admin

Author Archives

  • FFC – 164-வினா விடை – 13

    வினா விடை – 13

    FFC – 164

    17-02-2016—புதன்


    சிந்திக்க வினாக்கள்-130

    (03-12-2015 – வியாழன்)

     அலை இயக்கப் பண்புகளாக மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?

    விடை:–

        மோதல்(clash), பிரதிபலித்தல் (Reflection), சிதறுதல் (Refraction) ஊடுருவுதல்(penetration), ஒன்றோடு ஒன்று கூடி ஒன்று பட்டு இயங்குதல் (Inter-action) என்கின்ற ஐந்து வகைகளான  அலை இயக்கப் பண்புகள் அலைகளுக்கு உள்ளதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.


    சிந்திக்க வினாக்கள்-131

    (07-12-2015 – திங்கள்)

    குரு சீடர் உறவில் அலை இயக்கத்தின் பங்கு என்ன?

    விடை:–

        உறவு என்பது என்ன?  எந்த ஒரு மனிதனும் சமுதாயத்தில் தனித்து வாழ முடியாது.  சமுதாயத்தில் பிறருடைய உதவியால்தான் வாழ முடியும்.  அங்கேதான் உறவு வருகின்றது. முதல் உறவு தாய்,  இரண்டாவது உறவு தந்தை.  மூன்றாவது உறவுகள் பாட்டி தாத்தா. நான்காவது உறவுகள் சகோதர-சகோதரிகள்., பிறகு சுற்றம்.  இவ்வாறு உறவுகள் இன்றி யாரும் பிறப்பதில்லை.  அடுத்தது நண்பர்கள்.  நண்பர்களும் உறவுகள் வரிசையில்தான் வருகின்றனர். சமுதாயமும் உறவைத் தருகின்றது. வாழ்க்கைவள உயர்வுப் படிகளான ஐந்தில்  நட்பு  நலத்தையும் ஒன்றாக வைத்துள்ளார் மகரிஷி அவர்கள். எனவே எல்லோரிடமும் நட்புநலம் பேணுதல் வேண்டும்.

        ‘மாதா, பிதா, குரு தெய்வம்’  என்று தமிழ் மொழி கூறியிருந்தாலும், தாய் மகன் உறவு, தந்தை மகன் உறவு போல் பெரும்பாலோர்க்கு குரு சீடர் உறவு ஏற்படுவதில்லை.  தாய், தந்தை உறவு பிறப்பால் இயல்பாகவே ஏற்படுகின்றது.   பாட்டி, தாத்தா உறவு இரத்தத் தொடர்பால் இயல்பாகவே  ஏற்படுகின்றது. குருவின் உறவு இரத்தத் தொடர்பால் ஏற்படுவதில்லை. வருங்காலத்தில் குருவின் தொடர்பு இரத்தத் தொடர்பால் ஏற்படும். அதாவது தாய், தந்தையே தன் மகன், மகள் ஆகியவர்களுக்கு குருவாக அமைவர் மனவளக்கலை குடும்பத்தில்.   மாதா பிதா உறவிற்கு பிறகு குருவினுடைய உறவை தேடிப்பிடித்து ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே எளிதில் குரு-உறவை கண்டுபிடிக்க முடிவதில்லை. குரு எங்கோ ஒரு இடத்தில் இருப்பார். சீடன் எங்கோ ஒரு இடத்தில் இருப்பார். அவ்வாறு இருக்கும்போது இவ்வுலகில் எங்கெங்கு போய் குருவைத்  தேடுவது?

         பெரும்பாலும் சீடனுக்கு குருவை தேடிக் கண்டுபிடிக்கும் சிரமத்தை  இயற்கை/இறை கொடுப்பதில்லை.  சீடனுக்கு எந்த பிறவியில் பரிபக்குவ நிலை வருகின்றதோ, அந்தப்பிறவியிலும்,  எந்த  வயதில் பரிபக்குவ நேரம் வருகின்றதோ அப்போது குருசீடர் உறவை ஏற்படுத்தி வைக்கின்றது இயற்கை/இறை.   தகுதி வந்த பிறகுதான் குருவினுடைய தரிசனம் கிட்டுகின்றது. இவ்வாறாக மிகுந்த சிரமத்திற்குப் பிறகுதான், அதாவது தீயவினைப்பதிவுகள் ஒரளவிற்கு தீர்ந்த பிறகு, மீதமுள்ள தீய வினைப்பதிவுகளை போக்கிக் கொண்டு இப்பிறவியிலேயே இயற்கையின் ஆதிநிலையை/இறையை உணர்வதற்காகவே தெய்வத்தின் உறவை ஏற்படுத்தி வைக்க குருவின் உறவு கிடைக்கின்றது.

        எதற்காக குருவினுடைய உறவினை ஏற்படுத்திக் கொள்ளச் சொல்கின்றனர் ஆன்றோர்கள்? பல கோடி ஆண்டுகளாக (இறைவெளியிலிருந்து பின்னப்பட்ட நாளிலிருந்து  அறிவு), பலலட்சம் பிறவிகளாக (ஆதிமனிதனிலிருந்து) மறந்துவிட்ட தன்மூல உறவாகிய தெய்வத்தின் உறவை மீட்டுத் தருவதற்காக  குருவினுடைய உறவை ஏற்படுத்திக் கொள்ளச் சொல்கின்றனர். மாதா, பிதா, குரு தெய்வம் என்பதில் மாதாவையும், பிதாவையும் அறிந்து கொள்கின்ற மனிதனுக்கு மூன்றாமவராகிய குருவை அறிந்து கொள்வது, அநேகமாக/பெரும்பாலும், பெரும்பாலோருக்கு முடிவதில்லை. அந்நிலை இருக்கும்போது, வேதாத்திரி மகரிஷியின் தரிசனம் கிடைத்து அந்த மகாபுருஷரை குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் பெரும் பாக்கியம் செய்தவர்களே என்பதனை இத்தருணத்தில் நாம் அனைவரும் பதிவு செய்ய விரும்புகிறோம். கருமையப்பதிவுகளுக்கேற்ப, இயற்கையின் கருணையால்/இறைஅருளால் அப்படி கிடைத்தால், குரு கிடைத்ததும் குருவிற்கும் சீடருக்கும் இடையே கெட்டியான உறவு/பிணைப்பு (thick Bonding) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஏன்? இதனை அறிஞர் திருமூலரின் அனுபவத்திலிருந்து அறியலாம். திருமூலர் அனுபவித்ததை அறிந்து கொண்டு அந்த யுக்தியினை இறையுணர்வு பெறுவதற்குப் பயன்படுத்தி வெற்றி பெறுவோம்.

    thelivu_guruvin

    மனிதனுக்கு ஏன் உறவுகள் அவசியமாகின்றது?  தாயின் உறவு இயல்பாகவே ஏற்பட்டுவிடுகின்றது.  பெற்றவளாயிற்றே அவள்.   தாய், குழந்தைக்கு பால் கொடுத்து, அன்னம் ஊட்டி சீராட்டி வளர்க்கிறாள்.  தந்தையின் உறவும் இயல்பாகவே அமைந்துவிடுகின்றது.  தந்தையும் குழந்தையின் வளர்ப்பில் பங்கு கொள்கிறார். பொருள் ஈட்டி அந்த பொருளைக் கொண்டு மனைவியையும் குழந்தையையும் வளர்க்கின்றார்.  இதனையும் தாண்டி மற்ற உறவுகளும் அவசியமாகின்றது.  மனிதன் தனக்கு தேவையானவற்றைத் தானே செய்து கொள்ள முடியாது. சமுதாயத்திலிருந்துதான் பெற வேண்டியுள்ளது.

       விலங்குகளிடம் உறவு என்பது கிடையாது.  விலங்கினங்களில்,  குட்டிகளுக்கு(offsprings) சில நாட்கள் தாயின்  அரவணைப்பு அவசியமாகின்றது.  உதாரணத்திற்கு பறவையை எடுத்துக் கொண்டால் இறக்கை முளைத்து குஞ்சு பறக்கும் வரைதான் அதற்கு தாயின் அரவணைப்பாகிய உறவு அவசியமாகின்றது,  பிறகு தாயின் அரவணைப்பு தேவையில்லை, எனவே அங்கே உறவு ஏற்படுவதில்லை. பெட்டைக்கோழி சில நாட்கள் வரை தன் குஞ்சுகளை தன்னுடன் வைத்துக் கொள்கின்றது.  குஞ்சுகளுக்கு  உணவை தனது அலகால் எடுத்துக் கொடுத்து அது சாப்பிட இது வேடிக்கைப் பார்த்து மகிழ்கின்றது. இவ்வாறாக குஞ்சுகளுக்கு  பலம் கிடைக்கும் வரை தாய்க்கோழி பராமரிக்கின்றது. பிறகு தானே உணவு தேட ஆரம்பித்ததும், கோழி அவற்றை விரட்டி  விடுகின்றது. சில நேரங்களில் தாய்க்கோழி உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தன்னுடைய  வளர்ந்த பிள்ளைகள்(குஞ்சுகள்) உணவை உண்ண வந்தால் முன்பு உணவை எடுத்து தனது பிள்ளைகளுக்கு  காட்டிய அதே பெட்டைக் கோழி இப்போது கொத்தி விரட்டியடிக்கும்.  ஆகவே விலங்கினங்களுக்கு தன்னுடைய offsprings வளா்கின்ற வரைதான் தாய் உறவு தேவையிருக்கின்றது,

        ஆனால் மனிதனுக்கு மட்டும், சுற்றம், நட்பு மற்றும் சமுதாயம் என்கின்ற மூன்று நிலைகளிலும், உறவு, பிறந்ததிலிருந்து கடைசிவரை எப்போதும் அவசியமாகின்றது. இறந்த பிறகும் அவன் உடல் அடக்கம் செய்யும் வரை உறவு தேவைப்படுகின்றது. அந்த உடலைதூக்கிச் செல்வதற்கு நான்கு பேராகிலும் தேவை.  இதனை யாரும் மறுப்பதிற்கில்லைஇந்த உறவு என்ன செய்கின்றது. துக்கத்தில் பங்கு கொள்கின்றது. ஆறுதல் கூறுகின்றது. உடலால், பொருளால், சில சமயங்களில் அறிவாலும் உதவி செய்கின்றது.  மொத்தத்தில் உறவினால் மனிதன் பயன் பெறுகிறான். ஆனால் இந்த உறவுகளெல்லாம் நிரந்தரமானது அல்ல. நிரந்தரமான உறவோடு உறவு வைத்துக்கொள்ளவே இப்பிறவி கிடைத்துள்ளது.  தொடரும். 

     அடுத்த அறிவிற்கு விருந்தில் (21-02-2016 ஞாயிறு) உறவுகளில் நிரந்தரமான உறவு பற்றியும், அந்த உறவினை மீட்டெடுக்க வழி என்ன என்றும் அறிய இருக்கிறோம்.  வாழ்க வளமுடன். 

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-151

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

    15-02-2016 – திங்கள்.

    ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதன் ஆழ்ந்த, விரிந்த பொருள் என்ன? எவ்வாறு அது பண்பாட்டை உயர்த்தக் கூடியது?

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • FFC – 163-வினா விடை – 12-2/2

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    வினா விடை – 12-2/2 

    FFC – 163

    14-02-2016—ஞாயிறு

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 132

     (05-12-2015—சனி)

    சென்ற அறிவிற்கு விருந்தின் தொடர்ச்சி:

    “நான் கற்றுக் கொடுக்க எண்ணுவது அறிவை அறியும் அறிவையே.”

                                                                                          …. அர்னால்டு
    பயிற்சி—
    1) வேதாத்திரியம் எதனைக் கற்றுக் கொடுக்கின்றது?
    2) ஏன் அறிஞர் அர்னால்டு அறிவை அறியும் அறிவைக் கற்றுக் கொடுக்க எண்ணுகிறார்?
    3) அறிவின் அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறி “அன்பர்களே வாரீர்”
    என அழைக்கிறார்?
    4) ஒரு அறிஞர் கூறியதை அதே பொருளில் மற்ற அறிஞர்கள் யாராவது கூறியிருந்தால் அதனுடன் இணைத்துப் பார்த்து சிந்திக்க வேண்டாமா? இதன் பயன் என்ன?

    விடை:– தொடர்ச்சி–

    சென்ற அறிவிற்கு விருந்தில் அமுதமொழியின் பயிற்சிக்கான முதல் மூன்று கேள்விகளான
    1) வேதாத்திரியம் எதனைக் கற்றுக் கொடுக்கின்றது?
    2) ஏன் அறிஞர் அர்னால்டு அறிவை அறியும் அறிவைக் கற்றுக் கொடுக்க எண்ணுகிறார்?
    3) அறிவின் அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறி “அன்பர்களே வாரீர்” என அழைக்கிறார் என்பதற்கு விடைகளை அறிந்து கொண்டோம்.
    இன்றைய விருந்தில் நான்காவது கேள்வியான ஒரு அறிஞர் கூறியதை அதே பொருளில் மற்ற அறிஞர்கள் யாராவது கூறியிருந்தால் அதனுடன் இணைத்துப் பார்த்து சிந்திக்க வேண்டாமா? இதன் பயன் என்ன? என்பதற்கான விடையினை அறிவோம்.
    3) ஒரு அறிஞர் கூறியதை அதே பொருளில் மற்ற அறிஞர்கள் யாராவது கூறியிருந்தால் அதனுடன் இணைத்துப் பார்த்து சிந்திக்க வேண்டாமா என்கின்ற கேள்விக்கு ‘ஆம்’ என்பதுதான் பதில். இதன் பயன் என்ன என்று கேட்கப்பட்டுள்ளது.

    வாழ்வியல் உண்மையைப் பற்றி ஒரு அறிஞர் கூறுவதனை ஒரு சிலர் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக் கொண்டு அதன் படி வாழ்வை நடத்த ஆரம்பிப்பர்.
    ஆனால் வேறு சிலருக்கு அறிஞர் கூறுவது சரி என்று சில நேரங்களில் மனம் நினைத்தாலும், பிறகு கடைபிடிக்க முயலும்போது மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும்.
    ஆகவே ஒரு உண்மையை ஒர் அறிஞர் கூறியிருந்தாலும் வேறு பலர் அறிஞர்கள் அவ்வுண்மையையே வேறு கோணத்தில் கூறியிருந்தாலும், இணைத்துப்பார்த்து சிந்திக்க வேண்டும். அப்போது அவ்வுண்மைக்கு நிரூபணம் கிடைக்கும். அவ்வுண்மை நம்மால் உறுதிபடுத்தப்படும். அதன் பிறகு அது தன்னுடைய கண்டுபிடிப்பாகும். பிறகு கடைபிடிப்பது எளிதாகவும் இருக்கும்.* எந்த ஒன்றும் நம்முடையதாக இருக்கும்போது அதனை பயன்படுத்துகின்ற உரிமை தானாக வந்துவிடும். ஆனால் அதுவே பிறருடையதாக இருக்கும் பட்சத்தில் அதனை பயன்படுத்தும் உரிமை இல்லாமல் போய்விடும். அதுபோல்) அறிஞர்கள் கண்டுபிடிப்புகளான வாழ்வியல் உண்மைகளை நிரூபணத்திற்கு உட்படுத்தப்பட்டு, அது நம்முடைய கண்டுபிடிப்பாகிவிடும்போது அதனை வாழ்வில் பயன்படுத்துவது என்பது இயல்பாகிவிடும். இந்த இயல்பை இயல்பாக்கிவிடுவதற்காகத்தான் மகரிஷி அவர்கள் ‘நான் சொல்வதனை அப்படியே எடுத்துக் கொள்ளாதே. சந்தேகம் கொள்— Don’t accept what I say. Doubt what I say’ தகவல், உறுதிபடுத்துதல். மாற்றமடைதல்—Information, Confirmation. Transformation என்கின்ற தாரகமந்திரத்தை தந்துள்ளார்.
    அறிஞர்கள் கூறிய அமுதமொழிகள் என்பது ஏதோ பொழுதுபோக்கிற்காக கற்பனைக்கதைகள் படிப்பது போன்றதல்ல. அல்லது பத்திரிகைகளில் வரும் துணுக்குகள் போன்றதோ அல்ல.

    வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் வாசிப்பதற்காக மட்டுமின்றி வாழ்க்கையில் கடைபிடிப்பதற்காகவே அமிழ்தமொழிகள் உதிர்க்கப்பட்டுள்ளன/உதிர்க்கப்படுகின்றன.

    சமுதாயம் அவற்றை கடைபிடித்து இன்ப வாழ்வு வாழும்போதுதான், சமுதாயத்தின் மீது ஆதங்கமும் அக்கறையும் கொண்ட அவ்வறிஞர்களின் ஆன்மா குளிரும், மகிழுறும்..
    .

    இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். முகம் தெரியாத நம்மீது அவர்களுக்குத்தான் ஏன் இந்த அக்கரை; அதனால் அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் ஏதேனும் ஆதாயம்தான் உள்ளதா? அல்லவே!

    நாம் அவ்வாழ்வியல் உண்மைகளை கடைபிடித்து அறிஞர்கள் கூறியுள்ளதுபோல் இன்ப வாழ்வு வாழ்வதேற்கே அறிஞர்களின் வழியாக இயற்கேயே/இறையே ஏற்படுத்திய புனித ஏற்பாடுதான் அது. அறிஞர்கள் சாதாரண மனிதர்களைப்போல் அல்லாமல்

    புலன் வாழ்க்கை மட்டுமே வாழ்வின் நோக்கம் எனக் கருதாமல்,
    மிகுந்த சிரமப்பட்டு, புலன்களை வென்று அதாவது புலன்களை துன்பவலைகளாக(suffering traps/traps for suffering) மாற்றிவிடாமல் உணர்கருவிகளாக மட்டுமே(sensing tools) பயன்படுத்தி,
    அதற்காக சாதாரண மனிதர்களைப் போலல்லாமல் தங்கள் வாழ்நாளையே தியாகம் செய்திருக்கிறார்கள்.
    தியாகம் என்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. இறையின் அனுக்கிரகம் இல்லாமல் முடியாது.
    அவ்வாறாக இறையே அறிஞர்களின் வாயிலாக அருளிய அமிழ்தத்தை பருகாமல் இருப்பது அறிவுக்கண்ணிருந்தும், அறிவொளி இருந்தும், அறிவொளியில் வாழாமல்,
    திக்குத் தெரியாத இருண்ட காட்டில் தவித்துக் கொண்டிருப்பது போலல்லவா இருக்கின்றது சாதாரண மனிதர்களின் வாழ்வு!
    இருட்டில் குருட்டுவாழ்க்கை வாழ்வதுபோல்தானே உள்ளது?! அப்படி இருக்கலாமா? இறைநம்பிக்கை உள்ளவர்கள் அனைவருமே. இறை அருள் பெற விரும்புகின்றவர்கள்தானே?! அப்படியிருக்கும்போது, இறை அளித்திருக்கும் அறிஞர்கள் வாயிலாக உதிர்த்த மொழிகளின் அமிழ்தத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டாமா?
    உரிய செயலை செய்துதான் வேண்டிய பயனைப் பெற முடியும் என்பது இயற்கைநீதி என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டுமல்லவா?
    அமுத மொழிகளை மனிதன் பின்பற்றுவது என்பது இறைஉணர்வு பெற துணைநிற்கும், அறநெறியின் இரண்டாவது அங்கமான ‘கடமை’ என்பதனையும் மறந்து விடக்கூடாது.
    ‘ஆண்டவனுக்கு தரும் மரியாதைக்கு அடுத்தது கடமைதான்’ என்று கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் கூறுவதனை இப்போது நினைவிற்கொள்வோம்.
    நல்லவற்றை பின்பற்றாமல் இறை அருள் கிடைத்திடுமா? அறிஞர்கள் உதிர்த்துள்ள அமுதமொழிகளை எல்லாம் ஆழ்ந்து–விரிந்து சிந்தித்து நாம் மதிக்க வேண்டாமா?!

    * அறிஞர்களின் அமுதமொழிகளை தன்னுடைய கண்டுபிடிப்பாக்கிக்கொள்ள வேண்டும் என்று சற்றுமுன் கூறியிருக்கிறோம்.

    ‘தன்னுடைய கண்டுபிடிப்பாக்கிக் கொள்ளவேண்டும்’ என்றால் என்ன பொருள்? ஒருவர் அமுதமொழிகளுக்கு நிரூபணத்தைக் கண்டுபிடிக்கும் போது அது அவருடையதாகிவிடும்(அவர் கண்டுபிடித்ததாகிவிடும்). அதாவது நிரூபணம் கிடைக்கும் போது அந்த உண்மையினை மீண்டும் நாமும் கண்டுபிடித்தது போலாகும். (அப்படி கண்டுபிடித்து கடைபிடிப்பதில் முந்திக்கொள்பவர்களே சரித்திரத்திலும் இடம் பிடிக்கின்றனர்) அப்படியென்றால் அவ்வுண்மையினை வாழ்க்கையில் கடைபிடிப்பது சிரமில்லாமல் இருக்கும். எவ்வாறெனில் நமக்கு முன்னர் அவ்வுண்மையைக் கண்டறிந்த அறிஞர்கள் தங்களது ஆழ்ந்து விரிந்த சிந்தனையால்தான், அவ்வுண்மையினை தங்களின் வாழ்க்கையில் கடைபிடித்துக் கொண்டதை/ கடைபிடித்து வருவதனை நமக்குத் தெரிவித்திருப்பதால் நாமும் அதனை வாழ்க்கையில் கடைபிடிப்பதென்பது மிக மிகச் சுலபமாக இருக்கும்.

    மேலும் மனிதனாக வாழும் கலையில்,
    மனிதனாகப் பிறந்தவர்களில் ‘ஒருவருக்கு முடிந்தது, மற்றொருவருக்கு முடியாமல் போவது’ என்பது எவ்வாறு ஏற்கமுடியும்? ‘உத்தம நண்பர்காள் உங்கட்க்கும் உரியது’ உரியது என்று நவயுக வியாசர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியிருப்பதை எப்போதும் நினைவிற் கொண்டு செயல்படுவோம்.

    அறிஞர்கள் கண்டுபிடித்துக் கூறும் வாழ்வியல் உண்மைகளை வாழ்க்கையில் கடைபிடித்து பயன் அடைவதோடு மட்டுமல்லாமல், சிந்திக்கும் திறனும் நாளுக்கு நாள் அதிகரிக்கும். பிறகு நமது பங்கிற்கு நாமே மனித வாழ்விலிருந்து உண்மைகளைக் கண்டுபிடித்து நம்முடன் வாழ்கின்ற சக மனிதர்களுக்கும் சொல்லலாமன்றோ? அறிஞர்களாகத் திகழ்வோம். வாழ்க வளமுடன்.

    நம் குருநாதரும், உலகநலத் தொண்டரும், உலகத்தையே உய்விக்கக் கூடிய “வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்” என்கின்ற மந்திரத்தை அருளியவருமான வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனிதகுலத்தின் மீது கொண்ட அக்கறையையும், ஆதங்கத்தையும், 55 வருடங்களுக்கு முன்னர்
    அவர் அருளிய பாடலின் வாயிலாக அறிவோமாக!

    சாதனையே அறநெறி(21-12-1961)
    அறநெறியைப் போதிக்க புதிய நூல்கள்
    அவசியமே இல்லைஇனி; மேலும் மேலும்
    அறநூல்கள் எத்தனையோ இந்நாள் மட்டும்
    அறிஞர்பலர் அளித்துள்ளார்; அவையே போதும்!
    அறம்பிறழா நெறிநின்று, மக்கள் வாழ
    அவசியமாம் பொருட்களோடு கல்வி கிட்ட,
    அறவோரே திட்டமிட்டு அமுல் செய்வீரே!
    அதன் மூலம் அறம்வளரும்; உலகம் உய்யும்,
    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    “நான் கற்றுக் கொடுக்க எண்ணுவது அறிவை அறியும் அறிவையே.” என்கின்ற அர்னால்டு அறிஞரின் அமுதமொழி நம்மை எல்லாம் ஆழ்ந்து விரிந்து சிந்திக்க வைத்து, அறிவை அறியும் கலையான மனவளக்கலை மேலும் மேலும் விரைவில் உலக மக்கள் அனைவருக்கும் எளிமையாக பரவ நம்முடைய எண்ண அலைகளை பரப்பச்செய்துள்ளது. எண்ணமே இயற்கையின் சிகரமாக உள்ளதால் இயற்கை தான் விரும்புகின்ற மனிதகுலத் தேவைக்கான மாற்றங்களைக் கொண்டுவர மனித எண்ணங்களின் வாயிலாகவே நடத்தி வைக்கின்றது என்கின்ற உண்மையையும் அறிந்து கொள்கிறோம். எந்த ஒரு நெடும் பயணத்திற்கும் வாகனம் தேவையிருப்பதுபோல், பேரறிவின் நெடும்–தொடர்–தன்மாற்ற பயணத்திற்கு தேவையான வாகனம் மனித எண்ணமே என்பதால்( In other words when fraction demands Totality supplies– Vethathri Maharishi) ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்கின்ற உண்மையினை இப்போது பதிவு செய்ய விரும்புகிறோம்.

    ஆகவே எண்ணமே தன்மாற்றத்தின்(பரிணாமத்தின்) வாகனம் என்றிருக்கும் போது ஒட்டு மொத்த மனிதகுலமும் தன்னுடைய எண்ண ஆற்றலை பயன்படுத்த வேண்டும் என நாம் அழுத்தமாக எண்ணுகிறோம்.

    வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

    வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு.

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளா்க அறிவுச் செல்வம்

    Loading