்டு செய்ய  வேண்டும் என்பதனை திருவள்ளுவர் குறிப்பாக சொல்லும் குறளாக மகரிஷி அவர்கள் எதனைக்  கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • FFC – 165-வினா விடை – 14

     வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

                                                                                               VFY-வினா விடை – 14

    FFC – 165

                                           21-02-2016—ஞாயிறு

    சென்ற அறிவிற்கு விருந்தின் தொடர்ச்சி…

     சிந்திக்க வினாக்கள்-131

    (07-12-2015 – திங்கள்)

     குரு சீடர் உறவில் அலை இயக்கத்தின் பங்கு என்ன?

     விடை:–  தொடர்ச்சி…

         சென்ற விருந்தில் பொதுவாக உறவுகள் பற்றி அறிந்தோம்.  இப்போது உறவுகளில் நிரந்தரமான உறவு பற்றியும், அந்த உறவினை மீட்டெடுக்க குருவின் உறவு ஒன்றே எவ்வாறு உதவுகின்றது என்று அறிய இருக்கிறோம்.  குருவருள் இன்றேல் திருவருள் இல்லை என்கின்ற உண்மையினை நினைவில் கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன்.  ஆகவே குருவிடம் வைத்துக்கொள்ள வேண்டிய  உறவு பற்றி  ஆராய்வோம்.

                        குருவிடம்,

                        எத்தகைய  உறவு,

                        ஏன்  அவசியமாகின்றது? 

                        குரு சீடரின் உறவு என்ன பயனை அளிக்கின்றது? 

                       எதற்காக சீடன் குருவைத் தேடுகிறான்? 

       ஒருபுறம் இவ்வாறெல்லாம் வினவிக்கொண்டிருந்தாலும் உண்மையில்  இயற்கையே/இறையே பரிபக்குவ நிலையிலுள்ள சீடனுக்கு ஒரு குருவிடம் உறவை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

       அத்தகைய குரு சீடர் உறவால் ஏற்படும் பயன்கள் என்ன?  பயன்கள் என்று பன்மையில் சொல்வதைவிட ஒருமையில் சொல்வதுதான் சரியாக இருக்கும். அந்த ஒன்றுதான்  பண்பேற்றமாகிய ஒரே பயன். எப்படி கல்வி நிலையங்களில் பாடம் கற்றுத்தரும் ஆசிரியரின் கல்வித்தகுதி நிலைக்கு மாணவனும்(ஆசிரியர்  நிலைக்கு), ஒரு நாளில்  உயர முடிகிறதோ அதுபோல், குரு–சீடர் உறவால், குருவிற்கு நிகராக   சீடன் பண்பேற்றம் பெற வேண்டும்.

    • ‘நானெனினும் நீ எனினும் பேரறிவு நிலையில் ஒன்று’,
    •  ‘வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்’,
    •  ‘உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது’
    • ‘நீங்களும் இதுபோல் ஆகலாம்’

    என்கின்ற மகரிஷியின் ஆசீர்வாதங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதனை நினைவிற்கொள்ள வேண்டும். எதுபோல் நாம் ஆக முடியும் என்பதனை மகரிஷி அவர்களின் வாய்மொழியாகவே அறிவோம்.

    neengalum_idhupolaagalaam 

    மேலும் குரு–சீடர் உறவு ஏற்படுவது பற்றி மூன்று வரிசைக் கிரமத்தில் மகரிஷி அவர்கள் உலக மக்களுக்காக கூறுவதனைக் கவனிக்க வேண்டும்.

    1)   குருவின் தொடர்பு  (1955)  இதனை தனது 44 வது வயதில், (இறையுணர்வு பெற்ற பிறகு 9 வருடத்திற்குப் பிறகு இயற்றியுள்ளார்)  உய்வதற்கு வழியைத் தேடிக்கொண்டிருந்தபோது குருவின் தொடர்பு கிடைத்தது என்கிறார்.  அதனால் அடைந்த மாற்றங்களைக் கூறுகிறார். கடைசி வரியில் சிந்தனையில் ஆழ்ந்து பல விளக்கங்கள் கண்டதாகக் கூறுகிறார் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

     2)   குருவின் சேர்க்கை (15-08-1984)  இதனை தனது 73 வயதில் இயற்றியுள்ளார்.  குருவின் சேர்க்கையால் என்ன நிகழும் என்று கூறுகிறார்.   தப்பாமல் குருவினுடைய உயர்வு  மதிக்கின்ற சீடனைத் தரத்தில் உயர்த்திப் பிறவிப் பயனை நல்கும் என்கிறார்.  ‘தப்பாமல்’ என்பதால்  பிறவிப்பயனை அடைவதில் உறுதியினைக் கூறுகிறார். அதற்கு அவர் கூறும் நிபந்தனை என்ன?  குருவுடன் சேர்ந்தாலே பிறவிப்பயன் கிட்டிவிடாது.  இதுவரை  எத்தனையோ அருளாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்திலும் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அருளாளர்கள் தம் அருட்செய்தியினை கவிகளாகவும், உரைநடைகளாகவும் எழுதிவிட்டுச் சென்று விட்டனர். ஆனால் அந்த அருளாளர்கள் கூறும் அறநெறியில் வாழ்கின்றதா இந்த சமுதாயம் என்றால் ஐயமே. எனவே குருவுடன் சேர்ந்துவிட்டால் மட்டுமே பிறவிப்பயன் கிட்டிவிடாது என்பதனை கருத்தில் கொண்டுதான், குருவினுடன் சேர்ந்தமைக்கான காரணமாகிய பண்பேற்றத்தை பெறுவதற்கு எளிய முறையாக, இயல்பூக்க நியதியைப் பயன்படுத்தச் சொல்கிறார். குருவை மதித்து ஒழுகினால்தான் தப்பாது குரு உயர்வு சீடனைத் தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும் என்றும் அறிவுறுத்துகிறார்,

        இயல்பூக்க நியதியினை பயன்படுத்துதல் என்பது என்ன?  இயற்கையின் ஆதிநிலை/இறைவெளி முன்று திறங்களில் ஒன்று இயல்பூக்கம் என்பதனை அறிவோம்.  அப்படியானால் என்ன?  இயல்பாகவும் இருப்பது, ஊக்கத்துடனும்  செயல்படுவது அத்திறன். அத்திறன் ஊக்கத்துடன் இருந்து பேரறிவின் தன்மாற்ற நிலையில் தகுந்த மாற்றங்களைக் கொடுத்து ஏற்றத்தை கொடுத்திருக்கின்றது. இன்று நாம் காணும் எல்லாத் தோற்றங்களும் எதில் இருந்து தோன்றியுள்ளன?  வேகமும்(Force) விவேகமும்(Consciousness) உள்ள இயற்கையின் ஆதிநிலையாகிய வெட்ட வெளியிலிருந்துதான் தோன்றியுள்ளன. எல்லாத் தோற்றங்களும் விண்களின் கூட்டால் அமைந்தாலும்,  அவை ஒரே மாதிரியாக இருப்பதில்லை.  காரணம் அவற்றில் உற்பத்தியாகும் காந்தம், அதனுடைய தன்மாற்றங்களான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் ஆகிய ஆறினால் அந்த வடிவம்  வெளிப்படுத்தும்  குணங்களும், அததற்கு உரிய இயக்கச் சிறப்புகளுமேயாகும். இதனையே இயல்பூக்கம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

         ஆதிநிலையிலிருந்த இயல்பூக்கம்தான்

         தன்னுடைய மாற்றத்தில் விண்ணிலிருந்து ஆரம்பித்து ஆதிமனிதன் தோன்றி  மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கும் வரை உதவியாக இருந்து வந்துள்ளது.

         இனி தன்மாற்ற சுழற்சி பூர்த்தியாக, அதாவது

         அறிவில் முழுமை அடைந்து, ஆதியில் இருந்த விவேகத்தைப் பெற,  

         மனிதன்தான், பேரறிவிற்கே,  தன்மாற்றம்  அடைய உதவிய   அந்த இயல்பூக்க நியதியை இப்போது தன்னுடைய செயல்களால்  ஆறாம் அறிவு பண்பேற்றம் பெறுவதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

         ‘இன்னும் பரிணாமம் பூர்த்தியாக வில்லை’ என்கிறார் ஓர் அறிஞர்.  அந்த அறிஞரின் ஆதங்கத்தை போக்குவதற்கு குரு சீடா் உறவின் மூலம், விலங்கினப்பண்பிலிருந்து தெய்வீகப்பண்பேற்றம் ஏற்பட இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  எனவேதான் அந்த  இயல்பூக்க நியதியினை மனிதன், குரு சீடர் உறவிலும் பயன்படுத்திக் கொள்ளச் சொல்கிறார் மகரிஷி அவர்கள்.

    Amazing_Guru


        எவர் ஒருவர் குருவை மதித்து ஒழுகினாலும் தப்பாது குரு உயர்வு மதிப்போரை தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை அளிக்கும் என்கின்றார் மகரிஷி அவர்கள். 


    ஒருவரிடம் இருந்த உயர்வுதான் மற்றொருவரிடம்  உயர்வை அளிக்க முடிகின்றது. இங்கேதான் இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்தச் சொல்கிறார்.  இயல்பூக்க நியதியினை மட்டுமல்லாது இயல்பூக்க தேற்றத்தின்(நியதியின்) கிளைத்தேற்றத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  எந்த ஒரு பொருளையும், எந்த ஒரு செயலையும், எந்த ஒரு குணத்தையும் அடிக்கடி நினைத்து வந்தால், நினைப்பவரின் ஆற்றல் அறிவிலும், உடலிலும் மாற்றம் காணும் என்கிறார். இது இயல்பூக்க நியதியின் அடிப்படையில் நடக்கின்றது என்கிறார். 

      மேலும் ‘அடிக்கடி நினைத்து வந்தால்’ என்பதற்கான வரையறை என்ன?  அங்கேதான் இயல்பூக்க தேற்றத்தின்(நியதியின்) கிளைத்தேற்றத்தை(corollary) ஆன்ம சாதகன் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.  அதாவது ‘தான் உயராது மற்றவரின் உயர்வை ரசிக்கவும், மதிக்கவும் முடியாது’ எனவும்  மற்றொரு இடத்தில் கூறுகிறார்  மகரிஷி அவர்கள். இதனை நாம் இயல்பூக்க நியதியின் கிறைத்தேற்றமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே ‘அடிக்கடி நினைத்து வருவதற்கு’ வேறு யாரும் சான்று தருவதற்கில்லை.  தன்னுடைய ஆன்மாவின் அடித்தளமான இறையே தருவதுதான்.  ஆகவே குருவின் ஆன்மாவையும், செயல்களையும், குணங்களையும் உணர்ந்து நெஞ்சாரப் போற்றி, போற்றி ஏற்றி வரவேண்டும்.  குருவின் அரிய பெருமைகளை தானும் நினைத்துப்பார்த்து நெஞ்சம் மகிழ வேண்டும். பிறர்க்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். ஒரு வேளை அவர்களுக்கு(பிறர்க்கும்) குருவின் அரிய பெருமைகள் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கலாம்.  உலகியல் வாழ்க்கையில் ஒருவரின் அரிய பெருமைகளை எடுத்துச் சொல்வது போன்றல்லாமல், குருவை மட்டுமே போற்றிக் கொண்டிருக்காமல், அவரது அரிய கண்டுபிடிப்புகளையும்(தத்துவம் என வழக்கத்தில் கூறப்படுவது) போதனைகளையும் எடுத்து நெஞ்சாரக் கூறவேண்டும்.

        இவ்வழியில்தான் குருவருளால் திருவருள் கிடைக்கும் என்பது இயல்பூக்க நியதியின் அடிப்படையில் அமைந்துள்ளது.  ‘குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ என்று ஆன்மீகத்தில் குருவின் மகிமைக்கு, முக்கியத்தும் கூறப்படுகின்றது.  இயல்பூக்க நியதியின் படிதான் குருவருளால் திருவருள் கிடைக்கின்றது. மாற்றாக, குரு, தன்கையில் வைத்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு திருவருளைத் தருவது இல்லை. நம் குருதேவரின் மானசீக குருவான அறிஞர் திருமூலர் கூறுவதுபோல் குருவிடமிருந்து நான்கு வழிகளில் தெளிவைப் பெறவேண்டும்.

     thelivu_guruvin

        இறை அரூபம் என்று தெளிந்தாகிவிட்டது. அப்போது இறைஉரு சிந்தித்தல்(literally) சாத்தியமில்லையாயினும், துரியாதீத தவத்தில் நம் அறிவை பேரறிவோடு இணைக்கிறோம்.  அதே நேரத்தில் 24 மணிநேரமும் இது சாத்தியமில்லை.  இறையைக் காட்டிக் கொடுத்த குருஉரு சிந்திப்பது என்பது திருமூலர் கூறுவதுபோல் சாத்தியம் தானே.

     3)   குருவின் உதவி(15-08-1984)  இதனை அதே நாளில் இயற்றியுள்ளார்.

          குரு சீடர் உறவில் அலைஇயக்கத்தின் பங்கு என்ன என்று பார்ப்போம்.  அலை என்பது என்ன? பேரியக்க மண்டலம் தோற்றம், இயக்கம், நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் காரணம் அலை இயக்கம்.  ஒன்றிலிருந்து அலை புறப்பட்டுச் செல்கின்றது என்றால், அது அப்பொருளின் தன்மையினை (modulated) எடுத்துச் செல்லும்.  அந்த அலை சென்று அடையும் பொருள் மீது அத்தன்மையினை கொடுக்கும்.  அலை மோதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், ஒன்றோடு ஒன்று கூடி ஒன்று பட்டு இயங்குதல் என்கின்ற ஐந்து வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

       அறிவை அறிந்த தூய்மை பெற்ற குருவிடமிருந்து வரும் காந்த அலைகள் மேற்கூறிய ஐந்து வகைகளில் சீடர் மீது தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.  இதனால்தான்  குருவின் திருமேனி காண்பதிலும், அவரது திருஉருவை சிந்தித்தலும் தெளிவை அளிக்க வல்லது என்கிறார் அறிஞர் திருமூலர்.  ஏனெனில் அறிவை அறிந்த குரு தெளிவைப் பெற்றவர்.  எனவே அவரிடமிருந்து வரும் காந்த அலை தெளிவினை ஏற்படுத்துகின்றது.

     அதேபோல் குருவினுடைய திருவார்த்தை கேட்பதும், அவருடைய திருநாமம் கேட்பதும் குருவினுடைய பண்புகளை சீடரின் கருமையத்தில் மெல்ல மெல்ல பதியச்செய்கின்றது. இவ்வாறு அலைஇயக்கத்தின் பண்புகள் தன் பதிதல் பணியைச் செய்தாலும், சீடரும் எந்த அளவிற்கு ஆர்வம் கொண்டு பரிபக்குவ நிலையில்(receptivity)உள்ளார் என்பதனைப் பொருத்து  ‘மெல்ல மெல்ல பதியச்செய்வது’ என்பது வெகு விரைவிலேயேயும் நடத்தி வைக்கும்.

         குரு அருளியுள்ள அறநூல்களிலிருந்து வரும் காந்த அலைகள்  சீடரின் மீது மோதி பிரதிபலிக்கின்றது, சிதறுகின்றது, ஊடுருவுகின்றது.  குருவினிடமிருந்து வரும் அந்தகாந்த அலை சிடரின் காந்த அலையோடு கூடி ஒன்றுபட்டு இயங்கும் போது சீடரின் பண்பேற்றமும் சிறிது சிறிதாக வளர்ந்து வரும்.(ஒன்று கூடி ஒன்று பட்டு இயங்குதல்).  இதனைத்தான் ‘எவரொருவர் குருவை மதித்து ஒழுகிவந்தால், தப்பாது குருவின் உயர்வு சீடரின் தரத்தை உயர்த்தி பிறவிப் பயனைத் தரும்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                வளர்க அறிவுச் செல்வம்

     

     

     

     

    Loading