admin

Author Archives

  • 64-இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

    இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

    FFC- 64 (3/?)

    11-03-2015 — புதன்

           கடந்த அறிவிற்கு விருந்தில், வேதாத்திரி மகரிஷி அவர்கள், தான் இயற்றிய குருவணக்கப்பாடலில், தாயுமான சுவாமிகளை, நினைவுகூர்ந்தது பற்றி ஆராய்ந்தோம். முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஓட்டத்தில்(NEVER ENDING SPIRITUAL RELAY RACE) ஒவ்வொரு ஞானியுமே, ‘தொடர் ஓட்ட விளையாட்டுப் பந்தயத்தில்(SPORTS)’ பங்கு பெரும் விளையாட்டு வீரர்களைப் போன்றவர்கள் என்று பார்த்தோம். அவர்களை ஏன் ஞானவீரர்கள் என்று அழைக்கலாம் என்று இப்போது பார்ப்போம்.

    விளையாட்டில் தன்னுடைய திறமைகளைக் காட்டுபவர்களை விளையாட்டு வீரர் என்று அழைக்கிறோம். எல்லோருக்கும் விளையாட்டில் ஆர்வம் இருப்பதில்லை. ஆர்வம் இருந்தாலும் எல்லோராலும் விளையாட்டில் திறமை காட்டமுடிவதில்லை. விளையாட்டில் திறமை காட்டுவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு ஆர்வமும் பயிற்சியும் அவசியம். அது போல் ஞானம் அடைவது என்பது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் எளிதானதுதான். ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல், ஞானம் என்கின்ற வைர நாணயத்திற்கும் இரு பக்கங்கள் உள்ளன.
    சாதாரண நாணயத்தின் இருபக்கத்தை தலையென்றும், பூ என்றும் (HEAD, TAIL) சொல்வது போல, ஞானம் என்கின்ற வைர நாணயத்தின் ஒரு பக்கம் ‘ஞானம் அடையமுடியும், அது எளிது’, என்பதும், மற்றொரு பக்கம் ‘ஞானம் அடைய முடியாது, அது எளிதானதல்ல’ என்பதுமாகும்.

    சாதாரண நாணயத்தின் ஒரு பக்கமான ‘பூ-TAIL’ பக்கத்தை மட்டும் பார்த்துக் கொண்டு, ‘தலை-HEAD’ பக்கம் தெரியவில்லையே என்றால் எப்படி? அந்த நாணயத்தை ஒரு நொடியில் திருப்பிப்பார்த்தால் ‘தலை-HEAD’ தெரியும். REALISATION IS SIMPLE. BUT AT THE SAME TIME IT IS DIFFICULT. ஞானிகள் இவற்றிற்கு விதி விலக்கு. ஏனெனில் அவர்கள் பிறவியின் நோக்கத்தை அறிந்தவர்கள். அதாவது ஞானிகள் அனைவரும் வைரநாணயத்தின் ‘ஞானம் அடைவது, முடியும், எளிது’ என்கின்ற பக்கத்தைப் பார்த்தவர்கள். இது, அவர்களின் மாதா, பிதா கொடுத்த கருமையச்சொத்தால் நடக்கின்றது. மற்றவர்களோ வைர நாணயத்தின் மற்றொரு பக்கமான ‘ஞானம் அடைய முடியாது, அது எளிதானதல்ல’ என்கின்ற பக்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    சாதாரண மனிதனைப் போன்றில்லாமல், தெய்வீகத்தன்மைகளில் முக்கியமானதான, தளரா விடாமுயற்சியினைக் கொண்டு (தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். — குறள் எண் 619) சலிப்பில்லாமல், விளக்கத்திற்கு மேல் விளக்கம் பெற்று, புலன்களுக்கு சமாதானம் கூறி, மனதை திருப்திப் படுத்தி, மாயை விரித்துள்ள புலன்மயக்க வலையிலிருந்து சாதுரியமாகத் தப்பித்து, மாயவலைக்கு வெளியே வந்து விடுதலையாகி, பயம் நீங்கி, மீண்டும் தூயவெளிக்குள்ளே தனது பூர்வீக வீட்டிற்குள் நுழைந்தவர்கள் அவர்கள். அறிவை அறிந்த தெளிவினை அடைந்தவர்கள். ஞானம் அடைவதில் தங்களது திறமைகளைக் காட்டியவர்கள்.

    உலகியல் வாழ்க்கை மட்டுமேதான் வாழ்க்கை என நினைத்துக் கொண்டு, ஆன்ம நலனைப் புறக்கணித்துக் கொண்டிருக்கும் சமுதாயத்தில், உலகியல் வாழ்க்கையை, ஆன்மீக நலனுக்காகத் தியாகத்துடன் அர்ப்பணித்தவர்கள். அவ்வாறு அவர்கள் வாழாமல் இருந்திருந்தால், சமுதாயத்திற்கு வழி காட்டும் அரிய அறநூல்கள் கிடைத்திருக்காது. உதாரணத்திற்கு நம்முடைய மகரிஷி அவர்கள். பகல் முழுவதும் உழைப்பு. இரவு நேரங்களில் சிந்தனை; ஆராய்ச்சி செய்வது. சிந்தனை திரண்டு வரும்போது, படுக்கையிலிருந்து எழுந்து, மண்ணெண்னை விளக்கின் ஒளியில் அதனை எழுதி, அவற்றை நூல்களாக்குவது. எழுதி விட்டு மீண்டும் உறங்குவதற்குச் செல்வது. ஆனால் உறங்க முடியாமல் தவிப்பது, எழுதிய எழுத்துக்கள் அவரிடம் வந்து பேசுவது, மீண்டும் எழுந்து எழுதியதை வாசிப்பதில் இன்புறுவது…. இப்படி பல இரவு நேரங்களைக் கழித்திருக்கிறார். இவர்கள் எல்லாம் ‘வீரர்’ என்கின்ற சொல்லின் இலக்கணத்திற்குள் வரவில்லையா? எனவே ஞானிகளும் வீரர்களே. அவர்கள் ஞான வீரர்கள்.

    தொடர் ஓட்டப் பந்தயத்தில் ஒரு குழுவின் வெற்றி, அந்தக் குழுவில் பங்கு பெறும் எல்லா (நான்கு என்று வைத்துக்கொள்வோம்) வீரர்களின் கூட்டு முயற்சியே. வெற்றி பெற்ற குழுவிலுள்ள அனைவருக்குமே பரிசு வழங்கப்படுகின்றது. அது போன்று தான் இப்போது ஒரு ஞானி அவதரித்திருக்கிறார் என்றால் (உதாரணத்திற்கு வேதாத்திரி மகரிஷி), அந்த முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஓட்டத்தில் வந்தவர்தான் இப்போது வந்தவரும். இன்னும் பலர் வர இருக்கின்றனர். அவர்களின் வருகை என்பது சமுதாயத்தின் தேவையை இயற்கை பூர்த்தி செய்யும் புனித ஏற்பாடுதான். அவ்வப்போது அவதரிக்கின்ற ஒரு ஞானி மட்டும் முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டார் என்று சொல்ல முடியாது.

    ஞானியும் தாயின் வயிற்றில் பத்து மாதம் இருந்துவிட்டுத்தான் வந்திருக்கிறார். முயற்சி செய்து வினைப்பதிவுகளைப் போக்கி ஒரு பிறவியிலேயே ஞான ஒளியைப் பெற்றவர்கள். வழிப்பறி கொள்ளையனாக இருந்த ரத்னாகர், ஒரு பிறவியிலேயே தரமாற்றம் அடைந்து பண்பேற்றம் பெற்று வால்மீகி முனிவராகவில்லையா? அவர்களுக்குத் தெளிவு கிடைக்கின்றது, தெளிவின் ஒளியில் வாழ்க்கையை நடத்துகின்றனர். அதே வேளையில் தான் வாழும் சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருந்து, உதவியும் வருகின்றனர்.

    ஞானம் என்பது எட்டாக்கனி அல்ல. எட்டிய கனியாக்கி விட்டது இயற்கை, வேதாத்திரியத்தின் வாயிலாக. ஞானம் என்பது பொருளல்ல. ஒரு பொருளை அடையலாம். அல்லது அடையமுடியாமலும் போகலாம். ஆனால் ஞானம் என்பது ஆறாம் அறிவு இருக்க வேண்டிய உச்சகட்ட தெளிவு நிலை அது. மரணம் சம்பவிக்கும் வரையில் ஆறாம் அறிவு இருக்கப் போகின்றது. முயற்சியிருந்தால் ஞானம் பெற்று விடலாம் இப்பிறவியிலேயே. ஞானம் என்றால் அறிவின் தெளிவு என்பது பொதுவான விளக்கம் என்றும், அறிவையறிந்த தெளிவு என்பது சிறப்பான விளக்கம் என்றும், ஞானம் அடைவதற்கு முன்னரே ஞானம் என்பது என்ன என்று கூறி ஞானதாகத்தை ஏற்படுத்தி, உலக மக்கள் எல்லோரையும் ஞான வாழ்விற்கு அழைக்கிறார். அறிவை அறிவதற்கான கருத்தியல் பாடங்களையும், சாதனைக்கான செய்முறை பாடங்களையும் வகுத்துக் கொடுத்துள்ளார். ‘கொடுத்துள்ளார்’ என்பது முடிவில்லா ஆன்மீக தொடர் ஓட்டத்தில் இறையாகிய பேரறிவு இந்த நூற்றாண்டில் செய்துள்ள புதுமையான, கருணையோடு கூடிய கடமை என்றே கொள்ள வேண்டும்.

    ஆகவே தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்க சுவாமிகள் ஆகிய நான்கு ஞானிகள் மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அதில் வாழ்ந்து காட்டிய மற்ற அறிஞர்களின் பாடல்களில் பரவியிருந்த அறிவாற்றல், மகரிஷி அவர்கள் செய்த பயிற்சிகளுக்கு அப்பாலும், பெரும்பங்கு உதவி செய்ததாக அறிய முடிகின்றது.
    மேலும் மகரிஷி அவர்கள், தாயுமான சுவாமிகளின் வேறு பாடல்களையும், ஏன் அனைத்துப் பாடல்களையும், ஊன்றிப் படித்ததால் தான், குருவணக்கப் பாடலில் முதலில் தாயுமான சுவாமிகளை நினைந்து “அறிவேதான் தெய்வம் என்றார் தாயுமானார்” என இயம்புகின்றார்.

    டுத்ததாக திருவள்ளுவரை தரிசிப்போம். திருவள்ளுவர் நாமம் வாழ்க. 2046 ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்தவர் திருவள்ளுவர். பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு பின்னர் ஒரு ஆன்மாவிற்கு, மானசீக குருவானவர். அந்த ஆன்மாதான் வேதாத்திரி மகரிஷி அவர்களாவார். நிச்சயமாக திருவள்ளுவர் பூதவுடலுடன் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு குருவாகவில்லை. இருப்பினும் அருட் பிரகாச வள்ளலாரைப் போன்று, நேரிடையாக திருவள்ளுவரின் ஆன்மா மகரிஷி அவர்களுக்கு ஆன்மீக அறிவு பெற உறுதுணையாக இருந்ததாகவும் தகவல் இல்லை. இருந்தாலும் மகரிஷி அவர்கள் திருவள்ளுவரை நினைவு கூர்கிறார். திருவள்ளுவர், மகரிஷி அவர்களுக்கு எவ்வாறு அருட்துணையாக இருந்திருக்கிறார்?

    மகான்களின் பூதவுடல் இறக்கிறதே தவிர, அவர்களது எண்ணங்கள், அவர்களின் அறிவாற்றல் என்றும் இப்புவி உள்ளவரை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அருளாளர்களின் எண்ணமும், அறிவாற்றலும் எப்போதும் இறவாமல் இருக்கின்றன என்பதற்கு வேறு எங்கும் சான்றைத் தேட வேண்டியதில்லை. அருளாளர்கள் அருளியுள்ள நூல்களே அவர்களின் எண்ணங்களையும், அவா்கள் அறிந்த மறைபொருள் உண்மைகளையும் எடுத்து இயம்புகின்றன. சமுதாயத்திற்கு அவை விளங்கவில்லை. அந்த அளவிற்கு, சமுதாயம் ‘புலன்மயக்கத்தில் மூழ்கி, மாய வலையில் சிக்கிக் கொண்டிருக்கின்றோம்’ என்று கூடத் தெரியாமல் அவதியுறுகின்றது. தெரிந்தாலும் அலட்சியப்படுத்தி, ‘மூத்தோர் சொல் அமிர்தம்’ என்று அவ்வையார் கூறியிருந்தும், அதனை நம்புவதற்கு முயற்சி செய்யாமலும், சான்றோர்களின் அறநெறி அறிவுரைகளை மதிப்பதும் இல்லை.

    குருவணக்கத்தில், திருவள்ளுவரை நினைந்து, வணங்கி, அவர் எவ்வாறு தனக்கு உதவியிருக்கிறார் என்று மகரிஷி அவர்கள் கூறும் வைர வரிகளை நினைவு கூர்வோம்.

    “அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி,
    அறிவதனை அறிவித்தார் திரு வள்ளுவர்”. என்கிறார் மகரிஷி அவர்கள்.

    ஆனால் மகரிஷி அவர்களுக்கு, எந்தக் குறளின் வழியாக திருவள்ளுவரின் அறிவாற்றல் துணை செய்ததாக தகவல் இல்லை. ஆனால் மகரிஷி அவர்கள் ஐம்பது குறட்பாக்களுக்கு உட்பொருள் விளக்கம் எழுதியுள்ளார். மகரிஷி அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள குறட்பாக்கள், அவருடைய சிந்தனாப் பள்ளி (students of Vethathiri School of Thoughts) மாணவர்களுக்கு உதவும் வகையிலே அமைந்துள்ளது என்பது உண்மை. அதாவது அவர் கண்டுபிடித்துள்ள ஆன்மீக உண்மைகளுக்கு சான்றாக உள்ள குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் மகரிஷி அவர்கள்.

    “அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி
    அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்” என்பதால் எந்தக்குறள் இந்த உண்மையைத் தெரிவிக்கின்றது என்கின்ற வினாவிற்கு வருவோம்.

    அகம் மெய்ப்பொருள் என்றும், அதுவே அறிவு என்றும் கூறியுள்ள குறள் ஒன்றா அல்லது அதற்கும் மேலா என வினா எழுகின்றது. மகரிஷியின் கூற்றில் இரண்டு கண்டுபிடிப்புகள் உள்ளன. முதலாவது கண்டுபிடிப்பு – மெய்ப்பொருள் மனிதனின் அகமாக(உள்ளம்) உள்ளது. அந்த மெய்ப்பொருள் வேறு ஏதுமில்லை அறிவேதான் என்கிறது இரண்டாவது கண்டுபிடிப்பு. தாயுமான சுவாமிகள் நேரிடையாகக் கூறாமல், தூயவெளியே தெய்வம் என்று மகரிஷி அவர்களுக்கு பாடல் வழியாகக் கூறிவிட்டார். மேலும் சில பாடலின் வாயிலாக தாயுமான சுவாமிகள் அறிவே தெய்வம் என்றும் மகரிஷி அவர்களுக்கு கூறிவிட்டார். அந்த உறுதிப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பு, மேலும் திருவள்ளுவர் வாயிலாகவும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. அந்தக் குறட்பாக்கள் என்னென்ன?

    ”ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
    தெய்வத்தோடு ஒப்பக் கொளல்” குறள் எண் 702

    குறட்பாவின் விளக்கம் என்ன? இக்குறள் அகத்தை மெய்ப்பொருள் என்று – தெய்வம் என்று சந்தேகமின்றி உணர்ந்து கொண்டவர் இறைவனாகவே மதிக்கப்படத்தக்கவர் என்கிறார் திருவள்ளுவர். மெய்ப்பொருளை சந்தேகமில்லாமல் உணர்ந்து கொண்டவர் தெய்வமாக மதிக்கப்படத்தக்கவர் மட்டுமல்ல, அவரே சமுதாயத்தை நல்வழிபடுத்தும் குருவுமாவார். குரு என்பவா் யார் என்று கூறும் சமஸ்கிருத ஸ்லோகத்தை நினைவு கூர்வோம்.

    குருர் பிரம்மா குருர் விஷ்ணு
    குருர் தேவோ மஹேஸ்வர:
    குருர் சாக்ஷாத் பரம்பிரம்மா
    தஸ்மைஸ்ரீ குரவே நம:

    குருவைக் ‘கடவுள்’ என்று ஒரு முறை மட்டும் சொல்லாமல், பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரன் என்று மூன்று முறை, மூன்று கடவுளர்களின் பெயர்களைச் சொல்லி உறுதிபடுத்துகிறார் இந்த ஸ்லோகத்தை அருளியவர். அதோடு, கேட்பவருக்கு எங்கேயாவது சந்தேகம் வந்துவிடப் போகின்றதே என எண்ணி, இறுதியாக, சத்தியமாக/நிச்சயமாக குரு கடவுளேதான் என மீண்டும் கூறுகிறார் இச் ஸ்லோகத்தின் ஆசிரியர். இறைநம்பிக்கை உள்ளவருக்கு, இறை நிச்சயமாக உள்ளது என்பதில் சந்தேகம் இருக்காது. ஆனால் புலன்களுக்கு காணப்படாத இறை எவ்வாறு இருக்கின்றது என சந்தேகம் மட்டும் இருக்கலாம். அந்த சந்தேகத்தை வேதாத்திரியம் அவருக்கு, இறை அரூபமாக உள்ளது என்று நிரூபித்து விட்டது.

    இறைக்கு உருவமில்லை, இறை அரூபமாக உள்ளது என்று தெளிவாக விளங்கிவிட்ட பிறகு இறை ஒரு பக்தனுக்கு எந்த வடிவில் வந்து உதவி செய்ய முடியும்? அரூபமான இறை, பக்தனுக்கு உதவி செய்வது என்பது, வேறு யாரும் கேட்க முடியாத, பக்தன் மட்டுமே கேட்கும் படி வார்த்தைகளில் சொல்வது ஒரு முறை. இதனை ஆன்றோர்கள் ‘கேளாஒலி, அசரீரி’ என்றும் சொல்கின்றனர். மற்றும் இறைவனைத் தோன்றாத் துணைவன் என்றும் கூறுகின்றனர். அல்லது மனதின் மறுமுனை தெய்வமாக இருப்பதால், தன்னுடைய தூய்மையான, கடவுள் ஏக்கம் உள்ள அடிமனம் உரைப்பது கூட இறைவன் பேசுவதாகவேக் கொள்ள வேண்டும்.

    ஒருவருக்கு, தெரிந்தவரோ, முன்பின் தெரியாதவரோ உரிய நேரத்தில், யாரேனும் உதவி செய்தால் இறை அவர் வடிவத்தில் வந்து உதவி செய்ததாகத்தானே பொருள். தெய்வம் அரூபமாகவும், அறிவாகவும் உள்ளது என்பதனை மறந்துவிட்டு, மனித வடிவத்தில் வந்து உதவி செய்தது தெய்வம் என்று நினைக்க மறந்துவிடுவது வழக்கம். உதவி செய்தவரும் தெய்வத்தின் அம்சம்தானே! அவருடைய அறிவும் தெய்வம் தானே! உதவி செய்ய வேண்டும் என்று அவருடைய அறிவு எண்ணியதால்தானே, அவரது உடல் உதவி செய்தது. தெய்வம் எல்லோருக்குள்ளும் அறிவாக உள்ளதால், உதவி செய்தவரின் அறிவாகவும் இருப்பதால், இறைவனே சாக்ஷாத் மனித வடிவில் வந்து உதவியிருக்கிறான்.

    மீண்டும் குரு ஸ்லோகத்திற்குள் வருவோம். அறிவை அறிந்த ஒரு ஆன்மா மற்றொரு ஆன்மாவிற்கு, அவ்வறிவை அறிவதற்கான வழிகளைச் சொல்லும் போது, அறிவை அறிந்த அந்த ஆன்மா யாராக இருக்க முடியும்? வேதாத்திரிய சுத்த அத்வைத தத்துவத்தின்படி ‘எல்லாமே தெய்வம்’ என்கின்ற நியதியில், எல்லோருமே தெய்வம் என்கின்ற போது, தெய்வத்தையே சுட்டிக் காட்டும் ஆன்மா யாராக இருக்க முடியும்? சாக்சாத் அந்த ஆன்மா தெய்வமேதான். எனவே தெய்வமே குருவாக வருகிறார்; பேசுகிறார்; விளக்கம் அளிக்கிறார். இந்த புரிதல் ஏற்பட்டால்தான் குருவிற்கும், ஆன்மீக சாதகனுக்கும் இடையே நம்பிக்கையும், இணக்கமும் ஏற்படும். அப்போதுதான் குருவிற்கும் சாதகனுக்கும் இடையே நல்ல தொடர்பு(RAPPORT) இருக்கும். திருவள்ளுவர் அகத்தை ஐயமில்லாமல் உணா்ந்தவரை தெய்வமாகக்கொள்ள வேண்டும் என்கிறார். அகத்தை உணர்ந்த தெய்வம் யாராக இருக்க முடியும்? சாக்ஷாத் குருவேதான். ஆகவே குரு ஸ்லோகம் கூறுவது சரிதானே?

    … தொடரும்

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 53

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

     

    09-03-2015 – திங்கள்

    வாழ்க வளமுடன்.

    இயற்கை தன்னுடைய தன்மாற்றத்தில் எப்போது, ஏன் உயிர்களாகியது?  இந்த வினாவை ஆறாம் அறிவு கேட்கலாமா?

     

    வாழ்க மனித அறிவு                   வளா்க மனித அறிவு

    Loading

  • 63 -இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

    இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?FFC- 63 (2/?)

    08-03-2015 — ஞாயிறு

    கடந்த அறிவிற்கு விருந்தில், பூதவுடலை உதிர்த்தாலும் மகான்கள், சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் என்பதனை அறிந்தோம். அந்த அருளாளர்களுடன் நம்மை இணைத்துக் கொண்டு அருட்பயனைப் பெறுவதற்கான யுக்திகளை அறிய இருக்கிறோம் இனிவரும் அறிவிற்கு விருந்து பகுதியில். முதலில் தாயுமான சுவாமிகள் எவ்வாறு மகரிஷி அவர்களுக்கு அருட்துணையாக இருந்திருக்கிறார் என்று பார்ப்போம்.
    தாயுமானவர் அவதரித்தது கி.பி. 1705 ஆம் ஆண்டு. தாயுமானவரின் பூதவுடல் மறைந்த நிலையிலும், 20 ம் நூற்றாண்டில் அவதரித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார். இளம் வயதிலேயே, மார்கழி மாத பஜனைப் பாடலில் இடம் பெற்ற தாயுமானவப் பெருமானின் திருவருள்விலாசப் பரசிவ வணக்கப் பாடல், பால வேதாத்திரியின் ஆன்மாவை வருடிக் கொடுத்துள்ளது.

    angingenathapadi

    இப்பாடலுக்கான தலைப்பு சிந்தனைக்குரியது. பாடலின் தலைப்பை ‘பரசிவ வணக்கம்’ என்று மட்டுமே வைத்திருக்கலாம் தாயுமான சுவாமிகள். ஆனால் ‘பரசிவ வணக்கம்’ என்பதோடு ‘திருவருள்விலாசம்’ என்பதையும் சேர்த்து தலைப்பாக வைத்துள்ளார். இப்பாடலின் தலைப்பில், முதலில் உள்ள ‘திருவருள்விலாசம்’ என்கின்ற சொற்றொடர் என்ன தெரிவிக்கின்றது? திருவருள் என்கின்ற சொல்லின் பொருள் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் அதனுடன் விலாசம் என்கின்ற சொல்லைச் சேர்த்திருக்கிறார் தாயுமான சுவாமிகள். பாடலின் பொருள் மட்டும் விளங்கிக் கொள்வதோடு மட்டுமல்லாது, பாடலின் தலைப்பிற்கான பொருளை விளங்கிக் கொண்டால்தான் பாடல் அருளியதன் பயன் நிறைவேறும். காரணமில்லாது அந்த தலைப்பினைக் கொடுத்திருக்க மாட்டார் தாயுமான சுவாமிகள். ‘விலாசம்’ என்பதன் பொருள் விளங்கிக் கொள்ள வேண்டும். ‘விலாசம்’ என்கின்ற சொல்லுக்கு, முகவரி மற்றும் லட்சணம் என்று பொருள் உண்டு.

    ஆகவே இரண்டு பொருளையும் எடுத்துக் கொண்டாலும் சரியே. ஏனெனில் முகவரி என்று எடுத்துக் கொண்டால், தெய்வத்திற்கான (சிவத்திற்கான) முகவரி என்று பொருளாகின்றது. அதாவது தெய்வம் எது? எங்குள்ளது, எவ்வாறு உள்ளது எனத்தெளிவாகத் தெரியாமல் இருந்ததை, தெய்வம் எது என்றும், அது எங்கிருக்கின்றது, எவ்வாறு உள்ளது எனத் தெளிவாக உறுதியாகத் தெரிவிப்பதை தெய்வத்தின் முகவரி அல்லது என்று சொல்லாமல் வேறு எவ்வாறு சொல்ல முடியும்?
    மேலும் தெய்வத்திற்கு உருவங்கள் பல கொடுத்து, பல்வேறு தெய்வங்களாக்கி இருந்ததை, தெய்வம் ஒன்றேதான், அது அரூபமானது(தூயவெளி) என்று கூறி தெய்வத்திற்கான லட்சணம் தெரிவிக்கப்படுவதால், இரண்டாவது பொருளையும் எடுத்துக் கொள்ளலாம். ஆகவே திருவருள்விலாசப் பரசிவ வணக்கம் என்றால் சிவமாகிய தெய்வத்திற்கான லட்சணமும் விலாசமும் என்று பொருள்.

    தாயுமான சுவாமிகளின் முதல் பாடலே, மகரிஷி அவா்களின் ஆன்மாவிற்கு ஊக்களிமப்பதாக கூறுகிறார். தாயுமான சுவாமிகள் அவதரித்த காலத்திற்கும் மகரிஷி அவா்கள் அவதரித்த காலத்திற்கும் இடைப்பட்ட காலம் சுமார் 206 ஆண்டுகள். தாயுமான சுவாமிகள் பூதஉடலை உதிர்த்தது 1743 ஆம் ஆண்டு. ஆகவே, மகரிஷி அவர்களின் ஆன்ம உயர்வுக்கு, தாயுமானவர் தன் பூதஉடலில் இருந்த போது உறுதுணையாக இருக்கவில்லை. அல்லது வள்ளலாரைப் போன்றோ தாயுமான சுவாமிகளின் ஆன்மா நேரிடையாகத் தொடர்பு கொண்டதாகவும் தகவல் இல்லை. இருப்பினும் மகரிஷி அவர்கள் தாயுமான சுவாமிகளை மானசீகமாகக் குருவாக ஏற்றுக் கொண்டு பயன் பெற்றது மட்டும் தெளிவாகின்றது. மேலே உள்ள தாயுமான சுவாமிகளின் பாடல்தான், ‘நீக்கமற நிறைந்த தூயவெளிதான் இறைவன்’ என்ற தெளிவினைப் பெறுவதற்கு உதவியவைகளில் ஒன்று என மகரிஷி அவர்களே மொழிந்துள்ளார்கள். “அறிவேதான் தெய்வம் என்றார் தாயுமானார்” என்று தாம் இயற்றிய குருவணக்கப் பாடலின் ஆரம்பத்திலேயே தாயுமானாரை நினைவு கூர்கிறார் மகரிஷி அவர்கள். “அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி” என்று தொடங்கும் தாயுமானவர் பாடலில் ‘அறிவே தெய்வம்’ என்று கூறப்படவில்லை. அப்படியானால் தாயுமான சுவாமிகள் அருளிய 1452 பாடல்களில், எந்தப் பாடல் மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள குருவணக்கப்பாடலில், ‘அறிவே தெய்வம்’ என்று ஆரம்பத்திலேயே இயம்ப வைத்தது?

    FFC-63-தேஜோ மயஇவ்வாறாக 1452 பாடல்களையுமே மகரிஷி அவர்கள் படித்திருக்கலாம். அவற்றில் மேற்கண்ட வரிகள் நம்முடைய தற்போதைய ஆராய்ச்சிக்குக் கிடைக்கின்றன.

    தாயுமான சுவாமிகளின் பரசிவ வணக்கப் பாடல் மட்டுமே அவருக்கு ஊக்கமளித்ததாகக் கொள்ள முடியாது. ஒருபாடலை மட்டும் கேட்டுவிட்டு சும்மா இருந்திருக்க மாட்டார் மகரிஷி அவர்கள். தாயுமான சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை நூல்களின் வாயிலாக படித்தறிந்திருப்பார். மேலும் பல பாடல்களைப் படித்து தாயுமான சுவாமிகளின் கண்டுபிடிப்பை அறிந்து வியந்திருப்பார். தாயுமான சுவாமிகளின் இறை அனுபவங்களை உள்ளம் உருகி ரசித்திருப்பார். போற்றியிருப்பார். அதனை மனதில் கொண்டுவந்து (CONTEMPLATE) ரசித்திருப்பார். அந்த நிலையினைத் தானும் பெற வேண்டும் என அவர் உள்ளஒழுங்கோடு(உள்ளத்தில் ஒழுங்கோடு) விரும்பியிருப்பார்.
    அருளாளர்களின் தரத்திற்கு அறிவினில் உயர்வது எளிய முறை இயல்பூக்க நியதிப்படி செயலாகின்றது (ஞானக்களஞ்சியம் – I பாடல் எண். 10) என்று நமக்கெல்லாம் கூறியிருக்கும் வழியை அவரும் பயன்படுத்தியிருப்பார். இயல்பூக்க நியதிப்படி, அருளாளர்களின் தரத்திற்கு தன்னை உயர்த்திக் கொள்ள பாடுபட்டிருப்பார். இந்தப் பாடலை, மகரிஷி அவர்கள், சிறுவயதில் மார்கழி மாத பஜனையில் பங்கு கொள்ளும்போது கேட்டது. அப்போதே அந்த பாடல் மகரிஷி அவர்களின் ஆன்மாவை வருடிக் கொடுத்துள்ளது. அதாவது தாயுமான சுவாமிகளின் அருள், அப்போதே, மகரிஷி அவர்களுக்கு உற்ற துணையாகியது.,
    அந்த பஜனைப் பாடலில் பங்கு பெற்ற மற்றவர்களுக்கு எந்தநிலை கிட்டியதோ தெரியாது. ஆனால், நமக்கும் இந்த சமுதாயத்திற்கும், இப்படி ஒரு குருதேவர் கிடைக்க வேண்டும் என்கின்ற இயற்கையின்/இறையின் இச்சையால், அத்தகைய அருள்நிலை மகரிஷி அவர்களுக்குக் கிட்டியது. மகரிஷி அவர்களை இயற்கை/இறை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அருட்பெற்றோர்கள் வரதப்பர் மற்றும் சின்னம்மாள் கொடுத்த அருட்கருமையப்பதிவுகளைத் தாங்கி வந்த பாலவேதாத்திரியின் கருமையம்தான்.
    இங்கே தாயுமான சுவாமிகள் பூதவுடலோடோ அல்லது வள்ளலாரைப் போன்று தாயுமானவரின் ஆன்மாவோடோ நேரிடையாகத் தொடர்பு கொண்டதாகத் தெரியவில்லை. அவ்வாறிருந்தால் மகரிஷி அவர்கள் அதனையும், நாம் பயன் பெறுவதற்காகக் கூறியிருப்பார். தாயுமான சுவாமிகளின் அந்தப் பாடலோடு மகரிஷி அவர்கள் நின்று விடவில்லை. தாயுமான சுவாமிகள், மகரிஷி அவா்களின் ஆன்ம தீயைக் கிளறிவிட்டுவிட்டார்(THAYUMANA SWAMIGAL HAS KINDLED THE SPIRITUAL FIRE IN MAHARISHI). ஆன்ம தீயை கிளறி விட்டதை தாயுமான சுவாமிகளின் பூதவுடல் செய்யவில்லை. தாயுமான சுவாமிகளின் ஆன்மவோ நேரிடையாகவும் செய்ததாக தெரியவில்லை.
    ஆனால், சக்திகளத்தில் அருளாட்சி செய்து கொண்டிருந்த/கொண்டிருக்கும் தாயுமான சுவாமிகளின் ஆன்ம ஆற்றல் மகரிஷி அவர்களின் ஆன்ம தீயை கிளறிவிட்டிருக்கலாம். அல்லது தாயுமான சுவாமிகளின் பாடல்களில் படா்ந்திருக்கும் தாயுமான சுவாமிகளின் அறிவாற்றல் மகரிஷி அவர்களின் ஆன்ம தீயைக் கிளறிவிட்டிருக்கும் என்பது பொருத்தமாக இருக்கலாம். மகரிஷி அவர்களும், திருக்கூட்ட மரபில் வந்துள்ள அருளாளர்களின் அறிவாற்றலை பிரார்த்தித்திருக்கிறார் அல்லவா?(MAHARISHI ALSO HAS INVOKED THE BLESSINGS OF ALL SAINTS. OR THE SAINTS THEMSELVES, AS LIBERATED SOULS, HAVE VOLUNTARILY COME FORWARD TO HELP THE FELLOW-BEINGS IN THE PROCESS OF LIBERATION. THIS IS THE NOBLER AIM, DUTY AND SERVICE OF THE LIBERATED SOUL WITH WILL. ONLY FOR THAT THEY STAY IN THIS UNIVERSE)
    “அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்” என்கின்ற தாயுமான சுவாமிகளின் பாடலில் ‘அறிவே தெய்வம்’ என்று எங்கும் தாயுமான சுவாமிகள் தெரிவிக்கவில்லை. ‘வெளி தான் தெய்வம்’ என்கின்ற அருட்செய்திதான் உள்ளது. இதுதான், மகரிஷி அவர்களை தூயவெளியை தெய்வம் என உறுதிபடுத்த உதவிய. மேலும் பல அறிஞர்களின் வெளியைப் பற்றிய, அருட்கூற்றுக்களும் வெளியைத் தெய்வம் எனத் தீர்மானிக்க உதவியது எனக் கூறுகின்றார் மகரிஷி அவர்கள். அந்த அறிஞர்கள் யார் என்றும், அவர்கள் என்ன கூறினார் என்றும் இப்போது தெரிந்து கொள்வோம்.

    FFC-63-வெட்ட வெளி

     

    FFC-63-நன்றாய் ஞானம்

     

    தாயுமான சுவாமிகள், சித்தர், மற்றும் வைணவப் பெரியார்கள் ஆகியவர்களின் பாடல்களைப் படித்து உணர்ந்தபோதுதான் தூயவெளியாக நிறைந்தும், சூழ்ந்து கொண்டும், பேரியக்க மண்டலம் முழுவதையும் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருப்பதுதான் இறைநிலை என்கின்ற உணர்வு பிறந்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவா்கள்.

    அதாவது இங்கே விளங்கிக் கொள்ள வேண்டியது யாதெனில்,

    மகரிஷி அவர்கள்தூய வெளியைதெய்வம் என்று உறுதிப்படுத்தியதற்கு, தாயுமானசுவாமிகள், சித்தா்பெருமகனார்கள், வைணவப்பெரியார்கள்ஆகியஅருளாளர்கள், அவர்கள்பூதஉடல்களில்இருந்தபோது, உறுதுணையாகஇருக்கவில்லை.

    அந்தஅருளாளர்களின்ஆன்மாக்கள், வள்ளலாரைப்போன்றுநேரிடையாகவும்வந்துஉதவிசெய்யவில்லை.

    அல்லதுஒருவேளைஅந்தஅருளாளர்கள் ‘கேளாஒலி’ போல், மகரிஷி அவர்களின் காதுகளில் வந்து சொன்னதாகவும் தெரியவில்லை.

    ”தூயவெளியேதெய்வம்” என்றுமானுடத்தால், உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வு மகரிஷி அவர்களால் மட்டுமேமுதன் முதலில்நடந்ததன்று.

    பேரறிவின்தன்மாற்றசரித்திரத்தில்‘தூயவெளிதான்தெய்வம்’என்று ஏற்கனவே அருளாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இருந்தாலும் அதனைத் தெரிவிக்க முட்டி மோதி நின்றனர். அந்தகண்டுபிடிப்புகள் எல்லாம்,மகரிஷிஅவர்கள்தூயவெளிதான்தெய்வம்என்றுகண்டுபிடித்ததை உறுதிபடுத்துவதற்குஉதவியாகஇருந்து, வெட்டவெளி தத்துவத்தை எளிமையாக்கி  ஆன்மீகத்தில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டார் மகரிஷி அவர்கள்.

    ஆன்மீக வரலாற்றில், ஆன்மீக உண்மைகளை வெளிப்படுத்தும், முடிவில்லாத, ‘ஆன்மீகத்தொடர் ஓட்டம்’, என்பது இயற்கையின்/இறையின் புனித ஏற்பாடு. அந்த முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஒட்டத்தில்(NEVER ENDING SPIRITUAL RELAY RACE) ஒவ்வொரு ஞானியுமே, ‘தொடர் ஓட்ட விளையாட்டுப் பந்தயத்தில்(SPORTS)‘ பங்கு பெரும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களைப் போன்றவர்களே. அவர்களை ஞானவீரர்கள் என்றேகூட அழைக்கலாம். எப்படி? ஏன் அவ்வாறு அழைக்க வேண்டும்? வீரர் என்றால் என்ன அா்த்தம்? விளையாட்டு வீரர் என்கிறோமே அதற்கு என்ன அர்த்தம்?     தொடரும்.

    Loading